சீதளம் 27
வேந்தன் குளியலறை சென்றதும் இங்கு கண்விழித்த மேகாவோ தன்னுடைய இரு கைகளையும் தூக்கி சோம்பல் முறித்தவாறு எழுந்து அமர அப்பொழுது வேந்தன் போர்த்தி விட்டு போயிருந்த அந்த போர்வையோ அவள் அனுமதி இன்றியே கீழே நழுவி விழுந்தது.
தன் மேனியில் இருந்து ஆடை நழுவியதில் திடுக்கிட்ட மேகாவோ குனிந்து பார்க்க அதிர்ச்சி அடைந்தவள் சட்டென நழுவி விழுந்த அந்த போர்வையை எடுத்து தன் மார்போடு இறுக்கமாக கட்டிக் கொண்டவள் சிந்தனையோ இரவை நோக்கி சென்றது.
வேந்தனிடம் அவள் பேசியது பின்பு அவன் தனக்கு முத்தமிட்டது தான் அவனுடன் இணைந்தது அதன் பிறகு என்ன நடந்தது என்று ஒவ்வொன்றும் அவளுடைய நினைவில் வர அவளோ தன்னுடைய கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டவள்,
“ அச்சோ என்ன பண்ணி வச்சிருக்க மேகா நீ இப்படியா அந்த ஏலியன் முத்தம் கொடுத்ததும் சுயம் இழந்து அவன் கூட ஒண்ணா இருந்திருக்க. ஐயோ என்ன நினைச்சா எனக்கே வெக்கமா இருக்கு எப்படி இது சாத்தியம். அவன் மேல எனக்கு காதலே இல்ல அப்படி இருக்கும்போது அவன் கூட எப்படி நான் ஒண்ணா இருந்தேன். எல்லாம் அந்த ஏலியனாலதான். என்னை ஏதோ செஞ்சு மயக்கிட்டான். இல்லைன்னா நான் எப்படி இப்படி நடந்து இருப்பேன் நான் எவ்வளவு ஸ்ட்ராங் எனக்கு நல்லா தெரியும் எல்லாம் அந்த ஏலியனால வந்தது அவனை நான் சும்மா விட மாட்டேன்” என்று சொல்லி அவள் எழுந்து வர அப்பொழுது குளியல் அறையில் இருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்க,
“ ஓ உள்ளதான் இருக்கியா மவனே நீ வெளிய வா உன்ன கவனிச்சிக்கிறேன்” என்றவள் அவன் வரவிற்காக குளியலறை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் குளித்து முடித்த வேந்தனோ இடுப்பில் டவளோடு கதவை திறக்க அவனுடைய புது மனைவியோ காளியாக அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
“அய்யயோ ஆத்தாடி இப்படி காளி மாதிரி முறைச்சிகிட்டு நிக்கிறாளே” என்று அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன்,
“ பார்வை தான் காளி மாதிரி முறைச்சாலும் அவளோட கிளாமர் கொஞ்சம் கூட குறையல” என்று வருணித்துக் கொண்டிருக்க,
“ அடேய் வெண்ண மவனே வேண்டாம் சும்மா இருடா ஏற்கனவே நேத்து நைட்டு நடந்ததுக்கு தான் அவ இப்படி காளி மாதிரி முறைக்கிறா ஆனா நீ இப்ப காலையிலேயே ஒரு சம்பவம் பண்றதுக்கு ரெடியா இருக்கியா முதல்ல அவ கிட்ட இருந்து தப்பிச்சு போகிற வழிய பாரு” என்று அவனுடைய மூளை எடுத்துரைக்க,
“ ஆமா அதுவும் சரிதான்” என்று நினைத்துக் கொண்டவன் எதுவுமே நடக்காதது போல அவளை கடந்து போக முற்பட அவளோ, தன்னுடைய ஒரு கையால் அவனை மறித்தவள்,
“ எங்க போற முதல்ல எனக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் எங்க வேணா போ” என்று மேகா சொல்ல அவனோ வெகு நிதானமாகவே அவளுடைய கையை கீழே இறக்கி விட்டவன் அவளை விட்டு சற்று நகர்ந்து தன்னுடைய கபோடை திறந்து ஒரு துவாலையை எடுத்தவன் தன்னுடைய தலையை துவட்டியவாறு அவளிடம் என்ன என்று தன்னுடைய புருவத்தை மட்டும் மேலே உயர்த்தி கேட்க அவளோ,
“ எவ்வளவு தைரியம் இருந்தா என் அனுமதி இல்லாம என் கூட நீ ஒண்ணா இருந்திருப்ப இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்” என்று அவள் கேட்க அவனோ,
“என்ன உன் அனுமதியில்லாம உன்னை எடுத்துக்கிட்டேனா நல்லா யோசிச்சு பாரு நைட் என்ன நடந்துச்சுன்னு நான் முத்தம் கொடுத்தேன் தான் நீயும் அதுக்கு என் இழைஞ்சதினால தானே நான் அடுத்த கட்டத்துக்கு முன்னேறினேன்” என்று அவன் சொல்ல அவளோ,
“ யாரு நான் உன்கிட்ட இழைஞ்சேனா நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன் உன்கிட்ட இருந்து விலகுறதற்கு ஆனா நீதான் உடும்பு பிடி மாதிரி என்னை அவ்வளவு இறுக்கமா பிடிச்சுகிட்டு இருந்த அதுக்கப்புறம்” என்று ஏதோ சொல்ல வந்தவள் சொல்லாமல் தடுமாற அவனுடைய இதழ்களோ புன்னகையில் விரிந்தன.
“ இங்க பாருமா என் செல்லாஆஆ குட்டி” என்று அழைத்தவன் வெட்கத்தில் சிவந்த அவளுடைய முகத்தை ரசித்தவாறு அவள் அருகில் வந்தவன் தன்னுடைய ஒற்றை விரலால் அவளுடைய நாடியை பிடித்து உயர்த்தியவன் அவளுடைய நெற்றியில் இதழ் பதித்த பின்பு அவளுடைய மார்பில் உரசி கொண்டிருந்த அவன் கட்டிய தாலியை வெளியே எடுத்தவன்,
“ இது நான் கட்டின தாலி தானே” என்று அவன் கேட்க,
“ ஆமா என் விருப்பம் இல்லாம என் கழுத்துல கட்டுன தாலி” என்று அவள் கோபமாக சொல்ல அதில் தன்னை நொந்து கொண்ட வேந்தனோ,
“ சரி உன் விருப்பம் இல்லாம உன் கழுத்துல தாலி கட்டுனது தான். ஆனால் அது கட்டினது நான் தானே” என்று அவன் மீண்டும் கேட்க அவளுடைய தலையோ ஆமாம் என்பது போல மேலும் கீழும் ஆட அதில் புன்னகைத்தவன்,
“ நீ என்ன உன் புருஷனா ஏத்துக்கிட்டு தானே இங்க என் வீட்டுக்கு வந்த” என்று அவன் கேட்க மீண்டும் அவளுடைய தலை மேலும் கீழும் ஆடியது.
அதில் பெரியதாக புன்னகைத்தவன் மீண்டும் அவளுடைய கன்னத்தில் இதழ் பதித்து விட்டு,
“அப்படின்னா என் பொண்டாட்டியா உன்கிட்ட இப்படி நடந்துக்கிட்டதுல எந்த தப்பும் இல்ல நான் உன்ன முழு மனசோட என் பொண்டாட்டியா ஏத்துக்கிட்டு தான் உன்கிட்ட இப்படி நடந்துக்கிட்டேன் நீயும் என்னை உன் புருஷனா ஏத்துக்கிட்ட அப்புறம் என்ன” என்று அவன் சொல்ல அவளோ,
“ ஆனால் நான் உன்னை காதலிக்கவே இல்லையே காதலிக்காம உடல் மட்டும் இணையிறது அது ரொம்ப தப்பு” என்று அவள் சொல்ல அவனோ,
“ நீ சொல்றதும் சரிதான் ஆனால் நமக்குள்ள காதல் இல்லைன்னு என்னால சொல்ல முடியாது ஏன்னா எனக்கு தெரியும் நீ நல்லா யோசிச்சு எனக்கு பதில் சொல்லு. இதுவே நான் முத்தம் கொடுத்ததுக்கு பதிலா வேற யாராவது உன்னை முத்தம் கொடுக்க நெருங்கினா நீ என்ன செஞ்சிருப்ப” என்று அவன் கேட்க அவளோ,
“ வெட்டி போட்டு இருப்பேன்” என்று யோசிக்காமல் சட்டென கோபமாக பதில் உரைத்தாள்.
அதில் தலை சரித்து பார்த்த வேந்தனோ,
“ அப்போ நான் உனக்கு முத்தம் கொடுக்கும் போது மட்டும் ஏன் நீ அதை செய்யல என் மேல உனக்கு காதல் இல்லைன்னு சொல்ற அப்புறம் எப்படி காதல் இல்லாம நான் கொடுத்த முத்தத்தை உன்னால ஏத்துக்க முடியுது இப்ப கூட உனக்கு நெத்தியிலேயும் கன்னத்திலையும் முத்தம் கொடுத்தேன் ஆனா நீ எதுவுமே சொல்லாம இதோ அமைதியா நின்னுகிட்டு இருக்க” என்று அவன் கேட்க அவளோ அவனுடைய கேள்வியில் சற்று திணறித்தான் போனாள்.
அவளுக்கே அது கேள்விக்குறியாக தான் இருந்தது.
ஏன் எதனால் இவன் தன்னை நெருங்கினால் மட்டும் தன்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை.
அவன் சொன்ன அந்த வேறு ஒருவன் அப்படி என்ற வார்த்தையை கூட தன்னால் கேட்க முடியவில்லை.
அப்படி என்றால் எனக்கே தெரியாமல் என் மனம் இவனை நேசிக்கிறதா என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க,
“ நீ இப்படியே யோசிச்சிட்டு இரு எனக்கு வேலை இருக்கு மாமா போயிட்டு கொஞ்ச நேரத்துல வந்துடறேன்” என்றவன் மீண்டும் அவளுடைய இன்னொரு கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்று விட அவளோ யோசனையில் மூழ்கிப் போனாள்.
அவளைப் பார்த்துக் கொண்டே தன்னுடைய ஆடைகளை மாற்றியவன் அறையை விட்டு வெளியேற போக அவளோ சற்று கூட அந்த இடத்தை விட்டு அகன்ற பாடில்லை.
“ஓய் பொண்டாட்டி இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே வெறும் போர்வையோட மல்கோவா மாமி மாதிரி நிக்க போற இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே நின்னன்னா மாமனுக்கு மூடு மாறிடும் டி போய் டக்குனு குளிச்சிட்டு வா” என்று அவன் ஒரு மார்க்கமாக சொல்ல அவன் வார்த்தைகளில் திடுக்கிட்டவள் தன்னை குனிந்து பார்க்க அவன் சொன்னது போலவே தான் இருக்க தலையில் அடித்துக் கொண்டவள்,
“ போடா பொறுக்கி ஏலியன்” என்று அவனைத் திட்டியவள் வேகமாக குளியலறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
அதைக் கண்டு வாய்விட்டு புன்னகைத்த வேந்தனோ அறையை விட்டு வெளியேறப் போக அப்பொழுது அவர்களுடைய அறைக்கதவு படப்படவென தட்டப்பட்டது.
கதவின் அருகே வந்தவன் கதவை திறக்க அவனுடைய அப்பத்தாவோ கூர் விழிகளால் அவனையும் அவனுடைய அறையையும் அளந்து கொண்டிருந்தார்.
“ என்ன அப்பத்தா என்ன தேடுற” என்று வேந்தன் கேட்க அப்பத்தாவோ,
“ கொஞ்சம் பொறுடா” என்று மீண்டும் அவனுடைய அறையை ஒவ்வொரு இடமாக அவருடைய பார்வை பதிய இறுதியாக அவர்களுடைய கட்டிலை கண்டவருக்கோ சப் என ஆகிவிட்டது.
ஏனென்றால் அவர்களுடைய முதல் இரவிற்காக அலங்காரம் செய்யப்பட்ட அவர்களுடைய கட்டிலோ, எந்தவித சேதாரமும் இல்லாமல் அப்படியே இருக்க அதை பார்த்த அப்பத்தாவிற்கோ அப்போ ரெண்டு பேருக்குள்ள எதுவுமே நடக்கலையா என்று நினைத்தவருக்கோ முகம் வாடி போனது.