வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 14

4.7
(38)

வாழ்வு : 14

மதுரா தனது கடந்த காலத்தை மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள். “அண்ணனும் அப்பாவும் என்ன சிங்கப்பூரில் கொண்டு விட்டு வந்தாங்க.. அத்தை வீட்டுல நான் ரெண்டு வருஷம் இருந்தேன்.. அங்கிருந்துதான் காலேஜ் போனேன்.. காலேஜ் எல்லாம் நல்லாவே போச்சு கொஞ்சம் கொஞ்சமா நான் வாழ்க்கையை புரிஞ்சுக்கிட்டேன், நடந்தது எல்லாத்தையும் மறக்க பழகிட்டேன்.. அத்தையும் எனக்கு ரொம்ப ஆதரவா இருந்தாங்க.. மாமா அவர் பொண்ணு மாதிரியே என்னை பாத்துக்கிட்டு.. விக்ரம் ரொம்ப நல்ல நண்பன் எனக்கு.. அப்படி இருக்கும்போது ஒரு நாள் காலேஜ்ல ஒரு பையன் வந்து என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணினான்.. அவன் எனக்கு ப்ரொபோஸ் பண்ணும் போது எனக்கு இன்னொருத்தங்க முகம் தான் ஞாபகத்துக்கு வந்துச்சு.. அப்போதான் அந்த செகண்ட் தான் எனக்கு என் மனசுல இருக்கிறது புரிந்தது.. நாம் மலேசியாக்கு வந்ததுக்கப்புறம் அவங்க கூட பெருசா பேசுறது இல்ல.. எப்பயாவது கிடைச்சாத்தான் நான் பேசுவேன்.. அன்னைக்கு அந்த பையன் ப்ரொபோஸ் பண்ணப்போ என் மனசுக்குள்ள வந்த முகம் புகழோடுதுதான் அண்ணி..” என்று மதுரா சொன்னதைக் கேட்ட சம்யுக்தா மயங்கி விழுவதைப் போல நடித்தாள். 

“என்ன மது சொல்ற நம்ம புகழ் அண்ணாவா?”

“ஆமா அண்ணி அவங்களே தான்.. ஆனா அண்ணி அவங்க ரொம்ப மோசம் தெரியுமா? என்னை எவ்வளவு நாள் அலைய வச்சாங்க தெரியுமா? எவ்வளவு கெஞ்சினேன்.. அழுதேன்.. ஆனாஅ அண்ணாகூட இருக்கிற பிரண்ட்ஷிப்புக்காக என்னை ஏத்துக்கவே மாட்டேன்னுட்டாங்க.. அதுக்கப்புறம் நீங்க இல்ல நான் செத்துருவேன்.. அது இதுன்னு சொல்லி ஒரு மாதிரியா என்ன லவ் பண்ண வச்சுட்டேன்.. சரி காலேஜ முடிச்சிட்டு இங்க வந்து ஃப்ரீயா இருக்கலாம்னு வந்தா.. என் அண்ணன் என்ன பண்ணாருன்னா அமெரிக்காக்கு எம்பிஏ படிக்க அனுப்பி வைச்சிட்டாரு.. ஆனா நான் மலேசியாவில் இருந்து இங்க வந்தப்போ என் பழைய அண்ணன் காணாமலே போய்ட்டாங்க.. அண்ணனைப் பாக்கவே ரொம்ப பயமா இருந்துச்சு.. தனக்கென்று ஒரு வட்டத்தை போட்டுக்கிட்டு அண்ணே வாழ ஆரம்பிச்சாங்க.. நான் புகழ்கிட்ட இதைப் பத்தி கேட்டப்போ அது என் நண்பனோட பர்சனல் என்னால அதை சொல்ல முடியாதுனு சொல்லிட்டாரு.. அண்ணாவைப் பார்க்கும்போது எல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.. அண்ணா பழையபடி மாறிட மாட்டாரானு வேண்டிகிட்டே இருப்பேன்.. பாப்போம் அவர் எப்ப பழையபடி மாறுறாருன்னு..” என்று தனது மனதில் இருந்தது எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் மதுரா. 

மதுராவும் புகழும் விரும்புகிறார்கள் என்பதை அறிந்த சம்யுக்தாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. “ரொம்ப சந்தோஷம் மது எனக்கு.. உண்மையாவே இந்த விஷயம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நீங்க ரெண்டு பேரும் எப்பவும் ஹாப்பியா இருக்கணும்..” என்று மனதார வாழ்த்தினாள் சம்யுக்தா. 

“ஆனா அண்ணி இது அண்ணனுக்கு தெரிஞ்சா அண்ணா என்ன முடிவெடுப்பாருனு தான் எனக்கு பயமாவே இருக்கு..”

“சார் ஏந்த விஷயம் இருந்தாலும் நல்லா யோசிச்சு முடிவெடுப்பார் மது.. நீ எதுக்கும் பயப்படாத.. கூடிய சீக்கிரமே உனக்கும் புகழ் அண்ணாக்கும் கல்யாணம் பண்ணி வைப்பாங்க.. எனக்கு தெரிஞ்சு உங்க விஷயம் சாருக்கு தெரிந்திருக்கும்னுதான் எனக்குத் தோணுது.. ஏன்னா உன்னை இவ்வளவு பாதுகாப்பா பாத்துக்கிறாங்க.. உன்னோட ஒவ்வொரு அசைவும் அவருக்குத் தெரியும்.. அப்படி இருக்கும் போது நீங்க ரெண்டு பேரும் விரும்புறது கூட அவருக்கு தெரிஞ்சிருக்கும்னுதான் நான் நினைக்கிறேன்.. வெயிட் பண்ணி பாப்போம் என்ன நடக்குதுன்னு..” என்று சம்யுக்தா மதுராவிடம் சொல்ல அவளது முகமோ கலவரமானது. “அய்யய்யோ என்ன அண்ணி இப்படி குண்டத்தூக்கிப் போடுறீங்க.. சரி லவ் பண்ணியாச்சு இனி சமாளிச்சு தானே ஆகணும்..” என்று சிரித்தாள் மதுரா. அவளுடன் இணைந்து சிரித்த சம்யுக்தாவின் சிரிப்பொலி அந்தப் பக்கமாக வந்த தீக்ஷிதன் காதுகளில் விழுந்தது. இங்கு வந்த இத்தனை நாட்களில் இன்று தான் சம்யுக்தா இப்படி கலகலவென்று சிரித்து பார்க்கிறான் தீஷிதன். ஒரு நிமிடம் நின்று அந்த சிரிப்பை இரசித்துவிட்டு கீழே சென்றான்.

கீழே சென்ற தீஷிதனை அழைத்தார் பரந்தாமன். தந்தையின் அழைப்பிற்கான காரணம் தீஷினுக்கு புரிந்தது. அதனால் அவனும் மனசுக்குள் சிரித்துக் கொண்டே தந்தையிடம் சென்றான். “சொல்லுங்க டாட் என்ன விஷயம்?” என்று எதுவும் தெரியாது போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்க, அவனைப் பார்த்த பரந்தாமன், “என்கிட்டயே மறைக்கிறயா தீஷி? கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்.. பொண்ணுங்கள பிடிக்காதுன்னு சொல்லிட்டு இருப்ப.. இப்போ என்னடான்னா மதுராக்கிட்ட சம்யுக்தாவ எதுக்காக அண்ணின்னு கூப்பிட சொல்ற என்ன விஷயம்?” என்று நேரடியாக விசயத்துக்கு வந்தார் பரந்தாமன். 

தந்தையைப் பார்த்த தீக்ஷிதன் ஒரு பெரும் மூச்சென்றை விட்டு விட்டு, “அண்ணன் பொண்டாட்டியை அண்ணின்னு சொல்லாம வேற எப்படி சொல்ற? இங்க பாருங்க அப்பா எனக்கு சம்யுக்தாவ பிடிச்சிருக்கு.. என்னை தேடி வந்து மேல விழுற பொண்ணுங்கள தான் நான் பாத்திருக்கிறேன்.. முதல் முறையா ஒரு பொண்ணு என்கிட்ட இருந்து விலகி விலகி நிற்கிறா.. அதுதான் என்ன அவ பக்கம் இழுத்துச்சின்னு சொல்லலாம்.. அதுக்கப்புறம் தன்னோட வேலையில மட்டும் இல்லாம தன்னோட டீமுக்காக அவ காட்டுற சின்சியாரிட்டி.. அது ரொம்பவே புடிச்சிருக்கு.. மொத்தத்தில சம்யுக்தாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குபா..” என்று தீஷிதன் கூற, அவனைப் பார்த்த பரந்தாமன் நெஞ்சிலே கையை வைத்தார். 

“ஐயோ நீ என்னோட மகன் தீஷியா? அவனுக்கு இப்பிடி எல்லாம் பேச வராதே.. நீ யாரு?” என்று மகனிடம் கேட்க, 

“அப்பா கலாய்க்காதீங்க.. நான் தான் பேசுறேன்.. இந்த வீட்டுக்கு மருமகனா அது சம்யுக்தா தான்.. அதுல எந்த மாற்று கருத்துமே கிடையாது..” என்ற அவனின் உறுதியான குரலில் கூற இதைக் கேட்ட பரந்தாமனுக்கு ஒருபக்கம் பயமாகவும் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. 

“ஆனா தீக்ஷி இதுல உன்னோட விருப்பம் மட்டும் முக்கியம் இல்ல.. சம்யுக்தாவோட சம்மதமும் வேணும்ல.. உங்கிட்ட நான் சம்யுக்தாவ பத்தி சொல்லியிருக்கேன்ல..”

“அப்பா உங்களுக்கு தெரியாதது கூட எனக்கு தெரியும்..”

“என்ன தீஷி சொல்ற?”

“ஆமாப்பா சம்யுக்தா வந்து மூணு நாள்லயே அவள பத்தி ஃபுல் டீடைல்ஸ் நான் எடுத்துட்டேன்..”

“அப்போ அவ மேல அனுதாபப்படுறியா?”

“இல்லவே இல்லை அப்பா.. நான் ஜஸ்ட் அவளை பற்றி தெரிஞ்சிக்க நினைச்சேன் அவ்வளவு தான்..”

“தீஷி அவளோட முதலாவது கல்யாணத்தில் நடந்த குழப்பம், அதனால அவ பட்ட வேதனை அவ மனசுக்குள்ள வடு மாதிரி இருக்கும்.. நீ அவகிட்ட பேசுற விதம் ரொம்ப முக்கியம்.. என்னால இத பத்தி சம்முக்கிட்ட நிச்சயமா பேச முடியாது.. நான் காப்பாத்தி கூட்டிட்டு வந்துட்டு இப்ப நானே என் பையன அவள கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்றது நல்லா இல்ல.. எனக்குத் தெரிஞ்சு இதை நீதான் அவகிட்ட பேசணும்..” என்று சொன்னார். 

“ஓகே அப்பா இதை நானே ஹேண்டில் பண்ணிக்கிறேன்..” என்று சட்டென்று சொன்ன தீஷிதனிடம், “ஓகே தீஷி ஆனா நீ இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பனு நான் கொஞ்சம்கூட நினைச்சு பாக்கல..”

“காலம் எல்லாத்தையும் மாத்தும் அப்பா.. நான் சம்யுக்தாவை மனப்பூர்வமா கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்.. அவளோட கடந்த காலம் எனக்கு முக்கியம் இல்ல.. அவ யாருக்கு முன்னால தலை குனிஞ்சு நின்னாலோ அவங்க முன்னால தலை நிமிர்ந்து நிப்பா.. நிக்க வைப்பேன்..” என்று சொல்லும்போது தீட்சிதரின் கண்கள் சிவந்து. மகனின் கோபம் அளவு கடந்து உள்ளது என்பதை அவனின் முகத்தை வைத்து அறிந்த பரந்தாமன் நிலைமையை மாற்றும் பொருட்டு, “தீஷி நான் மறுபடியும் சொல்றேன் அவளை கஷ்டப்படுத்துற மாதிரி ஒரு நிலைமையை நீ எப்பவுமே கொடுக்க மாட்டேன்னு நீ எனக்கு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்க.. அதை எப்பவுமே ஞாபகம் வச்சுக்கோ.. இந்த கல்யாணத்துல சம்யுக்தாக்கு சம்மதம் இல்லைன்னு சொன்னா.. நிச்சயமா சொல்றேன் நான் அவள் பக்கம் தான் நிப்பேன்.. நீ அவளை எதுவும் சொல்லக்கூடாது.. கட்டாயப்படுத்தவும் கூடாது..” என்றார். 

அதைக் கேட்டதும் சிரித்த தீஷிதன், “அப்பா என்னைப் பத்தி தான் உங்களுக்கு தெரியும்ல்ல.. எனக்கு புடிச்சது எப்போதும் என்னை விட்டு போகாது.. இந்த தீக்ஷிதனோட பொண்டாட்டினா அது சம்யுக்தாதான்..” என்றவன் தனது ஷர்டில் மாட்டி இருந்த கூலிங்கிளாஸை எடுத்து கண்களில் மாட்டிக்கொண்டு திரும்ப அங்கே வாயை ஆ என்று விரித்தபடி நின்று இருந்தான் புகழ். 

அவன் முதுகில் ஒரு தட்டி தட்டியவன், “அதுதான் எல்லாத்தையும் கேட்டுட்டல அப்புறம் என்ன சும்மா ரியாக்ஷன் கொடுத்துட்டு வா போகலாம்..” என்று அவனை அழைத்துக் கொண்டு சென்றான். பரந்தாமன் தான், ‘எது எப்படியோ நல்லது நடந்தா சரி..’ என்று நினைத்தவர் தன் மனைவியின் சமாதிக்குச் சென்றார். 

காரில் தீஷிதனுடன் வந்து கொண்டிருந்த புகழ் தீக்ஷிதனைப் பார்ப்பதும் ரோட்டை பார்ப்பதுமாக மாறி மாறி பார்த்துக் கொண்டு வருவதை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது. 

“புகழ் இப்ப எதுக்கு நீ என்னையும் ரோட்டை மாத்தி மாத்தி பாத்துட்டு இருக்க என்ன விஷயம்?” என்றான். அதற்கு புகழும், “தீஷி பொண்ணுங்களே பிடிக்காத மாதிரி பேசுவ.. இப்ப என்னனா சம்யுக்தாவை கல்யாணம் பண்ணிக்கிறதுக்குனே நீ பொறந்தவன் மாதிரி பேசிட்டு இருக்க?”

“ஆமா எனக்கு பொண்ணுங்களை பிடிக்காது தான்.. சும்மா இருக்கவங்க மேல வந்து வந்து விழுற பொண்ணுங்களை யாருக்குத்தான் பிடிக்கும்? எனக்கு சம்யுக்தாவோட அமைதி பிடிச்சது.. அவ வேலைல காட்டுற நேர்மை பிடிச்சுது..” என்று சொல்லிக் கொண்டே செல்ல, அவனை நிறுத்திய புகழ், “ஆனா தீஷி நான் இதை வேணும்னு சொல்லல.. யாராவது சம்யுக்தாவோட உருவத்தைப் பார்த்து கேலி பண்ணி அவளை ஹர்ட் பண்ணினா என்ன பண்ணுவ? ஏன் நீயே எப்பவாவது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில சொல்லிட்டா என்ன பண்ணுவ? நீ கோபத்துல வார்த்தையை விடுறதை நானே பாத்திருக்கேன் தீஷி.. அதனாலதான் கேக்கிறேன்.. ஒரு வாழ்க்கைதான் சம்முக்கு சரியா அமையல.. ரெண்டாவது வாழ்கையாவது நல்லா அமையணும்டா..”

“நீ சொல்றது எனக்கு புரியுது புகழ்.. நான் சம்யுக்தான்னு சொன்னது அவளை மொத்தமா சேர்த்துதான்.. அவளோட வெளிப்புற அழகு எனக்கு தேவை இல்லடா.. அவளோட மனசு அழகு.. அது தான் அங்க தான் நான் விழுந்துட்டேன்.. என்னோட சந்தோஷத்தை காதலை ஏத்துக்கிறவ என் கோபத்தையும் ஏத்துக்கத்தான் வேணும்.. ஆனால் நான் அவளை எப்பவும் நோகடிக்க மாட்டேன்..” என்று தீஷிதன் சொல்லும் போதே அவன் சம்யுக்தா மீது கொண்ட காதல் புகழுக்கு புரிந்தது. 

“தீஷி அங்கிள் சொன்னதைத்தான் நானும் சொல்றேன்.. நீ அவள ரொம்ப நிதானமா ஹேண்டில் பண்ணனும்.. இன்கேஸ் கல்யாணத்துக்கு அப்புறம் கூட வார்த்தைகளை பார்த்து பேசு.. நீ சட்டுனு ஒரு வார்த்தை சொன்னாலும் அவளால தாங்கிக்க முடியாம போயிடும்.. நீ புரிஞ்சுப்பனு நினைக்கிறேன்..” என்றவன் நண்பன் தோளில் தட்டிக் கொடுத்தான். “கண்டிப்பா புகழ் நீ வேணும்னா பாரேன் உன் தங்கச்சிய நான் எப்படி பாத்துக்குறேன்னு..” 

“எனக்கு தெரியாதா உன்னைப்பத்தி.. ஆனா இந்த லவ் மேட்டரை என்கிட்ட சொல்லாம விட்டுட்டியே..” என்று புகழ் சொல்லும்போது அவனைப் பார்த்து தீஷிதன் கேட்ட கேள்வியில் புகழ் அதிர்ச்சி அடைந்தான். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

நான் கேட்டது 20+ரேட்டிங் ஆனா நீங்க அதை விட அதிகமா குடுத்திருக்கிறீங்க ரொம்ப நன்றி பட்டூஸ் 😍😍

உங்கள் அன்புத்தோழி

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 38

No votes so far! Be the first to rate this post.

1 thought on “வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 14”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!