விடியற் காலையிலேயே விழிப்பு தட்ட, மெல்ல தன் இமைகளை பிரித்து விழிகளை திறந்தாள் ஆஹித்யா.
சோம்பல் முறித்து எழுந்து அமர்ந்தவளுக்கு இன்னும் நித்திரை கொள் என்று எரிந்த விழிகளை கசக்கி விட்ட படி, தூக்கத்தை தூர விரட்டியவள் அப்போது தான் சுயம் அடைந்து சுற்றும் முற்றும் தனதறையில் விழிகளை சுழற்றி பார்த்தாள்.
நேற்று அவள் தூக்கத்தை தழுவும் முன்பிருந்தது போலவே இப்போதும் அதே போல அறை நேர்த்தியாக இருக்க, சட்டென வலப் புறம் திரும்பி நாட்காட்டியை பார்த்தாள்.
அதை பார்த்ததும் திருப்தியாக மென் புன்னகை சிந்தியவள் “தேங் கோட் பிரசென்ட்ல தான் இருக்கோம் “ என்று சொல்லிக் கொண்டே கட்டிலை விட்டெழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
அடுத்த சில நிமிடங்களில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அறைக்குள் வந்தவள் அவசர அவசரமாக தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்த படி நேர்த்தியாக ஆடையொன்றை எடுத்து அணிந்து கொண்டு தன் விம்பத்தை தன் முன்னிருந்த ஆளுயரக் கண்ணாடியில் பார்த்தாள்.
முகத்தை வலமும் இடமும் திருப்பி பார்த்தவள் “நாட் பேட் அழகா தான் இருக்க” என தனக்கு தானே புகழ்ந்து கொண்டவள் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தாள்.
திருட்டு முழி முழித்துக் கொண்டு வெளியில் வந்தவளை அதிர்ச்சியில் புருவங்கள் இடுங்க பார்த்த வித்யா “என்ன சீக்கிரமா எழுந்திட்ட” என்று கேட்க,
தனக்கு எதிரே கேட்ட தன் அன்னையின் குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் “என்ன மா கேள்வி இது? காலேஜ் போக இன்னைக்கு கொஞ்சமே கொஞ்சம் சீக்கிரமா எழுந்துட்டேன் . அசைன்மெண்ட் சப்மிட் பண்ணனும். கிரஜுவேஷன்கு ரெடி ஆகணும். நீங்க வேற காலைல கடுப்பை கிளப்பிட்டு” என்று சொல்லிக் கொண்டே சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.
“அது சரி, உன் பேக் எங்க?” என்று கேட்டுக் கொண்டே அவளுக்கு உணவினை பரிமாறினார் வித்யா.
‘ஆஹா மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டேனே’ என்று தனக்குள் அலறியவள் “சோ வாட் மா? பசிக்குது சாப்பிட்டு போய் எடுத்துக்கலாம்ன்னு இருந்தேன்” என்று சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பித்தவளுக்கு உணவு தொடைக்குழிக்குள் இறங்கினால் தானே?
அவளின் எண்ணமோ ஜெய்யை சந்திக்க வேண்டும் என்றதில் தான் தேங்கி நின்றது.
அவளோ, சீக்கிரமாக பாதி உணவில் எழுந்து கொள்ளவும், “என்னடி பசிக்குதுனு சொன்ன இப்போ பாதிலயே எழுந்து போற?” என்ற வித்யா, அவளுக்காக பொதி செய்து வைத்திருந்த உணவை நீட்ட, “அசைன்மெண்ட் சப்மிட் பண்ணனும் அந்த டென்ஷன் மா அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது” என்று சொல்லி விட்டு கையை அலம்பி விட்டு வித்யாவின் கன்னத்தில் அவசரமாக முத்தம் பதித்தவள் நுழைவாயிலை நோக்கி ஓட, “பேக் எடுத்திட்டு போடி” என்ற வித்யாவின் குரலில், “ப்ச்…” என்று சலித்துக் கொண்டே அறையை நோக்கி ஓடி வரவும், வித்யா அவளின் பையை அறைக்குள் இருந்து எடுத்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது.
“தேங்ஸ் மா” என்றவள் தன் பையை வாங்கிக் கொண்டு, அவள் நேராக சென்றது என்னவோ ஜெய் ஆனந்த்தின் மருத்துவமனைக்கு தான்.
அவளுக்கே தெரிந்தது தான் செய்யப் போகும் விடயம் பைத்தியகாரதனமானது என்று, ஆனால் என்னவோ அவளின் மனம் தான் முரண்டு பிடித்துக் கொண்டிருந்ததே!
ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவளை “மேம்” என்றழைத்த பெண்ணின் குரலில் பின்னால் திரும்பிப் பார்த்தாள்.
“எஸ் சொல்லுங்க” என்றாள் கனிவாக,
“டாக்டர் உங்களை அவர் கேபின்ல வெயிட் பண்ண சொன்னார் மேம்” என்று சொல்ல,
“ஹும், ஓகே” என்று விட்டு தனக்கு நேரெதிரே இருந்த ஜெய் ஆனந்த்தின் கேபினுக்குள்ளே நுழைந்தாள் பெண்ணவள்.
உள்ளே நுழைந்ததுமே அவளின் நாசியை முதலில் துளைத்தது என்னவோ அவனது வாசனை தான்.
“கனவுல யூஸ் பண்ண அதே பெர்ஃப்யூம்” என்று சொல்லிக் கொண்டே விழிகளை மூடி ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளி விட்டவள் மெதுவாக விழிகளை திறந்தாள்.
விழிகளை திறந்தவளுக்கோ, தூக்கி வாரிப் போட்டது.
மேசையில் சாய்ந்து, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிய படி அவளின் செய்கையைத் தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஆணவன்.
“சா… சாரி மாமா” என வார்த்தைகளை கோர்க்க முடியாது திணறினாள்.
“வொய் சாரி? என்று புன்னகையுடன் கேட்டவன் கூல் என்னவோ நான் உன்ன கடிச்சு சாப்பிடுற போல பதறிட்டு இருக்க” என்றவன் விழித்துக் கொண்டு நின்றவளிடம் தண்ணீர் போத்தலை நீட்டினான்.
அவன் கேட்டது என்னவோ சாதாரணமாக தான் ஆனால் அவன் மீது காதல் கொண்ட அவளின் உள்ளம் ‘கடிச்சு சாப்பிட்டா தப்பே இல்ல ஜெய் பேபி’ என்று சொல்லிக் கொள்ள, தன் மனதுடன் பேசிக் கொண்டே பாட்டிலை வாங்கி நீரை குடித்து விட்டு அவன் முகம் பார்த்தவளுக்கு தான் வந்த நோக்கத்தை மறுபடி பேசவே தயக்கமாக இருந்தது.
நேற்று இருந்த அவளது தைரியம் இன்றோ தலைமறைவாகி விட்டது போலும், விரல்களை பிசைந்துக் கொண்டே என்னவோ யோசனையில் நிற்பவளை “தியா வாட் ஹப்பெண்ட்? பீவரா?” என்று கேட்டவன் தன் கரத்தை உயர்த்தி அவளின் நெற்றியில் வைத்து ஆராய, அவளுக்கோ வெடவெடத்து போய்விட்டது.
அவனின் முதல் ஸ்பரிசம்.
மேனி சிலிர்த்து அவனிடம் காட்டிக் கொடுத்து விடுமோ? என்று பயந்து போன பெண்ணவளோ சட்டென ஓரடி பின்னால் நகர்ந்து “ஹாங், அதெல்லாம் இல்ல. எனக்கு… நான்… நான்” என்று உளறியவளுக்கு வார்த்தைகள் வராமல் சண்டித்தனம் செய்தன.
இத்தனைக்கும் நேற்று, கன்னித் தன்மையை ஆராய வேண்டும் என்று அவள் கேட்டதையே முழுதாக மறந்து போனான் அவன். இதில் எங்கனம் அவள் கூற வருவதை அவன் அறிந்து கொள்வான்?
அவள் பதற்றமாக ஏதோ சொல்ல தயங்குகின்றாள் என்று புரிந்து கொண்டவன் “ரிலக்ஸ் தியா, லேடி டாக்டர் வர சொல்லட்டுமா?” என்று கேட்டான்.
வேறு யாரிடமாவது செல்ல வேண்டும் என்றால் அவள் ஏன் அவனிடம் வரப் போகின்றாள்?
‘ ஆஹி கம் ஒன் சொல்லிடு’ என்று தன்னை தானே ஊக்கப்படுத்திக் கொண்டே, “இல்ல வேணாம் மாமா” என குரலை செருமிக் கொண்டவளோ “நேத்து நான் டெஸ்ட்பத்தி கேட்டேன்” என தயங்கியவாறு கூற,
“வாட்? டெஸ்ட்டா?” என்றவனுக்கு சுத்தமாக அதைப் பற்றிய நினைவே இருக்கவில்லை.
‘ மீண்டும் மீண்டுமா?’ என சொல்லிக் கொண்டவள் “அசைன்மெண்ட்… வெர்ஜின்” என்றாள் தொண்டையை விட்டு வர மறுத்த வார்த்தைகளை கோர்க்க முடியாது,
“ஓஹ் ஷிட் சாரி தியா மறந்துட்டேன் என்றவன் இது வரையும் இப்படி ஒரு அசைன்மெண்ட் நானே கேள்வி பட்டது இல்லை இந்த அசைன்மெண்ட் பண்ண ஓகே பண்ண பிராஃபசர் யார்?” என்று கேட்டவன் தனது அலைபேசியை எடுக்கவும், மருண்டு விழித்தவள் ‘ஆத்தி தொக்கா சிக்க போறோமா? ஹையோ என்னவாவது பண்ணு ஆஹி’ என உள்ளே பதறிப் போனவளாய் “அசைன்மெண்ட் என் ஐடியா தான் மாமா, ரொம்ப கஷ்டபட்டு தான் பிராஃபசரை ஒத்துக்க வச்சேன்” என்றாள் பாவமாக,
‘உஃப்’ என இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளை ஆழ்ந்து பார்த்தவன் “இந்த டெஸ்ட் உன்ன ப்ரூப் பண்ண போறதில்லை ஆஹித்யா” என்றவன் அவளின் அதிர்ந்த தோற்றத்தை உள்வாங்கிய படி, “ஐ மீன் ஒரு பொண்ணு வெர்ஜினா இல்லையானு ஜஸ்ட் ஒரு டெஸ்ட்டால க்ளியர் பண்ண முடியாது சோ உன் டெஸ்டிங் போசிடிவ்வா இருக்காமல் கூட இருக்கலாம்” என்று மருத்துவ மற்றும் விஞ்ஞான ரீதியாக விளக்கம் கூறிக் கொண்டிருக்கும் போதே முகம் வெளிறிப் போனவளோ “நான் தப்பானவ கி… டையாது மாமா” என்றாள் குரல் நடுங்க,
அவளின் பதிலில் உடல் இறுக, சீற்றத்தில் முகம் சிவந்து போக, “ஆர் யூ மேட்? நீ படிச்ச பொண்ணு தானே நான் என்ன சொல்றேன்னு ஃபர்ஸ்ட் கேளு” என்றான் சீறலாக,
என்ன முயன்றும் அவனால் அவளின் பதிலில் உண்டான கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
முதன் முறையாக அவளிடம் குரல் உயர்த்தி பேசி இருக்கின்றான்.
அவளோ, விழிகள் கலங்க நின்றிருக்க, தன்னை சற்றே ஆசுவாசப் படுத்திக் கொண்டவன் “ஜஸ்ட் டிஷ்ஷு தான் ஒரு பொண்ணை நிருபிக்கணும்ன்னு அவசியம் இல்ல சோ மே பீ ரிசல்ட் பாஸிடிவ்வா வரலாம்” என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் பரிசோதனையை மேற்கொள்ள ஆயத்தமானான்.
அதனைத் தொடர்ந்து மூன்று மணித்தியாலங்களாக தடதடக்கும் இதயத்துடன் பரிசோதனையின் முடிவுக்காக காத்திருந்தாள் பெண்ணவள்.
ஜெய் ஆனந்த் கூறிய விடயத்திலேயே தான் அவளது எண்ணம் முழுதும் சுழன்று கொண்டிருந்தன.
தனக்கே இப்படி என்றால், கன்னித்தன்மையையே கலாச்சாரமாக பின்பற்றி வாழும் சில மனித பிறவிகள், இன்னும் வீட்டு பெண்களை மனதளவில் நோகடித்து கொண்டு தானே இருக்கின்றனர்?
நினைக்கும் போதே உள்ளம் பதறி உடல் இறுகியது.
தான் இதை பரிசோதிக்க நினைத்ததே தப்பு என அக்கணம் உணர்ந்தாள் பேதையவள்.
அவளின் பரிசோதனை முடிவுடன் வந்தவன் அவளது கோப்பை அவளிடம் நீட்டினான்.
கோப்பை வாங்கிக் கொண்டவளோ “எ… என்ன ரிசல்ட் மா..மாமா?” என்றவள் குரல் அவளையும் மீறி படபடத்து ஒலித்தது.
“சாரி தியா நான் பார்க்கல. டாக்டர் ஶ்ரீ தான் கொடுத்தாங்க சோ நீயே பார்த்துக்கோ என்றவன் ஆல் த பெஸ்ட் ஃபோர் யுவர் அசைன்மெண்ட் சப்மிஷன்” என்றவன் ஸ்டெதெஸ்கோப்பை கழுத்தில் போட்டுக் கொண்டு கதவில் கை வைத்தவனிடம் “உங்களுக்கு தெரிய வேணாமா?” என்று கேட்டாளே பார்க்கலாம்.
கதவில் கை வைத்திருந்தவன் கையோ இறுகி போயின, பல்லைக் கடித்து உணர்வுகளை அடக்கிக் கொண்டு அவள் புறம் திரும்பியவன் “எதுக்கு தெரிஞ்சுக்கணும்?” என்று அவளிடமே திருப்பி கேட்டான்.
அவனின் பேச்சின் தோனியின் பேதத்தை அறியா பேதையவளோ “நீங்க தானே என்னை மேரேஜ் பண்ணிக்க போறீங்க” என்று சொல்லிக் விட்டு தலை தாழ்த்தி கொண்டவளிடம் “இஸ் இட்? சோ நான் ஒரு பொண்ணுக்கு கற்பு இருக்கா இல்லையானு டெஸ்ட் பண்ணிட்டு தான் மேரேஜ் பண்ணிக்குவேனு உன் மைண்ட்ல திங்க் பண்ணிட்டு இருக்க ரைட்?” என்றவனது கேள்வியில் அவசரமாக “ஹையோ மாமா அப்படி சொல்ல வர்ல. ஜஸ்ட் ஒரு கியூரியாசிட்டில புத்தி பேதலிச்சு போய் கேட்டுட்டேன்” என்று காலில் விழாத குறையாக குரல் தாழ்ந்து பேசுபவளிடம் மேலும் சீற்றத்தை காட்ட விரும்பாதவன் திரும்பி “அந்த ரிப்போர்ட்டை நீ பார்க்க கூடாது தியா” என்றான்.
“வொய்?” என அதிர்ச்சியாக கேட்டாள்.
“நீ என்னை நம்புற தானே”
“ஆஃப்கோர்ஸ் உங்களை நம்பாமலா?” என்றிட,
“சோ சிம்பல், பார்க்க வேண்டாம் ப்ராமிஸ் பண்ணிட்டு கிளம்பு” என்றான்.
“என்ன ப்ராமிஸ் ஆஹ்? நோ, அதெல்லாம் வேணாம் நான் பார்க்க மாட்டேன்”
“சோ சேட் நீ என்மேல வச்சிருக்க நம்பிக்கை இந்த விஷயத்துல உன்மேல இல்ல” என்று சொல்லியே விட்டான்.
அதில் மனம் சோர்ந்தாலும் சட்டென ஞாபகம் வந்தவளாய் “அசைன்மெண்ட் சப்மிட் பண்ண நான் பார்த்து தானே ஆகணும்” என சொல்ல, “இங்க வா” என்று அழைத்தான்.
அவன் அழைக்கவும் மனதில் என்னவோ சொல்ல முடியாத உணர்வு.
ஆர்வக்கோளாறில் கூச்சலிட்டு சந்தோஷ மிகுதியில் கத்தி விடுவேனோ என்று பயந்து போனாள்.
அவனை நெருங்கியவள் மெல்ல நிமிர்ந்து கேள்வியாக அவனை நோக்க, அவளின் முகத்தை பற்றி பக்கவாட்டு சுவற்றில் இருந்த பெயர் பலகையை பார்க்க வைத்தான்.
சட்டென ஏமாற்றம் படர “எ..என்ன?” என்றாள் புரியாமல்,
சுவரில் சாய்ந்து நின்றவன் “ரீட் மை நேம் இன் புல்” என்றான்.
ஒரு பெரு மூச்சுடன் “டாக்டர் ஜெய் ஆனந்த் பிரதாபன் எம்பீபீஎஸ்” என வாசித்து விட்டு அவனை பார்த்து புருவம் உயர்த்த “நீ எதுக்காக டெஸ்ட் பண்ணனும்னு கேட்டனு ஐ டோண்ட் க்னோ பட் இனிமேல் பொய் சொல்லாத” என்றவன் அவளின் பெரிதாக விரிந்த இரு விழிகளை பார்த்துக் கொண்டே “டு யூ லைக் மீ?” என்று கேட்டிருந்தான்.
Semma epi dr…
Mattikittaaley