அபின்ஞான் மட்டும் அவனுக்கு சளைத்தவனா என்ன…?அவனும் மகாதேவின் முகத்தில் ஓங்கி குத்தி இருந்தான்…
“உன் தங்கச்சி வாயில கைய வெச்சா கடிக்க தெரியாத பாப்பாவா? போடா டேய்… பெரிசா பேச வந்துட்ட” என்றான் அபின்ஞான் கிண்டலாக,
“டேய் அவளை பத்தி நீ ஒரு வார்த்தை பேசாதே…” என்று சொன்னபடி இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க அவர்களைப் பார்த்த மகிமா… “டேய் போதும்…” மகாதேவை பார்த்து கூற, அவனோ இவள் பேச்சை காதிலே வாங்கவில்லை…
அபின்ஞானை தடுக்க பார்க்க, அவன் அவளை தள்ளிவிட்ட வேகத்தில் விழ பார்த்தவள் இரு கால்களையும் நிலத்தில் ஊன்றி விழாமல் சமாளித்துக் கொண்டாள்…
“ரெண்டு பேரும் சண்டய நிறுத்தப் போறீங்களா… இல்லையா?” என்று கத்தியும் எந்த பயனுமில்லை.
வீட்டிற்குள் சென்று வீட்டில் வேலை பார்ப்பவர்களை அழைத்து வந்தே இருவரையும் பிரித்து வைத்தாள்.
சண்டை முடிந்ததும் தான் அபின்ஞானுக்கு மகிமா ஞாபகமே வந்தது போலும்… அவளோ வாசல் கதவில் சாய்ந்து நின்று மார்புக்கு குறுக்கே கைகளையும் கட்டிய படி அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளருகே சென்று அவள் கையைப் பிடித்து தன் அருகே நிறுத்திக் கொண்ட அபின்ஞான், மகாதேவை முறைத்துப் பார்த்து… “இவ என் பொண்டாட்டி… இனி என் கூட தான் இருப்பா…” அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்லப் பார்க்க, அபின்ஞானை மறைத்தபடி வந்து நின்ற மகாதேவ், “நீ உன் இஷ்டத்துக்கு வந்து என் தங்கச்சி உன் பொண்டாட்டின்னு சொல்ற… அதெல்லாம் மகிய உன் கூட அனுப்ப முடியாது… அவ என் கூடத்தான் இருப்பா” என்ற தேவ் அவளின் ஒரு கையைப் பிடித்து தன் பக்கம் இழுக்க…
மகிமாவுக்குத்தான் “அய்யோடா” என்றிருந்தது…
இருவரும் தம் பிடியை சற்றும் தளர்த்த வில்லை… இருவரையும் முறைத்த படி இருவரது கையையுமே உதறித் தள்ளியவள்… “என்னடா ரெண்டு பேரும் என்ன பொம்மன்னு நினைச்சுட்டு இழுத்து இழுத்து விளையாட்றீங்களா? அண்ணா நான் அபி கூடவே போறேன்” என்று முடித்துக் கொண்டாள் மகிமா.
அபின்ஞானுக்கு அண்ணனையும் தங்கையை பிரித்ததில் ஒரு பெருமிதம்… இப்போது மகாதேவை இறுமாப்புடன் பார்த்தவன், “நாம போலாம பேபி?” என்று சிரித்தபடி மகிமாவை பார்த்து கேட்டான்.
“இவன யாரு இங்க ஓவரா ஆக்டிங் பண்ண சொன்னது” என்று அவனை எரிச்சலாக பார்க்க… அந்நேரம் மகாதேவ்,
“மகி இவன் கூட போறேன்னு சொல்ற… இவன பத்தி உனக்கு தெரியாதா? உன்னை ஏதோ மிரட்டி தான் கூப்பிட்டிருப்பான்… ஆனா பயப்படாதே, நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்” என்று அவளை தன்னுடன் வைத்துக் கொள்வதற்காகவும் அபின்ஞானிடன் தோற்கவும் விரும்பாது கேட்க,
மகிமாவுக்கு தலைவலியே வந்துவிடும் போலிருந்தது… இருவரும் ஒருவரிடம் ஒருவர் தோற்க விரும்பாமல் அவளை அல்லவா பகடைக்காயாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
மகிமா மகதேவை பார்த்து முடியாது என்பது போல் தலையாட்ட அதன் பின்அபின்ஞானை கேட்கவும் வேண்டுமா?? மகிமாவை கையோடு வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான்.
சஞ்சனா எல்லா விடயத்தையும் கூறிவிட்டாள் போலும்… அன்னபூரணி அம்மாள் ஆரத்தி தட்டுடன் அவர்களை வரவேற்க தயாராகவே இருந்தார்…
இருவரையும் ஆராத்தி எடுக்கவும், வலது காலை வைத்து அவன் மனைவியாக அவ்வீட்டினுள் நுழைந்தாள் மகிமா…
சஞ்சனாவுக்கும் மகிமாவை பற்றி எந்த உண்மையையும் தெரியாது… அவர்கள் இருவரும் காதலிப்பதாக மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறாள்…
தம்பதிகள் இருவரும் அன்னபூரணி அம்மாள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க,
அன்னபூரணி அம்மாள், “குழந்தை குட்டியோட சந்தோஷமா வாழுமா…” என்று அவளை கட்டியணைத்து நெற்றி முகர்ந்தார்.
அன்னபூரணி அம்மாளுக்கோ சந்தோசம் தாங்க முடியவில்லை… அவர் நினைத்த மாதிரியே ஒரு மருமகள். அதுவும் அன்று அவளை கோயிலில் பார்த்துவிட்டு தன் மகனுக்கு இவள் கிடைக்கமாட்டாளா?” என்று கவலை பட இன்று அவளே அவர் முன்னால் நிற்கிறாள்… அதுவும் அவர் மருமகளாக…
அன்னபூரணி அம்மாள் அவளை விளக்கேற்றுவதற்காக பூஜை அறைக்குள் அழைத்துச் செல்லவும், மகாதேவின் கார் அவர்களது வளாகத்தினுள் மின்னல் வேகத்தில் வழுக்கிக் கொண்டு வரவும் நேரம் சரியாக இருந்தது…
இதுவரை மகாதேவ் அபின்ஞானின் வீட்டை ஏறெடுத்தும் பார்த்ததில்லை…
ஆனால் இனிமேல் அவ்வாறு இருக்க முடியாதே…
தாய் தந்தை இன்றி அவளைப் பார்த்துப் பார்த்து வளர்த்தவன்… திருமணமாகி அவள், அவன் எதிரி வீட்டுக்கு வந்ததற்காக எப்படி அவளை கைவிட முடியும்…
அவள் பொருட்களை எடுத்துக் கொண்டவன் இதோ மகிமா முன்னால் வந்து நின்று விட்டான்…
மகாதேவின் ஒரே ஒரு பலவீனம் மகிமா மட்டுமே… அது அபின்ஞானுக்கு பலமாக மாறிவிடுமா?? அவன் தேவை பழி வாங்க மகிமாவை பயன்படுத்திக் கொள்வானா??
மகாதேவ் வருவதைக் கண்ட அபின்ஞான் வாசலை மரித்த படி வந்து நின்றான். அபின்ஞான் எதிர்பார்த்ததும் இதை தானே…
வாசலை மரித்த படி நின்ற அபின்ஞானை புருவம் சுருக்கி பார்த்தான் தேவ்.
“நீ இங்க எதுக்கு வந்திருக்க…” என்று எடுத்த எடுப்பிற்கே அபின்ஞான் கேட்க,
அங்கே நின்றிருந்த சஞ்சனா அப்போதுதான் மகாதேவை கண்டு, “ஐயோ இவன் அத்தானோட எதிரி ஆச்சே…” என்று யோசித்தவளுக்கு தெரியவில்லை அதுதான் மகிமாவின் அண்ணா என்று…
“நான் உன்ன பார்க்கவா வரப் போறேன்… மகிமாவ பாக்க தான் வந்திருக்கேன்” என்று எரிச்சலான குரலில் கூறினான் மகாதேவ்…
“மகிமாவா…? யாரு அது? அப்படி யாரும் இங்க இல்லையே” என்று சஞ்சனா யோசித்துக் கொண்டிருக்கும் போதே,
விளக்கேற்றி விட்டு அன்னபூரணி அம்மாளுடன் எதோ சிரித்துப் பேசியபடி வந்தாள் மகிமா…
தன் அண்ணனை வாசலில் இருப்பதைக் கண்டு வேகமாக அவன் அருகே சென்றவள், மகாதேவின் கையைப் பிடித்து, “அண்ணா… உள்ள வா” என்று அழைத்தாள் மகிமா…
மகிமாவை அழுத்தமாகப் பார்த்த அபின்ஞான், “மரியாதயா வெளியே போடா” என்று மகாதேவை பார்த்துக் கத்த,
தன் அண்ணனை அவமதித்த கோபத்தில், “முதல்ல உள்ள வா… பிறகு மத்தது பேசலாம்…அண்ணா…” என்று அவனை இழுத்துக் கொண்டு சென்று அங்கிருந்து சோபாவில் அமர வைத்தவள்… “நான் இவர்ட மனைவின்னா… இந்த வீட்ல எனக்கும் சரி சமமா உரிம இருக்கு… அதனால நீ தாராளமா உள்ள வரலாம்” என்றாள் ஓர் கட்டளை குரலில்…
தன் குடும்பம் என்று சொல்வதற்கு அவளுக்கு அவள் அண்ணா மட்டும் தான் இருக்கிறான்… அதுவும் அவள் மீது உயிரையே வைத்திருப்பவன்… அவனை அவமதிப்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
தலைக்கால் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சனா, “ஆத்தி… அப்ப இவ இந்த மகாதேவ் தங்கச்சியா… என்னமா நடிச்சிருக்கா… பேரு கூட பொய்யா… கடவுளே ” என்று அதிர்ச்சியாக மகிமாவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
மகிமா தன் பேச்சை கேட்காத கோபத்தில், அவள் கையைப் பிடித்து தன் அருகே இழுத்த அபின்ஞான், “என்னடி பண்ற… அவனுக்கு இந்த வீட்ல இடமில்ல… அவன வீட்டுக்குள்ள எடுக்க வேணும்னா நீயும் வெளியே போய்டு” என்று வாசலை காட்டிக் கர்ஜனையான குரலில் கூறினான்…
அவன் தன் மருமகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவானோ என்று பயந்த அன்னபூரணி அம்மாள், “அபி இப்ப எதுக்கு இவ்ளோ கோபப்படுற? அவ அண்ணா அவள பார்க்க வந்திருக்கான்… அதுக்கு விடாம இடையில நீ என்ன பிரச்சின பண்ணிட்டு இருக்க?” என்று அவர் இவர்களது எந்தப் பிரச்சினையும் அறியாது அபின்ஞான் அருகே சென்று மெதுவாக கேட்க,
“அம்மா… உங்களுக்கு இவன பத்தி தெரியாது” என்றவன், மகிமாவை பார்த்து… “ஒன்னு நீ வீட்ல இரு… இல்லன்னா அவன் கூடவே நீயும் போய்டு” என்று அழுத்தமாக கூற,
“அதெல்லாம் போக முடியாது… நான் இங்கதான் இருப்பேன்… நீங்கதானே என்ன கல்யாணம் பண்ணி இங்க கூட்டிட்டு வந்தீங்க… இப்போ உங்களுக்கு சமமா எனக்கும் இந்த வீட்ல உரிம இருக்கு… இதுக்கு மேல என்ன இங்கிருந்து போக சொன்னா…” என்று இடைவெளி விட்டு, “நான் மீடியா கிட்ட போவேன்… அண்ணாவ பழிவாங்க கல்யாணம் பண்ணிட்டு… என்ன வீட்ட விட்டு நீங்க துரத்தினீங்கன்னு சொல்வேன்” என்று கூற,
அவளிடமிருந்து நிச்சயமாக இவ்வாறான ஒரு எதிர்வினையை அபின்ஞான் எதிர்பார்க்கவில்லை…
அவனிடம் எப்போதும் ஒரு அகம்பாவம் இருக்கும்… கூடவே திமிராகவும் நடந்து கொள்வான்…
ஆனால் அவனுக்கு நிகரான திமிரும் அகம்பாவமும் மகிமாவிடமும் இருக்கும் என்பதை அபின்ஞான் அறியவில்லை…
“முதல்ல அத போய் செய்… நடக்கிறத நான் பாத்துக்குறேன்” என்று அவனும் அடங்காமல் திமிராகவே கூற,
அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சனாவுக்கு இப்பொழுது தான் மகிமா அன்று சொன்னது நினைவு வந்தது…
சஞ்சனா, “நீ இவ்ளோ பேசுவியா?” என்று கேட்டதற்கு, “இத விட நல்லாவே பேசுவேன்” என்று சொன்னதன் அர்த்தம் இப்பொதுதான் புரிந்தது.
“அத்த… ” என்று அன்னபூரணி அம்மாளின் தோலை சுரண்டிய சஞ்சனா, “எனக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சு… அத்தான் இவள மிரட்டி கல்யாணம் பண்ணி இருப்பான்னு… ஆனா இவ அத்தான மிரட்டிட்டு இருக்கா… நான் இவ ரொம்ப அமைதியான பொண்ணுன்னு நினைச்சேன் அத்த” என்று அன்னபூரணி அம்மாள் காதருகே முணுமுணுக்க,
அதற்கு அன்னபூரணி அம்மாளோ, “பார்க்க ரொம்ப அப்பாவி பொண்ணு மாதிரி இருந்துட்டு என்னமா பேசுறா… ஆனா என் பையனுக்கு பொருத்தமா தான் இருக்கா… நானே சல்லடை கட்டி சலிச்சு தேடி இருந்தாலும் இந்த மாதிரி ஒரு பொண்ண தேடி இருக்க முடியாது” என்று அவரும் வாய்க்குள் சிரிப்பை அடக்கியபடி கூறினார்…
அவருக்கோ இவ்வளவு நாளும் அடங்காமல் இருந்த மகனை அவள் அடக்குவதிலோ அலாதி இன்பம்…
“நானும் மொத மொதல்ல அத்தான் பேச முடியாமல் தடுமாறாத இன்னைக்கு தான் பார்க்கிறேன்…” என்று சஞ்சனா கூற,
“உனக்கு நல்ல சந்தோஷமா இருக்குமே” என்று அன்னபூரணி அம்மாள் கேட்க,
அவன் எதிர்பாராத நேரத்தில் அவன் அருகே நெருங்கி வந்த மகிமா, அவனை நிமிர்ந்து பார்த்து “ம்ம்.. ஓகே நானும் என் அண்ணா கூடே போய்ட்றேன்… அண்ணனுக்கு இடமில்லாத வீட்டிலேயோ, உங்க லைப்லயோ, எனக்கு இடமே தேவல்ல… ரெண்டு நாள்ல உங்களுக்கு டிவோர்ஸ் வந்து சேரும்…” என்று சத்தமாக சொன்னவள், “அச்சோ… நீங்கதான் பாவம், நீங்க போட்ட பிளேன் இப்படி சொதப்பிடிச்சே… இனி உங்க பிளேன நடக்க நான் ஒரு நாளும் விடமாட்டேன்… மிஸ்டர் அபின்ஞான்…” என்று அதை மட்டும் மெதுவாக சொல்ல, அவன் முகமோ கருத்து இறுகிப் போனது…
மகாதேவை பழிவாங்க வேண்டும் என்றால் மகிமாவை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
அவளை அவனுடன் அனுப்பினால் அவன் திட்டமே வீணாகிப் போய்விடுமே…
# (Hii Friends என் கத உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க கைய கொஞ்சம் கீழ நகர்த்தி 5 வது இருக்கும் ஸ்டார்ரை மட்டும் கிளிக் பண்ணுங்க 😍😍😍)