“ஆமா. உனக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் வருது. ஹாஸ்பிடலுக்கும் வரமாட்ற. அதான் இன்னைக்கு உன்னை கேம்ப்க்கு கூப்பிட்டு போகலாம்னு நினைக்கிறேன்.”
“வேற வேலை இருந்தா பாறேன்டி”.
“அதெல்லாம் முடியாது, நீங்க ரெண்டு பேரும் வரீங்க, உங்களை டாக்டர்கிட்ட காமிச்சிட்டு அதுக்கப்புறம் தான் நான் வேலைக்கு போறேன்” என்றாள் செம்பா.
செம்பா சொன்ன பின் அதை மாற்றிக் கொள்ள மாட்டாள். என்பதால் இருவரும் கிளம்பி அவர்களோடு மெடிக்கல் கேம் நடக்கும் இடத்திற்கு சென்றனர்.
கோகியை பார்த்து கண்ணை காட்டினால் செம்பா.
“என்னடி” என கண்களால் கோகியும் சைகை செய்ய,
“ஜித்துவை பார்க்கனும்” என சைகையால் சொல்ல…
“முடியாது” என கோகி தலையசைக்க, “கொன்னுடுவேன்” என்றாள் செம்பா.
“அம்மா, அத்தை நீங்க ரெண்டு பேரும் இங்கே இருங்க, உங்களுக்கு எந்த டாக்டர் பாக்கணும்னு நாங்க போய் விசாரிச்சுட்டு வந்துடுறோம்” என்றதும் ராசாத்தியும் சந்திராவும் அங்கே போடப்பட்டிருந்த மரபெஞ்சில் அமர்ந்தனர்.
இருவரும் அவர்களை விட்டு கொஞ்சம் துயரம் தள்ளி வந்து “கோகி நீ அம்மாவையும் அத்தையும் பாத்துக்கோ, நான் போய் ஜித்துவை பார்த்துட்டு வந்துடறேன்” என்றாள் செம்பா.
“சீக்கிரம் வந்துடு செம்பா. அம்மா கேட்கிறதுக்கெல்லாம் நான் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது”
“வந்துடறேன்” என்றவள் சமர் இருக்கும் இடத்திற்கு செல்ல, இங்கே கோகியோ அப்படியே நடந்தவள் கோகுல் செல்வதை பார்த்து அவனை பின் தொடர்ந்தாள்.
“ஓய் டாக்டரே” என்க… இந்த காந்த குரலை எங்கேயோ கேட்டு இருக்கிறோமே” என திரும்பினான் கோகுல்.
“அதானே பார்த்தேன். நீ வாயாலே வடை சுடுவியே, நீ எப்படி எனக்கு வாய்க்கு ருசியா சமைச்சு கொண்டு வந்து இருப்பேன்னு”
“ரொம்ப பேசாதைய்யா”
“சரி நீ இங்கே என்ன பண்ற? நீங்களே பெரிய நர்ஸம்மா நீங்க டாக்டரை தேடி வந்திருக்கீங்க”
“என்ன நக்கலா”
‘இல்லை கத்திரிக்காய் சும்மா கேட்டேன்.”
“போயா, போய் உன் டாக்டர் வேலைய பாரு”
“அது எங்களுக்கு தெரியும் நீங்க தான் என்ன வேலை செய்ய விடாமல் டிஸ்டர்ப் பண்றீங்க”
“இல்லனா மட்டும் சார் எல்லாத்தையும் காப்பாத்திட்டுதான் சோத்துல கையை வைப்பாரு”
“ரொம்ப பேசுற, ஊசி எடுத்து உன் வாயை தைக்க போறேன் பாரு”
“முதல்ல ஒழுங்கா வந்திருக்கிற நோயாளிகளுக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க, என்கிட்ட வாயை கொடுத்து வீணா புண்ணாக்குக்காதிங்க”, என முகத்தை வெட்டிய படி சென்று விட்டாள்.
“சரியான பைத்தியத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேன் போல” என நோயாளிகளை பார்க்க சென்றான் கோகுல்.
செம்பா சமர் இருக்கும் அறைக்கு முன் வந்தாள்.
உள்ளே சமர் நோயாளியை பார்த்துகொண்டு இருக்க, உள்ளே இருந்த நபர் வெளியே வரவும் உள்ளே நுழைந்தாள்.
“ப்பா… உடம்பெல்லாம் புல்லரிக்குது.” மேடம் வாயால் என்னை பார்க்க வந்திருக்கேன்னு சொல்றதை கேக்குறதுக்கு”
“இப்படி பேசுனிங்க நான் வெளியே போய்டுவேன்.”
“ சரிங்க மேடம் நான் எதுவும் பேசலை. நீங்க ரொம்ப பிஸியான ஆள். என்னை எல்லாம் மீட் பண்ண உங்ககிட்ட நாங்க அப்பாயின்மென்ட்ல வாங்கணும். நீங்க வந்ததும் ஆனந்த அதிர்ச்சியாகிடுச்சி”
“போதும் கிண்டல் பண்ணது.”
“சரி வா அங்கேயே நிற்குற… இங்கே உட்கார்.”
“அங்கே இருந்த மரபெஞ்சில் இருவரும் ஒன்றாய் அமர்ந்தனர்.”
இருவருக்கும் இடையில் இன்னொருவர் உட்காரும் அளவிற்கு இடைவெளி இருந்தது.
அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துகொள்ள செம்பா நெளிந்தாள்.
“ஏன் இவ்வளவு பயம். நான் உன்னை என்ன பண்ண போறேன் பட்டாசு”
“பயம் இல்லை ஜித்து.”
“புரியிது…. சரி நீ என்ன பார்க்க மட்டுமா வந்த”
“இல்லை ஜித்து, அம்மாவுக்கு உடம்பு கொஞ்சம் பலவீனமா இருக்கு, அதான் டாக்டரை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். வெளிய எங்கே கூப்பிட்டாலும் வர மாட்டாங்க. ஏதாவது மூலிகை மருந்து காய்ச்சி குடிச்சிட்டு வீட்ல படுத்துடுறாங்க. சரி நம்ம ஊர்லதானே அதனால நம்மளே கூப்பிட்டு காமிச்சுட்டு போகலாம்னு வந்தேன்.”
“அம்மா எங்கே?”
“அம்மா வெளியே தான் உட்கார்ந்து இருக்காங்க, நான்தான் உங்களை பார்க்கலான்னு இங்கே வந்தேன்.
சரிங்க நான் கிளம்புறேன்.”
“இப்போதானே வந்த பட்டாசு, உடனே போகணுமா” என்றவனின் பார்வையில் ஒருவித ஏக்கம்”
“நீங்க வேலை செய்ற இடம். நான் ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கிறது நல்லா இருக்காது. நான் கிளம்புறேன் என எழுந்தாள். சமர் இன்னும் அவள் கரங்களை விடவில்லை”.
“சரி பட்டாசு நைட் உனக்கு வேலை எப்போ முடியும்”
“ஏழு மணிக்கெல்லாம் முடிஞ்சிடும் ஜித்து”.
“சரி அப்போ நான் வழக்கமா, மீட் பண்ற இடத்துல வெயிட் பண்றேன் நீ மறக்காம வந்துடு.”
“சரிங்க என்றவளின் பார்வை சமரின் கரங்களின் மீது படிய, அவள் பார்வை சென்ற இடத்தை கவனித்தவன் ஒவ்வொரு விரல்களாய் விருப்பம் இல்லாமல் விடுவித்தான்.”
செம்பா வெளியே வர பாலா அவள் முன் வந்தான்.
செம்பா பேசாமல் அப்படியே நிற்க… பாலா அவளை பார்த்து சிரித்தவன் “என்ன பாப்பா சமரை பார்க்க வந்தியா”, என ஒரு சிரிப்புடன் கேட்க…
அவனைப் பார்த்து முழித்தாள்.
“எனக்கு எல்லாம் தெரியும் பாப்பா சமர் என்கிட்ட சொன்னான். எனக்கு ரொம்ப சந்தோஷம். என் பாப்பாக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க போகுது, சமர் ரொம்ப நல்லவன் உன்னை கண்டிப்பா நல்லா பார்த்துப்பான்.”
“சரி மாமா நான் வரேன் அம்மா வெயிட் பண்றாங்க” என செம்பா வர கோகி அவள் முன் வந்தாள்.
“என்னடி, உன் ஆளை பார்த்துட்டியா?”
“ஆமா”
“அண்ணா என்ன சொன்னார்?”
“ஒன்னும் சொல்லலை’
“ஒன்னும் சொல்லலையா? இதை போசத்தான் போனியா. உங்க ரெண்டு பேரையும் 10 வருஷமா லவ் பண்றாங்கன்னு சொன்னால் யாருமே நம்ப மாட்டாங்க.”
“வாயை மூடிட்டு வா. எனக்கு எல்லாம் தெரியும். அம்மா எந்த டாக்டர்கிட்டே போய்ருக்காங்க”
“ஆத்விகா”
“ஆத்விகாவா?”
“ஆமா அந்த டாக்டர் தான்”.
“அம்மா, அத்தையும் பார்த்துட்டாங்களா.?”
“இல்லை செம்பா வரிசையில் உட்கார்ந்து இருக்காங்க.”
“ சரி வா என இருவரும் சந்திரா ராசாத்தி இருக்குமிடத்தில் வந்து அமர்ந்தனர்.”
“எங்கடி போனிங்க.?”
“போனிங்களாவா? இவ இங்கே இல்லையா” என சந்தேகமாக செம்பா கோகியை பார்க்க…
“நா..நான் உன்னை தேடி வந்தேன் செம்பா.”
“நம்புற மாதிரி இல்லையே உன் கண்ணுல திருட்டுத்தனம் தெரியிதே”
“ஆஹ் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல செம்பா”
“ஒருநாள் மாட்டுவடி, அப்போ இருக்கு உனக்கு”
“அது அப்போ பார்க்கலாம்”
“அப்போ திருட்டுவேலைதான் பார்த்திருக்க” என செம்பா சொல்ல
“ஐயோ இல்லடி’ என இருவரும் மாற்றி மாற்றி பேச, சந்திரா பெயரை அழைத்தனர். செம்பாதான் உள்ளே அழைத்து சென்றாள்.
ஆத்வி செம்பாவை பார்த்ததும் எதுவும் பேசவிலை. சந்திராவிற்கு என்ன செய்கிறது என விசாரித்தாள். அவரை செக் செய்தவள் உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லம்மா. நல்ல சத்தான ஆகாரங்கள் சாப்பிடுங்க. இரத்ததில் ஹிமோகுளோபின் அளவுதான் கம்மியா இருக்குற மாதிரி இருக்கு. உடம்பை கவனிச்சிக்கோங்க. குறிப்பிட்ட வயது தாண்டியதும் பெண்கள் உடம்பு ரொம்ப பலகினமாகிடுது. மனசுளவுல தைரியமாக இருந்துதாலும் உடம்பால இருக்க முடியலையே. நல்லா சத்தான ஆகாரங்கள் சாப்பிடுங்க சரியாகிடும்” என்றாள் ஆத்வி.
“சரிம்மா” என்றார் சந்திரா.
“ நீங்க வெளியே இருங்கம்மா, நான் மாத்திரை எழுதி தர்றேன்” என்றதும் செம்பா சந்திராவை வெளியே அனுப்பிவிட்டு மருந்து, மாத்திரை ரசிதை வாங்கிவிட்டு வெளியேற போக “ஒரு நிமிஷம்” என்றாள் ஆத்வி.
செம்பா திரும்ப, “உங்ககிட்ட நான் ரொம்ப திமிராவே நடந்துருக்கேன். அப்போ அது தவறா தெரியலை. பணத்திமிர்ல என்ன பேசுறதுன்னு தெரியாமல் பேசிருப்பேன். என்னை மன்னிச்சிடுங்க” என்றாள் ஆத்வி.
சமர் செம்பாவிடம் ஆத்வி குகனை விரும்புவதை பற்றி சொன்னது நியாபகத்தில் வந்தது.
“இப்போ வரை உங்க மாற்றம் என்னால் நம்ப முடியலைங்க ஆச்சரியமாய் இருக்கு என்றாள் செம்பா. உண்மையிலேயே செம்பாவிற்கும் ஆச்சரியமதான்.
“என்னாலயே நம்ப முடியலைங்க… ஆனால் நான் அவரை விரும்புறது உண்மை. அவர் என்னை கிணற்றில் இருந்து காப்பாற்றும் போதுகூட அவரோட கைகள் என்மீது தவறா படலை. அந்த நிமிஷம் எனக்கு சுயநினைவு இருந்தது.” அதை நினைக்கும்போது இன்னும் அவர்மீது காதல் அதிகமானதே தவிர குறையலைங்க.”
ஆத்வியின் முகத்தில் குகனை பற்றி பேசும்போது முகம் முழுவதும் பூரிப்பு. அதுவே அவளின் காதலின் அளவை சொன்னது. செம்பாவிற்கும் இனிமே குகன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நம்பிக்கை துளிர்த்தது.
ஆத்வி சிரித்த முகமாக “அம்மாவை நல்லபடியா பார்த்துக்கோங்க, ஹிமோகுளோபின் ரொம்ப குறைவான இருக்கு. ட்ரிப்ஸ் மூலமா ஹொச்.பி அதிகமாகும் மருந்து போடுற நிலைமைதான். நீங்க ஹாஸ்பிடல் வேர வொர்க் பண்ணுறிங்கல்ல, அங்கே வாரத்திற்குள் ஒரு மருந்துன்னு நாலு வாரத்துக்கு ஒரு ட்ரிப்ஸ் ஏற்றுங்க, அவங்களுக்கு எல்லாம் சரியாகிடும். அதை கவனக்குறைவாக விட்டால் இதயம் பலவீனமாகிடவும் வாய்ப்பு இருக்கு.
“சரிங்க நான் பார்த்துக்கறேன்.”
என ராசாத்தியையும் ஆத்விகாவிடம் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். நேரம் கடந்ததும் கோகி, செம்பா இருவரும் வேலைக்கு கிளம்பினர்.
நல்லசிவம் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருக்க, அவரை பார்த்த கற்பகம் “ஏய் இங்கே வா” என்றார். முதலில் நல்லசிவம் கவனிக்காமல் செல்ல அடுத்த வார்த்தை “ஓடுகாலியை கட்டின பிச்சைகாரா” என அழைத்ததும் இவளுக்கு வேற வேலை இல்லை என கண்டும் காணாமலும் செல்ல, “இப்போ நீ இங்கே வரலை, இதைவிட மோசமா பேசுவேன் எப்படி வசதி.” என்றதும்
“ச்சை இவளாம் என்ன ஜென்மமோ” என அவளிடம் வந்தார் சிவம்.
“என்ன கூப்பிட கூப்பிட!, எட்டிப் பார்க்காமல் போற அவ்வளவு திமிராயிடுச்சா?”
“நீ கூப்பிட்டதும் வரதுக்கு நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரனா. இல்ல உங்களுக்கும் எனக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? எதுவுமே கிடையாது, அப்புறம் எதுக்கு நீ கூப்பிட்டு நான் வரணும்”
“ஓஹ் குடிக்கலையா ரொம்ப தெளிவா இருக்க போல, அதான் இப்படி பேசுற”
“ஏன் வெட்டியாதான குடிச்சிட்டு ஊரை சுத்திட்டு திரியிற? ஏதோ வேலைக்கு போய் சம்பாதிக்கிற மாதிரி சலிச்சிக்கிற”
“நான் எப்படியும் இருப்பேன். எதுக்கு கூப்பிட்டிங்க அதை சொல்லுங்க”
“எங்க உன் மகள் ரெண்டாவது மினுக்கி”
“என் ஆத்தாவை ஏன் நீங்க தேடுறீங்க?”
“அந்த ஆளுமயக்கி எங்க இருக்கான்னு தெரியுமா?”
“என் பொண்ண பத்தி தவறாக பேசுற வேலை வச்சுக்காதீங்க, இல்லை இங்கே நடக்கிறதே வேற”
“என்ன பண்ணுவ, உன் மூத்த பொண்ணு எவன் கூட போனாளோ, எங்க இருக்காளோ, இருக்காளா செத்தாலா எதுவுமே உங்களுக்கு தெரியாது. இதோ இவ நல்ல பணக்கார பையனா பார்த்து வளைத்து போட்டுட்டாள். கொஞ்சம் அழகா இருந்ததும் உடனே அவர்களும் மயங்க தானே செய்றாங்க”
“தேவையில்லாமல் என் பொண்ணை பற்றி பேசுறீங்க…”
“யாரு தேவையில்லாம பேசுறா? உன் பொண்ணு உடம்புக்கு ஏதாவது வியாதியா?”
“உன் பொண்டாட்டிய பார்த்தது வேற டாக்டர். உன் பொண்ணு பார்த்தது வேற டாக்டர். சொன்னா நம்ப மாட்டல்ல, இரு என தன் போனை எடுத்து செம்பா சமரின் அறைக்குள் சென்றதையும் சிறிது நேரம் கழித்து வெளியே வருவதையும் வீடியோவாகவே எடுத்து வைத்திருந்தார் கற்பகம்.
அவர் ஏதேச்சையாக கேம்ப் நடக்கும் இடத்திற்கு வர, அங்கே செம்பா சமர் அறைக்கு செல்வதை பார்த்தவர் தன் போனில் வீடியோ எடுத்திருந்தார்.
“நல்லா பாரு அவ மட்டும்தான் உள்ள போறாள். 15 நிமிஷம் கழிச்சு வெளியே வறாள். அதுவும் ஆம்பள டாக்டர். என்ன காரணமா இருக்கும் சிவம். போகும்போது உன் பொண்ணு முகத்தை பாரு இத்தனை நாள்ல உன் பொண்ணு முகத்துல இப்படியொரு பிரகாசத்தை பார்த்திருப்பியா. அதிலையே தெரிய வேண்டாம், அந்த பையனை மயக்கி இவ முந்தானையிலே முடிச்சு வச்சுக்கிட்டாள். அவனும் நல்ல வசதியான வீட்டுப் பையன். அதுவும் ஒரே பையன். அப்படிங்கிறப்போ சொத்து எல்லாம் இவளுக்கு தானே வரும்னு தெரிந்து மயக்கிட்டாள் போல” என வாய்க்கு வந்த படி பேச…
“இவ்வளவு தூரம் விவரமா சொல்றேன். நம்ம மாட்ற, சரி பரவாயில்லை. வேணும்னா பாரு இவளும் உன்னை ஏமாத்தி வீட்டை விட்டு ஓடி தான் போக போறாள். நீதான் நினைச்சுட்டு இருக்கணும் என் பொண்ணு என்னைய ஏமாத்திட்டு போக மாட்டான்னு, நீ கல்யாணம் முடிவான பொண்ணை மனசாட்சியே இல்லாமல் இழுத்துட்டு போனல்ல, அதே மாதிரி இவளும் ஓடி போவாள். என் சாபம் உங்களை சும்மா விடவே விடாது. உன் ரெண்டு பொண்ணுங்களுக்கும் ஒழுங்காவே நீ கல்யாணம் பண்ணி பார்க்க மாட்ட, வேணும்னா பாரு நான் சொன்னது நடக்குதா இல்லையா என்று ஓடுகாலிக்கு பிறந்தவள் ஓடு காலியாதானே இருப்பாளுங்க. நல்ல தாய்க்கு பிறந்திருந்தாள் நல்ல எண்ணம் இருக்கும். அவ எப்படி எங்களை அவமானபடுத்தினாளோ அதே மாதிரி உன் ரெண்டு பொண்ணுங்களும் உங்களை நடுரோட்ல நிற்க வைப்பாங்க, ஊரே பார்த்து சிரிக்கும். எங்களுக்கு நடந்தப்போ எப்படி வலிச்சிருக்கும், அதே வலியை நீங்க அனுபவிக்க வேணாமா? நீ ஏன் அனுபவிக்க போற, உன் பொண்டாட்டி மூலமா சொத்து, பணம் வரும், வேலைக்கு போகாமல் பொண்டாட்டி வீட்ல உட்கார்ந்து சாப்பிடலாம்னு எதிர்பார்த்து இருந்திப்ப, அது வராமல் போயிடுச்சு. இப்போ உன் பொண்ணு மூலமா நீ ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்கபோகுது. வாங்கி நல்லா குடிச்சு கூத்தடி, அதுக்குத்தானே ரெண்டு பொண்ணுங்களை பெத்து வச்சிருக்க” என அவரின் மனதில் இருந்த வன்மத்தை எல்லாம் வார்த்தையால் கொட்ட,
“போதும்” என கையெடுத்து கும்பிட்ட சிவம் அங்கிருந்து கிளம்பி விட்டார். கற்பகம் சொன்னதை அவர் நம்பவில்லை. செம்பா மீது தான் அவருக்கு நம்பிக்கை அதிகம். “அவளை இப்படி பேசிவிட்டாரே” என அவரின் மனம் வெம்பியது இன்றைக்கு குடிக்க வேண்டாம் என நினைத்தவர் மூக்கு முட்ட குடித்தபடி வீட்டிற்கு சென்றார்.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.9 / 5. Vote count: 7
No votes so far! Be the first to rate this post.
Post Views:426
1 thought on “இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 22”
DEEPA V
அருமையாக எழுதியுள்ளீர்கள் சகோதரி.
கற்பகம் சொல்வது போல் நிச்சியம் செம்பா ஊரை விட்டு ஓடி போக மாட்டாள்
அருமையாக எழுதியுள்ளீர்கள் சகோதரி.
கற்பகம் சொல்வது போல் நிச்சியம் செம்பா ஊரை விட்டு ஓடி போக மாட்டாள்