உள்ளமதில் உனையேந்தி
ஊனிலும் உனையே தாங்கும்
வரம் தந்தான் இவன்…
உன்னுயிரை என்னுள் ஊற்றி
என்னுயிரை உன்னுள் உருக்கி
உருமாற்றம் செய்து விட்டான் இவன்…
இடையில்லா இன்பங்களின்
இடைவெளியில் இளைப்பாறும்
இடமாய் – ஈரம் படர்ந்த
இதயம் கொடுத்தான் இவன்…
இனி என்ன நான் கொடுக்க…
நிதம் நிதம் என்னையே கொடுக்க
உத்தரவிட்டான் இவன்… என்னவன்!
——————