சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 07

4.6
(13)

Episode – 07

 

மறுநாள் காலை விடிந்ததும், சேவல் கூவுவது போல, காலை வேளையில் அவளை போனில் அழைத்தான் ஆரண்யன்.

 

சொர்ணாக்கு, போன் அடித்ததும்,

 

“ஒரு வேளை அவனை இருக்குமோ…. சே…. சே…. போன் அடிச்சா எடுக்க கூட பயமா இருக்கு. அப்படி ஆக்கிட்டானே அந்த ஆளு. அவனுக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு?, போன எடுக்காம விடுவம். எதுக்கு காலையில சனிக்கு சங்கு ஊதணும்?” என எண்ணியவள்,

 

இறுதியாக, முடிவு பண்ணி, போனை எடுக்காது குளித்து விட்டு வந்து தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

அவளது போன் விடாது தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தது.

 

ஒரு கட்டத்தில் போன் ஒலி ப்பதை நிறுத்தவும்,

 

பெருமூச்சு ஒன்றை வெளி விட்டவள்,

 

“எல்லாரும் சொல்றது போல, இது தொலைபேசி இல்ல தொல்லை பேசி தான். சில நேரங்கள்ல.” என முணு முணுத்தவள்,

 

வேகமாக கிளம்பி சாப்பிட்டுவிட்டு வேலைக்கு கிளம்பும் நேரம் மீண்டும் அவளது போன் அடிக்க ஆரம்பித்தது.

 

அதே நம்பரிலிருந்து பதினைந்திற்கும் மேற்பட்ட மிஸ்ட் கால்கள் வந்து இருந்தது.

 

“இது கண்டிப்பா அந்த சாத்தானா தான் இருக்கும்.” என நினைத்தவள்,

 

அதனை அப்படியே வைத்து விட்டு பஸ் ஸ்டாண்ட்ற்கு சென்றாள்.

 

அங்கு பஸ்ற்காக காத்து இருக்கும் போது, அவளது ஃபோனில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி ஒன்று கேட்டது.

 

உடனே போனை எடுத்து பார்த்தாள் சொர்ணா.

 

அதே நம்பரில் இருந்து தான் குறுஞ்செய்தியும் வந்து இருந்தது.

 

“இந்த குறுஞ்செய்திய ஓபன் பண்ணிப் பார்க்கிறதும், நம்ம நிம்மதிக்கு கேடுதான்.” என எண்ணியவள்,

 

போனை அப்படியே வைத்திருக்க அதே நம்பரில் இருந்து வாய்ஸ் மெசேஜ் ஒன்று அதிரடியாக வந்து சேர்ந்தது.

 

“என்னடா இது நமக்கு வந்த சோதனை?” என எண்ணியவள் அதனையும் கண்டுகொள்ளாது பேக்கில் போனை வைத்து விட்டு நிமிர புயல் வேகத்தில் அவளின் அருகே வந்து நின்றது அவனது கார்.

 

காரிலிருந்து இறங்காமலே, கார்க் கண்ணாடியைத் திறந்தவன்,

 

அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு,

 

அவள் பக்க கார்க் கதவை திறக்க அவளுக்கு புரிந்து விட்டது.

 

இப்போது அவள் காரில் ஏறவில்லை என்றால் அங்கு அனைவர் முன்பாகவும் அவள் அவமானப்பட நேரிடும் என்பது.

 

அதனை சரியாக புரிந்து கொண்டவள் உடனடியாக காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

 

அவள் ஏறி அமர்ந்ததும் காரைக் கிளப்பியவன் சற்றுத் தூரம் போனதும்,

 

ஆள் நடமாட்டம் இல்லாத வீதியின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு,

 

“மேடமுக்கு நான் போன் பண்ணா…. மெசேஜ் பண்ணினா…. பார்க்க கஷ்டமாக இருக்குது. என் மேல இருந்த பயம் இல்லாம போச்சுது இல்ல. அப்படித்தானே…. அது சரி நான் உனக்கு என்ன மெசேஜ் பண்ணி இருக்கேன்னு இப்போ ஓபன் பண்ணிப் பாரு.” என அவளைப் பார்க்காது நேராக ரோட்டினைப் பார்த்தபடியே அவன் பேச,

 

அவளோ பயத்தில் எச்சில் விழுங்கியவள் அவனைப் பார்த்தபடியே அமர்ந்திருக்க,

 

அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான் அவன்.

 

அந்தப் பார்வையின் அர்த்தம் “நான் சொன்னதை நீ இப்போது செய்தே ஆக வேண்டும் என்பது தான்.”

 

சொர்ணா அதற்கு மேலும் தயங்குவாளா என்ன?

 

அவசரமாக போனை எடுத்து ஓபன் பண்ணிப் பார்த்தாள்.

 

அதிலே, அவள் ஆசையாக வாங்கித் தொலைத்திருந்த அந்த லவ் பர்ட்ஸ்சின் சிலை தான் போட்டோவாக அனுப்பப் பட்டு இருந்தது.

 

அதனைப் பார்த்து விட்டு அவனை திகைத்துப் போய் பார்க்க,

 

“வாய்ஸ் மெசேஜ் இருக்கு தானே. அதையும் ஓபன் பண்ணிக் கேள்.” என்று சொன்னான்.

 

அவசரமாக அதனையும் ஓபன் பண்ணிக் கேட்க ஆரம்பித்தாள் பெண்ணவள்.

 

அதில், “என்ன சொர்ணா மேடம், உங்களுக்கு உங்க லவ் பர்ட்ஸ் வேணாம் போலயே. நானும் பாவம்னு கொடுக்க, வரச் சொன்னா நீங்க ஆரண்யனுக்கே டப் கொடுக்கிற அளவு பிஸி போல. சோ, இனிமேல் உங்களுக்கு அந்த சிலை இல்லை.” என அந்த வாய்ஸ் மெசேஜ்ஜில் கூறப்பட்டு இருந்தது.

 

அவளோ, அதனை கேட்டு விட்டு அவனை நிமிர்ந்து பார்க்க,

 

“சோ சாட்….” என கூறி விட்டு,

அடுத்த நொடி கையில் சிலையை தூக்கி காட்டிவிட்டு ஜன்னலைத் திறந்து சிலையை அப்படியே போட்டு ரோட்டில் உடைத்திருந்தான் அவன்.

 

அவள் விக்கித்துப் போய் அமர்ந்து இருக்க,

 

அவனே, “உன்னோட கண்ணு முன்னாடியே இத ஏன் செய்தன் தெரியுமா?, உனக்கு என் மேல பயம் இருக்கணும். எனக்கு கோபம் வந்தா என்ன ஆகும்னு தெரிஞ்சிருக்கணும். இது வெறும் சாம்பிள் தான். இதே மாதிரி உன்னோட வாழ்க்கையும் நொறுங்கிப் போகாம இருக்கிறது உன்னோட கையில தான் இருக்கு. ஒரு நாள் இருக்கு. ஒழுங்கா, நான் சொன்ன படி என்னோட கம்பெனியில வந்து ஜாயின் பண்ணுறாய். “ என கூறியவன்,

 

“கெட் அவுட்.” என கத்தினான்.

 

அவனது செய்கையில் உண்மையில் ஆடித்தான் போனாள்அவள்.

 

அவனது மரியாதை இல்லாத பேச்சு, அவமானப் படுத்தும் விதம், அவளை இழிவாக நடத்தும் விதம் எல்லாமே அவளுக்குள் பிரளயம் ஒன்றை உண்டாக்கியது.

 

ஆனாலும் வெளியே அதனைக் காட்டாது, கீழே இறங்கியவள்,

விலகி நிற்க, அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு காரை கிளப்பிக் கொண்டு சென்றான் அவன்.

 

அவன் போனதும், அங்கு உடைந்து சிதறிப் போய் இருந்த சிலையைக் கண்டவளுக்கு கண்ணீர் துளிர்த்தது.

 

கண்களை துடைத்து விட்டு, அந்த சிலையின் சிதறிய பாகங்களை எடுத்து உடைந்து போன மனதுடன், ஓரமாக போட்டவள் அங்கிருந்து ஆட்டோ ஒன்றை பிடித்துக் கொண்டு வேலையகம் நோக்கி பயணித்தாள்.

 

அவளது வாழ்க்கை எதை நோக்கி பயணிக்கிறது என அவளுக்கே புரியவில்லை.

 

ஆனால், அவனது இடத்தில் மட்டும் வேலை செய்வது இல்லை என திடமாக முடிவு எடுத்து இருந்தாள் அவள்.

 

அடுத்த நாளும் தன் பாட்டில் ஓடிப் போக, அந்த நாள் இரவு அவளுக்கு மீண்டும் அவனிடம் இருந்து ரிமைண்டர் என போட்டு ஒரு மெசேஜ் வந்து இருந்தது.

 

அதில், “மறு நாள் காலை அவனது ஆபீஸ்ற்கு அவள் வர வேண்டும் எனவும், இல்லை எனில் மதியம், அவளாகவே அவனை சந்திக்க செய்யும் படி செய்வேன்.” என அனுப்பி இருந்தான்.

 

அந்த மெசேஜ்ஜை படித்தவளுக்கு, உள்ளுக்குள் திக்கென இருந்தாலும், எதுவும் ரிப்ளை அனுப்பாது, அவள் அமைதியாக உறங்கி விட்டாள்.

 

ஆனால் ஆரண்யனோ, அதற்கு நேர் எதிர் மாறாக, அவள் மெசேஜ் அனுப்பியும் ரிப்ளை பண்ணாது இருப்பதைக் கண்டு, மேலும் கடுப்பாகிப் போனவன்,

 

“உனக்கு அவ்வளவு திமிர் ஏறிப் போச்சுது இல்ல. நாளையோட எல்லாத்தையும் அடக்குறேன். உன்ன என் காலில விழுந்து கெஞ்ச வைக்கிறேன். அப்போ தெரியும் இந்த ஆரண்யன் பத்தி.” என பல்லைக் கடித்தவன்,

 

அப்படியே கோபத்துடன் உறங்கிப் போனான்.

 

மறு நாள், சொர்ணா எந்த வித பதட்டமும் இன்றி, வழக்கம் போல வலைக்கு சென்றாள்.

 

அங்கு எதுவித உறுத்தலும் இன்றி வேலையும் செய்தாள்.

 

ஆனால் எல்லாம் மதிய நேரம் வரை மட்டும் தான்.

 

மதிய நேரம் சாப்பிட சென்றவள், சாப்பிட்டு விட்டு அருணாவுடன் பேசியபடி அவள் வேலை செய்யும் தளத்திற்கு லிப்ட்டில் ஏற,

 

அங்கு இருந்தவர்கள், அனைவரும்,

 

“என்ன திடீர்னு மீட்டிங்ணு கால் பண்ணி இருக்காங்க. என்ன விஷயமா இருக்கும்?, எல்லாரும் பரபரப்பா வேற இருக்காங்க.” என தங்களுக்குள் கிசு கிசுத்துக் கொண்டு இருக்க,

 

காரணமே இல்லாமல் சொர்ணாவின் மனது தட தடக்க ஆரம்பித்தது.

 

“என்னவோ…. நடக்க கூடாதாது ஏதோ ஒன்று நடக்கப் போவது.” போன்ற உணர்வு அவளுக்குள்.

 

அதே எண்ணத்துடன், தனது

தளத்திற்கு வந்து சேர்ந்தவளுக்கு, அடுத்த நொடி மீட்டிங்கிற்கு வர சொல்லி அழைப்பு வர,

 

சொர்ணாவோ, “என்ன அருணா சடனா மீட்டிங் ஹால் வரட்டாம். அதுவும் எல்லா டிபார்ட்மென்ட்டும் சேர்த்து…. என்னவா இருக்கும்?, பிளான் பண்ணின ஸ்செடுல் மீட்டிங் மாதிரி இல்லையே.” என கூற,

 

அருணாவும், “விடு சொர்ணா. இது ஏதும் சும்மா டார்கெட் அச்சீவ் பண்றதுக்கான மீட்டிங்கா இருக்கும். வா போய்ட்டு வருவம். வழமை யானது தானே. என்ன இன்னைக்கு கொஞ்சம் டைம் வித்தியாசம் அவ்வளவு தான்.” என கூறி அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.

 

அங்கு ஏற்கனவே வேலை செய்யும் அனைவரும் கூடி இருந்தனர். இருவரும் போய் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர்.

 

“மீட்டிங் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆரம்பம் ஆகும்.” என கூறப்பட,

 

சொர்ணாவும் அங்கு நடப்பதைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

 

அங்கு அந்த சாப்ட்வேர் கம்பனியின், மேனேஜ்ஜிங் டைரக்டர் உட்பட அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து நின்று,

 

“ஹாய் கைஸ். ஒரு முக்கியமான விஷயம் சொல்லத் தான் உங்க எல்லாரையும் இங்க கூப்பிட்டு இருக்கம். அது என்னன்னா…. இன்னையில இருந்து இந்த சாப்ட்வேர் நிறுவனம் எங்க பொறுப்பு கிடையாது. எங்களோட எல்லா பங்குகளையும் நாங்க வேற ஒருத்தருக்கு கொடுக்கிறதா இருக்கம். இனி மேல் அவர் தான் இந்த நிறுவனத்தோட ஷேர் மென். ஷேர் ஹோல்டர் எல்லாம். நிறுவன மொத்தப் பங்குகளும், அவரோட பேருக்கு மாத்தப்படுது. அவரே விரும்பி வாங்கியும் இருக்கார். எங்கள விட அவர் தான் இந்தப் பதவிக்கு மிகவும் பொருத்தமான நபர். அவருக்கு இந்த நிறுவனத்தை கொடுக்கிறதுல எங்களுக்கு பெருமை தான்.”

 

“அவர் வேற யாரும் இல்ல.தி பேமஸ் பிசினஸ் மேன், சாப்ட்வேர் பிஸ்னஸ்ல கிங் மேக்கர்னு பேர் வாங்கிய மிஸ்டர் ஆரண்யன்.” என கூற,

 

சொர்ணாவோ, “என்னது….” எனஅதிர்ந்து போனாள்.

 

அதே நேரம் அவளது போனுக்கு.

 

“என்கிட்ட இருந்து அவ்வளவு சீக்கிரம் யாரும் தப்ப முடியாது.” என மெசேஜ் வந்தது.

 

அதனை படித்து விட்டு திகைத்துப் போய் நிமிர்ந்து பார்க்க, அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு நிமிர்ந்த நடை உடனும், சிறு புன்னகை உடனும் அந்த இடத்திற்குள் நுழைந்தான் ஆரண்யன்.

 

வந்தவனின் பார்வை அனைவரையும் ஒரு கணம் கூர்ந்து பார்த்தது.

 

அதிலும் சொர்ணா மீது அழுத்தமாக படிந்தது.

 

ஆனால் அது யாருக்கும் தெரியாத அளவு கூலிங் கிளாஸ் போட்டு மறைத்து இருந்தான் அவன்.

 

அங்கு இருந்த இளம் பெண்களுக்கு அவனை இனி தினமும் சைட் அடிக்கலாம் என்ற சந்தோஷம்.

 

இளம் ஆண்களுக்கோ, இனி பொண்ணுங்க நம்ம பக்கம் திரும்பவே மாட்டாங்க என்கிற ஆதங்கம்.

 

அவனைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அவனின் ரூல்ஸ்ற்கு கீழே எப்படி வேலை செய்வது என்கிற எண்ணம்.

 

சிலருக்கும் அவனது ஆளுமையைக் கண்டு பிரமிப்பு.

 

சிலருக்கு அவனின் மீது பயம்…. இப்படி ஒவ்வொருவரும் வெவ்வேறு உணர்வுகளில் அமர்ந்து இருக்க,

 

“இவன் எதுக்கு இப்போ இங்க வந்து இருக்கான்?, எதுக்காக இந்த கம்பெனிய வாங்கி இருக்கான்?, ஒரு வேள…. இது என்ன சிக்க வைக்க எடுக்கிற ப்ளானா…. அப்படி இல்லன்னா ஏன் இந்த மெசேஜ்?…. ஒரு மனுஷன் இவ்வளவு தூரம் பழி வாங்க யோசிக்க முடியுமா?, நமக்கு சோதனைக் காலம் ஆரம்பம் போல.” என பலதும் எண்ணிய படி நொந்து போய் அமர்ந்து இருந்தாள் சொர்ணா.

 

அதே நேரம், அவளது வெளிறிய முகத்தைப் பார்த்து விட்டு,

 

தனக்குள், “நான் நினைச்சத முடிக்க எந்த எல்லைக்கும் போக கூடியவன் நான். என் கிட்டயே நீ எதிர்ப்பு காட்டு றீயா?, இனி பார்க்கிறன். எப்படி என்கிட்ட இருந்து நீ தப்பிக்கிறாய்னு?” என வன்மத்துடன் எண்ணிக் கொண்டான் ஆரண்யன்.

 

நம்ம ஹீரோ ஒரு வன்ம குடோன் மக்காஸ். அவன ஒண்ணும் செய்ய முடியாது போலயே.

 

அடுத்து என்ன நடக்கும்?

 

சொர்ணா எங்கணம் அவன் பார்வையில் இருந்து தப்பிக் கொள்வாள்?

 

ஆரண்யன் சொர்ணாக்கு வைத்திருக்கும் தண்டனை என்ன?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

கண்டிப்பா உங்க ஆதரவை கொடுங்க மக்காஸ்.

 

அடுத்த எபி திங்கள் வரும்…😍😍😍 லேட் எபிக்கு மன்னிச்சு மக்காஸ்….

 

லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….

 

இனி அடுத்தடுத்த எபிகள் இன்னும் அதிரடியா வரும் மக்காஸ்….

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!