தேடித் தேடி தீர்ப்போமா

5
(3)

அத்தியாயம் 12 

 

விஹானோ அன்றைய இரவே ஆன்லைனில் முழுவதுமாக சர்ச் செய்து பார்த்தவன் அங்கு உள்ள பெஸ்ட் ஈவென்ட் மேனேஜரை தொடர்பு கொண்டு நாளை லல்லுவை இம்ப்ரஸ் பண்ண ஏத்தவாறு ஒரு இடத்தையும் சொல்லியவன் அழகாக அதை ரெடி பண்ண சொன்னான்.

அவரும் அதற்கு ஏற்றவாறே மிகவும் அழகாக ரெடி செய்தவர் அவனுக்கு சொல்லிவிட்டார்.

மறுநாள் காலை லல்லு கொஞ்சம் பிஸியாக இருப்பேன் என்று கூறியதால் அவள் எப்பொழுது தனக்கு மெசேஜ் செய்வாள் என்று ஆவலாக காத்துக் கொண்டிருந்தான் விஹான்.

அவன் எதிர்பார்த்தது போலவே லல்லுவும் அவனுக்கு மெசேஜ் செய்து விட அந்த மெசேஜ் சத்தத்தில் இவனுடைய முகமோ பளிச்சென மின்னியது.

நேற்று அவளிடம் நம்பர் வாங்கியவன் அவளுக்கே என பிரத்தியேகமாக ஒரு ரிங்டோன் செட் செய்து வைத்தவனோ இப்பொழுது அந்த சத்தம் முதல் முறையாக அவனுடைய செவிகளை சென்றடைய அவனுடைய வதனமோ தாமரைப்பூ போல மலர்ந்தது‌.

“ லாலி கிட்ட இருந்து மெசேஜ் வந்துட்டு” என்று தன்னுடைய மொபைலை எடுத்தவன் லாலிக்கு ரிப்ளை செய்தான்.

அவள் எங்கு இருக்கிறாள் என்று கேட்டு அறிந்தவன் தன்னை ஒரு முறை அங்கு உள்ள ஆள் உயர கண்ணாடியில் சரி பார்த்தவன் திருப்தியாக புன்னகைத்துக் கொண்டு கூலிங் கிளாஸை எடுத்து கண்ணில் அணிந்தவன் விசில் அடித்தவாறே தன்னுடைய அறையில் இருந்து வெளியேறினான் விஹான்.

இங்கு கீழே அப்பொழுதுதான் குளித்து முடித்த மீனுவோ தன்னுடைய தலையை பின்னலிட்டவாறே வந்து கொண்டிருந்தவள் கண்ணிலோ மாடியில் இருந்து தன்னுடைய தலைக்கேசத்தை கோதியவாறு விசில் அடித்துக் கொண்டே ஒவ்வொரு படிகளிலும் நடக்காமல் சிறு ஓட்டமும் நடையுமாக வந்த விஹானைக் கண்டவளோ அவனுடைய அழகில் மெய்மறந்து நின்று விட்டாள்.

வேகமாக வந்த விஹானோ மாடிப்படியின் முடிவில் மீனு நின்று கொண்டிருக்க அவள் நகர்ந்தால் தான் இவன் கீழே இறங்க முடியும்.

அப்படி இருக்கையில் விஹான்,

“ மீனா மீனா மூவ் சைட்” என்று அவளிடம் சொல்ல அவள் எங்கே காதில் வாங்கினாள் அவன் கூறுவதை.

வைத்த கண் வாங்காமல் இவனையே பார்த்துக் கொண்டிருக்க அவனோ தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டவன்,

“ எப்ப பாரு இவளோட பெரிய இம்சை” என்றவன் தன்னுடைய இரு கரங்களாலும் அவளுடைய இரு தோள்பட்டையில் வைத்து அழுத்தியவன் சற்று தன்னுடைய பாதையில் இருந்து அவளை நகர்த்தி விட்டு திரும்பியும் பாராமல் சென்று விட்டான்.

மீனுவோ அவன் தோளைத் தொட்டதும் உணர்வு வந்தவள் பேச முடியாமல் திகைத்தவாறே நிற்க அவன் நகர்த்துவிட்டு செல்வதையே விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

(ம்ம் நீ இப்படியே பார்த்துகிட்டே இரு அவன் உன் தங்கச்சிக்கு ப்ரொபோஸ் பண்ண போய்கிட்டு இருக்கேன் நீ எப்ப தான் அவன் கிட்ட பேச போறியோ அது இந்த ஜென்மத்துல நடக்காது உன்னை போய் ஹீரோயினா போட்டதுக்கு நான் படும் பாடு பெரும்பாடு என்று தன் தலையில் அடித்துக் கொண்டார் ரைட்டர். அதாங்க நான் தான்)

 

லல்லு அவளுடைய பொட்டிக்கிள் இருக்க இங்கு விஹானோ நேராக அவளுடைய பொட்டிக் உள்ளே வந்தவன் அவளை பார்க்க அவளோ தேவலோக மங்கை போல மிளிர்ந்தாள்.

அடர் சிகப்பு நிற வண்ணத்தில் நீள ஃபிராக் அணிந்தவள் காதில் பெரிய வெள்ளை நிற வைரத்தோடு அணிந்து தன்னுடைய முடியை விரித்து விட்டிருந்தாள்.

அங்கு சோபாவில் அமர்ந்திருந்தவள் தன்னுடைய மொபைலில் எதோ செய்து கொண்டிருக்க உள்ளே வந்த விஹானின் கண்களோ அவளைத்தான் வட்டமடித்து கொண்டிருந்தன.

தன்னைச் சுற்றி ஏதோ விசித்திரமான சூழல் இருப்பது போல தோன்றிய லல்லுவோ சட்டென வாசலின் புறம் திரும்ப அங்கு விஹானோ ஊதா நிறத்தில் கோட் சூட் அணிந்து கண்ணில் கூலிங் கிளாஸுடன் இடது கையில் அவனுடைய மொபைலும் காரின் சாவியும் இருக்க வலது கையால் அவனுடையத் தலையை கோதிக் கொண்டு நின்று கொண்டிருக்க அவனைப் பார்த்தவளோ ஒரு நிமிடமே ஆயினும் அவனுடைய அந்த ஆண்மை மிகும் அழகில் சொக்கித்தான் போனாள் பெண்ணவள்.

பின்பு தன்னிலை திரும்பியவள் ஒரு சிரிப்போடு அவன் அருகே வந்து, “விஹான் போலாமா” என்று கேட்க, அவனோ “போகலாம் லாலி” என்று சொல்லியவன் தன்னுடைய கையை அவளின் முன் நீட்ட,

அவளோ புருவங்கள் இடிங்கியவாறே அவனையும் அவன் நீட்டிய கையையும் பார்த்தாள்.

பிறகு எதையும் யோசிக்காமல் தன்னுடைய கையை அவனுடைய கை மீது வைக்க அவனோ தன்னுடைய பிடியை இறுக்கமாக அவளுடைய கையில் காட்டியவன் தன்னுடன் அழைத்துச் சென்று காரினுடைய மறுபக்கக் கதவை திறந்து விட்டு அவளை அமர வைத்தவன் தானும் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்து காரை செலுத்த தொடங்கினான் தன்னுடைய இலக்கான அந்த இடத்திற்கு.

அவளோ போகும் வழியில் எங்கு செல்கிறோம் என்று கேட்க அவனும்,

“ சர்ப்ரைஸ்” என்று ஒரு வார்த்தையில் அவளை அடுத்த வார்த்தை பேச விடாமல் செய்தான் அந்த வித்தைக்காரன்.

அவன் வர வேண்டிய இடம் வருவதற்கு ஒரு ஐந்து நிமிடத்திற்கு முன்னர் காரை ஒரு ஓரமாக நிப்பாட்ட அவளோ,

“ என்னாச்சு விஹான் நம்ம வந்துட்டோமா?” என்று கேட்க அவனோ தன்னுடைய ஆள்காட்டி விரலை அவளுடைய வாயின் மீது வைத்தவன்,

“ உஸ்ஸ் எதுவும் பேசக்கூடாது” என்றவன் தன்னுடைய கையில் சிகப்பு நிற ரிப்பனை காட்டியவன்,

“ கேன் ஐ” என்று அவளிடம் அனுமதி கேட்க அவளுடையத் தலையும் சரி என ஆடியது.

தன் கையில் வைத்திருந்த அந்த சிகப்பு நிற ரிப்பனை எடுத்தவன் அவளுடைய இரு கண்களையும் மறைத்தவாறு கட்டி விட்டான்.

பின்பு தன்னுடையக் காரை எடுத்தவன் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு வந்து நிறுத்தினான்.

அவளை இறங்க வேண்டாம் என்று சொல்லியவன் தான் முதலில் இறங்கி வந்து அவள் பக்க கதவைத் திறந்து அவளுடைய இடது கையை அவள் அனுமதி இன்றியே பிடித்தவன் அவளை வெளியே அழைத்துச் கூட்டி வந்தான்.

அவளும் கண்களை கட்டியிருந்ததால் பேலன்ஸ்காக அவனை பிடித்துக்கொண்டு அவனுடன் நடந்து வந்தாள்.

அவன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு வந்தவன் அவளுடைய கண்கட்டை அவிழ்த்து,

“ ஓப்பன் யுவர் ஐஸ்” என்று அவளுக்கு முன் நின்றவாறு கூற அவளும் கண்ணைத் திறந்து பார்க்க, பார்த்தவள் வாயை பிளந்தாள்.

அந்த இடமோ வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு அழகாக இருந்தது.

ஆற்றங்கரையில் முழுவதும் மல்லிகை பூக்களாலும் தாமரை பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அவர்களுக்கு என ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த இடத்தில் கீழே அவள் அடுத்த அடி எடுத்து வைத்தால் அதிலிருந்து பத்தடி தூரம் வரைக்கும் தாமரைப் பூ இதழ்களால் அவளுக்கு ரெட் கார்பெட் விரிக்கப்பட்டிருந்தது.

அந்த இடத்தில் இருவர் அமர்வதற்கான ஒரு டைனிங் டேபிளும் இரண்டு நாற்காலியும் இருக்க அங்கு உள்ள அழகை வெகுவாக ரசித்தவள் விஹானை பார்க்க அவனும் அவளையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

பின்பு அவளுடைய கையைப் பிடித்து அங்கு கூட்டி வந்து நிற்க வைத்தவன் கீழே முட்டிகால் போட்டு அமர்ந்து கையில் ஒரு சிறிய பெட்டகத்தை வைத்து அவளை நோக்கி ஏந்தியவாறு இருக்க, அவளுக்கோ அது ஆச்சரியமாக இருந்தது.

இதுவரை விஹானின் செயலில் திளைத்து இருந்தவள் அவனுடைய இந்த செய்கையில் பெண் அவளோ தன்னைத் தொலைக்க முன் வந்தாள்.

அவளுடைய விழிகளோ பெரிதாக

விரிந்த வண்ணம் இருக்க அந்த பன்னீர் ரோஜா பூ இதழ்களோ அவனிடம் என்ன என்று கேட்பதற்காக சிறிதாகவே அசைந்தன.

உடனே விஹான் சற்றும் யோசிக்காமல்,

“ ஐ லவ் யூ விழி” இன்று அவளுடைய அந்த மைவிழிகளை பார்த்தவாறே கூறியவன் தன் கையில் வைத்திருந்த அந்த சிறிய பெட்டகத்தை திறந்து அதனில் இருக்கும் ஒற்றைக்கல் வைரம் பதித்த அந்த மோதிரத்தை அவளிடம் நீட்டினான்.

அவளோ விஹானின் அடுத்தடுத்த செய்கையில் முற்றிலுமாக அவன் வசம் சாய்ந்தவள் எதையும் யோசிக்காமல் தன்னுடைய வலது கரத்தை அவன் நீட்டிய அந்த மோதிரத்தின் அருகே நீட்டியவளோ, “ ம்ம்” என்று சொன்னாள்.

அவ்வளவுதான் விஹானோ தன்னுடைய இடது கரத்தால் அவளுடைய வலது கரத்தை தாங்கியவன் அந்த மோதிரத்தை மெதுவாக அவளுக்கு வலிக்காமல் அழகாக போட்டு விட்டவன் தன்னுடைய இதழில் பதித்து முதல் முத்தத்தை அச்சாரமாக பதியம் போட்டான் விஹான். 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!