உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

4.8
(10)

காலையில் எழுந்தரிக்கும் போது மெத்தையில் படுத்து இருக்கும் உணர்வு…

நன்றாக கண்களை விரித்துப் பார்த்தாள்..

அவளுடைய அறையில் படுத்து இருந்தாள்..

அதுவும் அவள் கணவனின் அணைப்பில் படுத்து இருந்தாள்…

ஓ இவர் தான் தூக்கிட்டு வந்திருப்பாரு என யோசித்தாள்;

மணியை பார்க்க அது 7 என்று காட்டியது…

ஐயோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேன் போல என எழப் போக அவன் அவளை விடவே இல்லை…

ஏங்க டைம் ஆச்சு நான் போறேன்; நீங்க தூங்குங்க என்றாள்..

அவனோ அணைப்பை இன்னும் இருக்கினான்…

மணி ஏழு ஆச்சுங்க ப்ளீஸ்; பால் காரங்க இந்நேரம் போயிருப்பாங்க..

அவங்க போகட்டும் டி.கொஞ்ச நேரம் என் கூட தூங்கு என்று அவளை நெருங்கி படுத்தான்..

அவளும் அதான் வீட்டுல யாரும் இல்லை தானே; கொஞ்சம் நேரம் தூங்கலாம் என்று படுத்தாள்..

பிறகு அவனிடம் என் மேல இருந்த கோபம் போயிடுச்சா மாமு?

சட்டென கண் விழித்துப் பார்த்து நான் இன்னும் கோபமா தானே இருக்கேன் என்றான்…

அப்போ என்ன எதுக்கு பிடிச்சு வச்சிருக்கீங்க? விடுங்க என்று அவனிடம் இருந்து விடுபட்டு வாஷ் ரூம் சென்றாள்..

நான் ஒன்னும் உன்ன பிடிக்கல டி.. தலகாணி ன்னு நெனச்சு உன்ன பிடிச்சுட்டேன் என்றான்…

மீண்டும் திரும்பி வந்து அவனிடம் 

அப்படியா! தலைகாணி ன்னு நெனச்சு தான் கீழே இருந்து தூக்கிட்டு வந்தீங்களா ?

அடிங் போனா போகுது தனியா தூங்கறன்னு சொல்லி தான் தூக்கிட்டு வந்தேன்..

அவளிடம் பதில் இல்லை..

சரி நான் போய் குளிச்சிட்டு வரேன் என்று அவன் சென்று விட்டான்..

ஐயோ ! ரொம்பவே கோவமா இருப்பார் போலவே .. எப்படி தான் சமாதானம் பண்றது என்று யோசித்துக் கொண்டே கீழ் அறையில் குளிக்கச் சென்றாள்…

அவள் குளித்து விட்டு வந்த சமயம் அரவிந்த் ட்ரெஸிங் டேபிள் முன் நின்று தலை துவட்டிக் கொண்டு இருந்தான்…

அதுக்குள்ள குளிச்சிட்டு வந்துட்டாங்களா..

ஹேர் ட்ரையர் அவனை தாண்டி போய் தான் எடுக்க வேண்டும்..

ஆனாலும் செல்ல தயக்கமாக இருந்தது..

அவனும் அவளை பார்த்துக்கொண்டு நின்றானே தவிர அந்த இடத்தை விட்டு நகரவில்லை..

அவனை தாண்டி போய் எடுத்தாள் .. அவள் மேனியும் அவன் மேனியும் உரசியது …

முடியில் இருந்து தண்ணீரால் லேசாக உடை ஈரமாக இருந்தது..‌

அவளின் வாசத்தை முகர்ந்து பார்த்தான்..‌அவளிடம் தவிப்பு…

ட்ரையர் எடுத்துக் கொண்டு  திரும்பும் போது அவள் கழுத்தில் முத்தம் இட்டான்..

அவள் பதறி விட்டாள்..

செம அழகா  இருக்க டி என்று மீண்டும் முத்தம் கொடுத்தான்…

அவளுக்கு இதயம் தாறுமாறாக துடித்தது..

பிரகதி என்ன பாரு என்று அவள் தாடையை பிடித்து நிமிர்த்த..

போங்க எனக்கு பயமா இருக்கு என்று ஓடி விட்டாள்…

யூ ஆசோ க்யூட் என்று தயாராகி கீழே வந்தான்..

அவள் நைட்டியில் இருந்து புடவைக்கு மாறி இருந்தாள்..

மாமு ப்ரேக் ஃபாஸ்ட் முடிச்சுட்டு கோவிலுக்கு போயிட்டு வரலாமா என்று கேட்டாள்..

இருவரும் சாமி கும்பிட்டார்கள்..

பிரகதி கண் மூடி இருந்தாலும் அவள் கண்களில் கண்ணீர்…

எத்தனை ப்ராப்ளம் வந்தாலும் நான் அரவிந்த விட்டு பிரிய கூடாது…எல்லா பிரச்சினைகளையும் தீர்ந்து போகனும் என்று வேண்டினாள்…

அவனும் அவள் நெற்றியில் குங்குமம் வைத்து தாலியை எடுத்து அதிலும்  குங்குமம் வைத்தான்..

காஃபி எடுத்துக்கோங்க.நான் இட்லி ரெடி பண்றேன் .. சாப்பிட்டு கோவிலுக்கு போகலாம் என்று பேசிக்கொண்டு இருக்கும் போது காலிங்பெல் சத்தம் கேட்டது..

கதவை திறந்து பார்த்தவள் ” வாங்க அத்தை” என்று உள்ளே அழைத்தாள்..

குளிச்சி ரெடி ஆகிட்டிங்களா? டிபன் எதும் செய்யல தான..

ஆமா அத்தை இனிமேல் தான் என்றாள்..

நானே எடுத்து வந்துட்டேன்; நீ எதுவும் செய்ய வேண்டாம்.. மதியம் நம்ம வீட்டுக்கு வந்திடுங்க; சரியா..

மாமாக்கு ஆபிஸ் டைம் ஆச்சு.. நீங்க சாப்பிடுங்க என்று இருவரிடமும் சொல்லி கிளம்பி விட்டார்…

அவங்க சாந்தி அத்தை. சின்ன வயசுல இருந்தே அவங்களுக்கு என்னை பிடிக்கும்…

அவளை நிறைய பேச விட்டான்..

இவ புது ஆளுங்க கிட்ட மட்டும் தான் சைலண்ட் போல என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்..

சிறிது நேரத்தில் இருவரும் சாப்பிட்டு விட்டு மருதமலை கோவிலுக்கு சென்றார்கள்…

இருவருக்குமே மறக்க முடியாத கோவில் அது..

படியில நடந்து போலாமா என்று அரவிந்த் கேட்க?

ம்ம்ம்ம் சரிங்க  என்றாள்..

புடவை அணிந்து இருந்ததாள் அவளுக்கு மலை ஏற சற்று சிரமமாக இருந்தது..

ஆனாலும் அரவிந்த் அவளுக்கு ஏற்ற வகையில் நடந்து வந்தான்…

இருவரும் பூஜை முடித்து வெளியே அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்…

இடையிடையே அவர்கள் பெற்றோருக்கும் பேசினர்…

மாமு  “சாரி . நான் இனி மேல் எந்த தப்பான முடிவும் எடுக்க மாட்டேன் என்றாள்”..

இங்க பாரு பிரகதி எனக்கு கோவம் இருக்கு தான்..

நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்…

என் அம்மா மேல தப்பு.. ஆனா அதுக்கு ஈக்வலா உன் அம்மா பண்ணதும் தப்பு தான்…

இதுக்கு இடையில நான் நம்ம லைஃப், நம்ம சந்தோசத்தை இழக்க விரும்பல டி..

ஏன்னா எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்..

உன்ன வேண்டாம் ன்னு சொல்லி விட்டுட்டு போயிருக்கலாம்..

ஆனா நான் அதை செய்யல டி..

நீ போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தப்ப கூட உன் கூட தானே இருந்தேன்…

இனிமேல் இதை பேச வேண்டாம்..

ஏதோ நடந்து முடிஞ்சிடுச்சு…

எனக்கு நல்ல மெமரீஸ் வச்சிகணும் அதான் என் ஆசை..

இப்ப கூட நான் தான் உன்னை தேடி வந்தேன்.. நீ பேசல நான் பேசல அப்படி எனக்கு ஈகோ பார்க்காம வந்தேன்.. என் பிரகதிக்காக வந்தேன் டி என்றான்..

அவன் பேச பேச அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது..

நான் ஏன் இவ்வளோ மெச்யூர்டா நினைக்கல என்று தன்னையே கேட்டுக்கொண்டாள்..

அவனுடைய கர்சீப் எடுத்து கண்களை துடைத்து விட்டவன்.. 

இந்த அரவிந்தோட பிரகதி எப்போதும் அழ கூடாது சரியா?

ம்ம் என்று அவன் கையோடு அவள் கையை கோர்த்துக் கொண்டாள்…

அரவிந்த் நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் ..

சொல்லு டி..

தப்பா நினைக்க மாட்டிங்க தானே..

நான் ஏன் தப்பா நினைக்க போறேன்..

அது வந்து நான் காலேஜ் படிக்கும் போது எனக்கு ஒரு தடவை மாப்பிள்ளை பார்த்தாங்க.. எல்லாம் பேசி முடிச்ச அப்புறம் அந்த மாப்பிள்ளைக்கும் அவன் அக்காவுக்கும் என்ன பிடிக்கவில்லைன்னு சொல்லி கொஞ்சம் ஹார்ஸா பேசி கல்யாணத்த நிறுத்திட்டாங்க..

அப்புறம் மறுபடியும் அவன் வந்து டார்ச்சர் பண்ணிட்டே இருந்தான்..

இந்த கோவில்ல வெச்சு கூட தொல்லை பண்ணிட்டு இருந்தான்..

அதனால தான் நான் மேல படிக்கல என்று கூறினாள்..

ஓ இதனால் தான் பொண்ணு பார்க்க வரும் போது சோகமா இருந்தியா?

ஆமாம் மறுபடியும் அந்த மாதிரி நடந்துடும்மோன்னு பயமா இருக்கும்..

பெரியப்பா தான் ரொம்ப ஃபோர்ஸ் பண்ணாரு அவங்க வீட்ல மாதிரி எல்லாரும் இருக்க மாட்டாங்கன்னு பேசி பேசி சம்மதிக்க வைத்தார் என்று கூறினாள்…

இவ்வளோ பெரிய ஃப்ளாஷ்பேக் இருக்கும்ன்னு நான் எதிர் பார்க்கவே இல்லை டி என்றான்..

கிண்டல் பண்றீங்களா என்று சிணுங்கினாள்..

சும்மா விளையாட்டுக்கு என்றான்..

ஆமா , நீங்க யாரையும் லவ் பண்ணி இருக்கீங்களா?

நான் சொன்னா கோவிச்சுக்க கூடாது என்றான்..

சரி சொல்லுங்க என்றாள்..

ஆமா நான் ஒரு பொண்ண லவ்

பண்ணேன்..

அந்த பொண்ணக்கூட இந்த 

கோவில் ல தான் பார்த்தேன் என்றான்…

அவள் முகம் சுருங்கி விட்டது..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!