என் பிழை நீ

என் பிழை நீ

பிழை – 6 வழக்கமாக வெகு நேரம் அறைக்குள்ளேயே முடங்கி கிடக்கும் முத்துலட்சுமிக்கு ஏனோ இனியாள் வந்த பிறகு புத்துணர்ச்சி கிடைத்தது போல் ஆகிவிட்டது. முதல் நாளே அவரோடு நன்கு இணைந்து விட்டாள் என்று தான் கூற வேண்டும். அதிலும் அந்த பிஞ்சு குழந்தையை அவர் மடியில் ஏந்தி இருக்கும் பொழுதெல்லாம் மற்ற சிந்தனைகள் அனைத்தும் புறம் தள்ளி வைத்துவிட்டு ஏதோ புதிதாய் பிறந்ததைப் போன்று உணர்கிறார். தன் மடியில் கிடக்கும் அந்த சிசுவை ஆசையாக வருடிவிட்டவர் […]

என் பிழை நீ Read More »

என் பிழை நீ

பிழை – 5 அவளை அறை நோக்கி அழைத்து வந்தவன், “இந்த ரூம்ல நீங்க ஸ்டே பண்ணிக்கலாம். அம்மாவுக்கு ஏதாவதுனா நீங்க டக்குனு பாத்துக்கலாம் அதான் அம்மாவுக்கு பக்கத்து ரூமை உங்களுக்கு அரேஞ்ச் பண்ணி கொடுத்து இருக்கேன். என்னுடைய ரூம் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருக்கு. ஏதாவது தேவை என்றால் எந்த நேரம் வேணும்னாலும் நீங்க தயங்காம என்கிட்ட கேட்கலாம்”. அவனுக்கு சம்மதமாக தலையசைத்தவள் அறைக்குள் நுழைந்ததும். முதலில் குழந்தைக்கு பசியாற்றினாள். கடந்த சில மாதங்களாக அவளுக்குள் தோன்றும்

என் பிழை நீ Read More »

என்‌ பிழை நீ

பிழை – 4 நேற்று எல்லாம் ரம்யாவின் வாயிலாக இவர்களின் குடும்ப பெருமையை கேட்டவளுக்கு பாரிவேந்தனை தப்பானவன் என்று சந்தேகப்பட துளியும் தோன்றவில்லை. தான் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் கடவுள் தனக்கு நல்ல வழியை காட்டுகிறார் என்று எண்ணியவள் ஆச்சரியமாக, “முத்துலட்சுமி மேடமையா பாத்துக்கணும்?” என்றாள் விழி விரித்து. “ம்ம்” என்றவனின் இதயமோ வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. அவளும் இப்போதைய சூழ்நிலையில் குழந்தையுடன் எங்கே செல்வது என்று தெரியாமல் தான் இருக்கிறாள். வலிய வந்து இருக்க இடமும்

என்‌ பிழை நீ Read More »

என் பிழை நீ

பிழை – 3 குழந்தையை மீண்டும் தொட்டிலில் போட்டவன் இனியாளின் அருகில் வந்து அவளை பரிசோதித்தான். பல மணி நேரமாக அவளை அறித்துக் கொண்டிருந்த கேள்வியை அவனிடம் கேட்கலாமா வேண்டாமா என்று தடுமாற்றத்தோடு தன் கைகளை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தாள். அவளின் உடல் மொழியை வைத்தே அவள் தன்னிடம் எதுவோ கூற வருவதை யூகித்தவன், “எதுவாயிருந்தாலும் சொல்லுங்க மிஸ்…” என்று இழுத்தவனுக்கு அவள் பெயர் கூட தெரியவில்லை. அந்த காகிதத்தில் தந்தையின் பெயர் மதன் என்று எழுதி

என் பிழை நீ Read More »

என் பிழை நீ!

பிழை – 2 வீட்டுக்கு வந்தவனின் மனமோ ஒரு நிலையிலேயே இல்லை. அவனும் வெகுவாக சிரமப்பட்டு தன் மனதை சமநிலைப்படுத்த முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறான். ஆனால் அவனின் மனம் முழுக்க அவளின் ஆட்சி தானே நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து தன்னை சுத்தப்படுத்தி முடித்ததும் பாரிவேந்தன் செய்யும் முதல் வேலை தன் தாய் முத்துலட்சுமியை காண்பது தான். சமீப காலமாக அதீத உடல் பருமன் காரணமாக அவருக்கு மூட்டு வலி பிரச்சனை இருந்து

என் பிழை நீ! Read More »

என் பிழை நீ!

பிழை – 1 அந்த அந்தி மாலை வேளையோ காரிருள் மேகங்களால் இருள் சூழ்ந்து இரவு வேளை போல் கருமை பூசி கொண்டு காட்சி அளித்தது. சற்று நேரத்தில் அடை மழை வெளுத்து வாங்க போகிறது என்பதற்கு சாட்சியாக.. அங்கே ஜன்னலினோடு வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவனின் இதயமோ வழக்கத்திற்கு மாறாக படபடவென தன் துடிப்பை அதிகரித்திருந்தது. வழக்கமாக எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் கூட அதனை இலகுவாக கையாளும் குணம் கொண்டவனுக்கோ ஏன் என்றே

என் பிழை நீ! Read More »

error: Content is protected !!