லேனாவின் இதழ்களை ஆவேசமாக முத்தமிட்டுக்கொண்டிருந்தவன் அவளை மஞ்சத்தில் சரித்து அவள் மேனி முழுவதும் கரங்களால் சாகசங்கள் புரிந்து கொண்டிருந்தான்.
லேனாவோ ஆண்மை ததும்பிய ஆறடி ஆண்மகனின் ஆதிக்கத்தை விரும்பினாள். மோகம் தலைக்கேறி உஷ்ணப் பெருமூச்சுடன் , “இனாஃப்… ஆதி டேக் மீ…” என கண்கள் சொருக கூறிக்கொண்டே அவனது இடையில் கை வைத்தாள்.
அதுவரை அவளை முத்தத்தால் மூழ்கடித்து அவளின் மோகத்தை தூண்டியவன் அதற்கு மேல் செயல்பட முடியாமல் நின்று விட்டான்.
உள்ளத்தின் வேட்கையை தணிக்க எத்தனையோ வழிகளை கையாண்டு பார்த்துவிட்டான் எதுவுமே அவனுக்கு பலனளிக்கவில்லை.
கடைசியாக பெண்மையின் மென்மையை உணர்ந்தாலாவது அவனின் உள்ளத்து அனல் அணையுமா என்றால் அதுவும் இல்லை.
லேனாவோ அவன் தூண்டிய உணர்வுகளை அடக்க முடியாமல் அவனை மஞ்சத்தில் இன்னும் நன்றாக சரித்து அவன் மேல் ஏறி அமர்ந்தாள் ,” ஆதித் ஐ நீட் யூ பேட்லி…மேன்…லுக்கிங் சோ மேன்லி அண்ட் ஹாட்…” எனக் கூறி கொண்டே அவனது இதழ்களை முற்றுகையிடும் நேரம் அவளைத் தள்ளிவிட்டு எழுந்து நின்றான் ஆதித்யன்.
“ ஐ யம் சாரி…லேனா..யூ மே கோ நவ்…ஐ யம் நாட் இன்ட்ரெஸ்டட் …” என்றவன் எழுந்து தனது சட்டையை மாட்டிக்கொண்டான்.
லேனாவுக்கோ உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்ற ஆத்திரத்தில் அவனை கண்டபடி ஆங்கிலத்தில் திட்டினாள்.
கடைசியாக “ யூ ஆர் இம்பொட்டண்ட்” என்று ஆத்திரத்துடன் மொழிந்தாள்.
அதுவரை அவளது பேச்சினை அமைதியாக கேட்டவன் கடைசியாக அவள் கூறிய வார்த்தைகளை கேட்டு நிதானமாக அவள் அருகில் வந்து வன் அவளது தலைமுடியை இறுகப்பிடித்து,” நா ஆம்பிளையா இல்லையான்னு…உன்கிட்ட நிரூபிக்கனும்ன்னு அவசியம் இல்லை…. புரியுதா…? ஜாஸ்தி பேசின இருக்குற இடம் தெரியாம பண்ணிடுவேன்….” என்று சுத்த தமிழில் கர்ஜித்தவனை புரியாமல் விழித்தாள் அந்த அழகி, ஏதோ மிரட்டுகிறான் என்று மட்டும் அவளுக்கு புரிந்தது.. அவனின் இறுகிய பிடியே சொன்னது அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்று .
அரைகுறை ஆடையிலிருந்த அந்த அழகி , “ சரியான பைத்தியக்காரன்…” என ஆங்கிலத்தில் முணுமுணுத்தபடியே தனது உடைகளை பொறுக்கிக் கொண்டு சென்றாள்.
கேசத்தை அழுத்தக் கோதியவன் கண்ணாடி கதவினை திறந்துக் கொண்டு வெளியே சென்று பனி விழும் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான்…ஆனால் ரசிக்கத்தான் மனமில்லை.
மனம் முழுவதும் ரங்கராட்டினமாய் சுற்றிக் கொண்டிருந்தாள் அவனின் மீனாட்சி.
“ மீனாட்சி….” எனத் தலையை பிடித்து கொண்டு அமரந்துவிட்டான் ஆதித்யன்.
ஆதித்யன்… சங்கரபாண்டியனின் தங்கை வடிவாம்பாள் – மயில்வாகனத்தின் ஓரே மகன் .
வடிவாம்பாள் – மயில்வாகனம் இருப்பது தேனி மாவட்டத்தில் . பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிர்களை விளைவித்து வெளிநாடுகளுக்கென பிரயத்யேகமாக ஏற்றுமதி செய்கிறார்கள்.
திராட்சை தோட்டம் ஒரு புறம், வாழைத் தோப்பு, மறு புறம் என செல்வச் செழிப்பிற்கு குறைவில்லாமல் மலையடிவாரத்தில் பிரம்மாண்டமான அரண்மனை போன்ற
வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
அனைத்து பயிர் வகைகள், இயற்கை உரங்கள், பழங்கள் , காய்கறிகள் என அனைத்திலும் முதல் தரமானவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இதை செயல்படுத்துவது ஆதித்யன் தான்.
பயிர்களை விளைவிக்கக்கூடிய வேலைகள் மற்றும் அறுபடையை மட்டும் மயில்வாகனம் பார்த்துக்கொள்வார்.
மற்றபடி அவ்வூரில் இருந்து விளையும் பொருட்கள் அனைத்தையும் தரம் பிரித்து , பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வேலையை அவனது பால்ய நண்பன் விவேக் தேனியிலிருந்தே முடித்து விடுவான்.
மிகவும் நம்பிக்கைக்குரியவன், ஆதித்தனுக்கு விசுவாசி. தாய் தந்தை இல்லை அவனுக்கு. எனவே படித்து முடித்தவுடன் தனது ஊரான தேனிக்கு அவனை அழைத்து வந்து. அங்கிருந்து ஏற்றுமதி செய்யும் முழுப் பொறுப்பையும் அவனிடமே ஒப்படைத்து விட்டான் ஆதித்யன். தங்களுக்கு சொந்தமான சிறிய தோப்பு வீட்டிலேயே அவனை தங்கச் சொல்லிவிட்டான்.
வடிவாம்பாளுக்குமே இவ்வாறு படித்த நம்பிக்கைக்குரிய மற்றும் அனைத்தையும் நிர்வாகிக்க , கணக்கு வழக்குகளையும் சரி பார்க்க நம்பிக்கையான ஆள் தேவைப்பட்டதால் மறுப்பேதும் கூறாமல் அவனை தங்க வைத்துக் கொண்டார். அவனும் உடனுக்குடன் விவரங்களை வடிவுக்கு தெரிவித்து விடுவான்.
திராட்சை தோட்டம் ஒரு புறம், வாழைத் தோப்பு மறு புறம் என செல்வச் செழிப்பிற்கு குறைவில்லாமல் மலையடிவாரத்தில் பிரம்மாண்டமான அரண்மனை போன்ற வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர் வடிவாம்பாள்- மயில்வாகனம் தம்பதியினர். வடிவின் ஆதிக்கமே வீட்டில் எப்போதுமிருக்கும்.
மீனாட்சி பன்னிரெண்டாம் வகுப்பில் மூன்றுமுறை தோல்வியடைந்ததன் ரகசியம் அவன் மட்டுமே அறிந்ததாகும்.
சிறுவயதில் ஈஸ்வரன், மீனாட்சி, ஆதித்யன் மூவரும் ஒரே பள்ளியில் தான் படித்தனர்.
ஆதித்யன் இருவரை விட மூத்தவன். ஈஸ்வரனுடன் தான் எப்போதுமே மீனாட்சி சுற்றிக்கொண்டு இருப்பாள்.
ஆதித்யனுடம் பேசுவாள் தான் ஆனாலும் ஒரு விலகல் அவனிடம் . அவளின் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக தெரிந்து வைத்திருப்பான் ஆதித்யன். அவளது வரையும் திறமை, புத்திக்கூர்மை, நிதானம், எத்தனை கடினமான கணக்கினை கூட போட்டுவிடுபவள் என்பதை நன்கு அறிந்தவனால் அவளது தோல்வியினை அவ்வளவு எளிதில் நம்ப முடியவில்லை தான்.
ஈஸ்வரனை விட ஒரு படி மேலாகவே அறிந்து வைத்திருந்தான் .
ஈஸ்வரன் தனது பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த நேரம் தான் முத்துக்காளைக்கு சங்கர பாண்டியனுடன் கைகலப்பு, வியாபாரத்தில் நஷ்டம் என அனைத்தும் சேர்ந்து அவரை முடக்கியது. இதில் சங்கரபாண்டியனுடன் துணைக்கு ஆதித்யன் நின்றதால் அவன் மீது ஈஸ்வரனுக்கு வெறுப்பு உண்டானது.
எனவே முழு மூச்சாக ஈஸ்வரன் விவசாயத்தை கையில் எடுத்து உழைத்தால் அவனால் மேற்கொண்டு படிக்க முடியாமல் போனது. அவனது சிந்தனையிலிருந்து மீனாட்சி கூட சற்று பின்னுக்குத் தள்ளப்பட்டாள்.
ஆனாலும் மீனாட்சியின் மேல் ஆதீத பாசமும் நேசமும் நாளுக்கு நாள் வளர்பிறை போன்று வளர்ந்து கொண்டே போனது.
ஈஸ்வரன் பள்ளியை விட்டு நின்ற பின்பு அவளுக்கு மேற்கொண்டு படிக்க விருப்பமில்லை. எனவே பன்னிரெண்டாம் வகுப்பு துவக்கத்தில் இருந்தே மோசமான மதிப்பெண்களை எடுக்க ஆரம்பித்தாள்.
சங்கரபாண்டியன் அவளுக்கென எத்தனையோ தனி ஆசிரியர்களை நியமித்தும் கூட அவள் படிக்கவில்லை.
அனைவரும் “ சார் தப்பா எடுத்துக்காதீங்க…எவ்வளவு தரம் சொல்லித் தந்தாலும் கவனமா படிக்க மாட்டேங்குறா…உங்க பொண்ணுக்கு சுத்தமா படிப்பு வர மாட்டேங்குது…படிச்சதை உடனே உடனே மறந்துடுறா… எங்களால முடியாது சார்…விட்டுடுங்க “ என தலை தெறிக்க ஓடினார்கள்.
கோமதியோ மகளை திட்டித் தீர்த்து விட்டார். சங்கரபாண்டியன் மகளின் மேல் அலாதி பிரியம் கொண்டவர்.
எனவே “ ஏன் மீனாட்சி சரியா படிக்க மாட்டிக்க…?முன்னெல்லாம் வகுப்பில முத ஆளா வருவ…இப்ப கடைசி மார்க்கு கூட வாங்க மாட்டேன்றீயே….? என்னாச்சு மா… ?படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கோ…?” என வாஞ்சையுடன் மகளது தலையை வருடியபடி கேட்டார்.
அவள் பதிலளிக்கும் முன்பு அவளது அண்ணன் பாண்டியன்,” யப்பா…பேசாம அவளை வீட்ல உக்கார வைங்க.. காசுக்கு பிடிச்ச கேடு…நல்லா படிச்சாலாவது மேற்கொண்டு படிக்க வைக்கலாம் . இப்படி மங்குனியா இருந்தா என்னதான் பண்றது. மட சாம்பிராணி…” எனத் திட்டினான்.
அவ்வளவு தான் “ஓ.ஓ..ஓவென அழ ஆரம்பித்து விட்டாள்.
சங்கரபாண்டியனுக்கோ மகள் அழுதவுடன் கோபம் வந்து விட்டது.
“ ஏலேய்…இப்ப சும்மா இருக்கப்போறீயா…? இல்லையா? என் தாயை அழ வைக்காத டா…அவ இந்த வீட்டு மகாலட்சுமி …நீ அழத டா கண்ணு….படிப்பு எதுக்கு படிப்பு…நீ அம்மாவுக்கு கூட மாட ஒத்தாசையா இரு …உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க…எதுவும் சொல்லிப் பாக்கட்டும் அப்பறம் வேற மாதிரி சங்கர பாண்டியனை பாப்பாக இந்த வூட்ல…ஆமா…” எனத் துண்டை எடுத்து உதறிப் போட்டுக்கொண்டு மகனை முறைத்தவாறே சென்றார்.
அவனோ , ” இந்தா…கிளம்பிடாரு தீர்ப்பு சொல்ல சின்னக் கவுண்டர் மாதிரி “ என முணுமுணுத்தது மீனாட்சியின் காதில் விழுந்துவிட்டது.
“ ஏய்..! அப்பாவை யா நக்கலடிக்குற…இரு…இரு….அப்பா இந்த அண்ணனைப் பாருங்க…” என்று ஆரம்பிக்கும் முன்பே அவளது வாயைப் பொத்தி தான்.
“ சும்மாயிரு டி குட்டிச் சாத்தானே… ஏற்கனவே இந்த வீட்ல நீ வச்சது தான் சட்டமா இருக்குது. இதுல இன்னும் என்னைய மாட்டி விடாத…நீ படி இல்லை மாடு மேய்க்க போ…எனக்கென்ன வந்தது. ஆனா நீ என்னவோ ப்ராடு தனம் பண்ணுற அதே மட்டும் தெரியுது. என்னக்காவது மாட்டுவல்ல …இரு ..டி…அப்ப இருக்கு உனக்கு கச்சேரி..” என கூறி அவளது நீண்ட பின்னலை வேகமாக இழுத்து விட்டு அவளை வம்பிழுத்து விட்டே சென்றான்.
“ வெவெவெ….” என பதிப்பு காட்டி விட்டு ஈஸ்வரனை காண கரும்பு காட்டிற்கு சென்றாள்.
அங்கோ சொக்கன் வியர்வை வழிய கரும்புகளை இருக்கமாகக் கட்டிக்கொண்டு இருந்தான்.
உழைத்து உழைத்து உரமேறிய உடல் . மாமானின் நெஞ்சுரத்தையும் , கை வலுவையும் பெருமை பொங்க பார்த்திருந்தாள்.
இதோ இவன் படும் கஷ்டத்திற்காக தான் அவள் தனக்கு பெருகி வரும் சரஸ்வதி தேவியை தள்ளி வைத்து விட்டு அவனருகே ஊன்றுகோலாய் நிற்க பிரயத்தனப்படுககறாள்.
வீட்டிலிருந்து வரும் போதே தனது தாய் சமைத்து வைத்திருந்த அசைவ உணவினை அவனுக்காக சிறிய வாளியில் எடுத்து வைத்து கொண்டு வந்திருந்தாள்.
அவளுக்கோ தன் கையால் சமைத்து அவனுக்கு எடுத்துப் போக வேண்டும் என்ற எண்ணம் ஆனால் ஏன்…? எதற்கு…? யாருக்கு..? என்ற கேள்வி தனது தந்தையிடமிருந்து வரும்.
அதனால் அந்த ஆசையை தன்னுள்ளே புதைத்துக் கொண்டாள்.
ஆனால் அவளின் விருப்பத்தை கோமதி அறிவார்.
எனவே அவள் சொல்லும் முன்னரே தனது அண்ணன் மகனுக்கு பாசத்துடன் சாப்பாட்டை எடுத்து வைத்து விடுவார்.
இவையனைத்தும் சங்கரபாண்டியனுக்கு தெரிந்தாலும் மகளை கடிந்து கொள்ள மனமில்லாமல் கோபத்தை கோமதியின் தான் காட்டுவார்.
அவரோ ,” அவ மாமனை அவ பாக்க போறா…? உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்களே உங்க பொண்ணு கிட்ட சொல்லுங்க..” என பதிலடி கொடுப்பார்.
அது முடியாத காரணம் என்று கோமதிக்கு தெரியும். அதை கூறினால் மகளது பூஞ்சை உள்ளம் வாடிவிடும் என்பதால் கண்டுகொள்ளாமல் இருந்தார்.
அவள் தொலைவில் வரும் போதே கண்டு கொண்டவன் . ஆட்களிடம் கூறிவிட்டு எப்பொழுதும் அமரும் வேப்பமர நிழலில் கைகளையும், முகத்தையும் கழுவி விட்டு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தான்.
“ மாமா …இந்தாங்க உங்களுக்கு பிடிச்ச கோழிக் குழம்பும் ,வருவலும்…” என்றபடியே அவனது முகத்தில் அரும்பிய வியர்வையை தனது தாவணியால் துடைத்து விட்டாள்.
அவனோ அவளை விலக்கி விட்டு ,” எத்தனை தடவை சொல்றது மீனாட்சி இப்படி தொட்டு பேசாதன்னு…ஊர்க்கராவயெல்லாம் பாப்பாக…” என்றான்.
அவளோ இன்னும் அவனருகே நெருங்கயமர்ந்து ,” இங்க பாரு மாமா…உன்னைய தொட எனக்கு மட்டுந்தேன் உரிமை இருக்கு…வேற யாருக்கும் உன்னைய விட்டுத் தரமாட்டா இந்த மீனாட்சி….ஆமா…” எனக்கூறி அவனுக்கு ஊட்டி விட்டாள்.
ஈஸ்வரனோ ,” ஆமா…பரிட்சை முடிவு என்னாச்சு…? பாஸானியா…?” என்றான்.
மீனாட்சியோ திரு திருவென முழித்துக் கொண்டே,” இல்லை மாமா…மூணுல ஃபெயில் ஆகிட்டேன்…” எனத் தயங்கியபடி கூறினாள்.
ஈஸ்வரனுக்கோ கோபம் வந்துவிட்டது, “இங்க பாரு புள்ள…நீ இனி எப்ப படிச்சு பாஸ் பண்ணுறியோ இனி அப்ப எனனைய பாக்க வா…எனக்கென்னமோ நீ வேணும்ன்னே ஃபெயில் ஆகுன மாதிரி இருக்கு…உண்மையைச் சொல்லு…. ஏதாச்சும் தகிடுதித்தோம் பண்ணுறீயோ…நீயு…” என ஓரளவு சரியாகவே கணித்தான்.
அவளோ பதறிப்போய்,” நீ…கூட என்னைய நம்ப மாட்டேங்குற ல . எனக்கு படிப்பு வர மாட்டேங்குதுன்னு எவ்வளவு தரம் சொல்றது. எல்லாரும் சேர்ந்து என்னைய படுத்துறீக….போ…இனி நான் உன்னைய பாக்கவே வரமாட்டேன்…போ …மாமா..” எனப் போலியாக கோபித்துக் கொண்டு எழுந்தாள்.
உடனே அவளின் கைப்பிடித்து தன்னருகே நெருக்கமாக அமர்த்திக் கொண்டு அவளது தாடையை பிடித்து,” சரி டி தங்கம்…கோவிச்சுக்காத…ஒரு நாள் உன்னை பாக்கலைன்னா அந்த நாள் நாளாவே இருக்காது…மாமனை விட்டு விலகிப் போகாத …சரி விடு…வராத படிப்பை ஏன் பிடிச்சு தொங்கிட்டு இருக்க… நீ அத்தைக்கு கூட மாட ஒத்தாசையா இரு…இல்லன்னா உங்க அண்ணனுக்கு ஒத்தாசைப் பண்ணு…ஆனா.. சும்மா இருக்காத…எதுன்னாலும் பண்ணிட்டே இரு…தெனம் உன் முகத்தை பார்த்தா தான் எனக்கு சோறே இறங்கும் …” என்றவன் அவளின் கைகளை தனது நெஞ்சினில் வைத்துக் கொண்டான்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஜீவனின் இதயம் சுக்கல் சுக்கலாக நொறுங்கி தான் போனது.
Super Anti hero story ya pa