உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

4.4
(9)

ஒரு வழியாக வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு மூவரும் வந்தார்கள்.

சாமிக்கு பூஜை முடித்து அர்ச்சனை செய்துவிட்டு திரும்பி பார்த்தாள் பிரகதியை காணவில்லை.

இவ எங்க போனான்னு தெரியலையே இப்பதானே இருந்தா

என்று அருணாச்சலம் கேட்க?

அதுவா அங்க பொங்கல் கொடுத்துட்டு இருப்பாங்க அதை வாங்க போய் இருப்பா என்று சரியாகச் சொன்னார்.

மூவருக்கும் பொங்கல் வாங்கிக்கொண்டு பெரியவர்களிடம் வர அங்க பிரசாதம் கொடுக்கிறவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான் அதனாலதான் போய் வாங்கிட்டு வந்தேன் என்று கூறினாள் பிரகதி. என்ன இருந்தாலும் கோவில்ல தர மாதிரி இருக்காதுல்ல என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.

இன்னைக்கு மாப்ள பக்க வராங்க இது என்னமோ பொங்கலுக்காக அலைஞ்சிட்டு வாங்கிட்டு வந்துட்டு இருக்காளே எப்படி இருக்க பேசுறது என்று மனதிற்குள் நினைத்த ஜோதி

பொங்கல் சாப்பிட்டவாறு இருந்த மகளைப் பார்த்தார்.

சிறிது நேரம் கழித்து…

பாப்பா , உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் இன்னைக்கு ஒரு மாப்பிள்ளை வீடு உன்னை பார்க்க வர்றாங்க , இந்த விஷயத்தை சொல்றதுக்கு தானே என கோவிலுக்கு கூட்டிட்டு வந்தீங்க பெரியம்மா என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

எப்படி நீ கரெக்டா கண்டுபிடிச்ச இந்த ஜோதி கேட்க?

க்கும் போன நாலு தடவை மாப்பிள்ளை பார்க்க வரும் முன்னாடியும் இப்படி சொல்லி தான் கூட்டிட்டு வந்தீங்க. அதை நீங்க மறக்கலாம் ஆனா நான் மறக்க மாட்டேன்..

அப்புறம் என்னிக்கும் இல்லாத திருநாளா வாசல்ல பெரிய கலர் கோலமா போட்டு இருந்துச்சே

அப்பவே கண்டுபிடிச்சிட்டேன் இந்த மாதிரி ஏதோ வேலை பண்ண போறீங்கன்னு.

மை ஏழாவது அறிவு என்னை அலர்ட் பண்ணிருச்சு என்று  அலுப்பாக  கூறினாள் பிரகதி.

அ..அ.. அது போன தடவை எல்லாம் சொதப்பிடுச்சு. எல்லாமே நல்லபடியா விசாரிச்சு தான் வீட்டுக்கு வர சொல்லி இருக்கோம் என்று கூறினார் ஜோதி.

பெரியப்பா என்று அவர் தோளில் சாய்ந்து கொண்டே எனக்கு இப்ப கல்யாணம் கண்டிப்பா வேணுமா இன்னும் கொஞ்ச நாள் உங்க கூடவே இருந்துட்டு போறனே என்று கெஞ்சி கேட்டாள்.

அது இல்லம்மா உனக்கு இப்பவே 24 வயசு ஆச்சு. எங்களுக்கும் குழந்தை இல்ல. உங்க அப்பா அம்மாக்கு நீங்க ஒரே பொண்ணு. உன் அப்பாக்கும் உடம்பு சரியில்லை.உனக்கு நல்லபடியா வாழ்க்கையை அமைச்சு தரணும்னு எங்களுக்கும் ஆசை இருக்கும் இல்லையா என்று கேட்டார்.

உடனே அவள் முகம் வாடிவிட்டது..

அருணாச்சலமோ , நீ வருத்தப்படாத பாப்பா உனக்கு பிடிச்சிருந்தா தான் இந்த சம்பந்தம்  மேற்கொண்டு பேசலாம். பிடிக்கலைன்னா ஏதாவது காரணம் சொல்லி சமாளிக்கலாம் என்றார்.

ஜோதி பிரகதியின் தோளில் தட்டிக் கொடுத்து, போன தடவை மாதிரி எதுவும் ஆகாது நல்லா விசாரிச்சு தான் வர சொல்லி இருக்கு  ‌. பையன் சிவில் இன்ஜினியரிங் படிச்சு இருக்கார். ஒரு பில்டர்ஸ் அசோசியேசன் ல வொர்க் பண்றார். கூடிய சீக்கிரம் தனியா ஆபீஸ் போட்டு ப்ராஜெக்ட் பண்ண போறாரு டி என்றார்.   ஜாயிண்ட் ஃபேமிலி தான்.

அம்மா அப்பா, ஒரு அண்ணன்.

அவருக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு. அவங்க ஐடி ல வொர்க் பண்றாங்க. பெங்களூர் ல இருக்காங்க.  அவர் ஒய்ஃப் இங்க தான் இருக்காங்க. அவங்க அப்பா ஒரு சூப்பர் மார்க்கெட் நடத்துறார்.

அம்மா ஹவுஸ் ஒய்ஃப்.

ஃபேமிலி ல எல்லாரும் நல்ல கேரக்டர்.

அன்னைக்கு உன் அத்தையோட தங்கச்சி பொண்ணு கல்யாண பங்ஷன் போனோம் தான அங்க மாப்பிள்ளை குடும்பம் வந்திருந்தாங்க .

உன்னை பார்த்து விசாரிச்சாங்களாம்… அப்புறம் உன் அத்தை கிட்ட ஜாதகம் கொடுத்து பார்க்க சென்னாங்களாம்..

நாங்களும் எல்லாம் சரி வருதான்னு பாத்துட்டு தான் இந்த ஏற்பாடு செய்தோம் என்று பெரியம்மா கூற…

அப்ப எனக்கு தெரியாமா இவ்வளோ செஞ்சி இருக்கீங்க…. என்று பெண் கூற…

நீயும் நம்ம வீட்ல ஒரே பொண்ணு. அங்க நிறையா பேர் இருக்க குடும்பம்.  உனக்கு அந்த ஃபேமிலி செட் ஆச்சுன்னா நல்லா இருக்கும்னு உங்க அப்பா யோசிக்கிறான் பாப்பா என்று பெரியப்பா கூற ..

அவளுக்கு ஒரே குழப்பம்? இவங்க கிட்ட சொன்னா பிரைன் வாஷ் பண்ணிட்டே இருப்பாங்க . இப்ப என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

என்னடி யோசிச்சுட்டே இருக்க..

இன்னேரம் உன் அம்மா இருந்தா நெனைச்சு பாரு உனக்கு டைமே கொடுத்திருக்க மாட்டா. கோவமா  ஏதாவது சொல்லி நீயும் ஏட்டிக்கு போட்டியா பேசி எல்லாரையும் டென்ஷன் பண்ணி இருப்பீங்க ‌என்று பெரியம்மா சொல்ல …

கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா.. நானே அவளிடம் பேசுகிறேன் என்றார் அருணாச்சலம்.

பாப்பா நீ என் மேல நம்பிக்கை வெச்சிருந்தா வீட்டுக்கு வந்து ரெடி ஆகு. இல்லைன்னா வேண்டாம். நான் அவங்க கிட்ட ஏதாவது சொல்லி சாமளிச்சுக்கறேன் என்றார்.

அது வந்து பெரியப்பா என்று அவள் தயங்க ..

போன தடவை மாதிரி எதுவும் ஆகாது. நாங்க உன் கூடவே இருக்கோம் என்று சொன்னார்.

ஓகே பெரியப்பா உங்களுக்காக நான் ரெடி ஆகுறேன்.

ஆனா அம்மாட்ட சொல்லிருங்க என்னை எதுவும் திட்டக்கூடாதுனு .

சரிடாமா எல்லாம் பாத்துக்கலாம் வா என்று கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவளுடைய அப்பா அவளை அழைத்து பெரியப்பா எல்லாம் சொன்னாங்களாடா என்று கேட்க?

ம்ம்ம்ம் சொன்னாங்க என்று கூறினாள்.

அப்பொழுது கௌவுசல்யா அங்கு வந்து பேசுனது போதும் ரூம்ல உனக்கு டிரஸ் ஜுவல்ஸ் எல்லாம் எடுத்து வச்சிருக்கேன் போய் ரெடியாகி வா என்று கூறினார்.

சரி மா என்று கூறிக்கொண்டு உடை மாற்றச்சென்றாள்.

அவளுக்கோ பலவாறு யோசனைகள்.

கொஞ்சம் பதட்டமாகவும் குழப்பத்தோடும் இருந்தாள்.

என்ன மாதிரி இருப்பார், நம்மள நம்ம குடும்பத்தை புரிஞ்சுக்கரவரா இருப்பாரா இல்ல  கோபக்காரா

இருப்பாரா.

கல்யாணம் ஆகி போயிட்டா இங்க அடிக்கடி வர முடியுமா. என்று பல்வேறு யோசனைகளில் இருந்தாள்…

பிரகதி ரெடியாகிட்டயா என்று

கேட்டுக்கொண்டே அறைக்குள் வர ஏண்டி இன்னும் தலை பின்னலையா என்று கேட்க

இன்னும் இல்ல என்று கூறும் முன்பே கௌசல்யாவே தலை பின்னி விட

பிரகதி இந்த பிங்க் கலர் புடவை உனக்கு அழகா இருக்கு என்று கையால் திருஷ்டி எடுக்க..

இப்ப மட்டும் கொஞ்சு  நான் மட்டும் இப்ப இந்த மாப்பிள்ளை பார்க்க ஓகே சொல்லாம இருந்தா என்ன திட்டி தீர்த்திருப்ப தான என்று கேட்க …

நீயும் என்ன மாதிரி அம்மா ஆகும் போது தெரியும் டி என் டென்ஷன் என்று கூறினார்..

சரி சரி நீ ரூம்ல இரு நான் போய் கிச்சன்ல பெரியம்மாக்கு ஹெல்ப் பண்ணறேன் என்று சென்று விட்டார்…

அவளுக்கோ டென்ஷன் தாங்க முடியாமல் அங்கயே நடை பயின்று கொண்டிருந்தாள்….

இங்க எப்படியோ நம்ம மேடம் ரெடி ஆகிட்டாங்க…

இதே டைம்ல நம்ம ஹீரோ வீட்டில் என்ன நடந்ததுனா…

நம்ம ஹீரோவோட அம்மா தேவகி  டேய் அபிஷேக் உன் தம்பி எங்க போனான்னு தெரியுமா?

அவன ரூம்ல காணோம் டா என்று டென்ஷனாக கத்திக்கொண்டே இருக்க…

அம்மா போன் செய்தேன் அவன் எடுக்கல என்றான் அபிஷேக்..‌

இங்க எல்லாரையும் டென்ஷன் ஆகிட்டு நம்ம ஹீரோ அரவிந்த்  காரில் எங்கயோ

வேகமாக சென்று கொண்டிருந்தான்‌….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!