என்னங்க ஏன் வரச்சொன்னிங்க என்ற மலர்கொடியிடம் ரோனி எப்படி இருக்கிறாள் என்றார் நெடுமாறன். அவளைப் பற்றி கவலை வேண்டாம் உதய் பார்த்துப்பான் நீங்க கலங்க வேண்டாம் சின்னப் பொண்ணு தானே அவள் திடீர்னு அப்படி ஒரு வார்த்தை சொல்லவும் ரோனியால தாங்கிக்க முடியலை என்றார் மலர்கொடி.
புரியுது மலர் என்ன பண்ணுறது அவனுக்காக பார்க்கவில்லை என்றாலும் வசுந்தராவிற்காக நாம பார்க்கனுமே அதான் ஸ்ரீஜா பேசின பேச்சுக்கு நான் ஒன்றும் பண்ணாமல் இருக்கிறேன் என்ற நெடுமாறனிடம் விடுங்க இனி அவள் ஏதாச்சும் பேசினால் பார்க்கலாம் என்ற மலர்கொடி சம்மந்தி வீட்டாளுங்க வரும் நேரமாச்சு நீங்களும், சின்னவரும் அத்தை கூட ஹாலில் இருங்க சுசி தனியா எல்லா வேலைகளையும் பார்க்கிறாள் நான் ஒரு எட்டு அவளை பார்த்துவிட்டு வருகிறேன் என்று சென்றார் மலர்கொடி.
என்ன ஸ்ரீஜா இன்னும் ரெடியாகாமல் இருக்கிறாய் என்றான் தேவ். எங்கே போறோம் ரெடியாக என்றவளிடம் மெடிக்கல் கான்பரன்ஸ் இருக்குனு சொன்னேனே என்றவனிடம் உன் தங்கச்சியை பொண்ணு பார்க்க வரும் பொழுது நீ இங்கே இல்லாமல் கான்பரன்ஸ் போகனும்னு சொல்லுற என்றாள் ஸ்ரீஜா. அவளிடம் நாம இங்கே இருந்தால் நிச்சயம் அசிங்கம் தான் படனும். அப்பா , அம்மா கட்டாயம் நம்மளை இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்க மாட்டாங்க ஏன் அசிங்கம் பட்டுகிட்டு அதற்கு நாம கான்பரன்ஸ்க்கே போகலாம் என்றான் தேவச்சந்திரன்.
இதோ பாரு தேவ் அவங்க என்ன தான் பண்ணுறாங்கனு பார்ப்போமே நீ அந்த கான்பரன்ஸ் கேன்சல் பண்ணு என்றாள் ஸ்ரீஜா. என்ன விளையாடுறியா என்றவனிடம் ஆமாம் உன் கூட விளையாடனும்னு எனக்கு ரொம்பத் தான் ஆசை ச்சீ ப்பே என்றாள்.
நிஜமாவே நீ கான்பரன்ஸ்க்கு கூப்பிட்டிருந்தால் நான் கட்டாயம் வந்துருப்பேன் என்னை தனியா கூட்டிட்டு போக அந்த பிசாசு தானே ஐடியா கொடுத்தாள். அவளும், அவள் முகரையும் அவள் யாரு என் விசயத்தில் தலையிட அவளை மூஞ்சியை உடைக்கனும் என்றவளிடம் பைத்தியமாடி நீ உனக்கு ஏன்டி அவங்க மேல இவ்வளவு வன்மம். அவங்க சின்னப் பொண்ணுடி காலையில் தான் பிரகாஷ் கூட சேர்த்து வச்சு பேசி சூசைட் பண்ண வைக்கிற அளவுக்கு பண்ணின இப்போ திரும்பவும் என்றான் தேவ்.
என்ன அவளை சொன்னால் உனக்கு எரியுது ஏன் அவள்கிட்டையும் உன் திருவிளையாடலை நடத்திட்டியோ, உனக்கு தான் உன் அண்ணன் ஆசைப் படுற பொண்ணு மேலயே ஆசை வந்துருமே. தேவ் மாமா , தேவ் மாமானு கொஞ்சுகிறாள் என்ன அவளையும் என்று அவள் சொல்ல வரும் முன் பளார், பளாரென்று அவளது கன்னத்தில் அறைந்தான் தேவ். என்னடி நானும் பொறுமையா போயிட்டு இருக்கேன் நீ அடங்கவே மாட்டியா இல்லை உன் பிரச்சனை என்னடி ஆமாம்டி நீ என் அண்ணன் ஆசைப் பட்ட பொண்ணு தான். உன்னை என் அண்ணனைப் போல நடிச்சு தான் கெடுத்தேன். அதனால தான் நம்ம கல்யாணம் நடந்துச்சு இதை எப்பவுமே மறுக்கவில்லைடி. நான் பண்ணினது பெரிய பாவம் தான். அதற்காக தினம் , தினம் உன் காலில் விழுந்து தான் மன்னிப்பு கேட்கிறேன். நீ என்னை மன்னிக்கவில்லை, மன்னிக்கவும் வேண்டாம் ஆனால் என் அண்ணனை கல்யாணம் பண்ணிகிட்ட ஒரே காரணத்திற்காக அந்தப் பொண்ணு வெரோனிகா மேல வன்மத்தை கொட்டாதே.
அவங்க சின்னப் பொண்ணு அவங்க உனக்கு எந்தக் கெடுதலும் பண்ணியதில்லையே. அண்ணனும், அவங்களும் கல்யாணம் பண்ணிக்கும் பொழுது உன்னைப் பற்றி ஏன் அண்ணனுக்கு ஒரு தம்பி இருக்கிறது கூட அவங்களுக்கு தெரியாது அப்படி இருக்கும் பொழுது நீ எதற்கெடுத்தாலும் அவங்களை வார்த்தையால கொன்னுட்டு இருக்க பதிலுக்கு உன்னை அவங்க ஒரு வார்த்தை பேசாமல் இருப்பது உனக்கு ரொம்ப அனுகூலமா போச்சு இல்லை. கொட்ட கொட்ட குனியுறதால உனக்கு திமிரும், கொழுப்பும் பல மடங்கு கூடிருச்சு என்றவனை அவள் ஏதோ கூற வர மீண்டும் அவளது கன்னத்தில் அறைந்தவன் இது காலையில் பிரகாஷ், அண்ணி இரண்டு பேரையும் சேர்தது வச்சு பேசினதுக்கு என்றான்.
என்னடா திமிரா எனக்கு அவள் மேல வன்மமா ஆமாம் வன்மம் தான் என்னோட வாழ்க்கையை அவள் வாழ்ந்துட்டு இருக்கிறாள். எனக்கு வலிக்காதா என்னோட வலி உன்னால புரிஞ்சுக்கவே முடியாதுடா நீ கட்டுன தாலி என் கழுத்தில் இருக்கலாம், நீ கொடுத்த புள்ளையை என் வயிற்றில் சுமந்திருக்கலாம் ஆனால் ஒருநாளும் நீ என் மனசுல வந்திட முடியாது. என் மனசுல எப்பவுமே என்னோட தயா மாமா தான் இருப்பாரு ஆனால் அவரோட மனசுல நான் ஏன்டா இல்லாமல் போனேன். அந்த ரோனி ஏன்டா வந்தாள். என் தயா மாமா மனசுல நான் மட்டும் தான் இருப்பேன்னு ஆணித் தனமா நான் நம்பிட்டு இருந்தேன். இந்த வீட்டுக்கு வந்ந பிறகு அந்த நம்பிக்கை சுக்குநூறா உடைஞ்சு போச்சு தேவ் என்று அழுதவளிடம் ஸ்ரீஜா ஆர் யூ மேட் ஏன்டி இப்படி பிகேவ் பண்ணுற நான் உன்னை லவ் பண்ணுறேன் ஸ்ரீஜா. உயிருக்கு , உயிரா லவ் பண்ணிட்டு இருக்கிறேன் என்னை நீ ஏற்றுக் கொள்ள வேண்டாம் ஆனால் புரிஞ்சுக்கலாமே. நமக்கு குழந்தை இருக்கு அவளுக்காக நாம ஏன்டி சேரக் கூடாது என்றவனை முறைத்தவள் என் பொண்ணுக்காக மட்டும் தான் உன் கூட ஒரே அறையில் இருக்கிறேன். நீ கட்டின இந்தக் கயிற்றையும் என் கழுத்தில் சுமந்துகிட்டு இருக்கிறேன் என்றாள் ஸ்ரீஜா.
அவளை ஆற்றாமையுடன் பார்த்தவன் அமைதியாக எழுந்து சென்று விட்டான். ஏன்டி இப்படி பண்ணிட்டு இருக்கிற நீயும் வாழாமல், அடுத்தவங்க நிம்மதியையும் கெடுத்துட்டு என்று நினைத்தவன் அமைதியாக தன் காரில் எங்கோ கிளம்பி சென்று விட்டான்.
என்ன லாவண்யா ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்கிற உன் அண்ணனுக்கு பொண்ணு பார்க்க போகிறோம் என்ற தனலெட்சுமியிடம் அம்மா அண்ணன்கிட்ட பேசுங்கம்மா நம்ம சௌமியாவுக்கு என்ன குறைச்சல் அவளை விட அந்த அர்ச்சனா அழகா என்ன என்றாள் லாவண்யா. என்னடி உன் பிரச்சனை சௌமியாவுக்கே இதில் பிரச்சனை இல்லைங்கிறப்போ உனக்கு என்ன பிரச்சனை. இதோ பாரு லாவண்யா உன்னோட புருசனை தேர்ந்தெடுக்கிற உரிமையை நீ உன் அப்பாவுக்காச்சும் கொடுத்தியா எனக்கு கௌதமைத் தான் பிடிச்சுருக்கு அவனை எனக்கு கட்டி வைங்கனு பிடிவாதம் பண்ணின நான் வேண்டாம்னு சொன்னப்ப நீ என்ன சொன்ன ஞாபகம் இருக்கிறதா ” இது என்னுடைய வாழ்க்கை , இதை நான் மட்டும் தான் முடிவு பண்ணுவேன். கௌதம் கூட வாழப் போகிறது நான் தானே, நீங்கள் இல்லையே அதனால் நீங்கள் இதில் தலையிடாதிங்க அம்மா” னு நீ சொன்னியே அதே தான் இப்போ நான் சொல்கிறேன்.
விவேக் அவனுடைய வாழ்க்கையை அவன் தான் முடிவு பண்ணுவான். முடிவு பண்ணனும் அவன் தானே அர்ச்சனா கூட வாழப் போகிறான். நீ இல்லையே என்றார் தனலட்சுமி. அம்மா என்னோட பாலை வாங்கி நீங்க சிக்ஸர் அடிக்கிறிங்களா ரொம்ப சந்தோசம் என்றவள் தன் அண்ணனின் அறைப் பக்கம் செல்ல எத்தனிக்க லாவண்யா அவன் கிட்ட ஏதாச்சும் பேசி குழப்பத்தை உண்டு பண்ணாதே என்றார் தனலட்சுமி.
என்ன லட்சுமி என் மகளை என்ன சொல்லிட்டு இருக்கிறாய் என்று வந்தார் தனசேகரன். ஒன்றும் இல்லை நீங்க ரெடியா கிளம்பலாமா என்றிட உன் மகன் எங்கே என்றார் தனசேகரன்.
விவேக் என்ற அழைப்பில் வந்து சேர்ந்தான் விவேக். என் மகன் ராஜா மாதிரி இருக்கிறான் என் கண்ணே பட்டுவிடும் போல என்ற தனலட்சுமி மகனின் நெற்றி வழித்து சொடுக்கிட்டு திருஷ்டி கழித்தார். சரிப்பா போகலாமா என்றிட சரிங்கம்மா என்றான் விவேக்.
என்னப்பா அவங்க இன்னும் வரவில்லை என்ற கல்யாணிதேவியிடம் வந்துட்டு இருக்கிறாங்களாம் அம்மா இப்போ தான் மாப்பிள்ளையோட அப்பா பேசினாரு கிளம்பிட்டோம்னு என்றார் இளமாறன்.
என்ன ரோனி வருத்தமா என்றவனிடம் இல்லை மாமா என்றவள் நீங்க ஏன் வந்திங்க அவங்க வரும் நேரம் என்றவளிடம் எனக்கு உன்னை விட்டு போக மனசு இல்லைடி என்றான் உதய்.
ஐயோ, மாமா நான் தான் சத்தியம் பண்ணிட்டேனே அப்பறம் என்ன அதுவும் என் சந்துருமாமா மேல சத்தியம் பண்ணிட்டு அதை மீறுவேனா சொல்லுங்க என்றாள் வெரோனிகா.
அதற்கு இல்லைடி எனக்கு உன் கூடவே இருக்கனும்னு தோணுச்சு அதான் என்றவன் ஜூஸ் எதாச்சும் குடிக்கிறியா ரோனி என்றான். அவனை வைத்த கண் எடுக்காமல் பார்த்தவள் நீங்க தான் மாமா பட்டினியா இருக்கிங்க அதனால நீங்க தான் சாப்பிடனும் என்றாள்.
இல்லைடி என்று அவன் ஏதோ சொல்ல வர அண்ணா என்று வந்தாள் ஊர்மிளா. என்ன ஊர்மி என்றவனிடம் மாப்பிள்ளை வீட்டாளுங்க வந்துட்டாங்க உங்களை பெரியப்பா வரச் சொன்னாங்க நான் ரோனி கூட இருக்கேன் நீங்க கீழே போங்க என்றாள் ஊர்மிளா.
ரோனி என்றவனிடம் போயிட்டு வாங்க மாமா அதான் ஊர்மி இருக்கிறாளே அப்பறம் என்ன என்றாள் வெரோனிகா. சரியென்று அவனும் சென்றிட கிளாஸ் எல்லாம் எப்படி போகுது ஊர்மி என்றாள் வெரோனிகா.
என்கிட்ட பேசாதே ரோனி என்ற ஊர்மிளாவிடம் ஏன் ஊர்மி அப்படி சொல்லுற என்றவளது கன்னத்தில் அறைந்தவள் நீ உறவில் வேண்டுமானால் என் அண்ணியா இருக்கலாம் ஆனால் எனக்கு எப்பவுமே பெஸ்ட் ப்ரண்ட்தான்.
நீ எப்படி ரோனி என்னை விட்டுட்டு சாக நினைப்ப. உன் மேல் அண்ணனுக்கு மட்டும் இல்லை இந்த வீட்டில் உள்ள எல்லோருக்குமே பாசம் அதிகம். அந்த ஸ்ரீஜா அண்ணி ஏதோ உளறிட்டாங்கனா நீ எங்களை விட்டுட்டு போயிருவியா.
உனக்கு அப்போ எங்க யாரு மேலையும் பாசம் இல்லையா என்ற ஊர்மிளாவைக் கட்டிக் கொண்டவள் எனக்கு ரொம்பவே பாசம் இருக்கு ஊர்மி. ஆனால் அந்த நேரம் அவங்க பேசின வார்த்தை என் மனசுல ஆழமா பதிஞ்சுருச்சு ஊர்மி என்றவளிடம் அவங்க கன்னத்தில் பளார்னு அண்ணாவாச்சும் அறைஞ்சுருக்கனும் என்றாள் ஊர்மிளா.
அது தப்பு ஊர்மி என்ன இருந்தாலும் அவங்க ஒரு பொண்ணு, அத்தோட தேவ் மாமாவோட மனைவி, சந்துரு மாமாவுடைய தம்பி மனைவி அவங்களை கை நீட்டுறது பெரிய தப்பு , என் மாமாவோட மனசு எனக்கு தெரியும் அதனால நீ அந்த பிரச்சனையை விட்டுரு என்றாள் வெரோனிகா.
…..தொடரும்…
Good https://rb.gy/4gq2o4