என் கண்ணாடி பூவே நீதான்டி-டீசர்

5
(6)

என் கண்ணாடி பூவே நீதான்டி

டீசர்:

பல்லவி எங்கோ வேக வேகமாக சென்றுவிட்டு அவசரமாக தன் வீட்டிற்குள் நுழைய அங்கோ நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. அவளின் பாட்டி கோதை, தாத்தா ராம்சுந்தர் இருவரும் கூடத்தில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி பெட்டியையே வெறித்துக்கொண்டிருந்தனர். அதில் ஓடிக்கொண்டிருக்கும் செய்தி அவர்களை அப்படி வெறிக்க வைத்திருந்தது.

பல்லவிக்கு அவர்களின் அதிர்ச்சியை பார்த்து அவர்களுக்கும் விடயம் தெரிந்துவிட்டது என்பதை புரிந்துக்கொண்டவளோ அவர்களை குற்றவுணர்வாக பார்த்தவாறே தலைக்குனிந்து நிற்க.. முதலில் அவளை கோதை தான் கண்டுக்கொண்டார்..

ஏங்க.. பல்லவி..”என்று தன் கணவனிடம் பல்லவியை காட்டி திசைத்திருப்ப.. சுந்தரோ வேகமாக அவள் அருகில் சென்றவர்.. “என்னம்மா இதெல்லாம்..”என்று தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பும் செய்தியினை நோக்கி கைக்காட்ட.. பல்லவிக்கோ உடல் நடுங்கி போனது.

பல்லவி நடுங்கியவாறே தொலைக்காட்சியினை நிலை குத்திய பார்வையுடன் பார்த்தவளுக்கு அதில் செய்தியாளர்கள் பேசும் செய்தி தான் காதினை புண்ணாக்கியது.

இன்று பரப்பரப்பா பேசப்படுற செய்தி என்னனா நம்ம வருங்கால முதலமைச்சரும் சினிமாவுல அமெஸிங் ஸ்டாருன்ற பட்டத்துக்கு சொந்தக்காரருமான மிஸ்டர் வினையன் ரகோத்மனுக்கும் அவரோட அப்பா அதாவது இன்னாள் முதலமைச்சருமான விஜயவிக்ரமன் அய்யாவுக்கு பூனைப்படை தலைமை பாதுகாப்பாளரான ரஞ்சித்தோட மனைவி பல்லவிக்கும் இடையில தவறான உறவு இருக்குறதா செய்தி பரவிக்கிட்டு வருது. அத உண்மையாக்குற விதமா நிறைய போட்டோக்கள் கூட கிடச்சிருக்கு..”என்று செய்தி வாசிப்பாளர் கூறியவாறே பின்னால் பல்லவியும், வினையன் ரகோத்மனும் மிகவும் நெருக்கமாக நிற்பதும், அவளை இடையில் கைக்கொடுத்து தூக்கிப்பிடித்திருப்பது போலவும் புகைப்படங்கள் ஸ்லேஸாகி ஓடிக்கொண்டே இருந்தது.

பல்லவிக்கு அனைத்தையும் பார்க்க பார்க்க அதிர்ச்சிக்கும் மேல் அதிர்ச்சியாகி இருக்க. அவளின் முகம் கலங்கி போய் இருந்தது. எவ்வளவு பெரிய கறை இது. அவள் வாழ்நாளிலையே இந்த கரையினை அவளால் துடைக்க முடியுமா என்ன. தன் கணவனை இந்நிலையிலும் நினைத்துப்பார்த்தவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வர..

இதனை எல்லாம் அந்த பிரம்மாண்ட நூறு இன்ச் டிவியில் கால் மேல் கால் போட்டு சோபாவில் உட்கார்ந்து கையில் ஸ்காட்ஸ் க்ளாஸுடன் வெறிக்க பார்த்திருந்த வினையன் ரகோத்மனுக்கோ உடல் பற்றிக்கொண்டு எரிய அதன் காரணமாக அவனின் முகம் சிவப்பேறி போய் இருந்தது.

ஹவ் டேர் யூ பல்லவி.. உனக்கு எவ்ளோ திமிரு இருக்கும்.. ஐ வான்ட் பனிஸ் யூ.. அன்ட் ஐ வில் நாட் லெட் யூ கோ அன்பனிஸ்ட்..”என்று ஆக்ரோஷமாக கூறியவனின் கண்களிலோ அக்னி ஸ்வாலை எரிந்துக்கொண்டிருந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!