சீதளம் 26
மேகா தனக்கு முத்தம் கொடுக்காததால் தன்னுடைய அறையில் அவளை திட்டிக் கொண்டிருந்தவன் அவள் அவனுடைய அறைக்கு வரவும் அவளுடைய அழகில் மெய் மறந்து அவளை ரசித்துக்கொண்டிருக்க அவளோ அவன் முகத்தின் முன்னால் சொடக்கிடவும் சுயநினைவிற்கு வர, அவளோ அவனை ஏற இறங்கப் பார்த்தாள்.
“ஹலோ என்ன இதுக்கு முன்னாடி பொண்ணுங்களை பார்க்காத மாதிரி இப்படி பார்த்துகிட்டு நிக்கிற” என்று இவள் கேட்க அவனோ,
தன்னுடைய கெத்தை விடாமல்,
“ யாருடி உன்னை பார்த்தா இவ பெரியஉலக அழகி இவ அழகுல அப்படியே நாங்க மயங்கி நின்னுட்டோமாக்கும்” என்று அவன் சொல்ல அவளோ,
“ சொன்னாலும் சொல்லலைன்னாலும் எனக்கு நான் பேரழகி தான். அப்புறம் நீ என்னோட அழகுல மயங்கி தான் நின்ன. என்னை அப்படியே பச்சையா சைட் அடிச்ச” என்று அவள் அவனை வாரினாள்.
அவனோ,
‘ ஐயோ இப்படி பச்சையா தெரியுற மாதிரியா சைட் அடிச்சோம் சரி சமாளிப்போம்’ என்று நினைத்துக் கொண்டவன் மீண்டும் அவளிடம் திமிராகவே,
“ யார் உன்னை சைட் அடிச்சா உன்ன கோவமா பாத்துட்டு இருந்தேன்” என்று அவன் சொல்ல,
“ எது கோபமா பார்த்தியா இதுக்கு பேரு கோவமா பார்க்கிறதா.. சரி சரி நான் நம்பிட்டேன். சரி சார் எதுக்கு என்ன அவ்ளோ கோவமா பார்த்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா” என்று அவள் கேட்க உடனே அவனோ,
“ ஏண்டி கட்டுன புருஷன் எனக்கு ஒரு முத்தம் கொடுக்க சொன்ன அவ்ளோ யோசிக்கிற.. ஆனா வீராவுக்கு வளைச்சி வளைச்சு முத்தம் கொடுக்கிற மவளே உன்னை என்ன செய்யலாம் அப்படின்னு தான் உன்ன கோவமா பார்த்தேன்” என்றான் வேந்தன்.
“ஆமா இவரு பெரிய மன்மதன் இவர் தாலி கட்டுன உடனே இவருக்கு முத்தம் கொடுத்துடுவாங்க. இங்க பாரு ஏலியன் இந்த மாதிரி எண்ணம் எல்லாம் உன் மனசுல இருந்துச்சுன்னா அதை இப்பவே ரப்பர் வச்சு நல்லா அழிச்சுரு” என்று சொல்லியவள் தன் கையில் உள்ள பால் சொம்பை பார்த்து,
“ இவனுக்கு இது ஒன்னு தான் கேடு” என்று அவனிடம் சொல்லியவள்,
“ என்ன ஏலியன் நான் சொன்னதெல்லாம் மனசுல பதிய வச்சிக்கிட்ட தான.. அப்புறம் எனக்கு கீழ படுத்தா எல்லாம் தூக்கம் வராது அதனால நீ என்ன பண்ற இங்க கீழ நீ படுத்துக்கோ நான் மேல படுத்துகிறேன்” என்றவள் ஒரு கையால் ஒரு தலையணையையும் போர்வையையும் கீழே போட்டவள்,
“ எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு ஏலியன் அதனால இதுல இருக்குற பால குடிச்சிட்டு நான் தூங்க போறேன் நீயும் போய் தூங்கு” என்று அவனுக்கு ஆர்டர் போட்டவள் சொம்பில் உள்ள பாலை அருந்திக் கொண்டிருக்க இங்கு வேந்தனோ அவளுடைய செய்கைகல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவன்,
‘ எவ்வளவு கொழுப்புடி உனக்கு இந்த வேந்தனுக்கே ஆர்டர் போடுறியா நீ?.
நீ சொன்னா நான் கேட்கணுமா இரு வரேன்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் தன்னுடைய வேஷ்டியை காலை தூக்கி மடித்து கட்டியவன் அவளை நெருங்கி வந்து அவள் கையில் உள்ள பால் சொம்பை பறித்து அருகில் உள்ள டேபிளில் வைக்க, அவளோ வாயில் பால் இருக்க வாயை மூடிக்கொண்டு நிற்க.
அவனோ சட்டென அவள் புறம் திரும்பியவன் தன்னுடைய இடது கையால் அவளுடைய இடையை பிடித்து தன் இடையோடு சேர்த்து நிறுத்தியவன் அவள் இதழ் வழியாக தனக்கு சேர வேண்டிய பாலை அருந்தினான்.
சொட்டு கூட கீழே விழாமல் அவள் வாயில் வைத்திருந்த பாலை கொஞ்சம் கொஞ்சமாக பருகிக் கொண்டிருந்தான்.
அவளோ அவனுடைய பிடியில் திமிரு கொண்டிருந்தாள்.
இவனோ அவளுடைய திமிரலை தன் இதழ் வழியாக அடக்கியவன் அதில் கிரங்கியும் போனவன் மொத்தமாக அவளை எடுத்துக்கொள்ள முனைந்தான்.
அவளோ இதழ் வழியாக தன்னுடைய உயிரை உறிஞ்சும் ஆடவனை தன்னால் முடிந்தவரை அவனிடம் இருந்து தன்னுடைய இதழையும் தன்னுடைய மேனியையும் பிரிக்க முயன்றாள்.
ஆனால் அவளால் சிறிது கூட முடியவில்லை.
பின்பு அவனுடைய முத்தத்தில் தன்னை தொலைக்க ஆரம்பித்தாள் மேகா. தன்னுடைய தளிர் கரங்களால் ஆனவனுடைய முதுகை இழுத்து பிடிக்க அவளுடைய இந்த செய்கையை கண்டு சற்று திடுக்கிட்டவன் பின்பு தன்னுடைய வேலையில் கவனமானான்.
அவளுடைய இடையில் பதிந்த அவனுடைய கரமோ, மெல்ல அவளுடைய இடைச் சேலையை சற்று நகற்றி விட்டு அவளுடைய வெற்றிடையை தன் கரங்கள் கொண்டு இதமாக தடவினான்.
அதில் மேகாவும் கண்கள் சொருக அவன் மேல் விழ அவனோ தன் மேனியோடு அவளை மொத்தமாக இறுக்கிப்பிடித்தவன் அவளோடு கட்டிலில் சரிந்தான்.
இருவரும் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தவர்கள் அந்தக் கட்டிலில் அப்படியே முத்தமிட்டவாறே உருண்டவர்கள் மேகா கீழே அவனுக்காக கீழே போட்டிருந்த போர்வையில் உருண்டு விழுந்தார்கள்.
அதில் கூட அவளைத் தன் மேல் விழுமாறு செய்த வேந்தனோ அவளுக்கு அடிபடாதவாறு பார்த்துக் கொண்டான். அவளுடைய நெற்றியில் இதழ் பதித்தவன் அவளுடைய கண்கள் மூக்கு கண்ணம் காது கழுத்து என தனது முத்த ஊர்வலத்தை தொடங்கியவனுக்கோ நிறுத்தம் மார்க்கம் தான் தெரியவில்லை.
அவளும் அவனுக்கு ஏற்ப தன் உடலை வளைத்துக் கொடுத்தாள். இருவருக்குமான முதல் கூடல் அது. ஆனால் இருவருமே மனது ஒன்று பட்டு இணைந்தார்களா என்று கேட்டால் இருவருக்குமே பதில் இல்லை.
அழகான சங்கமம் நிகழ்ந்தறியது.
இங்கே கதிரவனோ தன்னுடைய தோட்டத்து வீட்டில் தன் நண்பன் ரகுவந்தனோடு சரக்கு அடித்துக் கொண்டிருந்தான்.
அவனுடைய கண்களோ சிவந்திருந்தது. இதுவரை எத்தனையாவது முறையாக தன்னுடைய நண்பனிடம் இதை சொல்லி இருப்பானோ தெரியாது.
அவனும் எப்படா என்ன விடுவ என்ற ரீதியில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்படி என்ன அவன் சொல்லி இருப்பான். இதைத்தான், இதைத்தான் பலமுறை அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் கதிரவன்.
“ச்சே என்னடா மச்சான் இப்படி ஆயிட்டு? அவனை அசிங்கப்படுத்திட்டேன்னு நினைச்சா அவன் அதே பொண்ண கல்யாணம் பண்ணி ஊரறிய ரிசப்ஷன் வேற வச்சி இப்போ சந்தோஷமா ஃபர்ஸ்ட் நைட்டே கொண்டாடிட்டு இருப்பான். அவனை ஏதாவது செய்யணும் டா அவனை ஏதாவது செஞ்சே ஆகணும் என்ன செய்றது” என்று தன் நண்பனிடம் புழம்பிக் கொண்டிருந்தான்.
அவனோ காதில் ரத்தம் வராத குறையாக அவனை ஏற இறங்க பார்த்தவன் தன் மனதிற்குள்,
‘ சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்கிற மாதிரி அவனுக்கு அங்க என்ன நடந்ததுன்னு தெரியாம இருந்திருக்கான். இவனா போய் அவன அசிங்கப்படுத்துறேன்னு எல்லாத்தையும் சொல்லி அவனை தூண்டிவிட்டான். இப்போ அவன் வாழுறான் இவன் பொலம்புறான் இவனுக்கு இதே வேலையா போச்சு. அடேய் தயவு செஞ்சு நிறுத்துடா இன்னும் கொஞ்ச நேரம் இதையே சொல்லிக்கிட்டு இருந்த என் காதில இருந்து ரத்தம் வடிஞ்சாலும் வடியும்’ என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க மீண்டும் ஆரம்பித்தான் கதிரவன்.
இங்கு ரகுவந்தனோ இதற்கு மேல் முடியாதுடா சாமி என்பது போல போதையில் மயங்கி விழுவதைப் போல கீழே படுத்து தூங்கி விட்டான்.
இவனோ அவன் விழுந்ததை கூட கவனிக்காமல் தன் பாட்டிற்கு புலம்பிக் கொண்டே இருந்தான்.
மறுநாள் அதிகாலையில் முதலில் கண்விழித்த வேந்தனோ எலும்ப பார்க்க அவனால் முடியவில்லை.
தன் மேல் எதுவோ அழுத்துவது போல் இருக்க தன்னுடைய சிரசை தூக்கி சற்று குனிந்து பார்த்தவனோ அவனுடைய நெஞ்சில் தலை வைத்து முழுவதுமாக அவன் உடல் மேல் அவள் உடலை போட்டுக் கொண்டு படுத்திருந்தாள் மேகா.
ஒரே போர்வையில் இருவரும் இருக்க அவனுடைய இதழ்களோ வெட்கத்திலும் இரவு நடந்த கூடலிலும் மெலிதாக புன்னகை சிந்தியது.
கூடவே சற்று பயமும் எழுந்தது. இப்பொழுது குழந்தை போல தூங்கிக் கொண்டிருப்பவள் எழுந்தால் என்ன பிரளையம் செய்யப் போகிறாளோ என்று பயந்தவன் அவள் எழுவதற்குள் தான் இந்த அறையை விட்டு வெளியில் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன் அவளை பூப்போல தன் மேனியில் இருந்து அகற்றியவன் போர்வையால் நன்றாக அவளை மூடிவிட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
ஆனால் பாவம் அவன் நினைத்தது போல் நடக்காமல் அவன் குளியல் அறையை விட்டு வெளியே வரும் பொழுது அவனுடைய புது மனைவியோ மார்பு வரை அவன் போர்த்தி விட்டுப் போன போர்வையை இறுக்கமாக கட்டி இருந்தவள் அவனை காளியாக முறைத்துக் கொண்டு நின்றாள்.
கைவசம் இரண்டு எபிசோட் இருக்கு உங்க ஆதரவு பார்த்து நாளை இரண்டும் தருகிறேன் டியர்ஸ்.
🤍🤍🤍