உன் விரல் பிடித்திடும் வரம் வேண்டும்

4.5
(11)

அத்தியாயம் :1

சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்

சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன்

பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாட கிண்கிணி யாட

மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்

என்று பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது.

 

அப்போது சமையல் அறையில் பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது.

யாருக்கும் இந்த வீட்டில பொறுப்பே கிடையாது. என்ன பாத்தா மனுசியாவே யாரு கண்ணுக்கும் தெரியாது என்று அர்ச்சனை செய்து கொண்டிருந்தார் அந்த வீட்டின் தலைவி கௌசல்யா.

 

அங்கு வந்த அவரது கணவர் கண்ணபிரான் உனக்கு பேர்ல மட்டும் தான் ஸ்விட் ஆ இருக்கு என்று நக்கல் அடித்து விட்டு வெளியே சென்றார். வாசலில் அழகாக கோலம் போட்டு இருந்தாள் கௌசல்யா. இதனால தான் கோவமா இருக்காளோ என்று தனக்குள்ளே கூறிக்கொண்டே வீட்டினுள் நுழைந்து ஐய்யோ இவள எப்படி சமாதானம் செய்ய என்று விழித்துக்கொண்டு இருந்தார். அம்மாடி  எனக்கு காபி குடிக்கனும் போல இருக்கு நானே ஸ்பெஷலா போட்டு தரட்டுமா என்று கூறிக்கொண்டே ஃபில்டர் காபி தாயாரித்து இருவருக்கும் கப்பில் ஊற்றி எடுத்து வந்து அவரிடம் கொடுத்தார். கௌசல்யாவோ கணவனை முறைத்தபடி வாங்கி அருந்தியவர்  உங்க பொண்ணு கிட்ட விஷயத்தை சொன்னீங்களா இல்லையா என்று கேட்டார்.

ஒரு பெத்த அம்மான்னு கொஞ்சமாச்சும் பயம் இருக்கா. நான் எது சொன்னாலும் கேட்கிறதே இல்லை.

 

ஆனா நீங்க சொன்னா மறக்காம கேட்கிறது.

என்ன பார்த்தா எப்படி தெரியுது என்று கோபித்துக் கொண்டார்.

நீ அவகிட்ட சிடுசிடுன்னு பேசுறத விட்டுட்டு பொறுமையா பேசு என்று கூறினார் கண்ணன்.

அது வந்து அவ எழுந்ததும் நான் அவ கிட்ட பேசறேன் என்றார்.

இதோட பல ஜாதகம் பார்த்தாச்சு  கூடிய வர மாதிரி வந்து தட்டி போகுது என்றார் மதுரம். இவளுக்கு ஒரு நல்ல வரன் வந்தா பாரவால்ல     என்று   வருத்தத்துடன் பேசினார் கௌசல்யா.

விடுமா அவ பிடிக்கலைன்னு சொல்லல அவளோட நேரம் என்னமோ எந்த இடமும் ஒத்து வர மாட்டேங்குது. அதுக்காக நீ அவள பேசி வச்சுக்காத அவ மனசு வருத்தப்படுவா என்று ஒரு தந்தையாக மகளுக்காக பரிந்து பேசினார்.

தாய் தந்தை யாரைப் பற்றி பேசுகிறார்களோ அவள் பெட்ஷீடை  தலை வரை போத்திக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள் பிரகதி.

அவள் ஒரு தனியார் கல்லூரியில் பி. காம் முடித்துவிட்டு மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தாள். ஆனால் அவளுடைய தாய் நீ படிச்சது போதும் வீட்டில் இரு என்று கூறினாள். அவள் படித்து முடித்த சமயம் அவள் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே கௌசல்யா அவ்வாறு கூறினார்.

பிரகதி யோ எவ்வளவு கெஞ்சி கேட்டும் அவள் தாய் ஒத்துக் கொள்ளவில்லை.

அவளது வகுப்புத் தோழிகளும் வந்து அவள் தாயிடம் பேச அவர் அசைந்து கொடுக்கவில்லை. அந்தப் கோபத்தில் ஒரு மாதம் அவளுடைய தாய் தந்தையிடம் அவள் பேசவே இல்லை.

அவள் தாயோ எவ்வளவு வீம்பா இருக்க இதெல்லாம் ரொம்ப தப்பு. அப்பாவுக்கு உடம்பு முடியலன்னு தானே இன்னும் படிக்க அனுப்பல அதுக்கு இப்படி பேசாம யாராவது இருப்பாங்களா என்று ஆதங்கத்துடன் கேட்டார்.

பிரகதிக்கும் தான் செய்வது அதிகப்படியாக தெரியவே தன் தாய் தந்தையிடம் மறுபடியும் சகஜமாக பேசினாள்.

கௌசிமா என்ற கணவனின் குரலில் நினைவுகளில் இருந்து வெளியே வந்தார். நீ என்ன யோசிக்கிறேன் என்று தெரியும் மா. நீ அவளுக்கு கல்யாணம் பண்ணனும்னு நெனச்சு அவ படிப்பு நிறுத்தினா ஆனா அவ இந்நேரம் இன்னொரு டிகிரி ஆவது முடிச்சிருப்பா நீ தான் அவசரப்பட்டு அவ படிப்பு நிறுத்திட்ட. எத்தனை மாப்பிள்ளை பார்த்துட்ட ஒண்ணுமே செட் ஆகல என்று கூறினார்.

இன்னைக்கு வர மாப்பிள்ளை யாவது  எந்த தடங்கலும் இல்லாம நல்ல படியாக அமையனும் என்று கடவுளின் படத்தை பார்த்து வேண்டிக்கொண்டார்.

அந்த சமயம் வீட்டின் அழைப்பு மணி ஓசை சத்தம் கேட்க கண்ணபிரான் யார் என்று பார்த்தார்.

அவருடைய அண்ணன் அருணாசலம் அவருடைய மனைவி ஜோதியுடன் வீட்டுக்கு வந்திருந்தார்.

சில பல விசாரிப்புகளுக்கு பிறகு

ஜோதி பிரகதியின் தாயிடம் பிரகதிக்கிட்ட விஷயத்தை சொல்லிட்டீங்களா என்று கேட்டார்.

தேன் கௌசல்யாவோ இல்லைங்க அக்கா அவளுக்கு இன்னும் விஷயம் தெரியாது! என்று கூறினார்.

சரி விடு நான் போய் அவ கிட்ட பேசி சம்மதிக்க வைக்கிறேன் என்று கூறி பிரகதியின் அறைக்கு சென்றார் ஜோதி.

பிரகதி பிரகதி என்று அறைக்கு வெளியில் நின்று கதவு தட்டினார் ஜோதி.

தூக்குக் கலகத்திலேயே வந்து கதவை திறந்து பிரகதியோ , அம்மா ஒரு கப் காபி என்று கொட்டாவி விட்டவரே கண்ணைத் திறக்காமலேயே கேட்டாள்.

சூட காப்பி என்ன சுட சுட டிபன் ரெடியாயிட்டு இருக்கு போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம் என்று கூறினார் ஜோதி.

சடாரென்று கண்ணீர் திறந்து பார்த்தால் என்ன பிக் மம்மி நீங்க நிக்கிறீங்க! கௌசல்யாவ காணோம் என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

சத்தமா பேசாத நீ பேர் சொல்லி கூப்பிட உங்க அம்மா கேட்டா தலையிலேயே கொட்ட போறா என்றார்.

அதுவும் சரிதான் என்று உதட்டை சுழித்த பிரகதி, அப்புறம் பிக் மம்மி திடீர்னு என்ன விஜயம் இங்கே.

ஏதாவது ஸ்பெஷலா என்று கேட்டாள்.

ஸ்பெஷல் தான் பர்ஸ்ட் போய் குளிச்சிட்டு வா நான் சொல்றேன் என்றார் ஜோதி.

பிரகதி குளிக்க சென்றவுடன் , ஹாலுக்கு வந்து அனைவரிடமும் நான் அவள குளிச்சிட்டு வர சொல்லி இருக்கேன் அவ வந்ததும் பேசிக்கலாம் என்று கூறி

மேலும் தங்கையிடம் நீ ஏதும் அவ கிட்ட கோவமா பேசி வச்சுக்காத அப்புறம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும்போது மூஞ்ச தூக்கி வெச்சுப்பா என்றார் கண்டிப்பாக.

 

நீ தான் அக்கா அவளுக்கு செல்லம் கொடுத்து வைக்கிற என்று சலிப்பாக கூறிக்கொண்டே சமையலறை சென்று விட்டார் கௌசல்யா.

 

மாப்பிள்ளை வீட்டில இருந்து எத்தனை மணிக்கு வர்றாங்க என்று கேட்டார் கண்ணன்.

 

எப்படியும் 10மணி ஆயிடும் பா என்றார் அருணாசலம்.

மணி இப்ப 7.30 தானே ஆகுது அதுக்குள்ள நாங்க பிரகதிய கூப்பிட்டு கோவிலுக்கு போயிட்டு அங்க வெச்சு அவ கிட்ட மாப்பிள்ளை விசயத்த பத்தி சொல்லி புரிய வெச்சி கூப்பிட்டு வந்திடறோம் என்றார் ஜோதி.

நீங்க அதுக்குள்ள எல்லாம் தயார் பண்ணி வைங்க என்று கூறினார்.

பிரகதியை குளித்துவிட்டு தயாராகி வெளியே வந்தாள்.

அவள் பெரியப்பாவிடம் சென்று நீங்க வரேன்னு சொல்லவே இல்ல என்று அவரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அவரும் அவள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியபடியே சரிமா போய் சாப்பிடு நம்ம கோவிலுக்கு போயிட்டு வரலாம் என்று கூறினார்.

அவர் ஏதோ கூற வருவதற்கு முன்பாகவே கௌசல்யா ஏண்டி ரெடியாகி வர இவ்வளவு நேரமா வா வந்து சாப்பிட்டு கோவிலுக்கு போயிட்டு வா உங்க கூட என்று கூறினார்.

ஆத்தி!  ஏது பெரிய   பிளான் வச்சிருக்காங்க போல என்று மனதுக்குள் நினைத்தவள் சரி மா வரேன் வந்து சாப்பிடுறேன் என்று முறைத்துக் கொண்டே சொல்லி சாப்பிட சென்றாள் .

 

அனைவரும் சாப்பிட்டு முடித்து பிரகதியை அவளது பெரியப்பாவும் பெரியம்மாவும் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

அதற்குள் இங்கு வீட்டில் மாப்பிள்ளை வீட்டை வரவேற்பதற்காக தயார் செய்து கொண்டு இருந்தார்கள் கௌசல்யாவும் அவளது கணவனும்.

 

 

 

எப்படி சமாளிச்சு நம்ம பிரகதி மேடமா கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க போறாங்கன்னு தெரியல? பார்க்கலாம் அடுத்த எபில….

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!