இரு கரங்களாலும் தன் முகத்தை மூடிக் கொண்டவளின் வெட்கத்தை ரசனையாக பார்த்தவன் குரலை செருமிக் கொண்டே “பொய் சொல்லாதனு சொன்னதை மறந்துட்ட போல” என்றதும் சட்டென தன் கரங்களை அகற்றி அவன் முகம் நோக்கியவளுக்கு தான் ‘ ஐயோடா’ என்றாகி போனது.
அவனைக் கண்டாலே திணறும் தன்னை நொந்து கொண்டாள்.
இதில் அநியாயத்துக்கு வெட்கம் வேறு வந்து தானாய் தொற்றிக் கொள்கின்றது என ஆற்றாமையாக இருந்தது.
நிலத்தை பார்த்துக் கொண்டே “நீங்க காஃபி எடுக்காமல் லேட் பண்ணிங்கல அதான்” என்றாள்.
“ஜஸ்ட் காஃபி எடுக்க லேட் பண்ணதால மட்டும் தானா?” என்ற கேள்வி அவனிடம்,
‘ ஹையோ’ இவன் விட மாட்டானா என்று தான் அவளுக்கு தோன்றியது.
அதற்கும் மேல் இவன் இப்படி எல்லாம் பேசுவானா? என அதிர்ச்சியாக வேறு இருந்தது.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவன் முகம் பார்த்தவள் இதழ் கடித்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு “ நீ.. நீங்க என்றவள் குரலை செருமிக் கொண்டே என்னவோ போல என்னை பார்த்தீங்க தானே…” என கூற வந்தவளுக்கு மேலும் பேச்சை தொடர முடியாது வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டு வர மறுத்து விட்டன.
புருவங்கள் உயர “எப்பவும் போல தானே பார்த்தேன்” என்றவன் அவளறியாது இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
“நோ மாமா, நீங்க பொய் சொல்றீங்க. என்னால பீல் பண்ண முடிஞ்சது” என்றவளை ஆழ்ந்து அவன் பார்த்த பார்வையில் மீண்டும் திணறியவள் “இதோ இ…இப்…இப்படி தான் பார்த்தீங்க” என்று அவனை அவனுக்கு உணர்த்தி விடும் வேகத்தில் சொன்னவளுக்கு அவனின் கனிவான புன்னகையில் தான் தன்னை சீண்டிக் கொண்டிருக்கிறான் என்றே புரிந்தது பெண்ணவளுக்கு,
“நா..நான் போறேன்” என்றவள் அவனைத் தாண்டி செல்லும் போதே அவளின் கையைப் பற்றி பிடித்து விட்டான் ஜெய் ஆனந்த்.
அவளுக்கோ விழிகள் இரண்டும் விரிந்து கொண்டன.
இதயம் எம்பி வெளியில் குதித்து விடுவது போல படு வேகமாக துடித்தது.
என்ன செய்யப் போகின்றான்?
எனது முதல் முத்தத்தை கள்வனவன் திருடப் போகிறானோ? என்றெல்லாம் தாறுமாறாக அவளின் சிந்தனை பயணிக்க, அதற்கு ஏற்றாற் போல மயிர்க்கால்கள் சிலிர்த்து மேனி முழுவதும் சிவந்து போய் அப்படியே நின்றிருந்தாள்.
“லுக் அட் மீ தியா” என்றவன் குரலோ மென்மையிலும் மென்மையாக அவளைத் தீண்டியது.
“ம்ஹூம்” என்றாள் மறுத்து,
“தட்ஸ் ஃபைன் நானே உன் முன்னாடி…” என்று அவன் சொல்லும் போதே அவன் புறம் முழுதாக திரும்பியவள் பார்வை தன் விரல்களோடு பிணைந்திருந்த அவனின் நீள் விரல்களில் பதிந்தது.
“ஐ திங்க் நார்மல் ஸ்பீட விட ஹார்ட் இஸ் பீடிங் டூ பாஸ்ட் தியா, என்றவன் அவளின் நாடியை பிடித்து பார்த்ததுமில்லாமல் தனது இடது மார்பில் அவளது கரத்தை வைத்து அழுத்தினான்.
சும்மாவே அவனின் இவ் அவதாரத்தில் ஆடிப்போய் நின்றவள் இப்போது அவன் வேறு தனது நிலை புரியாமல் என்னவோ செய்து கொண்டு இருக்கிறானே!
அந்நிசப்த்தத்தை கிழிக்கும் வண்ணம் இருவரின் இதயத் துடிப்பும் ஒருங்கே தாளம் தப்பித் துடித்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு எவ்வளவு நேரம் அப்படியே நின்றனரோ சட்டென கீழே கேட்ட வித்யாவின் குரலில் சுயம் அடைந்து சுற்றம் உணர்ந்தவர்கள் சட்டென பிரிந்தனர்.
முத்தம் கொடுத்து கட்டி அணைத்து மூன்றெழுத்து வார்த்தைகளை கூறினால் தான் காதலா என்ன?
பேசப்படாத மௌனங்களும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட அருகாமை கொடுத்த உணர்வும் கூட காதல் தானே!
கேசத்தைக் கோதிக் கொண்டே லேசாக புன்னகைத்துக் கொண்டவன் “வா போகலாம்” என்று கரத்தை நீட்ட,
‘ஆத்தி மீண்டும் மீண்டுமா?’ என்று அரண்டவள் “இல்ல மாமா நீங்க முன்னாடி போங்க நான் வரேன்” என்றவளின் தயக்கம் அறிந்தவனோ இதழ் குவித்து ஊதிக் கொண்டே அதிரடியாக அவளின் கரத்தை பற்றியே விட்டான்.
அவனின் கைச்சிறைக்குள் அகப்பட்டுக் கொண்ட தன் கரத்தை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவளுக்கு படபடப்பு தான் குறைந்தபாடில்லை.
அவனின் விரல்களோடு விரல் பிணைத்து கொண்டவள் மந்திரித்து விட்டதை போல அவன் அவனோடு இழு பட்டு சென்றவளுக்கு ஒரே வேண்டுதல் தான்.
‘ஆம், வேறென்ன? அனைத்தும் நிதர்சனமாக இருக்க வேண்டும் என்று தான்’
அதனைத் தொடர்ந்து நாட்களும் தன் பாட்டில் நகர ஆரம்பித்த தருணம் அது.
இதோ அதோ என்று திருமணத்திற்கு ஒரு கிழமை தான் என்றிருக்கும் போதே சித்ராவோ அனைவரையும் ஆடைகளை எடுக்க கிளப்பி இருந்தார்.
அதிலும் ஜெய் ஆனந்த் தான் இவ் விடயம் அறிந்து முன் கூட்டியே மருத்துவமனைக்கு செல்லாமல் விடுப்பு வேறு எடுத்து இருந்தான்.
“ஆனந்த்” என அழைத்துக் கொண்டே லேசாக திறந்திருந்த அவனின் அறைக்குள் நுழைந்திருந்தார் சித்ரா.
ஷர்ட்டை முட்டி வரை மடித்துக் கொண்டே ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்றவனோ “ அம்மா வொய் என்ன இவ்ளோ அவசரம்?”
“முகூர்த்த புடவை எடுக்கணும் டா எக்கச்சக்கமா இருந்த கல்யாண வேலையில உன்கிட்ட இதபத்தி சொல்லவே மறந்துட்டேன் என்று தயங்கியவாறே சொன்னவர் ஹாஸ்பிடல் போகாத டா” என்று சொல்லி விட,
“மா” என்று சித்ராவின் கன்னத்தை பற்றியவன் “ஆல்ரெடி லீவ் சொல்லிட்டேன். சோ கிளம்பலமா?” என கேட்டிருக்க,
அவன் வர மாட்டானோ என தவித்த மனதிற்கு அவனின் வார்த்தைகள் பலத்தை அள்ளியே அளித்து விட்டது போலும், “சீக்கிரம் கிளம்பு டா சின்னவனும் வெயிட் பண்றான்” என்று சொல்லிக் கொண்டே துள்ளி குதிக்காத குறையாக சித்ராவும் ஓட, “அம்மா பீ கேர்புல்” என்றவனின் வார்த்தைகள் காற்றில் தான் கரைந்தது .
**************************************
அதனைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் விலையுயர்ந்த ஆடைகளைக் கொண்ட ஆடையகத்தினுள் நுழைந்திருந்தனர்.
இனி சொல்லவா வேண்டும்?
“ஆஹித்யா ஆனந்த் கூட போய் உனக்கு பிடிச்ச புடவைகளை எடுத்துக்கோ” என சித்ரா கூற, அவள் பதில் கூற வரும் முன்னரே அதற்காகவே காத்திருந்தவன் போல அவளது கரத்தை பற்றி விட்டான் ஜெய் ஆனந்த்.
அவளுக்கோ, வெளிவரவிருந்த வார்த்தைகளோ தொடைக்குழிக்குள் சிக்கிக் கொண்டன.
“என்னமா தயக்கம்? போ…போய் உனக்கு பிடிச்ச போல எடுத்துக்கோ” என சித்ரா சொல்லவும் “சரி அத்தை” என்றாள்.
இங்கு நடப்பவைகளை பார்த்த படி நின்ற வித்யா, பவ்யாவை கவனித்தார்.
அவளோ யாருக்கு வந்த விருந்தோ என்று அலைபேசியை ஆராய்ந்துக் கொண்டிருக்கவும் கோபமடைந்த வித்யா, “ஹேய் பவ்யா என்ன போனை நோண்டிட்டு இருக்க? பாரு உனக்காக விபீஷன் புடவை தேர்ந்தெடுத்துட்டு இருக்கான். போடி போய் அவன் பக்கத்துல நில்லு” என்று வித்யா கறுவ, “அம்மா பிளீஸ் மா ஏதாச்சும் செலக்ட் பண்ணி கொடுக்கட்டும் எனக்கு இப்போ அங்க போக மூட் இல்லை” என்று விட,
அவளை மேலும் நன்றாக முறைத்த வித்யா, அடுத்த வார்த்தை பேசும் முன்னரே அவ்விடம் வந்த சித்ரா “வித்யா வா என்கூட என்று சொன்னவர் திரும்பி விபீஷன் கூப்பிட்டு விட்டான் மா” என்க,
“என்னையா?” என்றாள் அதிர்ச்சியாக,
“ம்ம், போ மா” என்றவர் வித்யாவை கையோடு அழைத்துக்கொண்டு சென்ற வேகத்திலேயே புரிந்து விட்டது அவளுக்கு, அவன் தன்னை கூப்பிட எல்லாம் இல்லை என்று,
போனை அணைத்தவள் விபீஷன் நிற்கும் இடத்தினை நோக்கி விரைந்திருந்தாள்.
அவனை நெருங்க நெருங்க என்னவோ ஓர் தயக்கம் ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
அவள் தன் அருகே வந்து விட்டாள் என திரும்பி பாராமேலேயே உணர்ந்தது கொண்டவன் “ஃபைனலி என்கிட்ட வந்துட்ட போல” என்றான் ஆழ்ந்த குரலில்,
“வராமல் இருக்க முடியுமா என்ன?” என்றாள் பதிலுக்கு,
“சோ வாட் நெக்ஸ்ட்?” என்றவன் நிமிர்ந்து தன் முன்னிருந்த ஆளுயரக் கண்ணாடியில் தெரிந்த அவளின் விம்பத்தை பார்த்து ஒற்றை புருவம் ஏற்றி இறக்கினான்.
அதே நேரம், அவளோ அவனின் பக்கவாட்டில் நின்ற படி கண்ணாடியில் தெரிந்த அவனின் பிம்பத்தை பார்த்துக் கொண்டே அவனிடம் பேசிக் கொண்டிருந்தவளுக்கோ சட்டென அவன் தன்னை நிமிர்ந்து பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது.
உள்ளே அதிர்ந்தாலும் குரலை செருமிக் கொண்டவளோ “ சாரி செலக்ட் பண்ணனும்” என்றாள்.
இதழ்களில் புன்னகை மிளிர, “உனக்காக நான் செலக்ட் பண்ணேன் பட் சாய்ஸ் இஸ் யுவர்ஸ்” என்றவனோ அவளுக்காக தான் தேர்ந்தெடுத்த அடர் பச்சை மற்றும் வயலட் நிறத்தாலான வேலைப்பாடுகள் நிறைந்த இரு புடவைகளை அவள் புறம் நகர்த்தினான்.
அவன் நகர்த்திய புடவைகளை பார்த்தவளுக்கோ, விழிகளை வேறு புடவையின் புறம் திருப்பவே மனதே இல்லை.
விழிகள் மின்ன இரு சேலைகளையும் வருடியவள் அதிலொன்றை எடுத்து தன் மார்பில் போட்டு கண்ணாடியில் பார்த்தாள்.
அவளின் வெண் நிறத்திற்கு அப் புடைவையோ மேலும் அழுகு சேர்த்திருக்க, இதழ்கள் தாராளமாக விரிய “தேங்க்ஸ் விபீஷன்” என்று சொல்லிக் கொண்டே திரும்பும் போது தான் அவனது பார்வையில் தெரிந்த காதலைக் கண்டு கொண்டாள் பாவை.
‘விட்டால் தன்னை விழுங்கி விடுவான் போலும்’ என்று நினைத்துக் கொண்டவள் மீண்டும் “தேங்க்ஸ்” என்றாள் திணறி படி,
அவளே அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவளின் மனதுக்குள் ஆழமாக வேரூன்றி இருந்தான் அவன்.
“நமக்குள்ள இந்த தேங்க்ஸ் தேவை தானா?”
“மேரேஜ் ஆகுற வரை தேவை தானே சார்” என்றாள் சளைக்காமல்,
“இஸ் இட்? என புன்னகையோடு கேட்டவன் அப்போ மேரேஜான பிறகு நோ நீட் ரைட்?” என்க,
“நீங்க நடந்துகிறதை பொறுத்து தான் டிசைட் பண்ண முடியும்”
“ஓகே… என இழுவையாக சொன்னவன் உனக்கு ஓகே தானே ஐ மீன் இந்த மேரேஜ்” என்றான் உள்ளே எழுந்த ஒரு வித தவிப்புடன்,
“பர்ஸ்ட் பிடிக்கல என்றவள் அவனின் விழிகளில் தெரிந்த வலியை கண்டு கொண்டவள் வெயிட் அதுக்குள்ள கலங்குனா எப்படி? பர்ஸ்ட் தான் பிடிக்கல பட் இப்போ ட்ரை பண்ணி பார்க்கலாம்னு தோணுது” என்றவள் புடவையை ஆராய்வது போல பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
அவள் தான் பார்வையைத் திருப்பிக் கொண்டாளே தவிர, அவன் பார்வை அவளை மட்டும் தான் துளைத்துக் கொண்டிருந்தது.
“கம்பள் பண்ணலயே” என்றான் மீண்டும்,
“என் லைஃப்ல யார் வந்தாலும் நான் இஷ்டபட்டால் மட்டும் தான்” என்றவள் இப்போது நன்றாக திரும்பி அவனின் விழிகளை நோக்கிய படி“ அதுக்காக உங்களை முழுசா பிடிக்கும்னு இல்ல. எனக்கு டைம் வேணும். உங்க கூற நிறைய பேசணும்”
“ஓகே பட் என்னை பியூச்சர்ல பிடிக்க சான்ஸ் இருக்கா?” என எதிர்பார்ப்புடன் கேட்க, என்னவோ சிறு பிள்ளை தான் விருப்பும்பியது கிடைக்குமா? கிடைக்காதா? என பிடிவாதமாய் கேட்பதை போல தான் அவளுக்கு தெரிந்தது.
அவன் கேட்ட தோரணையில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவள் “பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம் சோ அதுக்கு நீங்க எனக்கு பிடிச்ச போல நடந்துக்கணும்”
தன்னைக் கண்டு கொண்டான் என்று புரிய மனம் பிசைய “சாரி விபீஷன் நீங்க கேட்டது…” என்றவளை பேச வேண்டாம் என்பதை போல விழிகளை மூடித் திறந்தவன் “ஐ மேட்லி இன் லவ் யூ பவி” என்றவன் வாயடைத்து நின்றவளை பார்த்து சன்னமாக விசிலடித்த படி கண்ணடித்து விட்டு அவளைக் கடந்து சென்று ஜெய் ஆனந்த்துடன் நின்று விட, தன்னையும் மீறி சிவந்த கன்னங்களை மறைக்க முடியாது மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றவளை கவனியாது முகம் சிவக்க ஓடி வந்த வேகத்திலேயே இடித்திருந்தாள் ஆஹித்யா.