எனக்காக பிறந்தவனோ நீ

4.6
(5)

­அத்தியாயம் 2

ஆதிராவிற்கு பப்ளிக் எக்ஸாம் முடிந்தது அவள் வீட்டில் உள்ளவர்கள் அவளை படிக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார்கள் அதைக் கேட்டு டோட்டலாக அப்செட் ஆகிவிட்டாள் ஆதிரா. அவள் குடும்பத்தை எதிர்த்து அவளால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது. அப்படிப்பட்ட குடும்பத்தில் தான் அவள் பிறந்து இருந்தாள். படிப்பதற்கு கூட அவர்கள் நினைத்தால் மட்டுமே முடியும். அவளுடைய காதல் விஷயம் தெரிந்தது அவளை மிரட்டி தான் பதினோராம் வகுப்பு படிக்க வைத்தார்கள். அவள் ஸ்கூலுக்கு செல்வதற்கு முன்பாக உன்னை பெண் கேட்டு வருகிறார்கள் என்று அவள் அம்மா சொல்ல, அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதை எதையும் கண்டுகொள்ளாமல் ஸ்கூலுக்கு சென்றாள். இரண்டு நாள் பதினோராம் வகுப்பிற்கு சென்றவள் மூன்றாவது நாள் அவளை படிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ஏன் என்று கேட்டதற்கு உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்று சொல்லி அவளை அவள் அத்தை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்கள்.

மாப்பிள்ளை வீட்டார்கள் வருகிறார்கள் என்று தெரிந்ததும் ஆதிராவை மணப்பெண் போல் ஓரளவிற்கு அலங்காரப்படுத்தி அவர்கள் முன் நிற்க வைக்க, அனைவருக்கும் அவளை பிடித்துப் போனது. அரவிந்த் தவிர வீட்டில் உள்ள முக்கியமான ஆட்கள் மட்டுமே அங்கு வந்திருந்தார்கள். ஆதிராவை போட்டோ எடுத்து அரவிந்திருக்கு காட்டினார்கள் அரவிந்திருக்கும் ஆதிராவை மிகவும் பிடித்துப் போனது. அரவிந்த் எதிர்பார்த்தது போலவே பெண் அமைந்தது. திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்தான். அதற்கு முன் தானும் ஒரு முறை அதிராவை பார்க்க வேண்டும் என்று சொல்ல, மாப்பிளை விட்டார்கள் ஆதிரா வீட்டாரிடம் சொல்லி சென்னைக்கு அழைத்து வந்தார்கள்.

ஆதிராவை அரவிந்துக்கு பிடித்துப் போக அவளுக்கு மோதிரம் போட்டுவிட்டார்கள் அரவிந்த் வீட்டினர்.

அடுத்த மாதம் திருமணம் வைத்து கொள்ளலாம் என்று சொல்ல அனைவரும் சரி என்று சொல்லி விட்டார்கள்.

அதிரா ஒரு மாதம் வரை அவள் அத்தை வீட்டில் தான் இருந்தாள். அவளுக்கு வருணுடன் பேசும் வாய்ப்பு துளியும் கிடைக்கவில்லை. தனக்கு திருமணம் என்று கூட அவனிடம் சொல்ல முடியாமல் தவித்தாள். அதன் பிறகு ஆதிராவை சென்னைக்கு அழைத்து சென்று மாப்பிள்ளை வீட்டார்கள் அவர்களுடைய செலவிலேயே திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடித்தனர்… வீட்டிற்கு அருகிலேயே மண்டபம் கிடைத்ததால் திருமணம் நடந்த முடிந்த சிறிது நேரத்திலேயே மாப்பிள்ளை வீட்டிற்கு அனைவரும் சென்று விட்டார்கள். 

முதல் இரவுக்கான ஏற்பாடுகளும் நல்லபடியாக நடந்து கொண்டிருந்தது. மணப்பெண்ணிற்கு வேறு ஒரு புடவை உடுத்திவிட்டு முதலிரவுக்கான அறைக்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.

ஆதிராவிற்கு முதலிரவு பற்றிய எந்த ஒரு அறிவும் இல்லாததால் அவளுக்கு இப்படி தான் தன் கணவரோடு இருக்க வேண்டும் என்று தெரியாமல் அவன் அருகிலேயே செல்லாமல் தூக்கம் வருகிறது என்று தூங்கி விட்டாள்.. பாவம் முதல் இரவு அன்று அரவிந்தின் நிலைதான் மோசமானது.

தன் அருகில் அழகு பதுமையை வைத்துக் கொண்டு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று பாவமாக படுத்து தூங்கிவிட்டான்.

இப்படியே நேரம் கடக்க, பொழுது விடிந்தது கூட தெரியாமல் ரொம்ப நேரமாக இருவரும் தூங்கி விட்டார்கள். மாப்பிள்ளை வீட்டார்கள் ஒவ்வொருவராக கதவை தட்டிய பிறகு தான் இருவரும் தூங்கி முழித்தனர்.

இருவருமே மணியை பார்க்க மணி 11 என்று காட்டியது இவ்வளவு நேரமாக தூங்கியது நினைத்து ஆதிரா பயத்துடன்  அமர்ந்திருக்க, அரவிந்தோ அவன் வீட்டில் இருப்பதால் எந்த ஒரு பயமும் இல்லாமல் அங்கிருந்து எழுந்து வெளியே சென்றவன் தன் அக்கா மகளை அழைத்து கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவளிடம் சொல்லிக் கொடு என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான். அரவிந்தின் அண்ணன் மனைவியும் அவன் அக்கா பொண்ணும் தான் ஆதிராவிற்கு கணவனுடன் எப்படி இருக்க வேண்டும் என்று கிளாஸ் எடுத்தனர். இருவரின் புண்ணியத்தால் எப்படியோ ஒரு வாரம் கடந்த நிலையில் இருவரும் வெற்றிகரமாக தாம்பத்தியத்தை தொடங்கியிருந்தார்கள்.

தான் தன் மனைவியோடு ஒன்று சேர்ந்ததை நினைத்து அரவிந்த் வானத்தின் உச்சிக்கே சென்று இருக்க, அந்த சந்தோஷத்தோடு பாத்ரூமிற்கு குளிக்க சென்றான். தண்ணீரை திறக்கும் போது டைல்ஸ் கீறி அவன் கையில் ரத்தம் வர ஆரம்பித்து விட்டது..

அரவிந்த் குளித்து முடித்து வெளியே வந்த பிறகு ஆதராவிடம் அந்த கையை காட்ட அதை பார்த்த ஆதிரா பதறிப் போய் என்னாச்சு எப்படி இந்த ரத்தம் வந்துச்சு என்று கேட்க,

அதுவா என் பொண்டாட்டி கூட இருந்த சந்தோஷத்துல தலகால் புரியாமல் ரொம்ப ஆடிட்டேன் அதான் நான் ரொம்ப ஆடிட்டேனு இந்த ரத்தம் வந்து என்கிட்ட சொல்லுச்சு என்று அரவிந்த் சொல்ல, அந்த காயத்திற்கு மருந்து போட்டு விட்டால் ஆதிரா….

இப்படியே நாட்கள் மெல்ல நகர அந்த புதிய வாழ்க்கைக்குள் நுழைந்த ஆதிராவிற்கு அனைத்துமே சற்று வினோதமாகவே தென்பட்டது. தன் கணவரோடு தாம்பத்தியம் நடத்திய பிறகு தூங்குவதும், லேட் ஆக இருந்திருப்பது வீட்டில் மாமனார் மாமியார் அனைவரும் சாப்பிட்ட பிறகு சாப்பிடுவது, அனைவரோடு சேர்ந்து இருப்பது இது அனைத்துமே அவளுக்கு புதியதொரு அனுபவம் தான்.

இப்படி இருக்க அந்த குடும்பத்தில் பல சண்டைகள் வந்தது. அரவிந்தின் மூத்த அக்கா ஆனந்தி தன் தம்பியிடம் வந்து உன் மனைவி மதியம் தூங்குகிறாள் தூங்கி முழித்து லேட் ஆக வருகிறாள் அனைவரும் சாப்பிடுவதற்கு முன்பாக சாப்பிடுகிறாள் என்று குறை சொல்லிக் கொண்டிருப்பது வழக்கமாக வைத்திருந்தார்கள்.

ஆனால் தன் மனைவியிடம் அரவிந்த் என்ன என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் தன் குடும்பம் சொல்வது தான் வேத வாக்கு என்று ஆதிராவை அடிப்பது கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவது என் இருந்தான் அரவிந்த். அது எதுவும் ஆதிராவிற்கு பிடிக்கவில்லை ஆனந்தியின் மகள் வயதான பெண்தான் ஆதிராவும். தன் மகள் வயதில் இருக்கும் பெண்ணை தன் மகள் போல் நடத்தாமல் ஒரு எதிரி போல் நடத்தினார். மற்றவர்கள் முன்னிலையில் தன் தம்பி மனைவி தனக்கு மகள் தோழி என்று பெருமையாக பேசுவதும் யாரும் இல்லாத சமயம் அவளை குறை கூறி திட்டுவதும் கஷ்டப்படுத்துவதும் இப்படியே அவளிடம் நடந்து கொண்டிருந்தார். ஆதிராவும் தன் கணவனுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டே போனாள்.

அடுத்தது நான்கு மாதத்தில் ஆதிரா கரு தறித்திருக்க அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள் அனைவரும்… அப்படி மற்ற அனைவரும் தாங்குவது அனைத்தும் அவருக்கு பொறாமையாகவே இருந்தது. தம்பியின் மனைவியை ஹாஸ்பிடல்ல அழைத்துச் செல்வது அவளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுப்பது அனைத்தும் ஆனந்தியின் வேலையாக இருந்ததால் அது ஆனந்திக்கு துளியும் பிடிக்கவில்லை. தன் அம்மா சொல்லிவிட்டார் என்று காரணத்திற்காக ஆதிராவிற்கு அனைத்தும் பிடிக்காமல் செய்து கொண்டிருந்தார்.

அந்த சமயம் அரவிந்தின் அண்ணன் மனைவி மூத்த அக்கா ஆதிரா நால்வரும் ஒரு திருமணத்திற்கு சென்றார்கள் அரவிந்தின் அக்காவும் அண்ணனும் சாப்பிட்டு முடித்து மண்டபத்திற்கு வெளியே நிற்க ஆதிராவும் அரவிந்தின் அண்ணன் மனைவியும் அவர்கள் இருவரையும் தேடிக் கொண்டிருக்க, இருவரும் கண்களில் தென்படாததால் அரவிந்தின் அண்ணன் மனைவி தன் கணவருக்கு கால் செய்தாள்.

எங்க இருக்கீங்க நாங்க சாப்பிட்டோம் என்று அவள் சொல்ல,

நான் கீழ தான் இருக்கேன் என்று சொல்லிய அரவிந்தின் அண்ணன் அருண் மேலே பார்க்க,

சரியாக அந்த நேரம் ஆதிரா எட்டிப் பார்க்க கீழே அவர்கள் நிற்பது தெரிந்தது அதை பார்த்தவுடன் இருவரும் சினேகமாக புன்னைகைக்க, ஆதிரா அவள் அக்காவிடம் அக்கா மாமா சிரிக்கும் போது அழகா இருந்தாரு என்று சொல்ல,

அவள் முகம் போன போக்கை பார்த்து, நாம ஏதாவது தப்பா சொல்லிட்டோமா என்று நினைத்து விட்டு, இல்ல அக்கா மேல பார்த்தாங்க ஒருவேளை நீங்கன்னு நினைச்சு என்னைப் பார்த்து சிரிச்சிருப்பாங்க போல என்று விளக்கம் கொடுத்தால் ஆதிரா. அப்போதும் அவள் அமைதியாகவே இருந்தாள்.

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!