என் தேடலின் முடிவு நீயா

4.8
(27)

தேடல் 01

 

இரண்டு மாடிகள் கொண்ட மாளிகை போன்ற பிரம்மாண்டமான வீடு அது…

 வெள்ளை நிற பெயிண்ட் அடித்து முழு வீடும் பார்க்க பளிச்சென்று இருந்தது…

நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்ஸோ முகம் பார்க்கும் அளவுக்கு பல பல என்று மின்னிக் கொண்டிருந்தன…

அவ்வீட்டின் அமைப்பும் அங்கிருந்த பொருட்களுமே அதன் ஆடம்பரத்தையும் பணச் செழுமையையும் எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தன…

 அந்த வீட்டின் மாடி அறையிலிருந்து தட் தட் என்ற காலடி ஓசையுடன் வேகமாக கீழ் இறங்கி வந்து கொண்டிருந்தான் அவன்…

கருப்பு நிற கோட் சூட் அணிந்திருந்தான்…

 அவன் அணிந்திருந்த கோட் சூட்டையும் தாண்டி அவனது திடமான மேனியும் புஜங்களும் புடைத்து கிளம்பிக் கொண்டிருந்தன…

 ஆறடிக்கும் மேல் உயரம் இருப்பான்….

 மாநிறம் அவன்…

கழுகு போல் அனைத்தையும் கூர்மையாக குத்திக் கிழிக்கும் பழுப்பு நிற கண்கள் அவனுக்கு…

அவ்வசிய கண்களிள் ஈர்க்கப்பட்டே பல பெண்கள் மயங்கி விடுவர்…

அக்கண்கள் பெண்களை மயக்குவதில் மட்டுமல்ல… கூடவே எரிக்கவும் எச்சரிக்கவும் செய்யும்….

பார்க்கும்போதே ஒரு பயமும் தோன்றிவிடும்…

சிரிக்காத முரட்டு உதடுகள்…

அவனைப் போலவே யாருக்கும் அடங்காத அலை அலையான சிகை…

அவன் தான் அபின்ஞான்…

அவனது பெயருக்கு ஏற்றார் போலவே உச்சக்கட்ட அறிவையும் விவேகத்தையும் கொண்டவன்…

ஒரு வேலையை எடுத்தால் அதில் மும்முறமாக இருந்து அதை முடிக்காமல் விடமாட்டான்…

தன் வேலையை நிறைவேற்ற நேர்வழியையோ குறுக்கு வழியையோ பயன்படுத்தி… இறுதியில் எவ்வாராவது ஜெயித்து விடுவான்…

தன் விருப்பப்படி தொல்பொருள் ஆய்வில் (Archaeology) இளங்கலை பட்டத்தை முடித்து… தன் தந்தையின் கம்பெனியான “அபி ஜெம் & ஜூவலர்ஸ் நடத்துவதற்காக, நோர்வே சென்று ஜெமோலஜியில் (Gemology) பிஎச்டி யை முடித்தான்…

இப்போது “அபி ஜெம் & ஜூவலர்ஸ்ஸை” வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கின்றான் அபின்ஞான்…

  முழு நாட்டிலும் கைவிட்டு என்ன கூடிய பணக்காரர்களில் அவனும் ஒருவன்…

ஆசியாவிலே இரத்தின கற்கள் துறையில்(gemstones) முதலாம் இடத்தில் இருக்கின்றான் என்றால் கேட்கவும் வேண்டுமா?

 இந்த நிலையை அடைந்த அவனுக்கு அத்தனை வயதாகி விடவில்லை… முப்பது வயது மாத்திரமே…

கீழ் இறங்கி வந்தவன், தன் கம்பெனிக்கு செல்ல தயாராகவும்… அவனிடம் பேச பயந்தபடி கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்தார் அவன் தாய் அன்னபூரணி…

 கையில் ஆப்பிள் வாட்ச்சை கட்டிய படி அன்னபூரணி அம்மாளை திரும்பிப் பார்த்த அபின்ஞான், “என்ன விஷயம்மா” என்று கறாராக கேட்டான்.

 அன்னப்பூரணி அம்மாளுக்கு அவனது கடினமான குரலிலே தான் சொல்ல வந்தது மறந்து விட்டது.

 “அபி நான் கோயிலுக்கு போகணும்” என்று அவன் தாய் பயந்தபடி கூறவும்,

 “அம்மா… அப்பா கூட போக வேண்டியது தானே, எனக்கு டைமே இல்ல… சும்மா எதுக்கு என்னையே கூப்பிடுறீங்க?” என்று அவன் காட்டமாக கேட்க,

பெருமூச்சு விட்ட அன்னபூரணி அம்மாள், “ஏசாம விட்டானே… அதே போதும்” என்று நினைத்தவர், முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு நின்று இருக்கவும்,

அதைப் பார்த்த அபின்ஞான், “போதும் போதும்… உங்கள் நடிப்பு, இன்னக்கி எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு… அதனால இப்ப உங்கள அழைச்சிட்டு போக முடியாது… ஈவினிங் நேரத்தோட வந்து உங்கள கூட்டிட்டு போறேன்” என்றவன், அவர் பதிலை எதிர்பாராமலே வெளியே இருந்த அவனது கருப்பு நிற பிஎம்டபிள்யூ காரில் ஏறிப் பறந்தான்…

 அவன் சென்றதும் தான் அன்னபூரணி அம்மாளுக்கு அவர் சொல்ல வந்த விஷயமே ஞாபகம் வந்தது, “ஐயோ மறந்துட்டனே… சரி பரவாயில்ல, ஈவினிங் வருவான் தானே அப்ப பார்த்துக்கலாம்” என்றபடி தொலைக்காட்சியின் முன் அமர்ந்து அவர் பார்க்கும் சீரியலை பார்க்க தொடங்கி விட்டார்.

 “அபி ஜெம் & ஜூவலர்ஸ்” என்ற பெரிய பெயர் பலகையுடன், பத்து மாடிகள் கொண்ட பாரிய கட்டிடம் ஒன்று உயர்ந்து நின்றது…

கட்டிடம் முழுவதும் நீல நிறக் கண்ணாடிகள் பதிக்கப்பட்டு சூரிய ஒளிப்பட்டு ஒலித்தெரிப்புக்கு உள்ளாகி மினுங்கிக் கொண்டிருந்தன…

 கம்பனியின் முன்னால் இருந்த கார் பார்க்கிங்கில்… தான் வழமையாக காரை நிறுத்தும் இடத்தில் நிறுத்தியவன், காரை திறந்து கொண்டு வேகமாக கம்பெனியினுள் நுழைந்தான்.

 அபின்ஞான் கார் வந்து நின்ற சத்தத்தை கேட்டதுமே அவன் அலுவலகத்தில் உள்ளவர்களோ பரப்பரப்பாக செயல்பட ஆரம்பித்தனர்…

அபின்ஞான் மீது அவர்களுக்கு பயம் கலந்த மரியாதை இருந்தது…

திறமையானவர்களை கண்டால் அவன் பாராட்டத் தவறுவதில்லை…

 அதே நேரம் பிழை மட்டும் விட்டுவிட்டால், அவனிடமிருந்து தப்பிய பாடு தான் இல்லை…

எந்த அளவுக்கு சிரித்துப் பாராட்டுகிறானோ அதைவிட பல மடங்கு அதிகமாக கடுமையாகவும் கறாராகவும் நடந்து கொள்வான்….

அவனிடம் பாராட்டு வாங்குவதை விட திட்டு வாங்குவோர் தான் அதிகம்…

அவன் வருவதைக் கண்டு அங்கிருந்தவர்கள் எழும்பி மரியாதை கலந்த தயக்கத்துடன் அவனுக்கு காலை வணக்கம் சொல்ல… அபின்ஞானோ ஒரு தலை தலையசைப்புடன் தன் அறைக்குள் நுழைந்தான்…

அவன் ஆபீஸ் அறை மற்றும் அதனுடன் கூடிய பிரத்யோக அறையோ மூன்றாம் மாடியில் அமைக்கப்பட்டிருந்தது…

 சி இ ஓ என்று சதுரமான பலகையில் பொறிக்கப்பட்டிருந்த அறைக்கு முன்னால் நின்ற கரண், அக் கதவை தட்டி, “மே ஐ கமிங் சார்” என்று கேட்டபடி உள்ளேன் நுழைந்தான்…

கரண், அபின்ஞானின் கம்பெனியில் அவனது காரியதரிசியும் உற்ற நண்பனும் கூட…

வெளியே நண்பர்களாக இருந்தாலும் அலுவலகத்தில் எப்போதுமே இருவரும் தம் நட்பை தொடர்வதில்லை…

 கரணை பார்த்த அபின்ஞான், “கரண்… எல்லாரையும் பாஸ்ட்டா மீட்டிங் ரூமுக்கு வர சொல்லு…” என்றவன் தன் கையில் இருந்த பைல்களில் கவனத்தை செலுத்தினான்.

 கரனும் அதற்கான ஏற்பாடுகளை வேகமாக செய்து முடித்தான்… சதுரமான நீள் மேசை போடப்பட்டிருக்க, அனைவரும் அதை சுற்றி படபடப்புடன் அமர்ந்து தங்களுக்குள் கிசுகிசுப்பாக கதைத்துக் கொண்டிருந்தனர்…

 சரியாக அந்நேரம் கதவை திறந்து கொண்டு நிமிர் நடையுடன் ஆஜருவான தோற்றத்தில் அபின்ஞான் உள்ளே வர அங்கே நிலவிய சலசலப்பு சட்டென அடங்கியது…

அனைவரையும் அழுத்தமாக பார்த்தபடி அவனுக்குரிய இருக்கையில் அமர்ந்தவன், “காய்ஸ் நம்ம கம்பெனிக்கு ஒரு முக்கியமான ஒரு ப்ராஜெக்ட் வந்திருக்கு… இந்த ஆஸ்திரேலியா கம்பெனி டீல் மட்டும் நம்ம கைக்கு கிடைச்சா கோடிக்கணக்கில் லாபம்… உங்களுக்கும் போனஸ் அண்ட் செலரியும் கூட்டப்படும். அதனால இந்த வீக் மும்முரமா வேல செய்ய வேண்டி வரும்… இந்த வீக் யாருக்கும் எந்த ஒரு எக்ஸ்கியூஸ்ஸோ லீவோ இல்ல… ஓவர் டைமும் வேல பார்க்க வேண்டி வரும்… ஓடிக்கான (OT) செலரி எல்லாம் கண்டிப்பா கிடைக்கும்…” என்று தன் கம்பீரமான குரலில் கூறி முடிக்கவும்,

 அவன் வசியக் குரலில் அங்கிருந்தவர்களின் தலை தானாகவே ‘சரி’ என்பது போல ஆடியது…

 “அதே நேரம் நீங்க ஏதாவது மிஸ்டேக் விட்டா கட்டாயம் பனிஷ் பண்ணுவேன், அத நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க…” என்றவன் நிறுத்தி, தன் பழுப்பு நிற விழிகளால் ஒவ்வொருவரையும் அழுத்தமாக பார்த்து, “அண்டர்ஸ்டாண்ட் கைய்ஸ்…” என்று கர்ஜனையாக கேட்டவனது குரலிலிலோ உள்ளடங்கி இருந்தது என்னவோ வெளிப்படையான மிரட்டல் மட்டுமே…

 “ஒகே சார்… நாங்க எங்கட பெஸ்ட் பர்ஃபார்மன்ஸ கொடுக்கிறோம்…” என்று அங்கிருந்தவர்கள் கூறவே,

 “குட்…” என்ற அபின்ஞான் தன் அறைக்குள் செல்லவே… அப்போதுதான் அங்கிருந்தவர்களுக்கு மூச்சே வந்தது…

 புயல் அடித்த ஓய்ந்தது போல் இருந்தது அவ்வறை…

 “இவன்ட்ட வேல பாக்குறதுக்கு பதிலா ரெண்டு மாட்ட வாங்கி வளர்க்கலாம்” என்று அங்கிருந்த ஒருவன் கூற…

 “ரிசைன் பண்றதுல பிரச்சனையே இல்ல… இந்த கம்பனில தர செலரிய வேற யார் தரப் போறாங்க… இந்த செலரிக்காக தானே இவன் கிட்ட ஏச்சு வாங்கிட்டு இங்கேயே உட்கார்ந்துட்டு இருக்கோம்” என்றவர்கள் தங்களுக்குள் ஏதேதோ கதைத்த படி வெளியேறினார்கள்…

 தன் அறைக்குள் வந்த அபின்ஞான் தனக்கு வந்த மெயில்களை செக் பண்ணியவன், “ஷிட்…” என்று நெற்றியே வருடி கொண்டவன், இண்டர்காம் மூலம் அழைத்து “மிஸ் தேவ கன்யா’வ வரச் சொல்லுங்க” என்றவன் அழைப்பை துண்டித்தான்…

 கொஞ்ச நேரத்தில் அவன் அறை கதவை தட்டி…அபின்ஞான் அனுமதி அளித்தபின் உள்ளே நுழைந்தாள் தேவகன்யா… இளம் மஞ்சள் நிற சேலையை நேர்த்தியாக உடுத்தியிருந்தாள்.

 “சார் என்ன கூப்பிட்டீங்களா?” என்று பயத்தில் தலையை குனிந்து நின்று தேவகன்யா கேட்கவும்,

அவளைப் பார்த்தவன் தன் பேனா நுனியால் மேசையில் அழுத்தமாக தட்டினான்…

 தேவகன்யாவோ விழிகள் படபடக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்…

 “நீங்க நிலத்துகிட்டயா பேசிட்டு இருக்கீங்க… இல்ல தானே… வெல் என் மூஞ்ச பாத்து பேசுங்க…” என்றவன், “மிஸ் கன்யா… உங்கட மெயில் மட்டும் தான் எனக்கு வரல… இன்னும் வேலய முடிக்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க…” என்று வேலை நடக்காத கோபத்தில் அவளிடம் கத்தவும்,

 “சார் வேல முடியப் போகுது… நான் டென் மினிட்ஸ்ல உங்களுக்கு மெயில் பண்ணிட்றேன்” என்று பயத்தில் நடுங்கிய உடலை கட்டுப்படுத்திய படி கூறினாள்.

“ஆபீஸ் வந்தா மட்டும் போதாது… வேலய உருப்படியா பார்க்கணும், வேல செய்ய முடியலன்னா எதுக்கு நீங்க எல்லாம் ஆபீஸ் வர்றீங்க? பேசாம வீட்ல இருந்து குடும்பத்தையும் புருஷனை பார்த்துட்டு இருக்க வேண்டியதுதானே… சும்மா ஆட்டிகிட்டு வந்தா மட்டும் போதாது வேலய ஒழுங்கா பார்க்கணும்” என்று அவன் கூறிய கத்தி போன்ற வார்த்தைகளால் அவள் கண்களில் கண்ணீர் ததும்ப நின்று இருந்தாள்.

  “சும்மா தொட்டது பிடிச்சதுக்கு எல்லாம் அழுது சீன் கிரியேட் பண்ணி…இரிடேட் பண்ணாம போய் வேலய பாருங்க” என்ற அவன் கர்ஜனையில்,

தன் கண்ணீரை அவனுக்கு காட்டாமல் துடைத்த தேவகன்யா அவன் அழுத்தமான பழுப்பு நிற விழிகளை மேலும் பார்க்க முடியாது, தன் பார்வையை திசை திருப்பிய படி அவ்வறையை விட்டு வெளியேற…

 அவள் வெளியே செல்லும்போது, “ஒரு நிமிஷம்” என்று அபின்ஞான் கூற,

“என்ன” என்பது போல் பயத்துடன் அவனை திரும்பி பார்த்தாள்.

 “மிஸ் சஞ்சனாவையும் வர சொல்லிட்டு போங்க” என்று கூறவும்,

 “ஒகே சார்” என்ற படி வேகமாக அங்கிருந்து வெளியேறியவள், சஞ்சனாவிடம் கூறிவிட்டு தன் கேபினில் வந்து அமர்ந்தாள்.

 அவள் சொன்ன மாதிரி பத்து நிமிடங்களிலே வேலையை முடித்து விட்டு அவனுக்கு மெயில் அனுப்பியவள் மீண்டும் அவன் அறைக்குள் சென்று, “ஓகே சார்… மெயில் சென்ட் பண்ணிட்டேன்” என்று கூற,

 அவள் அனுப்பிய மெயிலை ஓப்பன் செய்து அதை புருவம் உயர்த்தி வியப்புடன் பார்த்தவன், “நான் நினைச்சத விட நல்லா வந்திருக்கு… கோடிங் ல எந்த மிஸ்டேக்கும் இல்ல… குட்…” என்று புன்னகைத்தபடி கூறினான்.

   இப்போது திருப்தியாக மூச்சு விட்ட தேவகன்யா… அபின்ஞானை பார்த்து மென்மையாக புன்னகைத்தவள், “தேங்க்ஸ் சார்… இனி வேலய பாஸ்ட்டா செஞ்சிட்றேன்” என்றபடி தன் கேபினை நோக்கி சென்றாள்.

 தேவகன்யா பத்து நாட்களுக்கு முன் தான் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள்…

ஐந்து அடி ஆறு அங்குலம் இருப்பாள்… மற்ற பெண்கள் உயர்ந்து பார்க்கும் அளவுக்கு உயரம்…

 ரோஜா இதழ்களை பாலில் கரைத்தது போல் ஒரு நிறம்…

தோள்பட்டை வரையுள்ள சுருள் சுருளான கூந்தல்…

 சிவந்த இதழ்கள்…

 சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழி அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது…

 ஜீரோ சைஸ் உடல்வாகு….

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அவளை ரசித்துப் பார்க்கும் அளவுக்கு அழகி…

 தேவகன்யாவின் அமைதி, அலட்டல் இல்லாத அழகு, நிதானம், கொஞ்சம் அழகை வைத்துக் கொண்டே திமிராக நடக்கும் மற்ற பெண்களிலிருந்து வித்தியாசமாகவே தெரிந்தாள்…

 அதனால் கரனுக்கு அவள் மேல் ஒரு ஈர்ப்பு…

கரனுக்கு அபின்ஞான் தேவகன்யாவுக்கு அதிகமாக ஏசுவது பிடிக்கவில்லை, “டேய் அபி… அந்தப் பொண்ணு பார்க்கவே பாவமா இருக்கா… வேலயும் நல்லாத்தானே செய்றா… ஆனா கொஞ்சம் லேட்டா செய்றா… போகப் போக எல்லாமே சரியா புரிஞ்சிப்பா” என்று கரண் தேவ கன்யாவுக்கு பரிந்து பேசியும் பார்த்தான்….

 அபின்ஞான் எங்கே அவன் சொன்னதை காதில் வாங்கினான், அதன் பின்னும் அவன் இஷ்டப்படி தான் நடந்து கொண்டான்…

தேவ கன்யாவுக்கு அடுத்த கேபினில் அழுதபடி அமர்ந்திருந்தாள் சஞ்சனா…

 அவளை புருவம் சுருக்கி பார்த்த படி அவள் அருகே அமர்ந்து கொண்டாள் தேவ கன்யா…

 அழுதழுது சிவந்து வீங்கி போயிருந்த முகத்துடன் தேவ கன்யாவை பார்த்த சஞ்சனா, “என்னா ஏச்சு ஏசுறான் தெரியுமாடி… மனுஷனா இவன்… இவன பெத்தாங்களா இல்ல ஆர்டர் பண்ணி எடுத்தாங்களோ தெரியல…” என்று அழுதபடியே அபின்ஞானுக்கு கண்டபடி கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தாள்.

 “என்ன பிரச்சன… ரொம்ப கோபமா இருக்க” என்று தேவ கன்யா கேட்க,

 “அவன் பேசுறதெல்லாம் கேட்டுட்டு எப்படி கோபப்படாம இருக்க முடியும்… அவன் பண்ற அநியாயத்த எல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்கணுமா? என்னால முடியும்னா எப்பவோ இந்த அபிக்கும் அவன்ட கம்பெனிக்கும் உரைக்கிற மாதிரி நாலு வார்த்தை உப்பு புளி விட்டு சொல்லிட்டு போயிருப்பேன்… ஆனா போகத்தான் முடியல…” என்றபடி அருகில் இருந்த மேசையில் தலை வைத்து படுத்துக்கொண்டாள் சஞ்சனா.

இருவருக்கும் இடையே பத்து நாளைய பழக்கம் தான்… ஆனால் தேவகன்யா மற்றும் சஞ்சனா நன்றாக நெருங்கிய தோழிகள் போலவே பழகினர்…

 “உனக்கு பாஸ பத்தி தெரியும் தானே… விருப்பமில்லன்னா இந்த வேலய ரிசைன் பண்ணிடு…” என்றாள் தேவகன்யா.

 “ஐயோ இந்த வேலைய ரிசைன் பண்ணா எங்க அம்மா என்ன வீட்ட விட்டே துரத்திடுவாங்க” என்றாள் சஞ்சனா.

“என்னடி சொல்ற…” என்று புரியாமல் தேவ கன்யா கேட்க,

“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்றேன்… யார்கிட்டயும் சொல்லிடாதே” என்ற சஞ்சனா, தேவகன்யா காதருகே குனிந்து, “இங்க இருக்கனே மல மாடு” என்று சஞ்சனா ஆரம்பிக்கவும்,

 “யாருடி மலமாடு” என்று புரியாது தேவ கன்யா கேட்க,

 “எல்லாம் நம்ம ஹிட்லர் பாஸ்த்தான்… அந்த தல தெரிச்ச மல மாடு, எரும மாடு எல்லாம்” என்று சஞ்சனா கண் சிமிட்டி சிரித்தபடி கூற,

 வாயில் கையை வைத்து அதிர்ச்சியாக அவளை பார்த்தாள் தேவகன்யா…

“ஹேய் கன்யா… உன் ஷாக்க குறை… இதவிட அதிர்ச்சியான ஒரு விஷயம் சொல்லவா…” என்ற சஞ்சனா, “இந்த மலமாடு இருக்கானே அவன் என் அத்தை பையன்” என்று கூற,

 சுற்றிலும் கண்களைச் சுழல விட்ட தேவகன்யா பதற்றமாக சஞ்சனாவை பார்த்து, “அதுக்கு ஏண்டி மரியாதை இல்லாம பேசுற… யார் காதுலயாவது விழுந்தா நாம்ம கத முடிஞ்சது” என்றாள் பயந்து கொண்டே…

 “நீ எதுக்கு இவ்ளோ பயப்படுற… பேசுற நானே பயப்படல்ல அந்தக் குரங்குக்கு மரியாதை தான் ஒரு கேடு… எங்க அம்மா சொல்றாங்க… நான் இந்தக் குரங்க கல்யாணம் பண்ணிக்கணுமாம்… அதுக்காக அவன் கூட இருந்து வேலை பார்த்து அவன கரெக்ட் பண்ண சொல்றாங்க…” என்று சஞ்சனா சோகமாக கூற,

“இதுல என்னடி இருக்கு? உன் அத்த பையன நீ கல்யாணம் பண்றத்துல என்னை பிரச்சின?” என்று தேவகன்யா இலகுவாக கேட்க,

 “அவனே ஒரு பிரச்சனை தான்… என் அம்மாவுக்காக, அவன எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது… இங்க வேலைக்கி வந்தா அவன் என்ன வச்சு செய்றான், இங்க இருக்கவும் முடியல… போகவும் முடியல, கல்யாணம் பண்ணிக்கிட்டா என் லைப்பே வேஸ்ட் ஆயிடும்” என்று சலிப்பாக மேசையிலே படுத்து கொண்டாள் சஞ்சனா.

அவள் பேச்சைக் கேட்டு வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு வாய்க்குள் அடக்கிக் கொள்ள முயன்றாள் தேவ கன்யா.

 அதைக் கண்ட சஞ்சனா, “உனக்கு என் கத சிரிப்பா தான் இருக்கும்டி… என் இடத்துல நீ இருந்து பார்த்தா தான் உனக்கு விளங்கும்…” என்று கோபத்தில் அவளை முறைத்தபடி கூற…

“அது சரி…” என்றபடி தேவ கன்யா வேலையை பார்க்க ஆரம்பிக்கவும்…

“ஹேய் கன்யா… உன் வேல முடிஞ்சதுன்னா, இந்த டிசைன்ஸ்ல என்ன ப்ராப்ளம்ன்னு பார்க்க முடியுமா” என்று அவள் கனணியில் வரைந்த நகை அலங்காரங்களை காட்ட, “ஐயோ எனக்கு இது எதுவும் தெரியாது” என சொல்ல பார்த்த தேவகன்யா, “நான் எனக்கு தெரிஞ்ச அண்ணா கிட்ட கேட்டு செஞ்சேன்… உனக்கு டவுட்டா இருந்தா அண்ணா கிட்ட கேட்டு பாறேன்” என்று கேட்க,

“ம்ம் ஒகே… நம்பர முதல்ல தா… அந்த தெய்வத்துக்கு கோயில் கட்டி கும்பிடுறேன்…” என்றபடி தேவகன்யா வழங்கிய அந்த நம்பருக்கு பேசி, அவனிடமே சந்தேகங்களைக் கேட்டு தன் வேலையை முடித்து விட்டாள் சஞ்சனா.

அன்றைய நாள் வேலையை இருவரும் ஒருவாறு கஷ்டப்பட்டு முடித்து விட்டு இருவரும் கிளம்ப தயாராக, “ஏய் கன்யா.. நான் இன்னைக்கு உன்ன ட்ராப் பண்ணவா?” என்று சஞ்சனா கேட்க,

 “வேணாம்… நான் இன்னக்கி கோவிலுக்கு போகணும்டி” என்று அவளிடம் விடை பெற்றுச் சென்றாள் தேவ கன்யா.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 27

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “என் தேடலின் முடிவு நீயா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!