நளன் தன் மீது மோதிய பெண்மையில் சித்தம் களங்கியவன் நல்ல கொழுக் மொழுக் இடையை கைகளால் பிசைந்து எடுத்தவனோ கண்களை திறக்காமல் மூடியே இருக்க… அவனின் உடல் முழுவதும் சில்லென்ற மின்சாரம் பாய்ச்சியது… இந்த உணர்வுகள் அவனுக்கு புதிது.. இது போன்றதொரு சித்தம் களக்கிய உணர்வுகளை அவன் இதுவரை அனுபவித்ததே இல்லை… சொல்ல போனால் அவனுக்கு வயது 30 ஆக உள்ளது என்பது முக்கியமானது…
தன் இறும்பான மார்பில் மோதிய தென்றலை விட மென்மையான பெண்ணவளின் உடல் அவனை பித்துக்கொள்ள செய்ய…. ஆனால் அவனுக்கு ஏனோ கண்களை திறக்கவோ, அந்த குழைந்த இடையில் இருந்து கையை எடுக்கவோ தோன்றவே இல்லை…
“ஆஆஆ…”என்ற கத்தலிலையே நளன் தன் மூடிய கருவிழிகளை திறக்க… அங்கோ தன் முகத்திற்கு மிக அருகில் அவளை கண்டிப்பாக எதிர்ப்பார்க்கவே இல்லை… சட்டென்று அவனின் மோகன உணர்வுகள் அறுபட…. வெந்நீர் தெளித்தது போல முகம் சுருக்கியவன்… அவளை தன்னிடம் இருந்து விலக்க முயல… ஆனால் அதற்கு அவள் விடவேண்டுமே..
அவள் கைகளோ அவன் கழுத்தை மாலையாக்கி இருக்க… அவனின் மார்பு வரை மட்டுமே இருக்கும் அந்த பெண்ணவளுக்கு அவன் கழுத்தினை பிடித்துக்கொள்வது கொஞ்சம் கடினமாக இருந்தது போல அதனால் வேகமாக அவன் கழுத்தை விட்டவளோ அவனின் இடையை தன்னுடன் இறுக்கிக்கொள்ள… அவனோ அவளை உணர்வுகள் தொலைத்த பார்வையை பார்த்தான் என்றால் அவளோ அவனை மயக்கும் பார்வை பார்த்தாள்..
“ஹாய் மாமாஜி… லாங் டைம் நோ சீ…”என்றாள் தனது பிள்ளைமொழி குரலில் தன் அழகான பால்பற்களை காட்டி…
அவனோ அவளின் மாமாஜியை கேட்டு உடல் சிலிர்க்க நின்றவனோ அவள் தன்னை அடையாளம் கண்டுக்கொண்டதை நினைத்து ஆச்சரியப்பட்டு போனான்.. பின்னே இருக்காதா அவன் தான் அவளை பார்த்தே பல வருடங்கள் ஆகின்றதே… கிட்டதட்ட நான்கு வருடங்கள் இருக்கும்.. அப்போது அவனை மாமாஜி என்று அழைத்த அவனின் அத்தை மகளான தமையா பதினொறாம் வகுப்பு படிக்கும் சிறுபிள்ளையாக இருந்தாளே…
நீண்ட நெடிய வருடங்களான ஆறு வருடங்கள் கழித்து தான் அந்த பதினொறாம் வகுப்பு படிக்கும் இளம் சிட்டையே பார்த்தான்.. அதும் அன்று நடந்த களேபரத்தில் அவளை ஒழுங்காக கூட பார்க்கவில்லை.. ஏன் அவள் தன்னை பார்த்தாளா என்று கூட அவனுக்கு நினைவில் இல்லை… அப்படிப்பட்டவள் தன்னை இத்தனை வருடங்கள் கழித்து பார்த்தும் சரியாக அடையாளம் கண்டுக்கொள்வது அவனுக்கு ஆச்சரியமாக தானே இருக்கும்… அந்த ஆறு வருடங்கள் இப்போது ஒரு நான்கு வருடங்கள் முழுதாக பத்து வருடங்கள் கழித்து ஒருத்தி தன்னை சிறுபிள்ளையில் அழைப்பது போல அதே மாமாஜி என்ற வார்த்தையை வைத்தே அழைத்தது அவனுக்கு சிலிர்ப்பை கொடுக்கதானே செய்யும்…
அவன் அதே சிந்தனையில் இருக்க… அவளோ அவள் மாமாஜியின் இடையை இறுக்க கட்டிக்கொண்டவள் அவன் முகத்தையும், அவன் தோற்றத்தையும் வெகு ரசனையாக அல்லவா ரசித்துக்கொண்டிருந்தாள்.
சிறுபிள்ளையில் நல்ல வெளீர் நிறத்தில் கொழுமொழுக்கென்று இருந்தவன் இப்போது கொஞ்சம் நிறம் மங்கி போய் உடல் இறுகிப்போய், சிறுபிள்ளையில் கன்னத்தில் தொப்பை வைத்திருந்தவனின் கன்னங்கள் இன்று வற்றி போய் இருப்பதை பார்த்தவளுக்கு அவனின் இந்த தோற்றம் அவளுக்கு அவ்வளவு அழகாக அல்லவா தோன்றியது.
பத்தாதற்கு அவனின் நிறத்திற்கு எடுத்துக்காட்டுவது போல கறுப்பு நிற சட்டையும், வெள்ளை நிற ஜீனும் அணிந்துக்கொண்டு, கறுப்பு நிற ஸ்கெட்சர்ஸ் ஷூ போட்டுக்கொண்டு, அந்த கறுப்பு நிற சட்டையின் முதல் இரண்டு பட்டன்களை அவிழ்த்துவிட்டு அவனின் உரம் ஏறிய நெஞ்சை காட்டிக்கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு மனம் மயங்கி போனது.. அவனையே விழுங்குவது போல பார்த்தவளுக்கு அவனின் லேசர் பார்வை வேறு எச்சில் விழுங்க வைத்தது..
“என்னடி பார்வை எல்லாம் ஒருமாதிரி இருக்கு…”என்று அவனும் மயங்கிய மனத்தை இறுக்கிய கட்டியவாறே கேட்க
அவளுக்கா அவள் மாமாஜியின் குரல் தெரியாது… அவனை இன்னும் மயக்குவது போல கீழே தொங்கிய அவன் கைகளை எடுத்து தன் இடையில் வைத்துக்கொண்டவளின் செயலில் இவ்வளவு நேரம் இல்லாத உணர்வுகள் எல்லாம் அவனிடம் வழிந்து ஓடியது.. அவன் இறும்பு கைகள் அவளை தன்னுடன் இறுக்கிக்கொள்ள… அவளோ அவனின் உரம் ஏறிய நெஞ்சை பார்த்தவாறே…
அவளின் உன் ஆளு என்ற வார்த்தையை கேட்டவனுக்கு அப்போது தான் சுயமே வந்தது.. பட்டென்று தான் செய்யும் செயல் புரிய அவன் முகம் கற்பாறையாக இறுக… அவன் கைகளோ அவள் இடையில் இருந்து விலகியவாறே அவளை தன்னிடம் இருந்து விலக்கி தள்ளினான்…
அதனை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத தமையாவோ அவனை திருட்டு விழி பார்வை பார்க்க… அவனோ அவளை கொஞ்சமும் குனிந்து பார்க்காதவனோ தன் தலையை அழுத்தமாக கோதிக்கொண்டவன்… “இன்னொரு தடவ கண்டவளையும் என் ஆளுன்னு சொன்னா நேக்கு கெட்ட கோவம் வரும்…”என்றவனின் பார்வையோ அவள் பக்கம் திரும்பவே இல்லை…
“என்ன நோக்கு கோவம் வருதோ…”என்ற தமையாவோ அவனின் பக்கம் நெருங்க முயல… அவனோ அவள் செயலை அறிந்தவனாக…
“அப்டியே நின்னுன்டு கூட பேசலாம்…”என்றான் இறும்பு குரலில்
“ஓஓஓ… பேசலாமே…”என்றவளோ… “ஆனா என் மாமாஜி மேல சாஞ்சின்டு பேசுவது போல ஆகுமா என்ன..”என்றவளோ அவனை கன்னத்தில் கை வைத்து ரசிக்க….
அவனோ அவளை காணாமல் கண்டவனின் நினைவுகளோ அவளின் சிறுவயது பிள்ளை முகமே நியாபகத்திற்கு வந்து நின்றது…
“காட் அத்துனோன்டு இருந்தவளா… இப்போ இப்டி வளந்துருக்கா…”என்றவனின் பார்வை அவளின் மென்மையான உடல் தன் மீது மோதிக்கொண்டு இருந்ததை நினைத்தவனின் உடல் மோகத்தில் விறைத்தது…
“நோ நோ இது தப்பு… சின்ன பிள்ள இவ…”என்று அவன் மனம் கட்டுப்பாடு விதிக்க… அவன் கண்கள் எங்கே அவன் பேச்சை கேட்டது…
அவனோ தலையை அழுத்த கோதியவன் அவளை எரிக்கும் பார்வை பார்த்தான்… அவனின் எரிக்கும் பார்வை கூட அவளுக்கு ரசனையாக அல்லவா தெரிந்தது…
“வொய் மாமாஜி என்ன எதுக்கு இவ்ளோ ரசிச்சி பாத்துன்டு இருக்கேள்…”என்றவளின் சிறிய பற்களோ அவளின் கீழ் உதட்டை பற்றிக்கொள்ள… அந்த உதடு படும் பாட்டை கண்டவனுக்கு மனம் படாத பாடு பட்டது…
“காட் இங்க வந்தா வேற மாதிரி பிரச்சனை வரும்னு நெனைச்சின்டு இருந்தா… இப்டி அஞ்சி அடில இந்த மாதிரியான பிரச்சனைய பத்தி நினைக்கவே இல்லையே…”என்றவனுக்கோ இன்னும் அங்கே இருப்பது சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை..
“ம்ச் நான் வரேன்…”என்றவன் அவளை பார்க்காமல் நடக்க முற்பட… ஆனால் அவனின் செயலை முன்னாலே உணர்ந்திருப்பாள் போல… அவனின் உரமேறிய ஒற்றை கையை தன் இரு பிஞ்சிக்கைகளால் பிடித்துக்கொண்டவள்…
“மாமாஜீ…”என்று இழுக்க
“ம்ச் விடு தமை… உங்க வீட்ல யாராவது இப்டி என் கைய பிடிச்சிட்டு இருக்குறத பாத்தாள்ன்னு வை அப்புறம் உனக்கு தான் ப்ராப்ளம்…”என்றான் அவள் கையை விலக்க முயன்றவாறே…
“அவா பாத்தா என்ன ஆகிட போது… ம்ச் முதல ஏன் உங்க வீடுன்னு சொல்றேள் மாமாஜி… நம்ம வீடுன்னு சொல்லுங்கோளேன்… நீங்களும் இந்த ஆத்தோட ஒரு பேரன் தானே மாமாஜி…”என்றாள் சுருங்கிய முகத்துடன்…
அதுவரை சாதாரணமாக நின்றானோ அவளின் வார்த்தையில் லாவா குளம்பை அள்ளி பருகியது போல முகத்தை மாற்றியவனின் மனமோ எரித்தனலாக எரிந்தது… “என்னிக்கும் இந்த ஆத்துக்கோ இந்த ஆத்து மனுஷாலுக்கோ எனக்கோ சம்பந்தமே இல்ல தமை… எக்காலத்துலையும் இது நடக்க வாய்ப்பே இல்ல…”என்றவனோ அவள் கையை வேகமாக தட்டிவிட்டவாறே நடக்க…
அவனின் வேக நடையை பார்த்தே தமையாவிற்கு அவன் கோவம் நன்றாக தெரிந்தது… அவனின் மனம் படும்பாட்டை அறிந்தவளாக… “மாமாஜீ.. இந்த ஆத்துக்கும் உங்களுக்கும் வேணா சம்பந்தம் இல்லாம இருக்கலாம்… ஆனா இந்த தமையாவுக்கும், உங்களுக்கும் எப்போவோ சம்பந்தம் வந்துட்டு மாமாஜி.. அத யார் மத்த முயற்சி பண்ணாலும் முடியாது… அந்த கடவுளே வந்தாலும்…”என்று அவள் கத்த…
அதனை காதில் கேட்டவாறே நடந்தவனின் உடலோ அவளின் வார்த்தையில் இன்னும் இறுகியதே தவிற குறையவில்லை… அவன் சரியாக மாடிபடியில் இருந்து இறங்க… அங்கோ வர்ஷியை குணாவின் மடியில் உட்கார வைத்து தாலிக்கட்டி இருந்தான் வம்சி…
நளனோ அதை எதையும் கண்டுக்கொள்ளவில்லை… நேராக அவன் பாட்டிற்கு மண்டபத்தின் வாசலை நோக்கி செல்ல… அவனின் உருவம் நன்றாக தெரிந்தது மகேந்திரனுக்கும், கோசலைக்கும்…
மகேந்திரனும் முகம் கோவத்திலும், அருவருப்பிலும் சுருங்க… கோசலையோ தன் மூத்த பேரனை பார்த்த சந்தோஷத்தில் மலர்ந்தது…
“ஏன்னா… நம்ம நளான்னா…”என்று கோசலை ஆரம்பிக்க…
அவரை திரும்பி தீப்பார்வை பார்த்தார் மகேஸ்வரன்… “அந்த ராசிகெட்டவனோட பார்வை கூட இந்த குடும்பத்து மேல படக்கூடாதுன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்… அப்டி இருக்கறச்ச எப்டி அவன் இந்த அமிர்தம் ஆத்து விவாகத்துக்கு வந்தான்…”என்று அவர் உறும…
அதில் கோசலை கண்கள் கலங்கி போனது… என்ன இருந்தாலும் அவரது பேரன் ஆயிற்றே… கலங்க தான் செய்தது…
நளனோ விறுவிறுவென அந்த திருமண மண்டபத்தில் இருந்து வெளியில் வர… அவனின் கற்பாறை முகமோ மேலும் மேலும் இறுகியவாறே இருந்தது… “இந்த ஆத்துக்காரனா நானு… அந்த நெனைப்பு இங்க யாருக்காச்சும், எப்போவாச்சும் இருந்துதா… இல்லையே… யாருக்கும் அந்த நெனப்பு இல்லையே… ஏனோ தானோன்னு வளத்தா என்னைய… ஏனோ தானோன்னு அந்த வீட்ல கெடந்தேன் நானு… அப்புறம் அப்டியே விட்டுட்டா என்னை.. ம்ச் காட்… இப்போ ஏன் இதை எல்லாம் நானு ஒலறின்டு இருக்கேனே நேக்கு புரில… எல்லாம் இந்த ரேபிட்டால வந்துது…”என்றவனின் கண்களுக்கோ அழகாக வந்து காட்சி தந்தாள் தமையா…
தன்னுடைய காரின் அருகில் வந்தவன் தன்னுடைய போனை எடுத்து தன் மாமனான நாகராஜிற்கு தான் கிளம்புவதாக ஒரு மெசேஜை போட்டுவிட்டவன் தன் காரினை வேகமாக ஸ்டார்ட் செய்துக்கொண்டு கிளம்ப… அதனை மண்டபத்தின் வாசலில் நின்றவாறே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அவனின் ரேபிட் தமையா…
காரில் பயணித்துக்கொண்டிருந்தவனின் மனமோ இன்று ஏனோ புதிதாக நுழைந்துவிட்ட தமையா தான் குடிக்கொண்டிருந்தாள்… ஆனால் கலங்கிய மனதை கண்டு மனம் இறுகியவனோ… “இன்னும் உனக்கு உணர்வுகள் இருக்கா நளா… அவ்ளோ வீக்கானவனாடா நீ… க்ராதகி.. ஒரே செகன்ட் ஒரே ஹக், ஒரே டைட்ல என்னை டோட்டலா மாத்திட்டா…“என்றவனோ… இனி இப்போதும் அந்த ரேபிட்டை மட்டும் காணவே கூடாது என்று திட்டம் போட… அங்கோ அவனின் ரேபிட் எப்போதும் அவனுடனே இருப்பதற்கான காரியத்தை சிறப்பாக செய்துக்கொண்டிருந்தாள்.