குறிஞ்சி மலர்.. 36
கோதையின் கழுத்தில் ஜேம்ஸ் தாலி கட்டி, கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஆகி விட்டிருந்தது.
அந்த ஐந்து மணி நேரத்தையும் எப்படிக் கடந்து வந்தாள் கோதை என அவளிடம் கேட்டால் அவளது பதில் தெரியாது என்பதாகத் தான் இருக்கும்.
ஜேம்ஸின் தாலியை கழுத்தில் சுமந்து நின்றவளுக்கு, அவனை நேர் கொண்டு பார்க்க மட்டும் தைரியம் வரவேயில்லை. அதனால் தாய்க்கு பின்னால், அவரோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டு அறையிலேயே அடைந்து விட்டிருந்தாள்.
ஏதோ அவசர வேலையாக வெளியே போய் விட்டு வந்த வஞ்சி, மணப்பெண் கோலத்தில் நின்றிருந்த கோதையை பார்த்ததும் வாய் பிளந்து நின்றிருந்தான்.
அவன் திகைத்து நின்றதைப் பார்த்த வியாகேசு தான் அவனை இந்த லோகத்துக்கு இழுத்து வந்திருந்தார்.
“டேய் என்னடா வாயைப் பிளந்து கொண்டு நிக்கிறாய்..”
“இது கோதை கோதை..”
“இது கோதை தான்.. அதுக்கென்ன இப்போ..”
“கோதைக்கு கலியாணம் ஆயிட்டுதோ.. ஆரு மாப்பிள்ளை..”
“ஓ.. அப்ப உனக்கு இங்க நடந்த ஒண்டுமே தெரியாதோ..”
“தெரியாது பெரிசு.. நான் இப்ப தானே வாரன்..”
“அட நடந்த கூத்துல நானும் உன்னைய கவனிக்கேல்லை..”
“சரி ஆரு மாப்பிள்ளை..”
“அதை தெரிஞ்சு கொள்ள ரொம்ப ஆர்வம் போல..”
“இருக்காதே பின்னே.. என்ரை தங்கச்சியை கட்டியிருக்கானே..”
“அவனைப் பாத்தால் என்ன சொல்லுவாய்..”
“டேய் மச்சான்னு கட்டிப் பிடிச்சு ஒரு உம்மா குடுப்பன்..”
“ஓ அப்புடியோ.. அப்ப அவனுக்கு உம்மாக் குடு..”
என வியாகேசு கை காட்டிய திசையில், நின்றவனைப் பார்த்த வஞ்சி அப்படியே மயக்கம் போடாத குறையாகி நிற்க, அவன் தோளைத் தட்டி
“என்னப்பன் என்ன.. ஏன் அப்புடியே நிக்கிறியள்.. போய் உங்கடை மச்சானை டோய் மச்சான் எண்டு கட்டிப் பிடிச்சு உம்மாக் குடுக்க வேண்டியது தானே..”
என சிரிப்போடு சொன்னார் வியாகேசு.
“யோவ் பெரிசு.. கொஞ்ச நேரம் தானே நான் இங்கினை இல்லை.. அதுக்குள்ள என்னய்யா இது..”
என விழி விரிய நின்றிருந்தவன், அடுத்த நொடியே
“ஆனாலும் எங்கடை பாஸ் எங்கடை தங்கச்சியை கட்டினது மட்டும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குது.. நான் ஸ்வீட் எடுத்து கொண்டாடப் போறன்..”
என்று கத்திக் கொண்டே ஓடிப் போய், கோதையின் கைகளைப் பிடித்துத் கொண்டு சுற்றினான்.
“தங்கச்சீ.. நான் ரொம்ப ஹப்பியா இருக்கிறன்.. இனி நீ தான் எனக்கு பாஸம்மா.. ஐ ஜாலீ..”
என்று கொண்டு சுத்தியபடி அவளது கையை விட்டவன், அப்படியே போய் சற்றே தள்ளி நின்ற ஜேம்ஸோடு மோதி நின்றான்.
தன்னோடு மோதியவன் கீழே விழாமல் இருக்க, அவனைப் பிடித்து நிறுத்தி விட்டு
“என்ன வஞ்சி.. ஒரே குஷி போல..”
என ஜேம்ஸ் கேட்க, அப்படியே மீண்டும் அசையாமல் அவனைப் பார்த்தபடி நின்ற வஞ்சி
“பாஸ்.. ஒரே ஒரு தடவை கோச்சுக்காதேங்கோ..”
என்று கொண்டு ஜேம்ஸின் கன்னத்தைப் பிடித்து ஆட்டி விட்டு
“வஞ்சி ஹாப்பி..”
என்று கத்திக் கொண்டே ஓடி விட்டான்.
ஓடியவனையே பார்த்தபடி மெல்லப் புன்னகைத்துக் கொண்ட ஜேம்ஸ், கோதையைத் திரும்பிப் பார்ப்பதற்குள் அவள் தலைமறைவாகி இருந்தாள்.
கட்டிய மனைவியை கண்ணாலேயே பார்க்க முடியவில்லையே என ஆதங்கப் பட்டுக் கொண்டு நின்ற ஜேம்ஸை, வியாகேசு பெரும்பாடு பட்டு சமாளித்து தன்னோடு வைத்திருந்தார்.
“இப்ப எதுக்கு சின்னப் பையனை பிடிச்சு வைச்சிக்கிற கணக்கா என்னையப் பிடிச்சு வைச்சிக்கியள்..”
“விட்டால் நீ தான் ஓடிருவியே..”
“ஓட மாட்டன் கையை விடுங்கோ.. கையைக் கொஞ்சம் உசத்தோணும்..”
“உன்னை நம்ப முடியாதடா..”
“அப்பா பிராமிஸ்..”
என்று வியாகேசின் தலையில் ஜேம்ஸ் கை வைத்த பிறகு தான், பிடித்திருந்த அவனின் கையையே விட்டார் வியாகேசு.
“பீட்டர் ஒண்டு சொல்லவோ.. உனக்கு கோதையை பிடிச்சிருக்குது சரி.. அவளுக்கும் உன்னைய பிடிக்கும் தான்.. ஆனா அவளுக்கு நீ கொஞ்சம் டைம் குடு.. அவ பாவம் ஏற்கனவே ஒரு தடவை கலியாணமாகி அந்த வாழ்க்கையே இல்லையெண்டுற நிலையில இருந்த பிள்ளை அவள்.. சட்டுண்ணு உன்னைய தன்ரை கணவனா அவள் மனதார ஏற்றுக் கொள்ளோணும் தானே..”
“நான் காத்திருப்பன்..”
“இது போதும்டா எனக்கு..”
“ம்ம்.. நான் இப்பவே கொழும்புக்கு வெளுக்கிடுறன்..”
“என்னடா திடீரெண்டு..”
“பேபிக்கு டைம் குடுக்கணும்ல..”
“புரியலை..”
“பேபி என்னைய அவ புருஷனா ஏத்துக் கொள்ள நான் டைம் குடுக்கணும்னு நீங்க தானே இப்ப சொன்னிங்க..”
“ஓம் சொன்னான்.. அதுக்கும் நீ கொழும்பு போறதுக்கும் என்ன சம்மந்தம்..”
“அந்த டைம் குடுக்க தான் கொழும்பு போறன்..”
“ஓ அப்புடி..”
“யா..”
“அது சரி துரை அங்க எத்தினை நாள் இருக்கிறதா உத்தேசம்..”
“ரெண்டு நாளு..”
“அவளுக்கு குடுக்கிற டைம் எத்தினை மாதம்..”
“மாதமோ.. நோ வே.. இந்த ரெண்டு நாள் மட்டும் தான்..”
“என்னவொரு பெருந்தன்மையடா உனக்கு..”
“இங்க பாருங்க கேசப்பா.. இந்த ரெண்டு நாள் கூட நீங்கள் கேட்டதுக்காக மட்டும் தான் குடுக்கிறன் புரியுதா..”
“புரியுது புரியுது.. திவ்வியமாகப் புரியுது..”
“எனக்கு என்னோட பேபி எனக்காக மட்டுமே எல்லாம் செய்யணும்.. என்னைய மட்டுமே கவனிக்கணும்..”
“ஓ..”
“அதுக்கு அவ பிரிப்பேர் ஆக இந்த ரெண்டு நாளே ஜாஸ்தி..”
“அது சரி..”
“அப்புறம் ஒரு விசியம்..”
“இப்ப என்ன..”
“என் பேபியை கவனமா பாத்துக்கோங்க.. அது மட்டுமில்லை..”
“வேறை என்ன..”
“அவளுக்கு என்னைப் பத்தி எடுத்து சொல்லி சீக்கிரமா என் கூட பாசமா நடந்துக்க சொல்லுங்கோ..”
“எது..”
“பாசமா..”
“நீ சொன்னால் செய்திட வேண்டியது தான்.. என்ன ஒண்டு அவ என்னைய ரொம்ப பாசமா பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிக்காமல் விட்டால் சரி தான்..”
“என்னது..”
“எப்ப கிளம்புறாய்னு கேட்டன்..”
“இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பியிடுவன்..”
எனச் சொல்லிக் கொண்டே நேரத்தைப் பார்த்த ஜேம்ஸிடம்
“தம்பீ..”
என்றபடி வந்து நின்றார் நீலரூபி.
“தம்பீ.. இண்டைக்கு நல்ல நாளாம் அதனால இண்டைக்கே சாந்தி முகூர்த்தம் வைச்சிக்கலாம்னு..”
“சந்திமுத்தமா.. வாட் டூ யூ மீன் பை சந்தி முத்தம்..”
“ஐயோ தம்பி அது சந்திமுத்தம் இல்லை சாந்தி முகூர்த்தம்..”
“சரி ஏதோ ஒண்டு.. அப்புடினா என்ன..”
“அதூ..”
தலையைச் சொறிந்தபடி நீலரூபி வியாகேசை பார்த்தார்.
அவரது நிலையைப் புரிந்து கொண்ட வியாகேசு,
“அது இப்போதைக்கு வேண்டாம் பிள்ளை.. கோதை பாவம் திடீர் கலியாணத்துல ஏற்கனவே கொஞ்சம் கலங்கி இருக்கிறாள்.. அதனால இப்பதைக்கு இந்த பேச்சு வேண்டாம்.. நான் இதை பாத்து கொள்ளுறன்.. அதோட ஜேம்ஸ் இப்ப அவசரமா கொழும்புக்கு போறான்.. வந்த பிறகு பாத்துக் கொள்ளுவம்..”
என நீலரூபியிடம் சொல்ல, அதைப் புரிந்து கொண்டவர் மறு பேச்சு பேசாமல் அங்கிருந்து போய் விட்டார்.
“என்ன கேசப்பா.. என்னவாம்..”
“அடேய் உனக்கு சத்தியமா சாந்தி முகூர்த்தம் எண்டால் என்னெண்டு தெரியாதோடா..”
“கேசப்பா சத்தியமா தெரியாது..”
“பச்சைப் புள்ள.. பஸ்ற் நைட்டுடா..”
“இந்தா பாருங்கோ தெளிவா எனக்கு விளங்குற போல கதையுங்கோ.. எனக்கு தமிழ்ல நிறைய வார்த்தை தெரியாதுணு உங்களுக்கு தெரியாதோ..”
“சரி சரி உடனே மலையேறாத..”
“அப்போ எப்போ எனக்கு பஸ்ற் நைட்டு..”
“அது உன்ரை பொண்டாட்டியை தான் கேக்கோணும்..”
“கேட்டிட்டா போச்சு..”
எனத் திரும்பியவனின் கையை பிடித்திழுத்து
“இருடா இவனே.. கொஞ்சம் விட்டால் போதும் உன்னைய.. இப்ப தானேடா அவளுக்கு டைம் குடுக்க சொன்னன் அதுக்குள்ள மறந்திட்டியோ..”
எனத் தலையில் அடித்துக் கொண்டு கேட்டார்.
“டைம் குடுக்கிறதுக்கும் நான் பேபிக்கிட்ட கேள்வி கேக்கிறதுக்கும் என்ன சம்மந்தம்..”
என ஜேம்ஸ் முறுக்கி கொள்ள
“ஒண்டுமே இல்லையப்பா ஒண்டுமே இல்லை.. நீ கொழும்புக்கு வெளுக்கிடு ஓடு..”
என ஜேம்ஸை அங்கிருந்து கிளப்பினார் வியாகேசு.
அவருக்கு ஜேம்ஸ் பற்றியும் தெரியும் கோதை பற்றியும் தெரியும். ஜேம்ஸுக்கு கோதை மீது கொள்ளைப் பிரியம், கோதைக்கும் அந்தப் பிரியம் வர வேண்டுமெனில் அவளுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்.
ஜேம்ஸுக்கு பொறுமையாகப் பேசுவது மென்மையாகப் பேசுவது எப்போதாவது இருந்து விட்டு அத்தி பூத்தார் போலத் தான் வரும். அப்படி பட்டவனை மனதளவில் திருமணத்துக்கு தயாராக இல்லாமல், திடீரென மணமேடையில் வந்து அமர்ந்த, கோதையிடம் பேச விடக் கூடாது என்று தான் வியாகேசு யோசனை செய்தார்.
ஜேம்ஸை சமாதானம் செய்வது என்பது தலையால் நடக்கும் விசயம் என்பதால் வியாகேசுக்கு விழி பிதுங்கியது.
“நான் கண்டிப்பா போய் தான் ஆகோணுமோ..”
“உன்னைய நான் போகச் சொல்லேல்லையே..”
“ம்ம்.. நீங்கள் சொல்லேல்லை தான்.. ஆனாலும் உங்களுக்காகவும் பேபிக்காகவும் போறன்..”
“டேய்.. அங்க போயி ஆரோடையும் வம்பு தும்புக்கு போக கூடாது..”
“முயற்சி செய்யிறன்..”
“என்னது முயற்சி செய்யிறியோ.. அந்த பேச்சுக்கே இடமில்லை.. போக கூடாது.. ஒரு வேளை போனியோ நான் ஒண்டும் செய்ய மாட்டன்.. உன்ரை பொண்டாட்டி கிட்டே போட்டுக் குடுத்திடுவன்..”
“குடுங்க எனக்கென்ன அவளுக்கு பயமா..”
“பயமில்லாதவர் ஏன் கொழும்புக்கு ஓடோணும்.. இங்கேயே இருந்து பொண்டாட்டியை சமாளிக்க வேண்டியது தானே..”
“அது..”
“யோசிக்கிறாய் தானே.. ஒழுங்கா போய் ஏதாவது நல்ல ஹொட்டலா பாத்து தங்கு..”
என்று கொண்டே, ஜேம்ஸை கொழும்புக்கு வழியனுப்பினார் வியாகேசு.
தன் பேபியிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு வருகிறேன் எனப் போனவனுக்கு, தூங்கிக் கொண்டிருந்த கோதையை எழுப்ப மனமில்லாமல் போகவே, அவன் அப்படியே கொழும்புக்கு கிளம்பி போய் விட்டான்.
அசதியில் சில மணி நேரங்கள் அயர்ந்து தூங்கிய கோதை, எழுந்து சோம்பல் முறித்தபடி கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தாள்.
உச்சி வகிட்டில் இருந்த குங்குமத்தை கை நடுங்க தொட்டுப் பார்த்தவள், கண்ணில் நீரோடு தாலியைத் தூக்கிப் பார்த்தாள். அப்படியே உடுத்தியிருந்த புடவையையும் வருடிக் கொடுத்தவளுக்கு தலை விண்விண்ணென வலிக்க தொடங்கவே, அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்து விட்டாள்.
தான் இப்போது ஜேம்ஸ்ஸின் மனைவி என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. ஒரு வேளை இது கனவோ என்று கூட அவளுக்கு சந்தேகம் வந்து தொலைத்தது.
தலையை அழுத்திக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு, மாடிச் சுவற்றிலே தொங்கிய ஜேம்ஸின் படம் கண்ணில் விழுந்தது. அவன் படத்திலேயே அவள் பார்வை நிலைத்திருக்க, இவனுக்கு நான் எந்த விதத்தில் பொருத்தமானவள் என தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.
அதே நேரத்தில் கோதைக்கு பால் தேநீர் கொண்டு வந்து கொடுத்த நீலரூபி
“மருமகன்தம்பி கொழும்புக்கு போயிட்டாராம்.. வர ரெண்டு நாளாகுமாம்..”
என போற போக்கில் சொல்லி விட்டு போனார்.
அவர் அதை அவளிடம் சொன்னதன் காரணம், ஜேம்ஸ் விடை பெற வரும் போது அவள் தூங்கிக் கொண்டிருக்க, அவரிடம் மட்டும் சொல்லி விட்டு அவன் போய் விட்டான் என்பதால் தான்.
ஆனால் ஏற்கனவே குழம்பியிருந்த கோதையோ,
ஒரு வார்த்தை சொல்லாமல்.. என்ரை முகத்தை பாக்க கூட பிடிக்காமல் ஓடுறவங்க எதுக்கு என்னைய கலியாணம் கட்டோணும்.. என்ன தான் இக்கட்டான சூழ்நிலை எண்டாலும் கூட..”
என தன்னுள் முணுமுணுத்துக் கொண்டே உள்ளே போய் மீண்டும் படுத்து விட்டாள்.