அத்தியாயம்-5 girl you wanna play with a big playboy like me ah (playboy like me) girl you wanna play with a big playboy like me ah (playboy like me) ahh ahh ah ah, ahh ahh ah ah,ayy big playboy playboy like me, playboy like me ahh ah playboy like me(playboy like me) என்ற பாட்டு அந்த நைட் க்ளப்பையே அதிர வைத்துக்கொண்டிருக்க.. அதனை இன்னும் அலற வைத்துக்கொண்டிருந்தான் அவிரன். தனக்கு முன்னால் நின்றுக்கொண்டு அறைகுறை ஆடையுடன் உடலை பாதியாக காட்டியவாறே நிற்கும் அந்த அழகிய பெண்ணையே மயக்கம் விழிகளுடன் பார்த்துக் கொண்டிருக்க.. அவளோ அவனின் கம்பீரத்திலும் அவனின் உடற்கட்டிலும் மயங்கியவாறே அவனை தொட்டு தொட்டு உரசிக் கொண்டிருந்தாள். இதனை ஓரமாக நின்றவாறே பார்த்துக் கொண்டிருந்தான் கிஷன். அவனின் முகத்திலோ அப்படி ஒரு கடுப்பு.. “எத்தனை தடவை சொன்னாலும் இந்த அண்ணா கேட்கிறதே கிடையாது.. இந்த மாதிரி இடத்துக்கு நைட்டு வந்து ஆகலேன்னா தான் என்ன இருக்கு.. சும்மா தேவையில்லாம இங்க வந்து நின்னுகிட்டு இப்படி ஆடிக்கிட்டு.. பத்தாததுக்கு நைட்டு இவளுங்க கூடவே ஸ்டே பண்ணிக்கிட்டு.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.. ஒரு பெரிய பிஸ்னஸ் மேன் பண்ற வேலையா இது..” என்று கடுகடுவென பொறிந்து கொண்டே இருக்க இதனை எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்த நேரத்தை இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்தான் ஆவிரன். “ஹேய் பேபி டுடே நைட் ஃப்ரீயா..” என்று அவள் குழைவான குரலில் கேட்டவாறே அவனின் சோல்டரையும், அவனது உரமேறிய நெஞ்சையும் வருடியவாறே கேட்க அவனோ அவளுக்கு மேல் மயக்கும் புன்னகை புரிந்தவனாக “ஐ ம் ஆல்வேஸ் ஃப்ரீ தான் பேப்…” என்றான் மயக்கும் குரலில்.. என்னதான் மயக்கும் குரலில் பேசினாலும் அவனின் கம்பீர குரல் வெளியே வரத்தான் செய்தது. “ஓ சூப்பர் பேபி.. அப்ப இன்னைக்கு நைட் நாம என்ஜாய் பண்ணலாம்..” என்று மகிழ்ச்சியில் குதுக்கலித்தவாறே அவள் அவனுடன் நெருக்கமாக நிற்க.. அவனுக்கும் அது வசதியாக போனது.. அவளது இடுப்பில் கையை கோர்த்து தன்னை நோக்கி இறுக்கிக் கொண்டவன்.. “வித் ப்ளஷர் பேபி..” என்றான். “வாவ் அப்ப நம்ம உடனே ரூமுக்கு போலாமா..” என்று அவள் ஆர்வத்துடன் கேட்க “ஹேய் அதுக்குள்ள என்ன அவசரம் அதான் நாம விடிய விடிய என்ஜாய் பண்ண போறோமில்ல.. தென் வொய்..”என்றவன் அவளின் வெற்று தோளை தன் கைக்கொண்டு வருடியவாறே.. “அதுக்கு முன்னாடி இப்டி ஜாலியா டான்ஸ் ஆடிட்டு போலாம்..” என்று அவன் அவள் உடலை இசைக்கேற்ப வளைத்தவாறே ஆட.. அவளோ “ம்கூம்…”என்று சிணுங்கியவாறே.. “இப்போ நாம எதுக்கு பேபி ஆடனும்.. அவி டார்லிங் நாம ரூம்க்கு போய்ட்டு ஆடலாமா.. ம்ச் உன்னோட காலையில வர தான் ஜாலியா இருக்க முடிது பேபி.. அதுக்கு அப்புறம் உன்ன பிடிக்கவே முடில.. ம்ச் அப்புறம் வீக் என்ட் தான் நாம திரும்ப மீட் பண்றோம்.. நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்.. நம்ம போயி என்ஜாய் பண்ணலாமா.. ப்ளீஸ் அவி…” என்று கொஞ்சலாக, சிணுங்கலாக அவள் பேச.. அவள் பேசியதெல்லாம் அவளின் அவி என்ற கொஞ்சலிலையே மறைந்து போனது.. முக இறுக்கத்துடன் “ஹேய் இடியட் ஹவ் மெனி டைம்ஸ் ஐ டோல்ட் யு.. என்னோட முழு நேம சொல்லி கூட கூப்பிடு.. ஆனா இந்த அவி, நவினு பெட் நேம் மட்டும் வைச்சி கூப்பிடாத.. ஐ டோன்ட் லைக் இட்..” என்று கடுமையான குரலில் கூற “ஹேய் பேப்..”என்றவளோ அவனை இன்னும ஒட்டி நின்றவள்.. “வொய் பேப் இப்டி சொல்ற.. பட் உன்னோட அவின்ற பேர் தான் எனக்கு போதை ஏத்துது.. ம்ச் சச் ய ப்ளசன்ட் நேம் இஸ் யுவர்ஸ்..”என்று கொஞ்சலாக பேச அதில் அவளை விட்டு விலகியவனோ.. “ம்ச் எனக்கு பிடிக்கலனா புடிக்கல.. டோன்ட் கால் மீ அவி..இந்த அவிரன யாரும் பெட் நேம் வச்சு கூப்பிடக்கூடாது.. ஐ டோன்ட் லைக்.. அது யாரா இருந்தாலும் சரி..” என்று கூற “நான் கூடவே,,” என்று அப்போதும் அடங்காதவளாக அவன் பக்கம் நெருங்கியவாறே கேட்க அதில் கோபத்தில் தன்னுடைய சிகையை கோதி கொண்டவனோ “லுக் உன் கூட நான் ஒன்னா பழகுறதுனால என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்காத..நான் எந்த அளவுக்கு உன்கூட நைட் ஸ்பென்ட் பண்றேனோ அதுக்கு ஏத்த மாதிரியான வேல்யுபிளான பொருளை உனக்கு கொடுத்துட்டு தான் நான் உன்னை நெருங்குறேன்.. அது அந்த பெட் சேரிங்கும், அந்த கிப்டுக்கும் முடிஞ்சு போயிடுச்சு.. என்ன பர்ஷனலா நெருங்கனும்னு நெனைக்காத..” என்று அவன் கடுப்புடன் கத்தியவனின் குரல் அந்த பார்ட்டி ஷாலையே அதிர வைத்தது. அங்கிருக்கும் பலருக்கும் அவனின் இந்த கத்தல் பழக்கம் தான் என்பது போல திரும்பி தன் வேலையை பார்க்க ஆரம்பிக்க.. புதியவர்களோ என்ன ஏது என்பது போல அவன் இருந்த திசையையே பார்த்தனர். அவளுக்கோ அவன் கத்தியது அவமானமாக போய்விவிட.. ஆனால் அவனை வாழ்க்கை முழுவதும் தன் காலடியிலேயே விழ வைக்க வேண்டும் என்று ஆசை இன்னும் அதிகமாகியது.. சொல்ல போனால் வெறி என்றே சொல்லலாம்.. “அட பேபி நம்ம பேசாம கல்யாணம் பண்ணிக்கலாமா..” என்று அவள் தன்னை அவன் நிராகரிக்கவே மாட்டான் என்ற தைரியத்தில் கூற அதில் ஏதோ ஜோக்கைக் கேட்டு அது போல “ஹா ஹா ஹா ஹா” என்று சத்தமாக சிரித்தவனோ.. “மேரேஜா.. யாரு உன்னையா.. நானா..”என்று நக்கலாக கேட்டவன்.. “ஹாஹா குட் சோக் நவ்யா..”என்றான் அவன்.. அதில் இன்னும் சினம் கொண்டவளோ.. “ஏன் எனக்கு என்ன குறை..”என்று கேட்க அதில் ஒற்றை புருவத்தை தன் ஒற்றை விரல் கொண்டு வருடியவன்.. “ம்ச் குறைய விடு.. நீ என்ன நெனச்சிட்டு இருக்க என்னைப்பத்தி.. ம்ச் ஒரு நாள் நைட் டின்னர் வெளியில சாப்பிடலாம் டின்னருக்காக ஒரு சமயக்காரனையே வீட்டில் கொண்டு வந்து வைக்கிற அளவுக்கு நான் பைத்தியக்காரன் கிடையாது.. என்ன பொறுத்த வரைக்கும் நீ ஒன் டே டிபன் அவ்வளவுதான்.. நீ இல்லனா எனக்கு வேற ஒருத்தி..” என்று கூற அவனின் பேச்சில் அதிர்ந்து போனவளாக அவனை புரியாமல் பார்த்தவாறே “அப்போ நீ என்னை அப்படித்தான் நினைக்கிறியா..” என்றாள் ஷாக்காக “ம்ச் இனி அப்படி கூட நினைக்க கூடாதுன்னு நினைக்கிறேன்..”என்று அசால்ட்டாக கூறியவன் வேகமாக தன்னுடைய பாக்கெட்டில் இருந்து செக் புக் ஒன்றை எடுத்து அதில் ஏதோ ஃபில் செய்து அவளின் முகத்தில் விட்டெறிந்தவன்.. “இதுவரைக்கும் எனக்கு கம்பெனி கொடுத்ததுக்கான கிஃப்ட்.. அவ்வளவு தான் உனக்கும் எனக்குமான கனேக்ஷன்.. இதுவே நீ என்னை பாக்குறது கடைசியா இருக்கனும்.. இனி என்ன காண்டாக்ட் பண்ணனும்னு நினைக்காத.. மீறி பண்ணுன..”என்று அதட்டலாக கர்ஜித்தவனோ.. அவளின் காதிற்கு அருகில் நெருங்கி “தொலைச்சு கட்டிடுவேன்..” என்று உருமியவன் நேராக கிஷன் இருந்த இடத்தை நோக்கி சென்று விட்டான். அந்த யுவதியும் போகுமா அவனையே அதிர்வாகவும், மிரட்சியாகவும் பார்த்தவளுக்கு “ம்ச்.. வாயை மூடிட்டு கம்முனு இருந்திருக்கலாம்.. மேரேஜ் அது இதுனு பேசி அவன கோவப்படுத்திட்டோம்.. ம்ச் இனி இவன் பக்கத்துல கூட நெருங்க முடியாது..”என்று புலம்பியவள்… “ம்கூம்…”என்று பெருமூச்சை வெளியிட்டவாறே.. “இவன மாதிரியான ஹேண்ட்ஸமே இனி நமக்கு கிடைக்கப் போறது கிடையாது.. இவன் கிட்ட மட்டும் தான் என்னோட வாழ்க்கையோட மொத்த சாடிஸ்பெக்ஷனும் அடங்கி இருந்துச்சு.. ஆனா இவன் என்னடானா என்னை வேணாம்னு தூக்கி போட்டுட்டு போயிட்டான்..” என்று கை காலை உதைத்தவள் அங்கிருந்து சென்று விட்டாள்.. வேறு ஆளை பிடிப்பதற்கு.. அவிரனும் நேராக கோபத்துடன் வந்து கிஷனின் அருகில் இருந்த சேரில் உட்கார்ந்து உட்கார.. கிஷன் அவனை திரும்பியும் பார்க்கவில்லை.. “ம்ச் பேரர்.. ஒரு ஸ்காட்ச்..” என்று கம்பீரக் குரலில் அலுத்தவாறே கூற “ஓகே சார்..” என்று பணிவாக தலையாட்டியவாறு அவனுக்கு மிகவும் விருப்பமான ஸ்காட்சை ஊற்றிக் கொடுத்தான். அதை வாங்கிக் கப் என்று ஒரே கல்ப்பில் அடித்தவனுக்கு ஏனோ கடுப்பாக இருந்தது நன்றாகத்தான் அனைத்தும் போய்க்கொண்டிருந்தது அவள் கூறிய ஒற்றை வார்த்தையை அவனே. கடுப்பேற்றியிருந்தது.. அவன் எந்த ரிலேஷன்ஷிப்பிற்குள் நுழைவதற்கும் தயாராக இல்லை.. அப்படி நினைப்பவனுக்கு நிறைய சொந்தங்கள் இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டால் அதுதான் தவறு.. ஒரு குறிப்பிட்ட வயது வரை அவிரன் அனாதை ஆசிரமத்தில் தான் வளர்ந்தான். அவன் பிறந்ததில் இருந்து ஒரு பத்து வயது வரை அவன் ஆசிரமத்தில் தான் வளர்ந்து வந்தான்.. அவிரன் இரு உண்மையான காதலர்களின் காதலுக்கு பிறந்தவன் அல்ல.. காதல் என்று நினைத்துக் கொண்டு மோகத்தில் பழகியவர்களுக்கு சாபமாக கிடைத்தவன் தான் அவன். அவன் பிறந்து சிறிது நேரத்திலேயே உடல் முழுவதும் ரத்தத்துடன் அனாதை ஆசிரமத்தின் வாசலில் விடப்பட்டவன் தான் அவன். அதற்குப் பிறகு ஒரு பத்து வயது வரை அந்த அனாதை ஆசிரமத்தில் தான் அவன் வளர்ந்து வந்தான். அதன் பிறகு ஒரு. கோடீஸ்வர குடும்பம் வந்து அவனை தத்து எடுத்துக் கொண்டது.. அவர்களுக்கோ இவன் வேண்டாத பிள்ளையாகி தான் போனான். அவர்களுக்கு வேறு குழந்தை இல்லை அது வேறு விடயம்.. அதனால் தான் இவனை தத்தெடுத்துக்கொண்டார்கள்.. அவன் மீது பாசம் என்பது அவர்களுக்கு எப்போதும் வந்ததில்லை. ஆனால் அவர்களுக்கு ஏதோ தங்களுடைய சொத்திற்கு ஒரு வாரிசை தேடுகிறார்கள் தவிர தங்கள் அன்பையும், பாசத்தையும் கொட்டி வளர்க்க ஒரு மகனை தேடவில்லை. அவனை அழைத்து சென்றதிலிருந்து அவனுக்கு செல்வ நிலையிலும், உடையும் ,உணவிலும் எந்த குறையும் அவர்கள் வைத்ததில்லை.. ஆனால் அவன் மிகவும் எதிர்பார்த்த அந்த அன்பு அது மட்டும் அவனுக்கு கிடைக்கவே இல்லை.. அவன் இஷ்டத்திற்கு செலவு செய்ய கட்டு கட்டாக பணம் கொடுத்தார்கள். அவனும் அவர்களிடம் அன்பை தேடுவதற்கு பதிலாக பணத்தை தேட ஆரம்பித்துவிட்டான். அவனின் 15 வயதில் மோட்டார் சைக்கிளும், 18 வயதில் காரும், 20 வயதில் கம்பெனியை அவன் கையில் ஒப்படைத்தும் அவனுக்கு அனைத்துமே வயதுக்கு மீறிய பொருளைத் தான் அவர்கள் இருவரும் கொடுத்தார்கள். அவனுக்கும் ஒரு வகையில் அவர்கள் இருவரும் மீது எந்த பாசமும் இல்லை.. தான் கேட்பதெல்லாம் கிடைக்கின்றது அதுவே தனக்கு போதும் என்று நிலையில் தான் அவனும் இருந்தான். அவனுக்கு மிகவும் பிடித்த அட்வெர்டைஸிங்கில் டிகிரியை ஃபாரினில் சென்று படித்தவன்.. மேலும் அதற்கு தேவையான மேலும் மாஸ்டர் டிகிரியை முடித்துக் கொண்டே இந்தியாவிற்கு வந்தான். இதற்கிடையில் அவனை தத்தெடுத்த இரு பெற்றோர்களும் அவர்களுக்கு வயதான பிறகு அவனிடம் பாசத்தை எதிர்பார்க்க அதற்கு பின் அது அவனிடம் கிடைக்குமா என்ன.. அவனுக்கு வேண்டிய வயதில் கிடைக்காத அன்பு அவர்களுக்கு வேண்டிய வயதில் கிடைக்காமல் போனது. “என்னப்பா இது எப்ப பார்த்தாலும் வெளியிலேயே போயிட்டு இருக்க.. கொஞ்சம் எங்களோடோ இருந்து நேரம் செலவளிக்கலாம்ல..” என்று அவனின் பெற்றோர்கள் அவனிடம் கேட்க ஆரம்பிக்க.. அவனோ அவர்களை விசித்திரமாக பார்த்தவன்.. “ம்ச் என்ன நீங்க ரொம்ப டிஃபரண்டா பேசுறீங்க.. இதுவரைக்கும் இப்டி எல்லாம் நீங்க பேசுனதே கிடையாதே.. எனக்கு தேவைப்படுற பணம் கிடைக்குது தான் ஜாலியா வெளியில சுத்துறேன் நீங்களும் எப்போதும் அப்படித்தான் இருப்பீங்க.. இவர் பாட்டுக்கு பிசினஸ் பிஸினஸ்னு சுத்துவாறு.. நீங்க க்ளப் க்ளப்பா போவீங்க. இப்போ நான் எனக்கு இஷ்டப்படி செஞ்சிட்டு இருக்கேன்.. புதுசா வந்து அன்பு காட்டிடா நான் எப்படி என்னை சேஞ்ச் பண்ணிக்க முடியும்…”என்று தோள்களை குலுக்கியவாறெ கேட்க அவனின் பேச்சி அவர்கள் இருவரையும் தலைக்குனிய செய்தது.. அவன் கூறுவதும் சரிதானே.. அவர்கள் அவனுக்கு தேவைப்படும்போது அன்பை தரவில்லை.. ஆனால் இப்போது அவர்கள் கேட்டால் அவன் என்ன தான் செய்வான்.. அவர்கள் இருவரும் செய்த தவறு அப்போதுதான் பெரிய தவறாகவே தெரிந்தது. “அப்போ எங்களுக்கு ஒன்னும் தெரியலப்பா ஆனா இப்பதான் எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப லோன்லியா இருக்கு.. கொஞ்சம் எங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணேன்..” என்று இருவரும் வந்து கேட்க அவனோ முடியவே முடியாது என்று தலையாட்டியவன்.. “ம்ச் எனக்கு வேற வேலை இருக்கு..” என்று அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான். அவர்களோ அவனிடம் பேசி பேசி சோர்ந்து போனவர்கள் ஒரு கட்டத்தில் ஒருவருக்குப் பின் ஒருவராக இயற்கை எய்து விட்டனர்.. இருவரும் இறப்பதற்கு முன்பு கூட தங்களுடைய அனைத்து சொத்தையும் அவன் மீது எழுதி வைக்க.. அவனோ அவர்கள் சொத்தை இன்று வரை தீண்டவே இல்லை. அவர்கள அவனுக்கு கொடுத்த வீட்டினை மட்டும் தான் இப்போது அவன் உபயோகிக்கிறான்..