உயிர் தொடும் உறவே -37

4.8
(9)

உயிர் 37

 

ஈஸ்வரன் விஷயத்தில் தான் முதன்முறையாக மீனாட்சி தன் தந்தையின் மனம் ஏன் இவ்வளவு கல்நெஞ்சாகிப் போனது..? என வெறுத்து போனாள்.

ஈஸ்வரனை சங்கர   பாண்டியனுக்கு அவ்வளவாக பிடிக்காது தான் ஆனால் இந்த அளவிற்கு பிடிக்காதென்பதை அன்று தான் கண்கூடாக கண்டு கொண்டாள்.

தந்தையின் மனிதாபமற்ற குணத்தை ஏற்க முடியாது போனதன் காரணமாக உள்ளுக்குள் இருந்த ஏதோ ஒன்று அவளை தந்தையிடம் முகம் பார்த்து பேச விடாமல் செய்தது.

இன்று கைகளை பிடித்து கொண்டு இருப்பவரை காண‌ பரிதாபமாக தான் இருந்தது அவளுக்கு.

அவளை கைகளைப் பிடித்து அருகில் அமர வைத்தவர் மெதுவாக பேச ஆரம்பித்தார்.

“ மீனாட்சி…இந்த அப்பாவை…மன்னிச்சிடு ..டா…பேசா…ம இருக்கா…த மா…முன்ன…மாதிரி…இல்லைன்னாலும்…ஏதாவது ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசு…தங்கம்…எல்லா..ரோட…வெறுப்பை…சம்பாதிச்சு..வச்சிருக்கேன்இந்த…பாவி…ஆனா…நீங்க எல்லாரும்…வயசுல…சின்னவகளா..இருந்தாலும்.. பெரியவங்க மாதிரி நடந்துகிட்டீக…நான்..நான்…தான்…”என உணர்ச்சிவசப்பட்டார்.

“ இது பாருங்க…மொத…உடம்பு தேறி வாங்க…. அப்பறம் பேசிக்கலாம்…இப்ப‌ கண்ணை மூடி தூங்குங்க…” என்றாள் அதட்டலாக.

அவரோ “ இல்ல…நீ இந்த அப்பா..வ மன்னிச்சிட்டேன்னு சொல்..லு…” என்றார் விடாப்பிடியாக .

ஒரு‌ பெருமூச்சுடன் அவரருகில் குனிந்தவள் அவரை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, “மன்னிச்சிடுவேன்னு நினைக்கேன்….வெசனப்படாதீக..நல்லா தூங்குங்க..நான் இங்கனதேன் இருக்கேன்… மனசை போட்டு உழப்பிக்காதீக..” என்று பொத்தாம் பொதுவாக சொல்லி வைத்தாள்.

ஆதியை ஏற்றுக்கொள்ள அவள் எடுத்துக் கொண்ட நேரமே அதிகம்.

சட்டென்று அவளால் மன்னித்து விட்டேன் என்று தந்தையிடம் கூற முடியவில்லை. நாளைடைவில் மாறும் என்று நம்பினாள்.

சங்கர பாண்டியனுக்கு இந்த அளவிற்காகவது மகள் இறங்கி வந்து பேசினாளே‌..என்றிருந்தது.

ஆதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கண்களை ஆயாசமாக மூடிக் கொண்டார்.

சற்றே அமைதியடைந்தது அவரது மனம் .

காலத்தினால் நிச்சயமாக எதனையும் மாற்றக் கூடிய சக்தி உள்ளது என்பது உண்மையே…

அவளது  பலவந்தமாக பெற்றுக் கொண்ட ஆதி…வலுக்கட்டாயமாக அவளது உடலையும் எடுத்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக மீனாட்சி உதறி தள்ளியிருப்பாள்.

அவளுக்கான நேரத்தையு

ம் அவளுக்கான அடையாளத்தையும் கொடுத்தான்.

மெல்ல மெல்ல தான் அவளால் ஆதியை கணவனாக ஏற்றுக் கொள்ள முடிந்தது .

சில நேரங்களில் சில விஷயங்களை கிளறாமல் இருப்பதே அமைதியான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.

வடிவாம்பாளும் மயில் வாகனமும் வந்து சங்கர பாண்டியனை பார்த்து விட்டு சென்றார்கள்.

வடிவாம்பாள் வழக்கம் போல மீனாட்சியிடமும் கோமதியிடமும் பேசவில்லை.

ஏற்கனவே மீனாட்சி ஆதியிடம் நடந்துகொண்ட முறையை பார்த்தவருக்கு அவள் மீது கோபம் இருந்தது.

ஆதி அதற்கான காரணத்தை அவரிடம் எடுத்துக் கூறினான்.

ஆனாலும் அவர் சமாதானம் ஆகவில்லை.

சங்கர பாண்டியன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு பத்து நாட்கள் ஆகியிருந்தது.

மீனாட்சியும் ஆதியும் லண்டனுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம்.

எனவே இருவரும் அவரிடம் விடைப்பெற்றுச் செல்ல வந்திருந்தனர்.

“ மாமா…நாங்க கிளம்புறோம்…உடம்பை பாத்துக்கோங்க…தனியா எங்கேயும் போகதீங்க…” என்றான் ஆதி.

மீனாட்சியும், “ உடம்பை பாத்துக்கோங்க…கிளம்புறேன் பா” என்றாள்.

சங்கர பாண்டியன் ,  “கோமதி…இங்க வா…” என்றார்.

“ என்னங்க…என்ன வேணும்..?” என்றார்.

“பாண்டியனையும் கூப்பிடு…நான் சொல்ற இடத்துக்கு போவணும்…அம்மா.. மீனாட்சி நீயும் எங்கூட வா..ஒரு மணி நேரத்தில வந்துடலாம்” என்றார்.

யோசனையுடன்  “சரிப்பா…” என்றாள்.

“உடம்பு கொஞ்சம் நல்லா ஆகட்டுமே…அப்பறம் வெளியே போலாம்ல…?” என்றார் கோமதி.

“ இல்லை கோமதி…சில விஷயங்களை உடனே செஞ்சிபுடனும்…காக்க வைக்க கூடாது…ஆதி நீயும் வாப்பா…”என்றார்‌.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!