சஞ்சனா முன்னாள் நின்றிருந்த அபின்ஞான், “அத்த… உனக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க… இது எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் தான்… உனக்கு பிடிக்குமான்னு பாரு… பிடிச்சிருந்தா பேசி முடிச்சிடலாம்…” என்று தன் அலைபேசியில் இருந்த ஒரு பையனின் புகைப்படத்தை காட்டி கூறிக் கொண்டிருக்க,
ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த மகிமாவுக்கோ கோபம் பொத்திக் கொண்டு வந்தது. “நாசமா போனவன் குட்டய குழப்ப பார்க்குறான்” என நினைத்துக் கொண்டாள்.
சஞ்சனாவோ கைகளை பிசைந்து படி நின்றிருக்க, “எதுக்குடி… புட்டு விக்கின மாதிரி வாய தொறக்காம இருக்க… ஏதாவது பேசுடி” என்று மகிமா அவளை மனதிற்குள் வைது கொண்டிருக்க…
“மகி நீ வெளியே இருக்கிறது எனக்கு தெரியும்… உள்ள வா…” என்று அறைக்குள் இருந்த படியே அபின்ஞான் சத்தமாக சொல்ல…
“ஆத்தி… பார்த்துட்டானா…” என நினைத்தவள் சமாளிப்பாக சிரித்தபடி “இப்பதான் கதவ தட்ட வந்தேன்… அதுக்குள்ள என்ன பார்த்துட்டீங்க” என்றாள் திரு திருவென முழித்தபடி…
அவளை அழுத்தமாக பார்த்தவன், “சஞ்சனா கல்யாண விஷயம் தான் பேசிட்டு இருந்தோம்… எனக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சி… இனி அவள இப்படியே வெச்சு பார்த்துட்டு இருக்க முடியாது” என்று கூற,
“மல மாடு… மல மாடு… அது உனக்கு இப்ப வாடா தெரியுது… பண்றதெல்லாம் சிறப்பா பண்ணிட்டு இப்ப அக்கற உள்ளவன் மாதிரி என்னமா நடிக்கிறான்…” என நினைத்துக் கொண்டவள், அவன் பின்னாலிருந்து சஞ்சனாவை பார்த்து, “திருமணம் வேண்டாம்” என்று கூறும் படி சைகை செய்தாள்…
“நான் கேட்கிறது உனக்கு சங்கடமா இருக்கும்… நானே அடுத்த கட்ட விஷயங்கள பாக்குறேன்” என்றவன் விசில் அடித்த படி தன் அறைக்குச் சென்றான்…
அபின்ஞான் சென்றதும் சஞ்சனா அருகே வந்த மகிமா, “மக்கு… மக்கு… வடிகட்டின முட்டாள்” என அவள் தலையில் கொட்டியவள், ” என்கிட்ட மட்டும் வாய் கிழிய பேசு… உன் அத்தான் உனக்கு ஒருத்தனோட கல்யாணம் பண்ணி வைப்பான்… அவனோட போய் வாழு” என்றவள் அவள் பேச வந்ததை கேட்காமல் அங்கிருந்து சென்றாள்…
“எல்லாரும் சேர்ந்து என்ன என் தேவ் கிட்ட இருந்து பிரிக்க பார்க்குறீங்களா? இனி நான் இப்படி சைலண்டா இருந்தா சரியே வராது… இனி இந்த ஆட்டத்துக்கு அதிரடிதான் சரி” என நினைத்தவள் வேகமாக தேவ் அறைக்கு முன்னாள் சென்று நின்றவள் தனக்கு இருந்த எல்லா கோபத்தையும் சேர்த்து அவன் அறைக் கதவை பட படவென தட்டினாள்…
“எந்த பைத்தியம் விவஸ்தயே இல்லாம இப்படி கதவை தட்டுது” என நினைத்தபடி கதவை திறந்தான் மகாதேவ்.
சஞ்சனா தான் வெளியே நின்று இருந்தாள் …
“ஓஹ்… இந்தப் பைத்தியமா… இது எதுக்கு நம்மள தேடி வந்திருக்கு” என நினைத்தபடி அவளை புருவம் சுருக்கிப் பார்த்தவன், “என்ன விஷயம்?” என கேட்டான்…
அவனை ஆழ்ந்து பார்த்தபடி, அவன் கண்களுடன் தன் விழிகளை கலக்க விட்டவள்,” ஐ லவ் யூ தேவ்” என்றாள் எடுத்த எடுப்புக்கே…
“ஓஹ்… அப்படியா” என்றவன்அறைக்குள் செல்ல பார்க்க,
“நான் இவன் கிட்ட என் காதல சொன்னா கத சொன்ன மாதிரி கேட்டுட்டு போறான்” என நினைத்தபடி எட்டி அவன் கையைப் பிடித்தவள், “பதில் சொல்லிட்டு போங்க தேவ்” என்றாள்…
“நீ என்ன லவ் பண்ற… ஓகே அது உன் விருப்பம்… அதுல தலயிட எனக்கு எந்த உரிமயும் இல்ல… ஆனா நானும் உன்ன லவ் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லயே” என்று கூற,
சஞ்சனாவுக்கு சப்பென்றாகி விட்டது…
அவனை முறைத்துப் பார்த்தவள், “நான் உன்ன உயிருக்கு உயிரா லவ் பண்றேன் தேவ்” என்றாள் அழுதபடி…
“சரி என்ன லவ் பண்ணு… ஆனா நல்ல மாப்பிள்ளயா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ” என்றான்.
“என்னடா ஆளாளுக்கு என்னோட விளயாட பார்க்குறீங்களா… அதெல்லாம் முடியாது… நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்றாள் விடாப்பிடியாக…
“சும்மா ஏதாவது உளறிட்டு இருக்காம போய் உன் வேலய பாரு” என்று அவன் அவளை விரட்ட பார்க்க,
“என் கூட பழகினா என்ன லவ் பண்ணிடுவேன்னு உனக்கு பயம்… அதுமட்டுமில்லாம அத்தானுக்கு முன்னால என் கூட பழகவும் பயம், அதுக்குத்தானே ஏதேதோ சாக்கு சொல்லிட்டு இருக்க” என்று அவனது வீக் பயிண்ட்டை பார்த்து அடிக்க…
“ஏய் பார்த்து பேசுடி… எனக்கு ஒரு பயம் இல்ல… எனக்கு உன்ன பிடிக்கல… தட்ஸ் ஆல்… இப்போ எனக்குத்தான் சந்தேகமா இருக்கு… என்ன ஒத்துப்பார்க்க சொல்லி உன் அத்தான் உன்ன அனுப்பி வெச்சானா… அதுக்காக தானே வந்து என்னென்னமோ பேசிட்டிருக்க” என்று அவன் கேட்க,
“சும்மா உன்ன மாதிரியே மத்தவங்களயும் நெனச்சி பேசாதே… அத்தானுக்கு பயந்துதானே என் கூட பேசாம இருக்க” என்று அவள் அதிலே நிற்க,
அபின்ஞானுக்கு அவன் பயப்படுகிறான் என்று கூறியதை, அவன் ஈகோவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…
“ஓஹ் எனக்கு பயமா?” என்று நக்கலாக கேட்டவன், “ஒகே டீல்… நான் உன்னோட பழகுறேன்… ஆனா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்றான் ஆரம்பத்திலே உஷாராக…
“அதயும் பார்க்கலாம்டி… நான் ஜெயிச்ச நீ என்ன பண்ணுவ” என்று மகாதேவ் கேட்க,
“இனி உங்க பக்கமே வர மாட்டேன்… அதே மாதிரி அத்தானுக்கு பயந்துட்டு என்கிட்ட பேசாம இருந்தன்னா நீ என்ன கல்யாணம் பண்ணிக்கனும்” என்றாள்.
“நீ அதிலேயே நில்லு” என நினைத்துக்கொண்டவன், “எனக்கும் இந்த டீல் புடிச்சிருக்கு” என்றவன்… “சரி… நாம நாளையிலிருந்து பழக ஆரம்பிக்கலாம்” என்றான் ஸ்டைலாக கதவில் சாய்ந்து நின்றபடி…
“எல்லாத்தையும் டீல்லாவா பார்க்குற… இந்த டீல் தான் நீ போட்ற, முதலும் கடைசியுமான டீலா இருக்கும்” என நினைத்தபடி அங்கிருந்து சென்றாள் சஞ்சனா…
சஞ்சனா உடன் பேசி விட்டு வந்த அபின்ஞான் தன் வேலைகளை தன் பாட்டுக்கு மகிமாவை கண்டு கொள்ளாது செய்து கொண்டிருக்க, அவனருகே சென்றமர்ந்தவள், “நீங்க எதுக்காக பசிபிக் ஒஷனுக்கு போறீங்க” என்று கேட்க…
“உன் அண்ணா எதுக்காக வந்தானோ நானும் அதுக்குத்தான் வந்திருக்கேன்… ஏன் தேவ் உன் கிட்ட சொல்லலயா?” என்று கேட்க,
“அவனுக்கு தொழில் விஷயத்துல நான் தலையிடறது பிடிக்காது… அதனால அது சம்பந்தமா நானும் அவன் கிட்ட எதுவும் கேட்க மாட்டேன்…” என்றாள் தோள்களை குலுக்கிய படி…
“ஓஹோ…” என்றவன் தன் கையில் இருந்த புத்தகத்தை படிக்க… அவன் அருகில் இருந்த ஃபைலில் உள்ளதை எட்டிப் பார்த்தபடி நீங்களும் பசிபிக் ஓஷன்ல ரிசெர்ச் பண்ணிட்டு இருக்கீங்களா?” என்று கேட்க…
அவள் அருகில் இருந்த ஃபைலை பட்டென்று மூடியவன், “மூடிக்கிட்டு போய் படு… சும்மா தொன தொனன்னு பேசிட்டு இருக்காம” என்று அவள் மேல் எரிந்து விழ…
“ரொம்ப தான் பண்றான் காலைல கெஞ்சிட்டு… இப்ப பேசினா கணக்கே எடுக்க மாட்டான்” என்று நினைத்துக் கொண்டு சத்தம் இல்லாமல் படுத்துக் கொண்டாள்…
விடியற்காலையில் எழுந்தவள் தயாராகிக் கொண்டு சஞ்சனாவை தேடி செல்ல, அவளோ அறையில் இருக்கவில்லை.
“காலையிலே இவ எங்க போனா?” என்று யோசித்தபடி அவளைத் தேடிச் செல்ல, அவளுடன் வந்து இணைந்து கொண்ட அபின்ஞான், “யார தேட்ற” என்று கேட்டான் கூலாக சிரித்தபடி…
“இவன் பம்முறது சரியா படலயே… ஏதோ பண்றான்… ஆனா என்னன்னு தான் புரியல” என நினைத்தபடி சஞ்சனாவை தேடிச்சென்றாள்…
எல்லா இடமும் தேடி விட்டாள்… ஆண்கள் ஜிம்மை தவிர…
அங்கே சென்றவளது கண்களோ அதிர்ந்து விரிந்து கொண்டன…
ஏனென்றால் மகாதேவ் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க, அங்கிருந்த இருக்கை அமர்ந்து, முகத்தில் கைகுற்றி அவனை ரசித்துக்கொண்டிருந்தாள் சஞ்சனா…
“அதுக்குள்ள கரெக்ட் பண்ணிட்டாளா… ஆனா நம்ம ஆளு லேசுல மடங்க மாட்டானே” என்று நினைத்தபடி அவள் அருகே வந்து கொண்டிருந்த அபின்ஞானை பார்த்தாள்…
அவனோ கூலாகவே சஞ்சனா அருகே செல்ல, இப்போது பயத்துடன் எழுந்து கொள்வது சஞ்சனாவின் முறையாகிப்போனது…
“நீ இங்கு என்ன பண்ற… உன் ரூமுக்கு போ” என்றபடி சஞ்சனாவின் கையை பிடித்து தன்னருகே அபின்ஞான் இழுக்க…
சஞ்சனாவின் மற்றய கையைப் பிடித்து அவளால் அசைய முடியாதவாரு தன் அருகே நிறுத்திக் கொண்டான் மகாதேவ்…
“டேய் மரியாதையா அவ கைய விடுடா” என்றான் அபின்ஞான்…
“விட முடியாதுடா… அவ என் கூடத்தான் இருப்பா” என்றான் மகாதேவ்…
“உன்கிட்ட ஒரு செகண்ட் கூட அவள விட மாட்டேன்” என்று அபின்ஞான் கூற,
அவனை முறைத்துப் பார்த்த மகாதேவ், “ஒரு செகண்ட் என்னடா என் லைப் முழுக்க அவள என் கூடவே வெச்சிருப்பேன்…. முடிஞ்சா தடுத்து பாருடா” என்று எகிறக் கொண்டுவர…
“அட… பையன் விழுந்துட்டான்… ஆனா சரியா தான் சொல்லியிருக்கான்” என்று மகிமா மனதுக்குள் கவுண்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“சஞ்சனா… நான் சொன்னத கேப்பா” என்று உறுதியுடன் சொன்னவன், “வா.. நாம போகலாம்” என்று அவளைப் பார்த்து கூப்பிட்டான் அபின்ஞான்.
அவனை தயக்கமாக பார்த்தவள், “அத்தான் நான் தேவ் கூடவே இருக்கேன்” என்று கூற…
“லாஸ்ட்டா கேட்கிறேன், உன்னால வர முடியுமா? முடியாதா” என்று கேட்டான் அபின்ஞான்.
சஞ்சனாவும் உறுதியாக முடியாது என்று கூறி விட அபின்ஞானை பார்த்து கண் சிமிட்டிய மகாதேவ், “நீ வா சஞ்சு… நாம போகலாம்… இங்க சரியான டிஸ்டர்பன்ஸ் நமக்கு” என்று அபின்ஞான் பார்ப்பதற்காகவே அவள் தோல் மேல் கையை போட்டுக் கொண்டு சென்றான்…
அவன் போகும் வரை இறுகிப்போயிருந்த அபின்ஞானின் முகம் இப்போது சாதாரணமாக மாறியது…
அவனையே ஊன்றி கவனித்துக் கொண்டிருந்த மகிமாவின் முகமோ இப்போது சுருங்கியது…
“இவனுக்கு கோபம் வந்த மாதிரி விளங்களயே… நடிக்கிறானா? இல்லன்னா ஏதாவது பிளேன் போட்டிருக்கானா?” என்று அவள் தான் தலையடித்துக் கொண்டு யோசிக்க ஆரம்பம்பித்தாள்…
மகிமாவுக்கு சஞ்சனா இல்லாமல் அலுப்பாக இருந்தது…
கடந்த சில நாட்கள் முழுக்க முழுக்க அவளுடன் அல்லவா நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தாள்…
சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள் மகிமா…
அபின்ஞானோ எதோ குறிப்புக்கள் எடுத்துக் கொண்டிருந்தான்…
அதை முடித்துவிட்டு அவள் அருகே அமர்ந்தவன், “ஸ்விம்மிங் பண்ண வரியா?” என்று கேட்டான்…
“நீங்க போங்க நான் இப்ப வரல” என்றாள் சோபாவில் சாய்ந்து அமர்ந்தபடி.
“உன் கூட்டாளி தான் உன்ன விட்டுட்டு போய்ட்டாளே… இனி எப்படி அவளோட சேர்ந்து ஸ்வீம் பண்ணுவ…” என்று இதழ்களுக்குள் சிரித்தபடி கேட்டவன், அவளை நோக்கி குனிய…
அவனை எரிச்சலாக பார்த்தவள், “இப்போ என்ன சொல்ல வர்றீங்க” என்று கேட்டு கொண்டிருந்தவளது பேச்சோ இடையில் நிற்க… அவன் கழுத்தை பிடிமானமில்லாமல் இறுக்கப் பற்றிக் கொண்டவள், “டேய் இப்ப எதுக்கு என்ன தூக்கின… என்ன கீழ விடுடா” என்று அவள் அவன் கைகளில் அவள் திமிர… அவள் விழுந்து விடமால் அவள் இடையில் அழுத்தத்தை கூட்டியவன், “ஸ்விம் பண்ண வரேன்னு சொல்லு… இப்பவே உன்ன கீழ விட்றேன்” என்றான்.
“முடியாது… எனக்கு இப்ப ஸ்விம் பண்ற மூட் இல்ல” என்று அவள் கத்தியதை எல்லாம் அவன் கண்டு கொள்ளவே இல்லை…
“டேய் விடுடா… மலமாடு மாதிரி வளர்ந்து இருக்க… நான் சொல்றது புரியலயா” என்று அவன் வெற்றுமார்பில் அடித்தபடி கூறினாள் மகிமா…
அவனுக்கோ அந்த அடியெல்லாம் பொருட்டே இல்லை…
அவனோ அவன் வேலயிலே கண்ணாக இருக்க… கோபத்தில் அவன் கழுத்தை அவள் ஊன்றிக் கடித்து வைக்க, வலியில் “ராட்சஷி” என கத்தியவன் அப்படியே அவளை நீச்சல் தடாகத்தினுள் போட்டவன், அடுத்த கணமே அவனும் டவ் அடித்து நீரினுல் பாய்ந்தான்…
நீரில் மூழ்கி எழுந்தவன் தன் தலையில் இருந்து வடிந்த தண்ணீரை ஒற்றை கையால் துடைத்த படி அவளை பார்க்க,
அவளோ அவனை உக்கிரமாக முறைத்த படி நின்றிருந்தாள்.
மகிமா பழுப்பு நிற டி-ஷர்ட்டும்… ட்ரவுசரும் அணிந்திருந்தாள்…
அவள் டி-ஷர்ட் நீரில் நனைந்ததால் அவள் மேனியுடன் ஒட்டி அவள் அழகை அவனுக்கு விருந்தாக்கி கொண்டிருந்தது…
அவளைப் பார்த்து எச்சிலை விளங்கிக் கொண்டவனுக்கு, தன் கண்ணை அவளிடம் இருந்து அகற்றத்தான் முடியவில்லை…
அவன் பார்வை மாற்றத்தை அறியாதவள் அவன் அருகே வந்து, “நனைய கூடாதுன்னு பார்த்தேன்… முழுசா நனஞ்ச அப்புறம் முக்காடு எதுக்கு?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்டவள், “நாம ஸ்விம்மிங் காம்பெடிஷன் ஒன்னு வைப்போமா” என்று ஆர்வமாக கேட்க,
பெருமூச்சுடன் அவளைப் பார்த்து, “ம்ம் ஒகே… நான் ஜெயிச்சா என்ன தருவ” என கண்கள் மின்ன கேட்டான்.
“என்ன வேணும்” என்று அவன் புரியாது கேட்டாள் மகிமா.
“ஜெயிச்சுட்டு சொல்றேன்” என்றான் அவன்.
“அவ்ளோ நம்பிக்கையா… பார்க்கலாம் யாரு ஜெயிக்கிறாங்க” என்று உதடு சுழித்துக் கூறியவள், அவன் கேட்க போவதை அறியாது “சரி” என்று சொல்லியவள், தான் ஜெயித்தால் டிவோஸ் கேட்க நினைத்திருந்தாள்…