*°•°○ விஷ்வ மித்ரன் ○°•°* ~~~~~~~~~~~~~~~~~~~~ அத்தியாயம் 13 தன்னவளின் ஃபோட்டோவை மார்போடு அணைத்துக் கொண்ட மித்ரன் எதிரில் நிற்பவளைக் கண்டு “அம்முலு” என்று இன்பமாய் அதிர்ந்து போனான். கதவில் சாய்ந்து கைகளை கட்டிக் கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரனின் இதய நிலவானவள்! அம்முலுவாய் அவனுள் பதிந்து விட்ட அக்ஷரா! வெகு நிதானமாக அவள் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து வர இவனுக்கோ இதயம் நொடிக்கு பல தரம் […]
12. விஷ்வ மித்ரன்
💙 விஷ்வ மித்ரன் 💙 💙 அத்தியாயம் 12 “ராட்சஸி! அடியே முட்ட போண்டா. கதவ திற டி” என்று உற்சாகம் பொங்க அக்ஷராவின் அறைக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தான் விஷ்வா. சற்று நேரத்தின் பின் கதவு திறந்து கொள்ள “ஹே அக்ஷூஊஊ” என கத்திக் கொண்டே அவள் கைகளைப் பிடித்து சுற்ற, “டேய் விடு டா. தலை சுத்துது எரும” என அலறியவளுக்கு அவனது சந்தோஷத்தை நினைத்து மகிழ்வதா, இல்லை அருள்
11. விஷ்வ மித்ரன்
விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 11 “திருடி திருடி” என்று கத்திய விஷ்வாவைப் பார்த்து பயந்து, தானும் “அய்யய்யோ திருடன்” என வைஷு அலற, விழி பிதுங்கிப் போனது என்னவோ அவன் தான். “யாராவது வாங்க. திருடன் நம்ம வீட்டுக்குள்ள நுழையப் பார்க்குறான்” கத்தியபடி ஓடப் பார்த்தவளின் கையை எட்டிப் பிடித்து நிறுத்திய விஷ்வா “ஏய் லூசு திருடி” என்று அழைத்தான். ஏகத்துக்கும் எகிற “நான் திருடியா
110. ஜீவனின் ஜனனம் நீ…!! (எபிலாக்)
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 110 (எபிலாக்) ஐந்து வருடங்கள் கழித்து, அழகான அந்திப் பொழுதில், ஆகாசமெங்கும் பட்சிகள் கீச்சிட்டுப் பறந்து செல்ல, அவற்றைப் பார்த்து அலை வீசி ஆர்ப்பரித்தது கடல். காதல் கதை பேசும் காதல் கிளிகளைப் பார்த்தவாறு தன்னவள் கை கோர்த்து நடந்தான் சத்யா. அவன் கண்கள் தன் கண்மணியை நோக்க, “என்னங்க?” எனக் கேட்டாள் காரிகை. “இத்தனை வருஷம் கழிச்சும் எப்படி நீ அழகா
110. ஜீவனின் ஜனனம் நீ…!! (எபிலாக்) Read More »
109. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 109 (இறுதி அத்தியாயம்) காதல்! காதல் பெருங்காதலாகிப் பெருகி வழிந்து சத்ய ஜீவா மற்றும் ஜனனியின் வாழ்வில் புது அத்தியாயத்தை எழுதி இருந்தது. ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் சத்யாவின் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கும் சொந்த பந்தங்கள் நிறைந்து வழிந்தனர். மகிழ்வில் பூரித்துப் போயிருந்த மேகலை ஓடியாடி வேலை செய்ய, “எங்க அம்மாவுக்கு சின்ன ஆள்னு நெனப்பு. எப்படி ஓடியாடி வேலை செய்றாங்க
109. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »
108. ஜீவனின் ஜனனம் நீ.
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 108 “யுகி! நான் அழகா இருக்கேனா?” தனது டிஷர்ட்டை சரி செய்தவாறு கேட்டான் அகி. “இப்படி கேட்டா இல்லன்னா சொல்ல முடியும். ஆமா அழகாத் தான் இருக்க” என்றவாறு முடியைச் சீவினான் யுகி. “அவன் எவ்ளோ ஆசையா கேட்டான்? அதுக்கு இப்படியா பதில் சொல்லுவ?” அண்ணன் மகனின் தலையில் தட்டினான் தேவன். “நான் அவன் கூட கோவமா இருக்கேன் சித்தா. என் முடியைக்
108. ஜீவனின் ஜனனம் நீ. Read More »
107. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 107 அறையினுள் வந்த வினிதாவின் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி பக்கமாக வைத்து விட்டு அவளைத் தன்னருகே அமர வைத்தான் தேவன். அவளின் கையைப் பிடித்தவன், அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, “என்ன தேவ்?” கேள்வியாக அவன் முகம் பார்த்தாள் பாவை. “இல்லடி என்னால நம்பவே முடியல. உன்னைப் பிரிந்து வாழ்ந்த அந்த டைம்ல ரொம்பவே உடைஞ்சு போயிருந்தேன். என்
107. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »
106. ஜீவனின் ஜனனம் நீ
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 106 ‘வெடிங் வேர்ஷன்’ திருமண மண்டபம் மங்களகரமாக விளங்கிற்று. எங்கும் தோரணங்கள் ஜெகஜோதியாகப் பளபளக்க, உறவுகளின் வருகையில் அவ்விடம் களைகட்டி இருந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல. இன்று இம்மண்டபத்தில் மூன்று திருமணங்கள் நடைபெறுகின்றன என்றால் சும்மாவா? மேளதாளங்கள் செவியை நிறைத்தன. அழகாக அலங்கரிக்கப்பட்ட மலர்ப்பதாகையில் மூன்று ஜோடியின் பெயர்களும் எழுதப்பட்டு இருந்தன. தேவன் வெட்ஸ் வினிதா ரூபன் வெட்ஸ் மகிஷா கார்த்திக் வெட்ஸ் தன்யா
106. ஜீவனின் ஜனனம் நீ Read More »
105. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 105 கடற்கரையைக் கண்டதும், கொள்ளை இன்பம் பொங்க கை கோர்த்து ஓடினார்கள் சிறுவர்கள். “எப்படி ஓடுறாங்க பாருங்க” என்றபடி நடந்த ஜனனியைப் பார்த்து, “நாமளும் ஓடலாமா?” எனக் கேட்டான் சத்யா. “அச்சோ என்னால ஓட முடியாது” என அவசரமாக மறுக்க, “அகி யுகி வரட்டும். அவங்களை வெச்சு உன்னை இன்னிக்கு ஓட விடுறேன்” என்று அவளின் செல்லமான முறைப்பை வாங்கிக் கொண்டான். “வீடு
105. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »
104. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 104 எழிலழகனுடன் ஹாஸ்பிடல் சென்று வந்தாள் நந்திதா. வீட்டினுள் நுழைந்த நந்திதாவுக்கு கண்கள் அகன்று விரிந்தன. அன்னம்மாளுடன் கதைத்துக் கொண்டிருந்த ஜெயந்தியின் அருகில் மாரிமுத்துவும் அமர்ந்திருந்தாரே. இத்தனைக்கும் அவர் இங்கு வந்ததில்லை. “அப்பா” என்று அழைத்தவாறு செல்ல, “ஓடி வராத புள்ள. வாயும் வயிறுமா இருக்குறப்போ இப்படி பண்ணக் கூடாது” அன்புடன் கடிந்து கொண்டார் மாரிமுத்து. ஆம்! நந்திதா கர்ப்பமாக இருந்தாள். இப்பொழுது
104. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »