உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

5
(12)

அத்தியாயம் 3

 

அரவிந்த் வீட்டில் எல்லோரும் தயாராகிக் கொண்டு இருந்தார்கள்.

 

அந்த வீட்டின் தலைவி தேவகி.. கொஞ்சம் பொறுமைசாலி.

இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தாய் தானே.

எந்தவொரு விஷயத்தையும் பொறுமையாக கையாள்வதில் அனுபவம் கொண்டவர்…

கணவர் சுகுமாரன்  முதலில்  துபாயில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்…

அப்பொழுது அவர் மகன்களுக்கு சிறிய வயது…. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தனர்….

தேவகி தான் தன் மாமியாரருடன் வசித்து வந்தார்…..

அவருக்கும் அவருடைய மாமியாருக்கும்  கருத்து வேறுபாடுகள் வந்தது இல்லை….

மகள் போலவே நடத்தினார்….

 

சுகுமாரன் தன் தாயின் மறைவிற்குப் பின் வெளிநாடு செல்லாமல் இங்கேயே தங்கி சிம் அளவில் தொழில் நடத்தினார்…..

 

பணத்திற்கும் வசதிக்கும்  குறைவில்லாமல்  வாழ்ந்தனர்….

அருமையாக குடும்பத்தை நடத்தினார்….

அனைத்து முடிவுகளையும் தேவியே எடுப்பார்… அது தான் சரியாக இருக்கும் என்பது போலவே அவர் முடிவு இருக்கும்…

மூத்தவன் அபிஷேக் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் பயின்று நல்ல வேலை கிடைத்தது…

அவனுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் முடிந்தது… மனைவி  திவ்யா…மகள் நக்ஷத்திரா…‌

 

ஆரம்பத்தில் நன்றாக தான் இருந்து.போகப் போக சிறு சிறு விஷயத்துக்கு முட்டிக் கொண்டு இருந்தார்கள்….

பிறகு அதுவே பழகி விட்டது….

ஆனால் மருமகளை எங்குமே விட்டுக் கொடுக்க மாட்டார்…..

 

அபிஷேக்கும் அரவிந்தும் நண்பர்கள் போல தான்… இருவருக்குமே ஒளிவு மறைவு கிடையாது….

அபிஷேக்கின் வழி காட்டுதல்படி சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்து நல்ல வேலையிலும் இருக்கிறான்….

அந்த வீட்டின் செல்ல பையன்….

இப்ப அவனுக்கு தான் பிரகதிய பொண்ணு பார்க்க போறோம்…..

தேவகி பரபரப்பாக தயார் ஆகிக் கொண்டு இருந்தார்….

சுகுமாரனன் ” நாம் 9 மணிக்குத் தானே போறோம் அதுக்குள்ள நான் கடைக்கு போய் பார்த்துட்டு வந்திடறேன் என்று கிளம்பி விட்டார்….

திவ்யா நீ ரெடியா… பாப்பா ரெடியா….உன் புருஷன் என்ன என்றான். .. எல்லாரும் சீக்கிரம் வாங்க டைம் ஆகிட்டே இருக்கு என்று அவசரப் படுத்தினார்…..

அபிஷேக் கீழே இறங்கி வந்து அம்மா ஒரு 10 மினிட்ஸ் மா என்றான்…..

அரவிந்த் என்ன பண்ணறான் ரெடி ஆகிட்டானா என்று கேட்க…..

அத்தை எங்கள  ரெடியா னு கேக்கரிங்களே .. அரவிந்த் காலையில எங்கயோ அவசரமா கார் எடுத்துட்டு போறாறே உங்களுக்கு தெரியாதா என்று கேட்க..‌‌

டேய் அபி இவ என்ன சொல்றா ….

 

அவன் காலையிலேயே எங்கயோ வேகமாக போனான் இன்னும் வரல ….கால் ரீச் ஆகல என்றான் அபிஷேக்….

 

சுகுமாரன் கடையில் இருந்து வந்து பரவாலயே எல்லாரும் ரெடி ஆகிட்டிங்க போல கிளம்பலாமா என்று கேட்க…

அரவிந்த் எங்கயோ போயிருக்கான் … இன்னும் வரலப்பா என்று அபிஷேக் சொல்ல‌….

அப்பாவுக்கு டென்ஷன் கூடியது….

இவனுக்கு பொறுப்பே இருக்காதா…. என்று அவர் திட்டிக்கொண்டே இருந்தார்… நேரம் 9.30 ஆகி விட்டது…‌

இன்னும் அவனைக் காணவில்லை…..

 

இவர்கள் இருப்பது அவினாசி…

பிரகதி வீடு இருப்பது கோயம்புத்தூரில்…

 

தேவகிக்கோ படபடப்பாக இருந்து…. கணவரிடம் சென்று பொண்ணு வீட்டுக்கு இன்னொரு நாள் வரோம்னு

சொல்லிடலாமாங்க என்று கேட்க…

அவரோ இதுக்கு நான் அவனுக்கு ரொம்ப செல்லம் கொடுக்காதன்னு சொன்னேன்…

இப்ப பொண்ணு வீட்ல என்ன சொல்றது….

நாம தான் போய் அவங்க கிட்ட கல்யாண பேச்சு ஆரம்பிச்சோம்…

இப்ப வரலைன்னு சொன்ன எப்படி இருக்குன்னு யோசிச்சுப் பாரு என்று திட்டிக்கொண்டே இருந்தார்….

 

சரி அவங்க கிட்ட ஏதாவது காரணம் சொல்லி சமாளிக்கலாம்…..

இன்னொரு நாள் வரோம்னு சொல்லிடலாம் என்று ஃபோனை எடுத்து அழைக்கப் போக…

வாசலில் கார் சத்தம் கேட்டது..‌‌

உன் பையன் வந்துட்டான் போல ….

 

எல்லாரும் அவனை முறைத்தபடி பார்க்க….

அவனோ கூலாக “என்ன எல்லாரும் ரெடி ஆகிட்டிங்க போல ‌‌…ஒரு 15மினிட்ஸ்  ல கிளம்பலாம்….என்று வேகமாக படி ஏறி அறைக்கு சென்று தயாராகி வந்தான்….

எங்க ட போயிட்டு வந்த…என்று அபிஷேக் கேட்க…

அண்ணா அது வந்து என்று கூற வருவதற்கு முன்பாகவே சுகுமாரன்  கோபமாக டைம் ஆச்சு எல்லாம் கார்ல் ஏறுங்க… போன வழியில பேசிக்கலாம் என்று கூறினார்…

 

அரவிந்த் கார் நான் ஓட்டரேன்…நீ பக்கத்துல இரு என்று கூற  அருகில் அமர்ந்தான்…

பின் இருக்கையில் தேவகி சுகுமாரன் அமர அதற்கும் பின் இருக்கையில் திவ்யா மகளுடன் அமர்ந்தாள்…

 

அம்மா நானு சித்தா ட்ட போனும் என்று அழுக,அவளை அவன் மடியில் அமர்த்திக்கொண்டான்..

 

நக்ஷ் பேபி சித்தா எப்படி இருக்கேன்னு சொல்லு என் அவன் கேட்க….

“சூப்பர்” என் சொல்லி குழந்தை சிரித்துக் கொண்டே அவனுக்கு முத்தம் கொடுத்தது…

அபிஷேக் அவனிடம் “எங்கட போன… ரொம்ப டென்ஷன் ஆகிட்டோம் தெரியுமா?”….என்க..

பொண்ண பிடிக்கலையோ என்னவோ என்று திவ்யா ஆரம்பிக்க…

 

அவளை பார்வாயால் அடக்கினான் அபிஷேக்….

“ஐயோ அப்படி எல்லாம் இல்லை அண்ணி… நான் 5 மணிக்கே எழும்பிட்டேன்…”

ட்ரிம்மர் ரிப்பேர் ஆகிடுச்சு, அதனாலதான் ஷேவ் பண்ண கடைக்கு போனேன் இன்னைக்கு கடை திறக்கவே இல்லை… அதனால்தான் கடை தேடிப்பிடித்து ஷேவ் பண்ணிட்டு என் ஃப்ரெண்ட் வீட்டுக்கு போய் அவன பிக் அப் பண்ணி அவன் கடைய ஓப்பன் பண்ணி நல்ல ட்ரெஸ் ஒண்ணு வாங்கிட்டு வந்தேன் என்றான்….

அப்பொழுது தான் தேவகிக்கு நிம்மதியாக இருந்தது… அவருக்கும் கூட அந்த  சந்தேகங்கள் இருந்தன.. அதனாலதான் திவ்யா கேட்கும் போது அமைதியாக இருந்தார்….

 

பிறகு அவனிடம் ” இத எங்க கிட்ட சொல்லிட்டு செய்திருக்கலாம் தான் என்று கேட்டார்…

 

கடைசி நேரத்துல தான் இத எல்லாம் செய்யணுமானு திட்டுவீங்க. அதனால் தான் என்று சிரித்தான்…

 

 

அதற்குள் சுகுமார் பிரகதி வீட்டுக்கு அழைத்து ஒரு அரைமணி நேரம் தாமதம் ஆகும் என்று கூறினார்…

 

போகும் வழியில்  “டேய் அண்ணா அந்த கார்னர் ல வண்டி நிறுத்து . ஒண்ணு வாங்கணும் என்றான்”..

 

அவன் அப்பா டென்ஷன் ஆகி “தேவகி என்ன இது ஏற்கனவே டைம் ஆச்சு. இவனுக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்கா இல்லையா இப்படி லேட் பண்ணா அவங்க வீட்டில என்ன நினைப்பாங்க என்றார் “….

 

அப்பா அந்த பொண்ண எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு…

ஒரு 10 மினிட்ஸ் மட்டும் வெயிட் பண்ணுங்க என்றான்…

அதற்கு மேல் யாருடைய பேச்சையும் அவன் கேட்க மாட்டான் என்று நினைத்து அவன் சொன்ன இடத்தில் நிறுத்தினான் அபிஷேக்…

 

அவன் குழந்தையுடன் அங்கு இருக்கும் கடைக்குள் நுழைந்து சில பொருட்களை வாங்கினான்..

 

பெரியவர்களுக்கோ “இவன் என்ன இப்படி பண்றான் என்று கூறினாளும் வெயிட் பண்ணுவதை தவிர வேறு சொல்ல முடியவில்லை…

 

அவன் கையில் பெரிய கவர் இருப்பதை பார்த்தவர்கள் என்னடா இது என்று கேட்க ?

ஓ…அதுவா …அது சர்ப்ரைஸ்… என்று கூறினான்…

நக்ஷ் பேபிக்கு ஒரு சாக்லேட்….

அண்ணி உங்களுக்கு என்று அவளிடம் ஒன்றை கொடுத்தான்..

திவ்யா அவனிடம் தேங்க்ஸ் என்று கூறி… என்ன கொழுந்தனாரே பர்ஸ்ட் மீட்டிங்கிலயே கிஃப்டா என்றாள்…

அவன் பதில் கூறாமல் சிரித்து வைத்தான்..

என்ன டா வெக்கமா என்று அபிஷேக் கேட்க…

என்ன பார்த்தா அப்படியா தெரியுது என்க..

அதற்கு அபிஷேக் இந்தா டிஸ்யூ தொடச்சிக்கோ என்றான்..

இப்படியே கலகலப்பாக சென்றார்கள்…

அப்பா அவங்க கிட்ட அட்ரெஸ் கேட்டுக்கோங்க என்று அபிஷேக் சொல்ல…

அவர் கால் பண்ணி வழி கேட்டார்…

இன்னும் 15மினிட்ஸ் ல போயிடலாம் என்று மகனுக்கு வழி சொல்லியபடியே பிரகதி வீட்டை அடைந்தனர்….

 

அப்படி அரவிந்த் என்ன வாங்கி இருப்பான்னு அடுத்த எபில சொல்றேன்….

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!