இதயமே இளகுமா அத்தியாயம் 8

5
(8)

மருவத்தூர் ஓம் சக்தி மகமாயி கருமாரி…

உறையூரு வெக்காளி உஜ்ஜயினி மாகாளி…

கொல்லூரு மூகாம்பா கேதாரம் ஸ்ரீகௌரி…

மாயவரம் அபயாம்பிகா… பின்புறத்தில் சித்ராவின் குரலில் பாடல் ஒலித்துகொண்டிருக்க பாலா அவன் நண்பர்களுடன் கோவில் அருகில் நின்றிருந்தான்.

“பாலா சமர் உண்மையாவே வருவானா.? இல்லையா..?” என தினேஷ் கேட்க…

“வருவான்டா… பக்கத்துல வந்துட்டு இருக்குறதாதான் சொன்னான்.”

“போன் பண்ணி பாருடா. மணியை பாரு எட்டு மணி ஆகிடுச்சி. காலையிலே கிளம்பிட்டான்னு சொன்னான். இன்னும் வராமல் இருக்கான்” என்றான் கோகுல்.

பாலா சமருக்கு அழைப்பு கொடுத்தான். இறுதி அழைப்பில் அழைப்பை ஏற்றான் சமர்.

“ஹலோ சமர். எங்கடா இருக்க? இவ்வளவு நேரம் என்னடா பண்ணுற…?”

“ வந்துடுறேன்டா…”

“பாதை மாறி போய்ட்டியாடா, ஊருக்கு வர்ற பாதை தெரியலையா, நான் வேணும்னா வரவாடா?”

“அதெல்லாம் வேணாம். நான் வீட்டுக்கு பக்கத்துல வந்துட்டேன். இன்னும் பத்து நிமிஷத்துல கோவில்ல இருப்பேன்.”

“சரி சீக்கிரம்” வா என பாலா அழைப்பை துண்டித்தான்.

அதே சமயம், சமர் பாலாவின் தோட்டத்து வீட்டின் முன் காரை  நிறுத்தி இறங்கி உள்ளே செல்ல, வாசலில் அமர்ந்து அப்பத்தா வெத்தலையை இடித்து கொண்டிருந்தார்.

“அப்பாத்தா” எப்படி இருக்கிங்க?

“ யாருய்யா அது…?”

“அப்பத்தா நான்தான் சமர். என்னை மறந்துட்டிங்களா?”

“அடடே சமரு தம்பி. எப்படி இருக்க ராசா. இத்தனை வருஷம் கழிச்சுதான் இந்த அப்பத்தாவை பார்க்கனும்னு  தோணுச்சா?. அடிக்கடி வாறேன் அப்பத்தான்னு சொல்லிட்டு போனவன் பத்து வருஷம் கழிச்சி வர்றியே தங்கம்.”

“சமர் சிரித்தபடியே… படிக்கனும்ல அப்பத்தா‌. அதான் வரமுடியலை, நீங்க கோவிலுக்கு போகலையா? “

“என்னால் ரொம்ப நேரம் இருக்க முடியாது தங்கம். அதான் நான் போகலை. பாலா போகும்போதே சொல்லிட்டு போனான். நீ வருவன்னு, அதான் தூங்காமல் வெத்தலையை இடிச்சிட்டு இருக்கேன். சீக்கிரம் குளிச்சிட்டு கோவிலுக்கு போய்யா. அவங்க எல்லாரும் உனக்காக காத்திருப்பாங்க..”

“சரி அப்பத்தா” என அவன் இதற்கு முன் தங்கிருந்த அறைக்கு வந்தான். பழைய நியாபகங்கள் எல்லாம் கண்களுக்குள் நிழற்படமாய் விரிய , இதயம் படபடவென துடித்தது. பெருமூச்சொன்று இழுத்துவிட்டவன் தயாராகி வெளியே வந்தான்.”

அப்பத்தா இன்னும் தூங்க போகாமல் அமர்ந்து இருந்தார்.

“அப்பத்தா வாறிங்களா, நம்ம கார்ல போய்ட்டு வந்துடலாம்”

“வேணாம் ராசா. இனிமே சாமி கும்பிட்டு எந்த கோட்டைய பிடிக்க போறேன். நான் வாழ்ந்து முடிச்சவ, நீங்கதான் வாழப்போறவங்க, போய் நல்லபடியா சாமிகும்பிட்டு வாங்க”

“சரி அப்பத்தா, என அங்கிருந்து கிளம்பி கோவிலுக்கு வந்தவன் காரை பார்க் செய்துவிட்டு கோவிலுக்குள் வர அங்கே நண்பர்கள் யாரையும் காணவில்லை. போனில் பாலாவிற்கு அழைத்தபடியே, எங்கேயாவது நிற்கிறார்களா? என கண்களை சுழலலவிட்டபடி நடந்து வந்தவன், எதிரில் வந்தவளை கவனிக்காமல் இடித்துவிட்டான்.

“ஹேய்… ஐ யம் சாரிங்க” என்றவன் அப்போதுதான் பெண்ணவளின் முகம் பார்த்தான். கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது‌. ஆனால், அவளோ அப்படியே நின்றாள். முகம் எந்த வித உணர்வுகளையும் காட்டவில்லை. யாரென தெரியாததுபோல நின்றாள்.”

“ஹேய் நீ… ப… என சமர் பேசவருவதற்குள் “அறிவில்லை, இப்படிதான் வந்து பொண்ணுங்களை இடிப்பிங்களா, இதுக்குன்னுதான் கோவிலுக்கு வருவிங்களா, ஒழுங்கா முன்னாடி பார்த்து போங்க, கண்ணை பொடனியில வச்சிட்டு சுத்தவேண்டியது” என பட்டாசாய் பொரிந்துவிட்டு விறுவிறுவென அந்த இடத்தை காலிசெய்தாள்.

இவனோ அவள் பேசியதை எங்கே கவனித்தான், இத்தனை வருடம் கழித்து தன்னவள் முகம் பார்க்க அத்தனை ஆனந்தம் உள்ளுக்குள். ஆனால், அதைவிட அதிகமாய் வலித்தது. தன்னை யாரேன தெரியவில்லை என்பது போல திட்டி செல்கிறாளே! என்று.

“சமர்” என அவன் தோழர்கள் ஐவரும் அழைக்க, திரும்பினான்..

ஆத்வியோ சமரை பார்த்ததும் ஓடி வந்து அணைத்தாள். அவளை உடனே தள்ளி நிறுத்தினான். மற்றவர்கள் கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை. சமருக்கு ஆத்வி மீது எந்த விருப்பமும் இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

“இங்கே என்னடா பண்ற? போன் அட்டென் பட்டதற்கு அப்புறமும்  பேசாமல் அப்படியே நிற்கிற?” என பாலா கேட்க…

 

சமரோ பதில் சொல்லாமல் அந்தப் பெண் சென்ற பாதையே பார்த்து நின்றான்.

“டேய், சமர் என அவன் தோளை தொட்டு திருப்ப, பாலாவை நோக்கி திரும்பினான் சமர்.”

“என்னடா? ஏன் அங்கேயே பாக்குற? கேட்டதுக்கு பதிலும் சொல்ல மாட்ற?”

“ஒன்னும் இல்லைடா “

“சரி வா, கோவில்ல பூஜை ஆரம்பிச்சிடுச்சி. சாமி கும்பிடனும் என அவனை உள்ளே அழைத்துகொண்டு சென்றான் பாலா.

நண்பர்களுடன் நின்றாலும் மனது தன்னவளையே தேடியது. அதன் பின் அவன் கண்களுக்கு தேவதையவள் தென்படவில்லை.

இரவு அம்மன் தங்க விக்ரகம் இருக்கும் அறையை திறந்து சிலையை வெளியே எடுத்து அலங்காரம் செய்து ஊரை சுற்றி வந்ததும், அதே அறைக்குள் வைத்து கதவை மூடிவிடுவர். அந்த அறையை சுற்றி வேப்பிலை இலைகளால் அலங்கரிக்கபட்டிருக்கும். சரியாக திருவிழா முடியும் நாள் காலை அந்த அறை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதன் பின் மீண்டும் ஊர்சுற்றி வந்து அதே அறைக்குள் வைத்து கதவு பூட்டப்படும். மீண்டும் அடுத்த வருடம்தான் அந்த அறைக்கதவு திறக்கபடும்.

அம்பாள் விக்ரகம் ஊரை சுற்றிவர கிளம்பியது. பின்னாலேயே ஊர்மக்கள் வலம் வந்தனர். ஒவ்வொரு வீட்டின் மூன் நின்றும் ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அப்போதுதான் சமர் பெண்ணவளை மீண்டும் பார்த்தான்.

கிளிபச்சை வண்ண பட்டு புடவையில் அழகோவியமாய் நின்றிருந்தாள். காதில் சின்னதாக ஜிமிக்கி கம்மல் அணிந்திருந்தாள். அவள் பேசுவதற்கு ஏற்க ஜிமிக்கி ஆடியது. கழுத்தில் எந்தவித ஆபரணமும் இல்லை. ஒரே ஒரு கருப்பு கயிர் மட்டும் பெண்ணவள் சங்கு கழுத்தினை அலங்கரித்திந்தது. அவன் பார்வை அதில் பட்டு மீண்டு, அவள் முகத்தை தொட்டது. பெண்ணவள் முகத்தில் இதற்குமுன் அவன் கண்ட புன்னகை இல்லை. ஒரு வித இறுக்கம் தெரிந்தது. அவள் முகம் காட்டும் பாவனைகளை இவன்‌ முகமும் காட்டியது.

அப்படியே மக்கள் கூட்டத்தில் கலந்தாள். சமரும் மெல்ல மெல்ல அவன் நண்பர்களை விட்டு நகர்ந்து பெண்ணவளின் பின்னால் வந்தான்.

கொஞ்சம் இருள் சூழ்ந்த இடம் வரவும் அவள் பின்புறம் நின்றவன், அவள் சத்தமிடாமல் இருக்க, வாயில் கையை வைத்து பொத்தியவன், அங்கிருந்த மறைவான இடத்திற்கு இழுத்து வந்தான்.

 பக்தி பாடல் ஒலித்து கொண்டிருந்ததால் அவள் சத்தமிட்டாலும் கேட்காது. கூட்டமும், இருளும் இருந்ததால் அவள் வீட்டினரும் அவளை கவனிக்க தவறினர்.

அவள் வாயில் இருந்து கையை எடுத்ததும் “ம்ப்ச், கையை விடு என அவளை தொட்டிருந்த கரத்தினை தட்டிவிட்டவள், யார் நீ எதுக்காக என்னை இப்படி இழுத்துட்டு வர,” என்க… அப்போது லேசான வெளிச்சத்தில் அவன் முகம் தெரிந்தது.

அவன் முகத்தை கூர்மையாக பார்த்தவள் “கோவில்ல என்னை இடிச்சவன்தானே நீ…. ஓஹ் அப்போ உன்னை திட்டினேன்னு என்னை பழிவாங்குறியா” என அவனை முறைத்தபடி நிற்க…

அவனோ அவளை விழியசைக்காமல் பார்த்தபடி இருந்தான். இத்தனை வருட தவம் அல்லவா. “கண்ணை இமைத்தால் எங்கே கலைந்து சென்றுவிடுவாளோ” என்ற பயத்தில் இமைக்க மறந்தான்.

“உன்னை தானே கேட்கிறேன். இப்படி கல்லுமாதிரி நின்னா என்ன அர்த்தம், யாருடா நீ…”

“உன் புருஷன்”

“ஆஹ், என அதிர்ந்தாலும் அவனை எறிக்கும் பார்வை பார்த்தாள்”

“என்னை எப்படி “பட்டாசு” மறந்த…?”

“ஒரு நொடி அவள் கண்கள் தடுமாறின அடுத்த நொடியே சரிசெய்தாள்.”

“ஏன்டி என்னை உனக்கு உண்மையா தெரியலையா?”

“உண்மையா நீங்க யாருன்னு எனக்கு தெரியலை? போதுமா ஆளை விடுங்க”

“ஓஹ் சரி. என் பெயர் சமரஜித்ரன். என்னை நியாபகம் இருக்கா?”

பார்வையை எங்கேயோ வைத்தபடி “இல்லை” என்றாள்.

“இல்லை. ம்ம்ம்ம் பரவாயில்லை. என்னை மறந்துட்டிங்க, அப்போ எப்படி என் நினைவாக நான் கட்டிய கருப்பு கயிர் மட்டும் அப்படியே இருக்கு.”

“இது ஒன்னும் நீங்க கட்டினது இல்லை”.

“இருக்கலாம். இத்தனை வருஷத்தில் பழசாயிடுச்சின்னு மஞ்சள் கயிறை மாற்றுவாங்களே, அதே மாதிரி நீங்களும் இந்த கயிறை மாற்றிருக்கலாமே.”

“உங்க கற்பனைக்கெல்லாம் நான் பதில் சொல்லமுடியாது.”

“ஆமா கற்பனைதான். சரி அப்போ அது சாதாரண கயிர்தானே கழட்டிட்டு.”

“நான் ஏன் கழட்டனும். முதல்ல நீங்க யாரு. தேவையில்லாமல் என்கிட்ட பிரச்சனை பண்ணாதிங்க…”

“தேவையில்லாமல் நான் பிரச்சனை பண்ணலை. தேவையோடுதான் பிரச்சனை பண்றேன். அதுவும் என் தேவதையோடு.” என்றான் இதழில் சிறு குறும்போடு…

“ம்ப்ச்” என்றவள் சலித்தபடி அங்கிருந்து நகர பார்க்க, அவள் நகராத வண்ணம் கைகளை வைத்து தடுத்தபடி நின்றான்.

“நீங்க நினைக்கிற பொண்ணு நான்‌ இல்லை. வே..வேற யாரோ நினைச்சி எங்கிட்ட பேசுருறிங்க.”

“ உங்களை தெரியாமல் உங்ககிட்ட பேசலை தெரிந்துதான் பேசுறேன் செம்பருத்தி.”

“ஒழுங்கா என்னை விடுங்க, எங்க வீட்ல உள்ளவங்க என்னை காணும்னு தேடி வந்தால் உங்களுக்குதான் பிரச்சனை.”

“எனக்கென்ன பிரச்சனை என் பொண்டாட்டிகூட நான் நிற்கிறேன்”.

“நான் ஒன்னும் உங்க பொண்டாட்டி இல்லை.”

“சரி அப்போ அந்த கயிறை கழட்டி கொடுங்க…”

“முடியாது…”

“ஏன் முடியாது…

“அது என் அம்மா கொடுத்தது. அதை ஏன் நான் கழட்டனும்.”

“ஓஹ் அப்படியா!, என்றவன் அவள் கழுத்தின் ஓரம் தன் கரத்தினை கொண்டு செல்ல அவன் கைகளை தட்டிவிட போனவளின் கரங்களை தன் ஒரு கரத்தினுள் அடக்கியவன், இன்னொரு கரத்தினால் அந்த கருப்பு கயிறை எடுத்து வெளியே போட்டான். “S” வடிவ டாலர் அழகாய் மின்னியது. அதை பார்த்ததும் அவன் இதழ்கள் புன்னகைக்க, இது உங்க அம்மா தந்ததா?, ஏன் பட்டாசு என்கிட்டயே பொய் பேசுற?, பார்த்து பத்து வருஷம் ஆனதும் நம்மளை மறந்திருப்பான்னு நினைச்சியோ, சாகுற வரைக்கும் நினைப்புல இருப்படி நீ, என்றவன் அவள் கண்ணம் வருட போக, அவன் கைகளை தட்டிவிட்டவள் “என்னை விடுங்க நான் போகனும்.”

“என்கிட்ட பேசனும்னு தோணலையா”

“இல்லை.”

“ஏன்டி இப்படி என்னை பிடிக்காத மாதிரி முகத்தை வச்சிருக்க?”

“பிடிக்கலை , அதான்.”

“பொய் சொல்லாத பட்டாசு, நான்னா உனக்கு ரொம்ப இஷ்டம், நீ பேசுற வார்த்தையெல்லாம் என் மனசை குத்தி கிழிக்குதுடி. உண்மையை சொல்லு”

“நான் பொய் சொல்றேன்னு யார் சொன்னாங்க, அறியாத வயசுல பழகுற பழக்கம் கடைசிவரைக்கும் நியாபகத்துல இருக்குமா என்ன?”

“உன் கண்ணு பொய் சொல்லல பட்டாசு. ஆனால் உன் வாய் பொய் சொல்லுதுடி, கோவில்ல நான் உன்னை இடிச்சபோதும் உன் கண்ணு ஒன்னு சொல்லுச்சி, வாய் ஒன்னு சொல்லுச்சி. இப்பவும்தான். உன் கண்ணுல என் மேல் காதல் கொட்டி கிடக்குது. எனக்கு கொஞ்சமாவது கொடுடி. என் வாழ்நாள் முழுக்க உயிர்வாழ்றதுக்கு போதும்.

தலையை குனிந்தாள் பெண்ணவள் கண்கலங்கியதை மறைக்க,

அவள் நாடியில் கைவைத்து முகத்தை நிமிர்த்தினான். கண்களில் கண்ணிர் பளபளத்தது.

“ஏன்டி என்னை பிடிக்காத மாதிரி நடிக்கிற. இந்த டாலரை இத்தனை வருஷம் பொக்கிஷமா வச்சிருக்க. நான் கண்டிப்பா உன்னை தேடி வருவேன்னுதானே. இப்போ வந்திருக்கேன் கண்டுக்காமல் போற.. ஏன் பட்டாசு நான் உனக்கு வேணாமா, பரவாயில்லை ஆனால், நீ எனக்கு வேணும்டி” என அவள் கண்ணம் வருட போக தடுத்தவள்…

 “எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை, தயவுசெய்து இனிமே என் பின்னாடி வராதிங்க, சின்ன வயசுல பழகினால் அது காதலாகிடனுமா? காதலிக்கவும் இங்கே தகுதி வேணும். அந்த தகுதி எங்களை மாதிரி ஏழைகளாக பிறந்தவர்களுக்கு இல்லை” என அவன் கரத்தினை தட்டிவிட்டு நடந்தாள் செம்பருத்தி. கண்களில் வழியும் கண்ணிர் அவன் மீது அவள் கொண்ட காதலை சொல்லியது.

அவனை கடந்து சென்ற பெண்ணவளை வலிநிறைந்த பார்வை பார்த்தபடி நின்றான் சமர்.

மறந்தாயே மறந்தாயே…

பெண்ணே என்னை ஏன் மறந்தாய்…

கடந்தேதான் நடந்தாயே…

யாரோ என்று ஏன் கடந்தாய்…

 நினைவுகள் யாவும் நீங்கி போனால்…

நான் யார் மறதியா அவதியா சகதியா…

நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்…

நீ யார் ஜனனமா சலனமா மரணமா..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

1 thought on “இதயமே இளகுமா அத்தியாயம் 8”

  1. மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்…
    சமர் காதலிக்கும் பெண் செம்பா தானா….

    நிச்சியம் செம்பாவின் இந்த மன நிலைக்கு காரணம் பாலா அம்மாவின் நடவடிக்கை தான் காரணமாக இருக்கும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!