விதியின் முடிச்சு..(69)

4.7
(6)

என்னப்பா கிளம்பிட்டிங்களா என்ற மலர்கொடியிடம் ஆமாம் அம்மா என்ற உதய் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி விட்டு மனைவியுடன் ஹனிமூன் சென்று விட்டான் உதயச்சந்திரன்.

மாமா என்ன யோசனை என்றவளிடம் ஒன்றும் இல்லை ரோனி என்றவன் காரை இயக்கினான். அவள் வாய் ஓயாமல் அவனிடம் பேசிக் கொண்டே வந்தாள். இரவு நெருங்கிடும் நேரம் ஒரு வழியாக ஊட்டிக்கு வந்து சேர்ந்தனர்.

ரோனி என்றவனிடம் சொல்லுங்க மாமா என்றாள் வெரோனிகா. என்ன சாப்பிடுற என்றிட உங்கள் விருப்பம் மாமா என்றவளை புன்னகையுடன் பார்த்தான். இருவரும் சாப்பிட்டு விட்டு தாங்கள் முன்பதிவு செய்திருந்த ஹோட்டல் அறைக்கு வந்தனர். இருவரும் களைப்பாக இருப்பதால் உறங்க ஆரம்பித்தனர்.

என்ன மேடம் ரொம்ப டல்லா இருக்கிங்க போல என்ற பிரகாஷிடம் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே. நான் எதற்காக டல்லா இருக்கப் போகிறேன் என்றாள் இந்திரஜா. பொய் சொல்லாதே இந்து என்ற பிரகாஷிடம் பொய் எல்லாம் இல்லை பிரகாஷ் என்றாள் இந்திரஜா. இந்து எனக்கு உன்னைத் தெரியாதா என்றவன் சரி உனக்கு என்ன கவலைனு நீயா விருப்பம் பட்டால் சொல்லு ஒன்றும் கட்டாயம் இல்லை என்ற பிரகாஷிடம் அக்கா பத்தின கவலை தான் என்றாள் இந்திரஜா.

அவங்களுக்கு என்ன என்றவனிடம் அவள் இப்போ முன்னே மாதிரி இல்லை நீ கவனிச்சியா என்றாள். ஆமாம் கவனிச்சேன் இந்து ஆனால் அவங்களுக்கு எதுவும் பிரச்சனை இருக்கிற மாதிரி எதுவும் தெரியலையே என்றான் பிரகாஷ்.

பிரச்சனை எதுவும் இல்லை பிரகாஷ் அவளோட மனசு மாறிருக்கு ஆனால் இப்போ எல்லாம் தேவ் மாமா அவள் கூட சுத்தமா பேசுவதே இல்லை. அது அவளையும் பாதிச்சுருக்கு அதை எப்படி  கையாளுவது என்று புரியாமல் குழம்புகிறாள்.

முன்னே இவள் எவ்வளவு சண்டை போட்டாலும், பேசாமல் முகத்தை திருப்பிகிட்டு போனாலும் அவர்விடவே மாட்டார் ஸ்ரீஜா, ஸ்ரீஜா என்று அவள் கிட்ட திட்டு வாங்கவாச்சும் எதுனாலும் பேசுவாரு. இப்போ சுத்தமா அவர் பேச்சை குறைக்கவும் அவளுக்கு பயங்கர ஸ்ட்ரஸ்.  அம்மா தவிர வீட்டிலும் யாரும்  அவளிடம் பேசுவது இல்லை.

அப்பா சுத்தமாவே பேச்சை குறைச்சுட்டாரு அதான் என்ற இந்திரஜாவிடம் இதில் நாம என்ன பண்ண முடியும் இந்து என்றான் பிரகாஷ். நாம ஒன்றும் பண்ண முடியாது பிரகாஷ், பண்ணவும் வேண்டாம் ஒரு பொருள் நம்மகிட்ட இருக்கும் பொழுது அதோட அருமை தெரியாது. அதே பொருள் தொலைந்தாலோ, நம்ம கையை விட்டு போயிட்டாலோ தான் நமக்கு அந்த பொருளின் மதிப்பு தெரியும்.

தேவ் மாமா அடிப்படையில் ரொம்ப நல்லவர். அவர் பண்ணின ஒரே தப்பு, பெரிய தப்பு ஸ்ரீஜா மேல் ஆசைப்பட்டு அவளை தனக்கு சொந்தமாக்கியது தான். அதை ஸ்ரீஜானு இல்லை எந்த ஒரு பெண்ணுமே மன்னிக்க மாட்டாள். மன்னிக்கவும் முடியாது அட்லீஸ்ட் அவரை அசிங்கப் படுத்துறேன்னு நினைச்சு ரோனி கூட சேர்த்து பேசி அவள் பெரிய தப்பு பண்ணிட்டாள். அவர் பண்ணின தப்பை விட இவள் பண்ணின தப்பு இப்போ பூதாகரமா மாறிடுச்சு. அவளுக்கு இப்போ தான் அவள் செய்த தப்பு புரிஞ்சுருக்கு என்ற இந்திரஜாவை அமைதியாக பார்த்தான் பிரகாஷ்.

என்ன பிரகாஷ் எதுவும் பேசாமல் இப்படி பார்க்கிற என்ற இந்திரஜாவிடம் என்னை மன்னிச்சுரு இந்து எனக்கு ஸ்ரீஜா அண்ணி பற்றி பேச பிடிக்கவில்லை. அவங்க உன்னோட அக்கா தான் ஆனால் அவங்க குணம் ரொம்ப தப்பு. ரோனி அண்ணி ஒரு சின்னப் பொண்ணு அவங்களை ஸ்ரீஜா அண்ணிக்கு பிடிக்கவில்லை என்றால் பேசாமல் போகட்டும். அதை விட்டுட்டு ஒரு பொண்ணை எத்தனை ஆண்களோட சேர்த்து வச்சு பேசுறது.

அண்ணிங்கிற உறவு அம்மாவுக்கு சமம். அவங்களையும் என்னையும் சேர்த்து பேசினதா இருக்கட்டும், தேவ் அண்ணனையும், அவங்களையும் சேர்த்து பேசினதா இருக்கட்டும் அம்மாவையும், பெரியம்மாவையும் பேசினதுக்கு சமம். அவங்க முகத்தில் விழிக்கிறது கூட என்னைப் பொறுத்தவரை தப்பு தான். என் அம்மாவை பழிச்சவங்கள் என்னைப் பொறுத்தவரை என்னோட விரோதி தான் என்ற பிரகாஷ் தயவு செய்து இனி ஸ்ரீஜா அண்ணி பற்றி என்கிட்ட பேசாதே இந்து என்றான்.

ஸாரி பிரகாஷ் என்ளவளின் கன்னத்தில் கை வைத்தவன் உன் அக்காவை நான் விரோதியா பார்க்கவில்லை ஆனால் அவங்களை விட்டு தூரமா ஒதுங்கி போகிறேன் அவ்வளவு தான் என்றான் பிரகாஷ். புரியுது பிரகாஷ் என்றவள் புன்னகைத்திட உனக்கு கோபம் இல்லையே இந்து என்றான். கோபம் எல்லாம் இல்லை பிரகாஷ் சரி நேரம் ஆச்சு வீட்டிற்கு போகலாமா என்றாள் இந்திரஜா. சரி இந்து போகலாம் என்றவன் அவளுடன் வீட்டிற்கு கிளம்பினான்.

என்ன டாக்டர் சார் எப்படி இருக்கிங்க , உடம்பு சரியாகிருச்சு போல என்றவளை நிமிர்ந்து பார்த்தான் தேவ். புன்னகையுடன் அவளை வரவேற்றவன் அமர சொல்ல அவனெதிரில் அமர்ந்தாள் பிருந்தா.

என்ன டாக்டர் மேடம் என்னை பார்க்க வந்திருக்கிங்க என்ன விசயம் என்றவனிடம் கொஞ்சம் முக்கியமான விசயம் தான். என்னோட பேசண்ட் ஒருத்தங்களை பற்றி கொஞ்சம் உன்கிட்ட டிஸ்கஸ் பண்ணனும் என்ற பிருந்தா பேசிக் கொண்டிருந்தாள்.

உன் அண்ணி கூட என்கிட்ட தான் கவுன்சிலிங் வந்திருந்தாள். இப்போ உன்னோட வொய்ப் கூட என்கிட்ட கவுன்சிலிங் வராங்க. உன் அண்ணி விசயம் ரொம்ப சிம்பிள். அவளோட மனசுல மட்டும் தான் பிரச்சனை. உதய் தெளிவா இருந்தான். இன்பேக்ட் என்னோட கவுன்சிலிங்கை விட உதய்யோட சப்போர்ட் தான் உன் அண்ணியை ரெகவர் பண்ண உதவி பண்ணுச்சு. உன் மனைவி விசயத்தில் எனக்கு என்ன பண்ணுறதுனே புரியலை.

அவளை நீயும் புரிஞ்சுக்கனும்னு தான் ஸ்ரீஜாவோட பிரச்சனைகளை பற்றி உன்கிட்ட பேசினேன் என்றாள் பிருந்தா. எனக்கு புரியுது பிருந்தா அவளுக்கான ஸ்பேஸ் நான் கொடுக்கத் தான் செய்கிறேன். ஒரு விசயம் சொல்லட்டுமா இந்த உலகத்தில் அவளை புரிஞ்சுகிட்ட ஒரே ஆள் நான் தான்.

அவளோட ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி இந்த ஒன்றரை மாசமா நான் அவளை சுத்தமா கண்டுக்கவில்லை. அதனால் தான் உன்கிட்ட கவுன்சிலிங் வந்த விசயம் தெரியாமல் போச்சு என்றவன் மேலும் சில விசயங்களை பேசி விட்ட பிறகு பிருந்தா கிளம்பினாள்.

தேவ் யோசனையுடனே வீட்டிற்கு வந்தான். என்னடா என்ன யோசிச்ச படியே வருகிறாய் என்ற நெடுமாறனிடம் ஒன்றும் இல்லைப்பா என்றான் தேவ். சரி ,சரி போயி ப்ரஸ் ஆகிட்டு கீழே வா உன் கிட்ட கொஞ்சம் பேசணும் என்றார் நெடுமாறன்.

என்னப்பா தேவ் எங்கே என்ற கல்யாணிதேவியிடம் வருவான் அம்மா என்றவர் பிரகாஷ் வந்துட்டியா வா என்று அமரச் சொன்னார். தேவ் வரவும் நீயும் வா என்று அவனையும் அமர வைத்த நெடுமாறன் நம்ம அர்ச்சனா கல்யாணத்திற்கு நானும், தம்பியும் ஒரு பட்ஜெட் போட்டிருக்கிறோம். உதய் கூட எங்க பட்ஜெட் ஓகேனு தான் சொன்னான். ஆனால் வீட்டில் அவன் மட்டும் பையன் இல்லை நீங்களும் தானே உங்க கிட்டையும் கலந்து பேசணுமே அர்ச்சனாவுக்கு மூன்று அண்ணன்களுமே வேண்டுமே அதனால உங்களுக்கு இந்த பட்ஜெட்ல எதுனாலும் திருத்தம் இருந்தால் சொல்லுங்க என்றார் நெடுமாறன்.

தேவ் , பிரகாஷ் இருவருமே பட்ஜெட்டை பார்த்து விட்டு அதில் சில திருத்தங்களை சொல்லிட அண்ணா நம்ம மூன்று பசங்களும் ஒரே மாதிரி தான் இருக்கானுங்க உதய் கூட இதையே தான் திருத்தமா சொன்னான் என்றார் இளமாறன் . அவனுங்க மூன்று பேரும் தானே நம்ம காலத்திற்கு பிறகு ஒற்றுமையா இந்த குடும்பத்தை தாங்கிப் பிடிக்கனும் என்றார் நெடுமாறன் . இன்னும் இரண்டு வாரத்தில் நிச்சயதார்த்தம். அது முடிஞ்சு ஒரு மாதத்தில் கல்யாணம். எல்லாமே நல்லபடியா நடக்கனும் என்ற கல்யாணிதேவியிடம் கவலையை விடுங்க அப்பத்தா அதெல்லாம் நல்ல படியா நடத்திரலாம் என்றான் தேவ்.

இத்தனை நாட்கள் தன்னை ஒரு மனிதனாக கூட மதிக்காத தனது தந்தை இன்று தங்கையின் திருமண விசயத்தில் தன்னிடம் கேட்டு முடிவெடுப்பது தேவச்சந்திரனுக்கு மிகவும் சந்தோசமாகவும், பெருமையாகவும் இருந்தது.

தனது செல்ல மகள் உதயநிலாவை கொஞ்சியபடி தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தவனின் அருகில் வந்தான் பிரகாஷ். என்ன அண்ணா பாப்பா என்ன சொல்லுது என்றவன் நிலாக் குட்டி சித்தப்பாகிட்ட வாங்க என்றிட நிலாவோ தன் தந்தையின் கழுத்தை இறுக்கமாக கட்டிக் கொண்டாள். பாருடா என்ன மேடம் உங்க டாடி உங்களுக்கு தெரியுதோ சரி, சரி இரு சித்தப்பா பெரிய சாக்லேட் வாங்கி உன்னை விட்டுட்டு சாப்பிடப் போகிறேன் என்றதும் சித்தா என்றாள் நிலா.

நீ சரியான கேடிப் பொண்ணு சாக்லேட் சொன்னதும் சித்தாவா பிழைச்சுக்கிருவ தங்கம் என்றவன் குழந்தையை தன்னுடைய பைக்கில் அமர வைத்து கடைக்கு அழைத்துச் சென்றான்.

என்ன மாமா தானாக சிரிக்கிறிங்க என்ற இந்திரஜாவிடம் இல்லை நிலாக்குட்டி அவங்க சித்தப்பா கூட பைக்ல போகிறாள் அதான் என்ற தேவ் என்ன இந்து என்கிட்ட எல்லாம் பேசுற உன் அக்கா சம்மதம் சொல்லிட்டாளா என்றான் தேவ்.

அக்கா பேசக் கூடாதுனு சொல்லி ஒன்றும் உங்க கிட்ட பேசாமல் இல்லை மாமா. நீங்க பண்ணின தப்பால உதய் மாமாவோட வாழ்க்கையே கேள்விக் குறி போல ஆச்சு. அந்த கோபம் தான் எனக்கு உங்கள் மேல இருந்துச்சு ஆனால் இப்போ இல்லை.

உதய் மாமாவுக்கு அவரை மட்டுமே உயிராய் நேசிக்கிற ஒருத்தி வந்துட்டாள் அதனால என்னோட கோபமும் போயிருச்சு என்ற இந்திரஜா மாமா நீங்க ஏன் இப்போ எல்லாம் ஸ்ரீஜாவை ஒதுக்கி வைக்கிறிங்க என்றாள்.

நான் எங்கே இந்து உன் அக்காவை ஒதுக்கி வச்சேன். நான் தான் அவளை விட்டு ஒதுங்கி போகிறேன் என்றான் தேவச்சந்திரன். அதான் ஏன் மாமா இப்போ அவள் பழைய ஸ்ரீஜா கிடையாது என்றவளிடம் நானும் பழைய தேவ் கிடையாது இந்து. என்னோட மனசுல உள்ள வலியும், வேதனையும் உன் அக்காவால எப்பவும் புரிந்து கொள்ள முடியாது. புரிந்தாலும் அவள் புரியாத மாதிரி தான் இருப்பாள் அதனால தான் நான் ஒதுங்கிட்டேன்.

அவளோட குணம் மாறனும்னு ஏங்கி ஏங்கி எனக்கு வெறுத்துப் போச்சு என் வாழ்க்கையோட ஒரே சந்தோசம் என்னோட பொண்ணு உதயநிலா மட்டும் தான் என்றவன் அதோ என்னோட தேவதை வந்து விட்டாள் என்றிட பிரகாஷ், உதயநிலா இருவரும் வந்து விட்டனர்.

பிரகஷிடம் இருந்து தன் தந்தையிடம் தாவினாள் குழந்தை. நிலாம்மா சித்தாக்கு முத்தா கொடுங்க என்றிட நிலாவோ தன் தந்தை தேவ்வின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

…..தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!