எவ்வளவு தனிமையை உணர்ந்திருந்தால் கொஞ்சம் அரவணைப்பாக நடந்து கொண்டதும் மனதில் உள்ள அனைத்தையும் கூறிவிட்டு இருப்பான்…
பெருமூச்சுடன் அவன் தலையை வருடியபடி இருந்தாள் சஞ்சனா…
தன் மனதில் இருந்த அழுத்தங்களை கூறியதுமே மனதுக்கு இதமாக இருந்தது அவனுக்கு…
அப்போதுதான் அவனுக்கு தான் சஞ்சனாவுடன் நெருக்கமாக இருப்பதே புரிய… வேகமாக அவளிடம் இருந்து விலகிக் கொண்டான்…
விலகியதும் தான் அவள் இடையின் மென்மையை உணர்ந்தவன், நிமிர்ந்து அவள் வயிற்றைப் பார்த்தான்…
அவன் அவள் வயிற்றில் முகம் புதைத்திருந்ததால் இடுப்பு சேலை விலகி அவள் வெண்ணிற இடையோ பளிச்சென்று தெரிந்தது…
அவனுக்கு அவள் இடுப்பு இப்போதே தொட்டு விட வேண்டும் என்ற அவா…
தன்னை மீறி கையையும் நீட்டியும் விட்டான்…
நல்லவேளை அவள் பார்க்கவில்லை கையை பின்னுக்கு இழுத்தவன், “என்னடா பண்ற அவ கண்டிருந்தா உன்ன காஞ்ச மாடுன்னு நினைச்சிருப்பா… ” தனக்குத்தானே மனதினுள் ஏசியவன், தனக்குள் நிகழும் மாற்றங்கள் என்னவென்று புரியாமல், “சஞ்சு நீ போ…” என்று அவளை விரட்டப் பார்த்தான்…
இதற்குமேல் அவள் இருந்தால் தன்னை மீறி ஏதாவது செய்து விடுவான்…
மகாதேவ் பெண்களோட நன்றாக கதைப்பான்…
அவர்கள் அழகை ரசித்து விமர்சித்துக் கொள்வான்…
இதுவரை சஞ்சனாவை அப்படி ஒரு கோணத்தில் பார்த்ததே இல்லை…
அவளுக்கு அவன் உணர்வுகளுடன் போராடிக் கொண்டிருப்பது புரியவில்லை…
அவன் அருகே நெருங்கி உட்கார்ந்தவள், “தேவ் கவலைப்படாதே… நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன்…. சும்மா யோசிச்சு தலைவலிய தேடிக்காம கூலா இரு” என்றவாறு அவன் தலையை வருட,
“ஐயோ… இவ வேற நேரம் காலம் தெரியாம, அட்வைஸ் பண்ணிட்டு இருக்கா…. போக சொன்னா போகாம என்ன போட்டு வதவாங்குற… நான் எவ்வளோ நேரம் தான் என்ன கட்டுப்படுத்திட்டு இருக்கிறது” என்று மனதிற்குள் போராடிக் கொண்டிருந்தவன்… அவள் வார்த்தைகள் தந்த தைரியத்தில்,
“அதுதானே இவ என்ன காதலிக்கிறா… என்ன நல்லா பாத்துக்குறா… அபிக்காகவாவது நான் இவள கல்யாணம் பண்ணிக்கணும்… வேற என்ன வேண்டும்” தனக்குத்தானே பல நியாயங்களை முன்வைத்தவன்… தன் சங்கடங்களை அகற்றி அவளை பார்த்தான்…
சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது…
மாநிறத்துக்கும் சற்று அதிகமான நிறம்…
மெலிவான தோற்றம்…
“வாவ் இவ்ளோ அழகா இருக்கா… இவ்ளோ நாளும் ரசிக்காம விட்டுட்டேனே ” என நினைத்தவன் கண்களோ அவள் சங்கு கழுத்தை தாண்டி கீழே பயணிக்க… குரலை செருமியபடி தலையை கோதிக் கொண்டான்…
“இவ இதுக்கு மேல இங்க இருந்தா நாம தான் கஷ்டப்படணும்” என்று நினைத்தவன் அவள் அருகில் இருந்து எழுந்தான்.
“சஞ்சு நீ போ…” என்றான் மீண்டும்…
“ஏன் தேவ்… நானும் வந்ததிலிருந்தே பார்க்கிறேன்… என்ன விரட்றதிலே குறியா இருக்க… உனக்கு என் காதல் கொஞ்சமுமே புரியலையா” என்று கேட்டாள்…
“புரிஞ்சதால தானே உன்னை ஏதாவது பண்ணிடுவேன்னு அனுப்ப பார்க்குறேன்… கூடவே இருந்து இம்ச பண்ணுறா” என்று நினைத்தவன், “நாம இத நாளைக்கு பேசிக்கலாம்…” என்றான் ஆற்றில் ஓடும் மீனில் நழுவும் மீனாக…
அவளோ மீனை பிடிக்கும் கொக்காக நின்று, “எனக்கு இப்ப ஒரு பதில் தெரிஞ்சே ஆகணும்” என்றபடி அவனை நெருங்கி நிற்க… அவன் கட்டுப்பாடுகள் அனைத்தும் அவள் முன்னாள் தகர்ந்து தான் போயின…
அவள் ஈரமான உதடுகளோ பள பள என மினுங்கிக் கொண்டிருக்க… வண்டை ஈர்க்கும் தேனாக அவனை ஈர்த்து விட, சற்றும் யோசிக்காமல் அவள் கழுத்தை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன்… தன்னை மயக்கிய உதடுகளுக்கு தண்டனை வழங்க ஆரம்பித்து விட்டான்…
முதலிலேல் அதிர்ந்தவள் பின் லயிக்க ஆரம்பித்து விட்டாள்…
காதல் கொண்ட ஆண்மகனின் இதழ் முத்தம் கசக்குமா என்ன அவளுக்கு…
கண்களை மெதுவாக மூடிக்கொண்டாள்…
அவள் இதழ்களில் இருந்து தன் இதழ்களை பிரித்து எடுத்தவன்… “சஞ்சு ஐ நீட் யூ “என்றான்…
அவளோ அவனால் உண்டாகிய உணர்வுகளிலிருந்து விடுபட முடியாமல் இருக்க… அவனோ அடுத்த இடியாக அவளையே வேண்டும் என்று கேட்டு விட…
அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை…
“தேவ் நம்ம கல்யாணத்துக்கு பிறகு…” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும்போதே…
“என் மேலஉனக்கு நம்பிக்க இல்லயா” என்று எதிர் கேள்வி கேட்டான்…
“உன்ன நம்பாம வேற யார நம்புவேன்… ஆனா…” என்று சஞ்சனா இழுக்க, அவனுக்கோ அவளது அந்த பதிலே போதுமானதாக இருந்தது…
அவளை கட்டில் சரித்து அவள் மேல் படர தொடங்கி விட்டான் அவளது தேவ்…
ஐம் பூதங்கள் மட்டுமே அவர்களுக்கு கூடலுக்கு சாட்சியாகிப் போனது…
அடுத்த நாள் விடியலில் அவள் கண் விழிக்கும்போது அவனது இறுக்கமான அணைப்பில் இருந்தாள்…
மெதுவாக அவன் வெற்று மார்பிலிருந்து தலையை தூக்கி பார்த்தாள்…
நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்…
அவன் இறுக்கமான அணைப்பில் அவளுக்குத்தான் மூச்சு முட்டியது…
மெதுவாக அவன் கைவளைவில் இருந்து வெளியே வந்தவள், அணிந்திருந்த சேலையைத் தேட அதுவோ கிழிந்து போய் இருந்தது…
அதை பார்த்துவிட்டு அவனைப் பார்த்தவள், “காஞ்சமாடு மாதிரி பஞ்சுடான்… காஜிப் பய…” என்று அவனுக்கு வாய்க்குள் திட்ட,
அவள் அசைவில் எழுந்து கொண்டவனுக்கும் கேட்டது…
கண்களை திறந்து அவளைப் பார்த்தவன், “ஏய் நீயும் எனக்கு ஏத்த காஜி பொண்ணு தான்… இங்க பாரு என்ன எப்படி கடிச்சு வச்சிருக்கன்னு… அதுமட்டுமில்லாம…” என்று அவன் எதோ சொல்ல வர… அவன் வாயை மூடியவள், “போதும்” என்றபடி, நேற்று இரவு அவன் அணிந்திருந்த டீ ஷர்டை போட்டவள் குளியலறைக்குள் செல்ல, அவனும் அவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தான்…
குளியலறையில் வெளிய வந்த சஞ்சனா தேவை பார்க்க… அவனோ குப்புற படுத்து தூங்கிக் கொண்டிருந்தான்…
நேரத்தை பார்த்தால் ஆறு மணி ஆகிவிட்டிருந்தது…
அந்த அறையின் கடினமான திரைச்சீலைகளை தாண்டி வெளிச்சம் உள்ளே வரவில்லை…
“ஐயோ யாரும் பார்க்காம ரூமுக்கு போகணும்” என நினைத்துக் கொண்டவள், இருட்டிலே அவன் அறைக்குள் உலாவ… அங்கே போடப்பட்டிருந்த மேசையில் காலை இடித்துக் கொண்டாள்…
“ஸ்ஸ்… இந்த மேசை வேற…” என காலை தடவியபடியே மேசைக்கு முன்னால் இருந்து இருக்கையில் அமர்ந்து கொண்டவள், மேசையை பார்க்க அங்கே அவன் டயரி இருந்து…
“ஓஹ்… டைரி எழுதுவானா” என நினைத்தபடி அதை எடுத்தவளுக்கு பிரித்துப் பார்க்க யோசித்தாள்…
“பரவால்ல அப்படி என்ன எழுதியிருக்க போறான்” என்று முன்னாள் இருந்த டேபில் லாம்பை போட்டவள் சிரித்த படி வாசிக்க தொடங்கினாள்…
வாசித்து முடியும்போது அவள் முகமோ கறுத்து இருகியது.
அபின்ஞான் மகிமாவிடம் கதைத்ததையும், அதற்குப் அவன் பழி வாங்க வேண்டும் என்று நினைத்ததையும் எழுதி இருந்தான்.
அவள் கண்களில் இருந்து தாரை தரையாக கண்ணீர் வழிந்தது…
“பழிவாங்க என்ன யூஸ் பண்ணானா” என்று யோசிக்கவே அவளால் முடியவில்லை…
அவன் டி ஷர்டுக்கு மேல், வாட்ரோப்பை அணிந்து கொண்டவள் அவள் அறைக்குச் சென்றாள்…
அவளுக்கோ அழுகையை அடக்கவே முடியவில்லை…
ஏங்கி ஏங்கி அழுதாள்…
மெதுவாக எழுந்த தேவ் சஞ்சனாவை தேட, அவளோ அவன் அறைக்குள் இல்லை, “அதுக்குள்ள எழும்பி போய்ட்டாளா” என்றபடி அவள் இதமான நினைவுகளுடனே குளித்து தயாராகி வெளியே வந்தவன் விழிகள் அவளைத் தேடித் தேடி கலைத்துப் போயின…
அவனருகே வந்த ராகவ், “தேவ் எல்லாரும் மீட்டிங் ரூமுக்கு போறோம்… நீ வரலயா?” என்று கேட்க,
நீ போ… நான் பைவ் மினிட்ஸ்ல வரேன்டா” என்று ராகவை அனுப்பியவன் அவளைத் தேட அவளோ அவன் கண்ணில் அகப்படவே இல்லை…
சலிப்பாக தலையை இரு பக்கம் ஆட்டியபடியே மீட்டிங் ரூமுக்கு சென்றான்…
அவன் செல்லும்போது தான் அபின்ஞானும் வந்து கொண்டிருந்தான்…
இருவரும் ஒருவரை ஒருவர் அனல் தெறிக்க பார்த்த படியே ஒன்றாகவே உள்ளே நுழைந்தனர்…
மற்றவர்களும் அங்கேதான் இருந்தனர் சஞ்சனா உட்பட…
தேவ் சென்று அபின்ஞான் பார்க்க வென்றே சஞ்சனாவுக்கு அருகே அமர்ந்து கொண்டான்…
அபின்ஞான் தேவுக்கு நேர் எதிராக அமர்ந்து கொண்டான்…
கரனும் ராகவும் யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்து இருந்தனர்…
“சப்மேரின்ன (submarine -நீர் மூழ்கிக் கப்பல்) முதல்ல நான் தான் யூஸ் பண்ணுவேன்” என்று அபின்ஞான் ஆரம்பித்து வைக்க,
“நீ பர்ஸ்ட்கு யூஸ் பண்ணி அதில ஏதேனும் பிராப்ளம் வந்தா நான் எப்படி உள்ள போவேன்… அதனால நான் தான் ஃபர்ஸ்ட் யூஸ் பண்ணுவேன்” என்றான் தேவ் மறுப்பாக…
“ஸ்டார்ட் பண்ணிட்டானுங்க” என்றான் கரன், “நாம தேட்ற எக்ஸ் த்ரீ (x3) பாக்ஸ் எங்க இருக்குன்னே கண்டுபிடிக்கல… அதுக்குள்ள இவனுங்க அத எடுக்க போறதுக்கு மீட்டிங் போட்டு சப்மெரினுக்காக அடிச்சுக்க ஆரம்பிச்சிட்டானுங்க…” என்று சஞ்சனாவின் காதில் கூற,
“லாஸ்டா என்ன முடிவு வருதோ அதுக்கு நாம தலையாட்ட வேண்டியது தான்” என்றாள் சஞ்சனா மெதுவாக…
“ம்ம்” என்று இப்போதே தலையாட்டிக்கொண்டான் கரன்…
“டேய்… இது என் ஷிப்… நீ எனக்கே ஆர்டர் போட வராதே” என்றான் அபின்ஞான்.
“நான் வந்தன்னக்கே இந்த ஷிப்க்கு பாதி பேமென்ட் உன் அக்கௌன்ட்கு ட்ரான்ஸ்பெர் பண்ணிட்டேன்… அதனால இந்த ஷிப்ல எனக்கும் சம உரிமை இருக்கு” என்றான் தேவ் இறுமாப்புடன்…
“நீ இப்படி சொல்லுவன்னு தெரிஞ்சு தான்… அந்த பேமெண்ட திருப்ப உனக்கே டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டேன்” என்று அமர்த்தலாக இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த படி கூறினான் அபின்ஞான்…
மகிமாவோ எந்த உணர்வுமின்றி அவர்கள் இருவரையும் பார்த்திருந்தாள்…
இருவரும் தத்தம் ஈகோவில் சளைத்தவர்கள் அல்லவே…
சஞ்சனாவுக்கும் அதே எண்ணம் தான்…
அவன் திமிரான பேச்சில் மகாதேவ் இருக்கையில் இருந்து எழுந்த வேகத்தில், அவ்விருக்கையோ தூர சென்று விழுந்தது…
அனைவரும் தேவை அதிர்ந்து பார்க்க, அவனோ அதே வேகத்தில் அபின்ஞான் அருகே சென்று அவன் ஷர்ட் காலரை பற்றி இழுத்தவன், “டேய் நடிக்கிறியா டா… என் ஷிப்ப உடைச்சு உன் கூட எங்கள வர வச்சது நீ… நீ பண்ணதெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்… எனக்கு முழு நியூஸும் வந்துடுச்சு… இப்படி சீப்பா நடிக்காதே” என்று அவன் காலரை பற்றி உலுக்கியபடி கூற,
மகிமா இருவரையும் புரியாது பார்த்தாள்… ஆக மொத்தம் அவளை தன்னுடன் வரவைக்க என்ன வேலை எல்லாம் பார்த்திருக்கிறான்… இப்போது அவன் மீது கோபப்படவும் முடியவில்லை…
அவன் செய்கையில் தன்னை மீறி அவள் மனதினுள் ஒரு இதம் பரவியது என்னவோ உண்மை…