இன்னுழவனை பார்த்தவர், “டேய் பேரண்டி நீ டசன் கணக்குல பெத்து போடுவ தான். உன்ன அந்த கணக்குல சேர்த்துக்கலாம் தான். ஆனா…” குரல் இழுக்க
“ஆனா…”
அகரனை அடி முதல் நுனிவரைப் பார்த்து உதட்டை சுழித்தவர் “இவன் கொஞ்சம் டவுட்டு தான் டா… இவன் அதுக்கு சரி பட்டு வரமாட்டான் டா…” என்றார் கேலி பேச்சுடன்.
அகரனோ புருவம் தூக்கி முறைத்தவனாய் “ஏன் ஆத்தா நான் டசம் கணக்குல பெத்து போட மாட்டேனா…?” கேட்ட அவனிடம்,
“ம்க்கு…” என அலுத்துக் கொண்டவர், “எங்க ஒரு முத்தத்துக்கே என் பேத்தி தான் உங்கிட்ட முக்கால தொங்கணும் போல இருக்கு. இதுல நீ டசன் கணக்குல பெத்து போட்டுட்டாலும்…” என அவன் இடுப்பில் ஒரு இடி இடித்துவிட்டு தோட்டத்தை நோக்கி சென்றார் அம்பிகாம்மா.
செல்லும் அவரை பார்த்தவன், “ஆத்தா இதுக்காகவே நான் டசன் கணக்குல பிள்ளைங்கள பெத்து போட்டு உன்னை சுத்தி சுத்தி வர வச்சி என்ன இடிச்சிட்டு போற உன் இடுப்பு எலும்பு முறிக்கல நான் அகரன் இல்லையாக்கும்” என அவர் கேட்கும் வண்ணம் கூச்சலிட்டு அவன் சபதம் கொள்ள…
திரும்பாது கையை உயர்த்தி முடியாது என்ற பாணியில் செய்கை செய்தவர், “நடக்கிற காரியமா இருந்தா சொல்லுடா டேய். இன்னுழவா அவனுக்கு நாலு குச்சி மிட்டாய் வாயில அமுக்கடா. சில்லி தனமா பேசிட்டு சுத்துறான் வெஸ்ட்பாலோ (வேஸ்ட் ஃபெல்லோ)” என்றவராய் சென்றார் அம்பிகாமா.
“இரு… இரு வச்சிக்கிறேன் ஆத்தா ஒன்ன. என்றவன் வர வர ஆத்தாக்கு ஓவர் குசும்பு…” அகரன் நகைத்து கொள்ள இன்னுழவன் மென்புன்னகை சிந்தியவன், “என்னடா அப்பாயின்மென்ட் கிடைச்சுதா?” என்றான் தோளில் கைப்போட்டு நடந்தவனாய்.
அகரனும் அவனுடன் நடந்து பைக்கை ஆன் செய்ய, பின்புறம் அமர்ந்தவனிடம் “ஹிம்… கிடைச்சிருக்குடா பட் டூ வீக் அப்பறமா தான் கிடைச்சிருக்கு. இப்போ கொஞ்சம் பிஸியாமாம். அதுக்கு அடுத்த வீக்ல தான் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து இருக்காங்க” என்றான் பைக்கை செலுத்திய வண்ணம்.
அதைக் கேட்டவனாய் இன்னுழவன் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
நிவர்த்தனன் ஆஸ்திரேலியா பறந்து செல்ல… இரண்டு நாட்களில் வருவதாக கூறிய சோமசுந்தரத்திற்கு திடீர் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டதன் விளைவால் கல்யாணத்திற்கு ஒரு நாள் முன்பாக சென்று கொள்ளலாம் என தீர்வாக சொல்லிவிட்டார் மைதிலி.
கூறிய காலத்தில் வராது போன மாமனை எண்ணி மனம் கேட்காது இன்னுழவனே சோமசுந்தரிடம் அழைத்து பேச… அவரும் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை சொல்லியிருந்தார்.
அதை அவன் புரிந்து கொண்ட போதும் பாவம் கோதாவரி தான் வாடிப்போனார் தம்பியவன் வருகையை ஆதரவாக எதிர்பார்த்தவர்.
ஏன் வரவில்லை என இன்னுழவனிடம் அவர் வினவிய போதும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை மறைத்து கல்யாண வேலை அதான் தாமதம் என மாற்றி கூறி விட்டான் இன்னுழவன். தாயவளின் மனநிலை கருத்தில் கொண்டவனாய்.
தினமும் காலையில் தவறாது இன்னுழவன் அழைக்க, மேக விருஷ்டியும் சந்தோஷத்துடன் அதை ஏற்க… அவனின் காதல் பரிபாஷனைகளும் அவளின் வெளிப்படுத்தா உள் மன காதல் சம்பாஷனைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது தித்திப்பாக நாளுக்கு நாள்.
அனைவரும் அவரவர் வேலைகளில் மூழ்கியிருக்க, எனினும் தவித்துப் போய் இருந்தது என்னவோ மேகவிருஷ்டி தான் மனதளவில்.
தினமும் காலையில் இன்னுழவனிடன் காற்றலையில் பேசும் அந்த ஓரிரு மணித்துளிகள் மனதை இதம் செய்தாலும், அவள் மனம் கவர்ந்தவனின் குரல் இனி கேட்க முடியாது என சிந்தை அவளுக்கு உரைக்க மனமோ மறக்க முடியாது தவிக்க அரும்பாடு பட்டுப்போனது மண நாள் நெருங்க நெருங்க.
மறுநாள் கல்யாணம் என்ற நிலையில் முதல் நாள் இரவே மைதிலியும் சோமசுந்தரமும் வந்து இறங்கி இருந்தனர் கிருஷ்ணகிரியில். மேக விருஷ்டியோ மறுநாள் காலை கடைசி நாள் நிகழ்ச்சியை முடித்த பின்பே வருவேன் என கூறிவிட்டாள்.
கூறினால் என்பதை விட மைதிலியிடம் கெஞ்சினால் என்றே கூறலாம்.
தனியாக அவள் வருவதற்கு மறுப்பு தெரிவித்தவர் பின் அவளின் கெஞ்சுதலில் மனம் உருக… எனினும் ஊர் எல்லையை தாண்டு முன் தங்களின் பாதுகாப்போடு ஊருக்குள் அவள் வரவேண்டும் என கண்டிப்புடன் கூறியிருந்தார். அதுவே நிவர்த்தனனுக்கும்.
சொந்த ஊர் செழிமையும் சொந்த ஊர் காற்றும் பட்டவுடன் சோமசுந்தரத்தின் உயிர் நாடி அனைத்தும் சிலிர்த்தடங்கியது. மைதிலிக்கும் சொந்த ஊரை கண்டவுடன் பரவசம் ஏற்பட்டாலும் மனதுக்குள் பதட்டம் பெருமளவிற்கு குடி கொண்டிருந்தது.
இருவரும் வீட்டு வாசலில் இறங்க அவர்களை இன்முகத்துடன் வரவேற்றார் பழனி. சோமசுந்தரத்தின் வாலிய சிநேகிதன்.
“வாடா சோமு… வாமா… நல்லா இருக்கீங்களா. கல்யாணம்னு சொல்லிட்டு நீங்க ரெண்டு பேரும் வந்து இருக்கீங்க பிள்ளைங்களை யாரும் காணும்” என்றவர் கேள்விக்கு,
“பொண்ணு நாளைக்கு காலைல வேலைய முடிச்சிட்டு வருவாடா. பையன் கல்யாணத்துக்கு கரெக்ட்டா வந்துருவான். ரெண்டு பேருக்கும் கொஞ்சம் வேலை, முடிச்சுட்டு வந்துருவாங்க கல்யாணம் ஏற்பாடு ஆல்ரெடி எல்லாம் முடிஞ்சிடுச்சி தான ” என்று கூறிக்கொண்டே தன் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தார் சோமசுந்தரம் வருடங்கள் கழித்து.
தன் வீட்டை சுற்றிப் பார்த்தவருக்கு மனம் எங்கும் தன் சகோதரியின் நினைவே மையம் கொண்டிருந்தது.
தாயாய் தன்னை கண்டித்து ஓடி ஆடி தூக்கி வளர்த்த வீடு அல்லவா!
“இத்தனை வருஷம் ஆச்சு ண்ணா. ஆனாலும் வீடு இப்பவும் நல்லா மெயின்டெய்ன் பண்ணிட்டு இருக்கீங்க” என பிரம்மிப்போடு அனைத்தையும் சுற்றி பார்த்தவராய் மைதிலி.
“இல்ல தங்கச்சிமா கடந்த 10 வருஷமா என்னால இத மெயின்டெய்ன் பண்ண முடியல. கொஞ்சம் உடம்பு சரியில்லாம போயிருச்சு, ஆனாலும் இதை ஃபுல்லா மெயின்டெயின் பண்ணது உன் மருமகன் இன்னுழவன் தான்.
என்னைக்கா இருந்தாலும் என் மாமாவும் அத்தையும் இந்த ஊருக்கு வருவாங்கனு இந்த வீட்டு பூட்டிக்கிடக்க விடாம சுத்தபத்தமா பாத்துக்க வெச்சது உன் மருமகன் தான். நாள் தவறாம விளக்கு போட்றதுல இருந்து எல்லாம் இந்த வீட்டுல நடக்கும். நீங்க மட்டும் தான் இல்ல” என்றார் கவலையுடன்.
அதைக் கேட்டவுடன் சந்தோஷத்தில் சோமசுந்தரம் உள்ள நெகிழ்ந்தது என்றால் ஆச்சரியத்துடன் பார்த்தார் மைதிலி.
அவர் பார்வையின் அர்த்தம் புரிந்த பழனியோ, “நீ எதுக்கு அப்படி பாக்குறேன்னு எனக்கு புரியுதுமா. அன்றைக்கு நீங்க பார்த்து சந்திச்ச ஊர் கிடையாது மா இப்ப இருக்கிற ஊரும் இந்த ஊர் மக்களும்” என்றவர் மேலும் சோமசுந்தரம் புறம் திரும்பினார்.
“எல்லோருக்குமே பரஸ்பரமா சாதி, மத, பேதம், இல்லா உணர்வுகளையும் உரிமைகளையும் ஏகத்துக்கு விதைச்சிருக்கான் டா உன் மருமகன் இன்னுழவன்” என இன்னுழவனை சில்லாகித்தார் பழனி.
“ரொம்ப சந்தோஷம் அண்ணா, இனி வரக்கூடிய ஜெனரேஷனாவது இந்த ஊர்ல எங்களை மாதிரி கஷ்டப்பட வேண்டாமே. அதுக்கு அந்த குடும்பத்திலிருந்து ஒரு தீர்வு கிடைக்குதுன்னா ரொம்ப சந்தோஷம்” என பெரும் மூச்சு விட்டு அறைக்குள் அடைந்து கொண்டார் மைதிலி.
வழமைப் போல் மறுநாள் காலை வேளைப் பொழுதில் தனது ஓட்டப் பயிற்சி முடித்து செவிவழி வாயிலாக அழைத்திருந்தான் மேக விருஷ்டியினை இன்னுழவன் காற்றலையில்.
“அழகான அருமையான காதல் வணக்கம் ஏஞ்சல்” இன்னுழவன் ஆரம்பிக்க…
மேக விருஷ்டிக்கோ இந்தபுறம் கடைசியாக தான் கேட்கும் அவன் குரல் என தூக்கம் தொண்டையை அடைத்தாலும், எச்சிலை விழுங்கி கடினப்பட்டு தன் வழமை குரல் வளத்தை மீட்டு எடுத்துக் கொண்டு வந்தவள் பேச ஆரம்பித்தாள்.
“ஹலோ… இன்னுழவன் சார். ஹாப்பி மார்னிங்” என்றவளின் குரலில் ஜீவன் இல்லாது அவளின் முதற்கண் வணக்கத்தை வைத்தாள் அவன் பாரா இதழ் கசிந்த புன்னகையோடு.
அவளின் மனமோ அதுவே நீ அவனுக்கு வைக்கும் கடைசி வணக்கம் என உள்ளுக்குள் சஞ்சரித்தது ஆயிரம் முறை.
புருவம் வளைய “ரெயினி ஏஞ்சல் நீ ஓகே தானே. வழக்கமா உங்க குரலில்ல இருக்கிற ஸ்ருதி இல்லையே இன்னைக்கி. உங்க குரல் ரொம்ப தளர்ந்து நீங்க சோர்வா தெரியுது?” என அவளின் குரல் வளத்திலேயே யூகித்து விட்டான் அவள் சரியில்லை என்பதை இன்னுழவன்.
“இல்ல… இல்ல… இன்னுழவன் சார் நான் நல்லா தான் இருக்கேன்” வேகமாக மறுத்துவள், அவனுடன் அதிகமாக பேச முடியாது வார்த்தைகள் திக்குமுக்காட…
“உங்களுக்கு உங்களுக்கு… இன்னைக்கு என்ன பாட்டு வேணும்?” என்றாள் அடுத்த கணம்.
எப்பொழுதும் ஐந்து நிமிடமாவது சிரித்துப் பேசி இறுதியில் பாட்டை கேட்பவள் இன்று எடுத்த இரண்டாம் வார்த்தையிலேயே பாட்டை கேட்டு தன்னுடன் ஆன பேச்சை முறிக்கும் அவளின் மனநிலையை எண்ணியவனுக்கு ஏதேதோ எண்ணங்கள்.
எண்ணங்களின் ஓட்டங்களோடு அவளுக்காக அவன் கேட்கவிருக்கும் பாடலையும் பாடவும் ஆரம்பித்திருந்தான் இன்னுழவன்.
“கடல் கொண்ட
நீளம் கரைந்தாலுமே
உடல் கொண்ட ஜீவன்
ஓய்ந்தாலுமே முடியாது
அண்டம் முடிந்தாலுமே
முடியாது நமது பந்தமே
முடியாது நமது பந்தமே…
மழைக்காற்று
வந்து தமிழ் பேசுமா
மலைச்சாரல் வந்து
இசை பாடுமா
மலரோடு
வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி…”
பாடலின் வரிகளை கேட்ட நொடி விழிகளில் விழுக்கென்று விழிநீர் புரண்டோட…
எச்சிலை கூட்டி விழுங்கியவள், “நீங்க கேட்ட பாடல் இதோ உங்களுக்காக” என கடைசியாக ஒரு முறை இன்னுழவன் என அவனின் நாமத்தை அழுத்தமாக கூறியவள் “குட் பாய் அண்ட், ஐ மிஸ் யூ லாட் இன்னுழவன். நீங்க இன்று போல் எல்லா நாளும் சந்தோசமாவும் நலமுடன் இருக்கணும்” என வாழ்த்தி மறுகணம் அழைப்பை துண்டித்திருந்தாள்.
எப்பொழுதும் இன்னுழவன் சார் என அழைக்கும் அவளின் இன்றைய இன்னுழவன் என்ற உரிமை அழைப்பில் மனம் நெகிழந்தாலும் அவள் கடைசியாக கூறி வைத்த வார்த்தைகளின் அர்த்தத்தை நிதானித்தவனுக்கோ இதயமானது துடிக்க தொடங்கியிருந்தது அதிவேகத்தில்.
மறுபுறம் மேக விருஷ்டியோ வார்த்தைகள் வெளிவராது அவன் கூறிய பாடல் வரிகள் செவிவழியோடு உறவாடி செல்ல மௌனமாய் கரைந்தாள் மேனி குலுங்க ரேடியோ அறைக்குள் அவனுடனான நினைவுகளை புதைத்து மனதிற்கு கடிவாளயிட்டவளாய்.
மேக விருஷ்டியோ நிவர்த்தனன் கேள்வியில் சற்று அதிர்ந்தவள் அதை வெளி காட்டிக் கொள்ளாது, “டேய் எருமை என்னடா சொல்லிக்கிட்டு இருக்க காதல் காலர் அப்டின்னு லூசுத்தனமா உலறிக்கிட்டு இருக்க. நான் உன்கிட்ட கேள்வி கேட்டா, அதுக்கு பதில் சொல்லாம நீ என்கிட்ட இப்படி கேட்டு வைக்கிற” என்றவள் சீற…
அவளோ தனலாய் முறைத்தவள், “அவரு என்னோட ஷோ காலர். ஜஸ்ட் காலர் மட்டும் தான். ஷோல பேசுவாரு தட் சிட். மற்றபடி அவரு யாரு, எங்க இருக்காரு, அவரு கேரக்டர் என்ன, இன்னுழவன் அப்பிடிங்கிற பெயரே ரியல் நேம் தான. இப்பிடி ஏதுமே தெரியாத அவர நான் ஏன்டா காதலிக்கணும். நீயா கற்பனை பண்ணிக்காத. அப்படி இருந்தா நான் உன்கிட்ட சொல்லாம இருப்பேனா” பதில் வினவினாள் ஆவேசமாக.
“அதே மாதிரி தான் அந்த பொண்ணு என்னோட கிரஷ். பட் அவள பாக்கும்போது எனக்குள்ள ஏதோ தோணுது. அது லவ்வான்னு எனக்கு தெரியல. அப்படி இருந்தா என் செல்ல அக்கா உன் கிட்ட சொல்லாம இருப்பேனா” என்றவன் அவள் தோளில் கை போட்டுக் கொண்டான்.
“நீ சொல்லறத வச்சு பார்த்தா சீக்கிரமே அப்ப அந்த பொண்ண நீ லவ் பண்ணிட்டு வந்து நிக்க தான்டா போற” என்றாள் மேக விருஷ்டி ஒரக்கண்ணில் நகைக்க.
“பார்க்காலாம் சிசி, மேபி என்ன மாதிரி நீயும் நிக்கலாம்ல” அவன் புதிராயாய் பேச…
“டேய் கொஞ்ச நாள்ல கலயாணத்த வச்சிகிட்டு, நான் லவ்ன்னு வந்து நின்னா மைதிலி என்ன ஓட விட்டே அடிக்கும் டா…” குலுங்கியவள் நகைத்தாள் மனம் முழுதும் வெறுமையாக.
“டேய் அத நானே நியாபக படுத்திக்க மாட்டேன். இதுல உனக்கு வேற நியாபக படுத்தனுமா போடா…” என அவன் மண்டையை ஆட்டி விட்டு நகர்ந்தாள் மேக விருஷ்டி.
நடக்க விருக்கும் கல்யாணத்தில் துளியும் நாட்டம் இல்லாத செல்லும் தன் சகோதரியினை நினைத்து விரக்தியாய் சிரிக்க மட்டும் தான் முடிந்தது நிவர்த்தனனால்.
இன்னுழவன் தவிர்த்து அனைவரும் டைனிங் டேபிளில் சாப்பாட்டிற்காக அமர்ந்திருக்க பரிமாறிக் கொண்டிருந்தார் கோதாவரி.
சக்திவேல் குரலை செருமியவர், “என்ன இன்னும் உன் பையன் வீட்டுக்கு வரலையா?” கேட்டார் சாப்பிட்டவராய்.
“இல்லங்க இப்ப வரக்கூடிய டைம் தான் இப்ப வந்துருவான்” கோத்தாவரி கூற…
“அவ பையன்ன நீ எதுக்குடா விசாரிக்கிற. ஏண்டி இவள என்ன பார்த்துகிட்டு இருக்க கொஞ்சம் சட்னி வை. எப்ப பார்த்தாலும் நைட் இந்த இட்லியை மட்டுமே எனக்கு தா…” என்றவாரு சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அம்பிகாமா.
அவரை ஏற இறங்க முறைத்த சக்திவேலோ, “அவ பையனா…! ஏன் அவனப் பத்தி கேட்க எனக்கு உரிமை இல்லையா?” காரமாக வந்தது அவர் வார்த்தை.
இம்முறை சக்திவேல் நேர் கொண்டு பார்த்த அம்பிகாமாவோ,
“நான் அவன உன் பையன் இல்லைன்னு சொல்லலப்பா, நீ தான் அவகிட்ட உன் மகன் இன்னும் வரலையான்னு கேட்ட. நீ கேட்ட தோரணைய வச்சு தான் நான் அவன அவ மகன்னு சொன்னேன்,
நீ அவகிட்ட நம்ம பையன் வந்துட்டானா கேட்கலையே… அப்படி கேட்டிருந்தன்னா நான் உன் பையனும் சொல்லி இருப்பேன்” என்றார்.
“என்கிட்ட மட்டும் இப்படி கூட கூட பேசுங்க, ஆனா உங்க பேரன் பண்றது எதையுமே கேட்காதீங்க” சக்திவேல் கோவமாய் சாட…
“என் பேரன் உன்ன விட எல்லா இடத்துலயும் எல்லா விதத்துலயும் சரியா தான் நடந்துகுவான் டா…” என்றவர் பதிலுக்கு விடாது சாடிக் கொண்டிருக்க, இனிதுழனியோ கோத்தாவரியை பார்த்தாள் இருவரையும் சமாளிக்கும் பொருட்டு.
“நீ சும்மா இருடி… நீ கேட்க வேண்டிய கேள்வி தான் நான் கேட்டுட்டு இருக்கேன். அது என்ன எப்ப பாத்தாலும் உன்மகன் உன்மகன். அப்போ இவனுக்கு பிறக்கலையா அவன். இல்ல அவன் வேற யாருக்கும்…”
“அம்மா என்ன பேசுறீங்க நீங்க” என அம்பிகா வார்த்தைக்கு இடை மறித்து கத்தி இருந்தார் சக்திவேல் ஆக்ரோஷமாக.
சரியாக அந்நேரம் வீட்டை அடைந்திருந்தான் இன்னுழவனும். போனில் அகரனுடன் பேசிக்கொண்டு உள்ளே நுழைந்தவனுக்கு சக்திவேலின் சத்தம் வாசல்படியிலேயே காதை கிழித்தது.
“டேய் நான் அப்புறம் பேசுறேன். அப்பத்தாவும் அப்பாவும் ஏதோ உள்ள காமெடி பொங்கல் கிண்டிகிட்டு இருக்காங்க நான் அதை எங்கன்னு பார்த்துட்டு கூப்பிடுறேன்” என அலைபேசி ஊடு கூறியவன், வேகமா உள்ளே நுழைந்திருந்தான்.
“என்னாச்சு அப்பத்தா ஏன் சத்தம் வாசல் வர கேக்குது?” அவ்வளவு நேரம் இலகுவாக பேசிக்கொண்டு வந்தவன் முகமது சக்திவேலை கண்டவுடன் விறைத்தது.
சக்திவேலும் எழுந்து நின்றவர் இன்னுழவனை கண்டு மேலும் ஏதும் பேசாது அமைதியாய் அமர்ந்து கொள்ள, “அந்த பயம் இருக்கட்டும்” என கிளுக்கி சிரித்து வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்ட அம்பிகாமாவோ,
“அது ஒன்னும் இல்லடா பேராண்டி சும்மா நானும், உன் அப்பனும் யார் குரல் ஒசத்தின்னு குரல் கொடுத்து விளையாடிகிட்டு இருந்தோம். நீ போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்” என்றார் சக்திவேலை நக்கலாய் பார்த்த தன் பார்வையை மீட்டு புன்முறுவலுடன் இன்னுழவனிடம்.
அதை கேட்டு அவனும் பெருமூச்சு விட்டவன், “சரி இந்தா… அகரன் உனக்கு மோமோஸ் வாங்கி கொடுத்து விட்டான்” தன் கையில் இருந்த பார்சலை அம்பிகாமா அருகில் வந்து நீட்டி இருந்தான் இன்னுழவன்.
பற்கள் தெரிய வேகமாக அதைப் பெற்றுக் கொண்டவர், “வெஜ் மோமோஸா? இல்ல சிக்கன் மோமோஸாடா?” என்ன கேட்டபடி ஆர்வமாக அதை பிரித்தவர், இந்தாடி இவளே இந்த கல்ல உன் புருஷன் தலையிலேயே சக்திவேல் ஏறெடுத்து முறைக்க…
“சாரி… உன் புருஷன் தட்டுலையே கொட்டு” என அதை எடுத்து வாயில் வைத்தவர் ஒரு கடி கடித்தவாறு, “என்னடா வெஜ் வாங்கி கொடுத்து விட்டு இருக்கான்” என்ற போதும் அதை ருசித்து சாப்பிட தான் செய்தார்.
அப்படியே கோதாவரியையும், இனிதுழனியையும் பார்த்தவர், “அடியேய் ஆளுக்கு ஒன்னு ஒன்னு எடுத்துக்கோங்க. உங்கள பாக்க வச்சு தின்ன அப்பறம் என் வகுத்துக்கு ஏதாவது ஆயிட போகுது” என ஆர்வமாய் சாப்பிட கோதாவரியும், இனிதுழனியும் மென்புன்னகையுடன் தலையில் அடித்துக் கொண்டனர்.
“இந்த நேரம் சிக்கன்” இன்னுழவன் பேச… குறுக்கிட்ட சக்திவேலோ, “ஏன் மா இந்த நேரம் இந்த மாதிரி உணவெல்லாம் சாப்பிட்டா உன் உடம்புக்கு ஏத்துக்குமா. இந்த வயசுல உனக்கு இதெல்லாம் தேவையா?” அவர் பேச்சை ஆரம்பிக்கும் போதே அவ்விடம் விட்டு நகர்ந்திருந்தான் இன்னுழவன்.
“கொடுக்குறத திண்ணட்டு இருக்க வேண்டியது தான இதுல சிக்கனா… ஜொக்கன்னு சொல்லிக்கிட்டு, கண்டவன் எல்லாம் வாங்கி…” என்றவர் பொறிந்து தள்ள…
படியேறி சென்று கொண்டிருந்த இன்னுழவனோ அதைக் கேட்டு விட்டான். “அப்பா…” சட்டென்று திரும்பியன் குரலில் கடுமை நிறைந்திருக்க, அவன் கூர்பார்வையால் அவர் மீது நெருப்பை உமிழ்ந்திருந்தான் ஏகத்திற்கு.
அதில் தடுமாறிய சக்திவேலோ சட்டென்று கையை கழுவி எழுந்து கொள்ள கால்கள் சற்று தடுமாறி விட்டது.
வேகமா இனிதுழனி விழாது தாங்கி பிடிக்க, “பார்த்துடா வயசாகிட்டுப் போகுது இல்ல. பொறுமையா போ. ஏதுக்கும் சுகர், பிபி இருக்கான்னு சோதிச்சிக்கோ. ஒரு தடி வாங்கி பிடிச்சுக்கோ. சக்திவேல் புரியாது பார்க்க, ஏன்னா எப்போதும் பிடிச்சிக்கிட்டு இருக்க முடியாதுல. கோதாவரியை பார்த்தவர் உன் புருஷனுக்கு இனி பத்திய சாப்பாடு போடு” என்றார் எள்ளலாக மோமோஸை ரசித்து சாப்பிட்ட வண்ணம் அம்பிகாமா.
பெருமூச்சு இழுத்து விட்டு சக்திவேல் கடுப்புடன், “என்னமா நான் உன்ன சொன்னா… நீ என்ன சொல்றியா…” என்றவரிடம், “டேய் நிதர்சனத்த சொன்னேன் டா…” என்றார் வாயில் மோமோஸை மென்றவாரு புன்னகை தவழ.
சக்தி வேல் மேலும் ஏதும் பேசாது அனைவரையும் பார்த்து முறைத்து வைத்துவிட்டு நகர, அப்பத்தாவின் பேச்சில் அவ்வளவு நேரம் முகத்தில் இருந்த கடுமை தன்மை மறைய, “ஆனா அப்பத்தா நீ இருக்கியே…” என இதழ்கள் மெல்ல விரிந்து கொள்ள அறைக்குள் சென்று கொண்டான் இன்னுழவன்.
இங்கு எப்படி இருக்க அங்கோ…
சோமசுந்தரம்,மைதிலி, மேக விருஷ்டி, நிவர்த்தனன் உட்பட நால்வரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“மாப்பிள்ளை வீட்ல பேசியாச்சு நெக்ஸ்ட் வீக்கே கல்யாணத்தை வெச்சுக்கலாம் சொல்லிட்டாங்க. அதுக்கு அடுத்த வாரம் ஷாம் லண்டன் கிளம்புறானாமா… அதனால மேகாவையும் ரெடியா இருக்க சொன்னான்.” என ஆரம்பித்தார் சோமசுந்தரம்.
“ரெடியா இருக்க சொன்னானா…” இல்ல சொன்னாங்களாப்பா…?” என கேட்டான் அவரைப் பார்த்து நிவர்த்தனன்.
“ப்ச்… நிவர்த்தனா என்ன இது மரியாதை இல்லாம பேச்சு. அவன், இவன்னு…” எனக் கடிந்து கொண்டாள் மேக விருஷ்டி.
“ஏன் அத நீங்க பார்த்து வச்சிருக்க மாப்பிள்ளையால சொல்ல முடியாதா…” என அடுத்த கேள்வியைத் அவன் தொடுக்க,
“ப்ச்… நிவர்த்தனா நீ என்ன கூட கூட பேசிக்கிட்டு இருக்க. அவன் ரொம்ப பிசியா இருக்கதால வீட்ல சொல்லி சொல்ல சொல்லி இருக்கான், இதுல என்ன தப்பு இருக்கு” என்று குரல் நுழைத்தார் மைதிலி.
“ஓ… அவளுக்கு நிச்சயதார்த்தம் பண்ணி வச்சி ஒரு வருஷம் ஆச்சு. இந்த ஒரு வருஷத்துல ஒரு நாள் கூட அந்த ஷாம்பு பாட்டிலால… நிவர்த்தனா…” மைதிலி கத்த, மேக விருஷ்டி சிரிப்பை அடக்க,
பெருமூச்சு இழுத்து விட்டவன், “சாரிமா… அந்த ஷாமுக்கு இவகிட்ட ஒரு ஹாய் சொல்ல கூட டைம் இல்லையா. ஹாய் சொல்ல கூட டைம் இல்லாதவன் நாளைக்கு கல்யாணம் முடிச்சுட்டு போயி என் அக்காவ எப்படி பார்த்துப்பான்” என்றான் தாடை இறுகியவனாய்.
“அதெல்லாம் நல்லா பாத்துப்பான் நீ கொஞ்ச நேரம் வாய மூடு. கல்யாணம் பண்ணிக்க போற அவளே அமைதியா இருக்கா நீ என்னடா கூட கூட பேசிக்கிட்டு இருக்க” என அவன் வாயை அடைத்தார் மைதிலி.
அவனோ மேக விருஷ்டியை முறைத்து சாப்பாட்டை தொடர…
மேலும் பேசிய மைதிலி, “இந்த கல்யாணம் அப்பா ஊர்ல வச்சி நடத்தணும்னு அப்பா ஆசைப்படுறாரு. இதை மாப்பிள்ள வீட்டிலும் பேசியாச்சு அவங்களும் சம்மதிச்சுட்டாங்க. அதனால அடுத்த வாரம் எல்லாரும் ஊருக்கு கிளம்பற மாதிரி இருக்கும். உங்க ரெண்டு பேரோட வேலைய எப்பிடி ஷெட்யூல் பண்ணனுமோ பாத்துக்கோங்க” என்றார்.
“வாவ்… வாவ்… உங்க விருப்பப்படி மாப்பிள்ளை பார்த்துட்டீங்க. அவர் விருப்பப்படி கல்யாணத்த அவர் ஊர்ல பிக்ஸ் பண்ணிட்டீங்க. ஆனா கல்யாணம் பண்ணிக்க போறவளுக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு ஒரு வார்த்தை நீங்க கேட்டீங்களா” என சாப்பாட்டை இடையில் முறித்து ஆதங்கமாக எழுந்துவிட்டான் நிவர்த்தனன்.
“டேய் நிவர்த்தனா…” என மேக விருஷ்டி அவனை அடக்கியவள், “என்னடா இது அப்பா, அம்மாவ எதிர்த்து பேசிட்டு இருக்க. இப்படித்தான் நான் உன்ன வளர்த்தேனா…?” என சகோதரியானவள் தாயாய் மாறி கண்டிக்க…
“ப்ச்…” என முகம் கோண சலித்துக் கொண்டு பெருமூச்சு இழுத்து விட்டவன், “சாரிக்கா”
“சாரி என்கிட்ட இல்ல அப்பா அம்மாகிட்ட” அவள் திருத்த,
“சாரிப்பா… சாரிமா… அண்ட் நீங்க எல்லாரும் நெக்ஸ்ட் வீக் ஊருக்கு கிளம்புங்க. என்னோட டீன் டாட்டர்க்கு சர்ஜரி இருக்கு. அதனால நான் ஆஸ்திரேலியா போக வேண்டி இருக்கும். அதை முடிச்சிட்டு நான் டைரக்ட்டா ஊருக்கு வந்துடறேன்” என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்.
செல்லும் அவனை வெறித்து பார்த்து அவ்விடம் விட்டு நகர்ந்தாள் மேக விருஷ்டியும். பின் சோமசுந்தரமும், மைதிலியும் பார்த்துக் கொண்டனர் ஆழ்ந்து ஒருவரை ஒருவர்.
செங்கோதை மணம் வீசும்…
Don’t miss it your Golden comments and likes friend’s
மாலைப் பொழுதானது நெருங்க கண்ணாடி அறையில் தீவிரமாக கணிணியின் முன் இருந்து வேலை செய்து கொண்டிருந்தான், இன்னுழவன்.
“டேய் முடிஞ்சுதா… மணி 5:30” என கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் அகரன்.
“இதோ முடிஞ்சுது” என நிமிராது பதில் அளித்து ஒரு மின்னஞ்சலை அனுப்பியவன் எழும்ப, அவர்களின் முன் வந்து நின்றார் மேனேஜர்.
“சொல்லுங்க பிரசாந்த் சார்” இன்னுழவன் கேட்க,
“சார் ஜெர்மன் பைனல் பெமெட் கோட்டேஷன் பைல், நீங்க இதுல சைன் பண்ணனும். அகரனை பார்த்தவர் அண்ட் சார் நீங்களும் தான்” என்றார் பணிவாக.
“இன்னுழவன் டேபிள்ல வச்சிருங்க சார், நாங்க செக் பண்ணிட்டு அப்புறமா சைன் பண்ணிக்கிறோம்” என் அகரன் கூற… அவரும் சிறு தலையசைப்புடன் கோப்பை டேபிளில் வைத்து விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார்.
பெருமூச்சு இழுத்து விட்டு “சரி போலாமாடா இப்ப கிளம்புனா தான் கரெக்ட்டா இருக்கும்” என்றவனாய் அகரன் முன் செல்ல… “6:00 மணிக்கு தானடா மணி 5:35 தான் ஆகுது” இன்னுழவன் பின் செல்ல… இருவரும் வெளியே வந்து வண்டியில் ஏறி புறப்பட்டனர் இனிதுழனியின் கல்லூரியை நோக்கி.
பரம்பரை சொத்தான தோட்டம், துறவு, வயல் என அனைத்தையும் இன்னுழவன் கவனித்துக் கொண்டாலும், அவனுடனே இருந்தான் அகரனும் அவனுக்கு உதவியாக.
அகரன் அவ்வாறு இருப்பது இன்னுழவனுக்கு சரியாக படவில்லை. நாளை பின் அவனுக்கு குடும்பம் என்று வந்தால் அப்பொழுது அவன் நிலையும் தரமும் சரியாக இருக்க வேண்டும் என எண்ணினான்.
அதனால் அவனை தனியாக தொழில் நடத்து உனக்கு பக்க பலமாய் நான் இருக்கிறேன் என இன்னுழவன் கூற, அகரனோ நீ பக்க பலமா இருக்க வேண்டும் பாட்னரா இருந்து நீயும் என்னோடு சேர்ந்து கொள் என அவன் கை கோர்க்க…
பின் இருவரும் சேர்ந்து யார் தயவும் இல்லாமல் வங்கியில் கடன் வாங்கி சிறிய அளவில் தொடங்கிய அவர்களின் கார்மெண்ட்ஸ் பிசினஸானது இன்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர்ந்து நின்றது.
சரியாக இருவரும் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்துகொள்ள அவர்களின் முன் பரதநாட்டிய உடையோடு எழில் கொஞ்சும் ஓவியமாய் நடந்து வந்து வரவேற்றாள் இனிதுழனி.
“பரவால்லையே 6:00 ஓ கிளாக் ஃபங்ஷனுக்கு 5:55 க்கு வந்துட்டீங்க” என்றவள் இருவரையும் பார்த்து முறைக்க, “அதுவா குடை மிளகா ரொம்ப டையர்டா இருக்கா. அதான் சீக்கிரமா வந்து ரெஸ்ட் எடுக்கலாமென்னு” என்றவாற அகரன் அவளை வார…
“அதுக்கு நீ வீட்டுக்கு தானே போயிருக்கணும் எருமை எதுக்கு இங்க வந்து” என ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள் இனிதுழனி அவனை.
“எப்படியும் கொஞ்ச நேரத்தில நீ டான்ஸ் என்கிற பேர்ல ஆடி எல்லாரையும் தூங்க வைக்க போற. வீட்டுக்கு போனா இப்படி ஒரு தாலாட்டு கிடைக்காது பார்த்தியா” என்றவன் மண்டையில் நன்கென்று ஒரு குட்டையவள் வைக்க, தன் கரத்தை நீட்டியிருந்தான் இன்னுழவன் இனிதுழனியின் முன்.
அவளும் அண்ணன் அவன் கரங்களுக்குள் தன் கரம் நுழைத்துக் குலுக்கி கொள்ள… “நல்லா பண்ணுடா ஆல் த பெஸ்ட்” என அவள் தலை வருடி இன்முகமாய் இன்னுழவன் வாழ்த்துக் கூற… அவளும் மென்னகையுடன் அண்ணனின் வாழ்த்தை மனமார பெற்றுக்கொண்டு அவர்களை முன் வரிசையில் அமர சொல்லி அங்கிருந்து விடை பெற்றாள்.
இது இன்று நடப்பது மட்டுமல்ல வாடிக்கையே! இனிதுழனியின் ஒவ்வொரு பரத அரங்கேற்றத்திலும் இன்னுழவனிடம் வாழ்த்து வாங்காது அவள் மேடை ஏற மாட்டாள். ஐந்தாம் வகுப்பு படிக்கையில் இனிதுழனியின் முதல் அரங்கேற்றம் நடந்ததிலிருந்து இன்றுவரை தொடர்கிறது.
கூறியது போல் ஆறு மணி அளவில் அரங்கேற்றம் நடைபெற்றது.
அகரன், இன்னுழவன் மற்றும் கல்லூரி அரங்கத்தில் அனைவரும் ஆர்வமாக இருந்தார்கள் என்றால், இங்கோ அதற்கு மேல் கண்களில் மின்னல் வெட்ட மிளிர்வுடன் அதீத ஆர்வத்துடன் இரு கண்கள் மையலிட்டிருந்தன, இனிதுழனியின் நாட்டியத்தைக் காண்பதற்காக மடிக்கணினியின் முன்.
அனைவரும் கரகோஷங்கள் எழுப்ப…
யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட….
என ஆரம்பமானது இனிதாய் இனிதுழனியின் நாட்டியம்.
சரியாக அந்நேரம் வேலையை முடிந்து வீட்டை அடைந்து இருந்தாள் மேக விருஷ்டி.
மேக விருஷ்டி தாய் தந்தையான சோமசுந்தரமும், மைதிலியும் நடு கூடத்தில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க, “ம்மா… எங்கம்மா உன் அருமை புதல்வன? என்ன பிக்கப் பண்ண வரேன் சொல்லிட்டு என்ன பன்றான் மாடு” என கத்திக் கொண்டு உள்ளே வந்தாள்.
“ஏண்டா அப்பாக்கு கால் பண்ணி இருக்கலாம்ல அப்பா பிக்கப் பண்ணி வந்து இருப்பேன்ல உன்ன” சோமசுந்தரம் வினவ…
“ப்ச் பரவாலப்பா ஃபிரண்ட் டிராப் பண்ணிட்டா. சரி அவனை எங்க?”
“அவனுக்கு ஆறு மணிக்கு ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொன்னான். அதனால தான் உன்ன பிக்கப் பண்ண வந்திருக்க மாட்டான். ரூம்ல தான் இருக்கிறான். அவன டிஸ்டர்ப் பண்ணாத” என்று மகனுக்கு பரிந்து பேசினார் மைதிலி.
“உன் மகனுக்கு தானே… மீட்டிங் தானே… அந்த மீட்டிங் என்னனு எனக்கும் தெரியும் நான் போய் பாக்குறேன்” அவள் மேலே செல்ல, “காஃபி குடிச்சிட்டு போடி…” என்றார் மைதிலி.
“போட்டு வைமா ப்ரெஷப் ஆகிட்டு, அந்த எரும மாட பார்த்துட்டு வரேன்” என சென்றாள் மேக விருஷ்டி மேலே.
சரியாக மேக விருஷ்டி உள்நுழைய
இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட….
ஆயர்பாடியில்
கண்ணன் இல்லையோ..ஓ..
ஆசை வைப்பதே
அன்பு தொல்லையோ…
பாவம் ராதா…
என்ற பாடல் வரிகள் தங்களுக்காகவே எழுதபட்டது போல், அவளின் அழகான ஒப்பனையும் நேர்த்தியான முகபாவனையும் என அவளுடனான தனக்கானது என கற்பனையில் சிந்தை மயங்கி நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கும் இனிதுழனியினை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருக்க,
“எருமை… எருமை… இதுதான் உன்னோட முக்கியமான மீட்டிங் ஆ…” தன் தோள் பையினால் மண்டையில் அடித்தவளாய் சரியாக அந்நேரம் உள்ளே வந்திருந்தாள் மேக விருஷ்டி.
இனிதுழனி நாட்டியதை மடிக்கணினி முன் அமர்ந்து திளைத்து பார்த்ததும்… மேக விருஷ்டி அடித்ததும்… வேறு யாருமல்ல மேக விருஷ்டியின் உடன் பிறப்பான
யாதவ நிவர்த்தனன்.
மேக விருஷ்டியின் உடன் பிறந்த ஒரே தமயன்.
( யாதவன் – கண்ணன்,
நிவர்த்தனன் – குறைகளை நிவர்த்தி செய்பவன்.)
அவளின் அடிக்கு சற்றும் அசராது எருமை மாட்டின் மேல் மழை பொழிந்தது போல் பார்வையை எங்கும் விலக்காது கணினியில் மயில் நடனம் ஆடும் கன்னிகையான இனிதுழனி மீது தான் செலுத்தியிருந்தான் யாதவ நிவர்த்தனன்.
மேக விருஷ்டியோ அவன் அருகில் அமர்ந்தவள், “டேய் தொடச்சிக்கோ டா…” என நீட்டினாள் அவள் கைக்கூட்டையை.
இனிதுழனி நாட்டியத்தில் லையித்து இருந்தவன், “ப்ச்… டிஸ்டர்ப் பண்ணாதக்கா… ஷோ முடிஞ்சதும் ஏதுவா இருந்தாழும் நானே துடைச்சி தரேன் உனக்கு” என பார்க்கும் ஆர்வத்திலவன் எதை சொல்கிறாள் என அறியாது சீறினான்.
“டேய் அதுக்குள்ள ஆறா ஓடிரும் டா…” என்றவள் மேலும் சீண்ட…
“ஹா… இப்ப என்னக்கா உன் பிரச்சனை?” என்றவன், கண் அப்போதும் மடிகணிணி விட்டு அகலவில்லை.
“வாய துடைச்சிட்டு பாருடா எருமை…” என்றாள் அவள் மண்டையிலேயே ஒன்று போட்டு.
அவனோ வாயில் ஏதோ ஓட்டியிருக்கிறது என வேகமாக மௌவாயை தடவியவன் நிதர்சனம் புரிய பார்வையாலே அவளை எரித்தான்.
“பின்ன என்னடா எருமை… நீ அந்த பொண்ண பார்க்க பார்வையில வாயிலயிருந்து நிக்காம ஜொள்ளு வடியிது…” என அவனை வாரினாள் மேக விருஷ்டி.
“அக்கா… உன்ன… ” என்றவன் கையை அவள் கழுத்தை நோக்கி கோவமாக கொண்டுவர, “டேய் ஷோ போகுது பாரு…” அவளோ அவனை திசை திருப்ப…
“ஐயோ ஆமால்ல… உன்ன அப்புறம் வச்சுகிறேன்” என்றவன் மீண்டும் பார்வையை கணிணியில் பதிக்க,
புன்னகையுடன் மேக விருஷ்டியும் அவனுடன் இணைந்து கொள்ள, இருவரும் இனிதுழனியின் நாட்டியம் முற்றுப்பெறும் வரை பார்த்து முடித்தனர்.
அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து கைதட்டும் வண்ணம் மிக நேர்த்தியாக நடனம் ஆடி அனைவருக்கும் இறுதி வணக்கத்தை பறைசாற்றி இனிதுழனி மலர்ந்த முகத்துடன் அன்ன நடையிட்டு உள்ளே சென்றாள்.
செல்லும் அவள் முதுகை பார்த்தவாரு பெருமூச்சு இழுத்து விட்டு, “ஆயர்பாடியில்
கண்ணன் இல்லையோ… ஓ..
ஆசை வைப்பதே
அன்பு தொல்லையோ…
பாவம் ராதா…” என உதட்டை பிதுக்கி பாடியவனாய் மடிக்கணினியை மடித்து வைத்து ஏறிட்டு பார்த்தான் எதிரில் அமர்ந்திருந்த மேக விருஷ்டியை நிவர்த்தனன்.
அவளோ முறைத்து கொண்டு இருக்க, “வாட் சிசி… எதுக்கு என்ன இப்படி குறுகுறுன்னு பாக்குற… நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்” என்றவன் மேல் மேலும் அவள் கூர் பார்வையே பதிக்க…
“ஐயோ அப்பிடி பார்க்காத அக்கா… வெக்கமா இருக்கு” என்றவன் நகைக்க, “அடிங்க” என அருகில் இருந்த பிளவர் வாஷ்சை தூக்கி வீசி இருந்தாள் மேக விருஷ்டி அவன் மீது.
அதை அவன் பிடிப்பதற்குள் அதுவோ மண்டையை பதம் பார்க்க, “ஸ்ஸ்ஸ்… ஆஆ… எதுக்குடி எறிஞ்ச…”
“மார்னிங் சொல்லிட்டு தானடா போன என் ஸ்கூட்டியை நான் சர்வீஸ் விட்டு இருக்கேன், என்ன பிக்கப் பண்ண வான்னு” அவள் சீற…
“ஐயோ சிசி நான் உன்ன பிக்கப் பண்ண தான் வேகமாக கிளம்புனேனா… அதுக்குள்ள என் கிரஷ் டான்ஸ் ஷோ டைம் என் மண்டையில ஒளி வட்டமா தெரிஞ்சிச்சா… சரி எப்பிடியும் நீ வந்து என் மண்டைய பிளப்ப, அதுக்குள்ள அந்த ஒளி வட்டம் வழியா என் கிரஷ்ஷ பார்த்துத்துறலாம்னு இருந்துட்டேன் சோ… சாரி… அக்கா…” என்றான் இதழை பிரிக்காது நகைத்தவனாய் அசடு வழிய.
“இதுல அம்மாகிட்ட முக்கியமான மீட்டிங் வேற சொல்லிருக்க. சொல்லுடா என்ன நடக்குது இங்க? உண்மையா அந்த பொண்ண கிரஷ்ஷா தான் பாக்குறியா…? இல்ல எனக்கு தெரியாம லவ் எதுவும் பண்றியா…?” கேட்டாள் புருவம் உயர மேக விருஷ்டி தீவிரமாக.
“எனக்கும் அந்த டவுட் இருக்கு சிசி…” அவன் யோசிக்க,
“ஏதேய் டேய் நிவர்த்தனா…” மேக விருஷ்டிக்கோ அவனுடைய சந்தேகம் அவனுக்கும் இனிதுழனிக்கும் தான் என்று எண்ணி அதிர…
அவனோ வெகு சாதாரணமாக மேக அவள் பார்த்தவன், “இல்ல அந்த மார்னிங் தேனீர் காலர் பேர் கூட… இன்னு… இன்னு இன்னு… யோசித்தவன் ஹான்… இன்னுழவன், அவரு உனக்கு ஷோ காலர் ஆ? இல்ல காதலர் ஆ?ன்னு…” என்றான் அவள் கேள்வி பதில் கூறாது, தன் கேள்விக்கு பதில் கூற முடியாத அளவிற்கு குதர்க்கமாக மேக விருஷ்டியிடம் இதழுக்குள் சிரிப்பை அடக்கியவனாய் அவளை போல் புருவம் உயர…