என் தேடலின் முடிவு நீயா – 29

4.8
(44)

தேடல் 29

சிதைந்து பாழடைந்து போயிருந்த கப்பலின் உள்ளே சென்ற மகாதேவுக்கு ஓரளவுக்கு மேல் எந்த பாதையில் செல்வது என்று குழப்பமாக இருந்தது…

ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று கேட்டால் அதுவும் இல்லை…

மெதுவாக சுற்றியும் கூர்மையாக அவதானித்த படியே உள்ளே செல்ல, ஓரிடத்திலிருந்து டார்ச் வெளிச்சம் தென்பட வேகமாக அங்கே நீந்திச் சென்றான்…

அபின்ஞான் தான் அங்கே இருந்தான்…

பெருமூச்சுடன் அவனை நெருங்கினான் மகாதேவ்…

மகாதேவை கண்டதும் கண்ணை மூடித் திறந்து ஆசுவாசமாக மூச்சு விட்ட அபின்ஞான் தன் காலை எடுத்து விடும் படி சைகையால் கூறினான்…

சட்டென கீழே குனிந்து பார்த்தான். அபியின் காலோ கப்பலின் ஒரு மூலையில் இறுகிப் போயிருந்தது…

மகாதேவும் அவன் காலை எடுத்து விட்டு அவன் காலை ஊன்றிப் பார்த்தான்…

நல்ல வேலை… அவன் காலுக்கு எந்த அடியும் பட்டிருக்க வில்லை.

மகாதேவின் தோளின் தட்டியவன் அவன் அருகிலிருந்த ஒரு இரும்புப் பெட்டியை காட்டினான்.

“கிடைச்சிடுச்சா” என்பது போல் அதிர்ந்து பார்த்தான் மகாதேவ்…

ஆம் ஒருவாரு அபின்ஞான் அந்த பெட்டியை கண்டுபிடித்து விட்டான்…

இரும்பு பெட்டி என்பதால் அது அப்படியே பாதுகாப்பாக இருந்தது…

இருவருமே நினைக்கவில்லை எக்ஸ் த்ரீ பொக்ஸை இவ்வளவு இலகுவாக கண்டு பிடித்து விடலாம் என்று…

கண்டுபிடித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருவரும் தங்களை மீறி ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர்…

விலகி இருவரும் ஒருவன் முகத்தை மற்றவன் பார்த்து சிரித்துக் கொண்டனர்…

இவ்வளவு நாளும் இருவருக்கு இடையே இருந்த இடைவெளி இப்போது தீர்ந்து போய் விட்டது…

எக்ஸ் த்ரீ பாக்ஸை எடுத்துக் கொண்டு இருவரும் கப்பலுக்கு வெளியே வர ஆயத்தமாக, அந்த நேரம் ஏதோ வித்தியாசமான ஒரு சத்தம்….

இதுவரது விழிகளும் அதிர்ந்து விரிந்தன…

அது கரனை தாக்கிய அந்த விசித்திரமான உயிரினத்தின் சத்தமே…

சப்மெரினுல் இருந்த மகிமா, “ஃபாஸ்ட்டா அபி, தேவ்ட டோச் லைட்ஸ ஆஃப் பண்ணனும்” என்றபடி அதை அணைப்பதற்காக கையை நீட்ட…

அவள் கையை எட்டிப் பிடித்த ராகவ், “உனக்கு என்ன பைத்தியமா மகி, எதுக்கு அவங்கட லைட்ஸ ஆப் பண்ணனும்” என்று கேட்க,

“இனி அவங்க வந்துடுவாங்க…” என்றவள் ராகவின் பேச்சைக் கேட்காமல் அவர்கள் இருவரது டார்ச் லைட்டை இங்கிருந்த சிஸ்டத்தை பயன்படுத்தி அனைத்து விட்டவள் நிம்மதியாக மூச்சு விட,

“என்ன முட்டாள் தனமான வேல பார்த்துட்டு இருக்க மகி” என்று ராகவ் கோபமாக கேட்டான்.

“ஐயோ அண்ணா… நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க… சப்மெரின்ட எல்லா லைட்ஸ முதல்ல ஆஃப் பண்ணனும்” என்றபடி அதையும் அவள் அணைக்க பார்க்க…

“மகி என்ன வேல பண்ற நீ… லூசா நீ… இப்பிடி லைட்ஸ ஆப் பண்ணா அவனுங்க எப்படி வருவானுங்க… சின்ன குழந்த மாதிரி நடக்காதே” என்றவன் அவள் அணைத்த இருவரது டோச் லைட்டை ஆன் பண்ண பார்க்கும் போதே அவர்களது நீர்மூழ்கி கப்பலோ திடீரென உருண்டு சென்று ஓரிடத்தில் விழுந்தது…

“ராகவ்… முதல்ல சப்மெரின்ட லைட்ஸ ஆஃப் பண்ணுடா” என்று சஞ்சனா கத்த,

அவனும் பயந்து போய் அனைத்து லைட்ஸையும் ஆஃப் பண்ணி விட்டான்….

அனைவருமே இருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட் போட்டிருந்ததால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை…

சப்மெரினும் உறுதியாக செய்யப்பட்டிருந்ததால் இப்போது எந்த பிரச்சினையும் இல்லை.

சப்மெரினுக்கு வெளியே பயங்கரமான சத்தங்கள் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன…

அங்கிருந்தவர்கள் உயிரைக் கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தனர்…

“லைட் வெளிச்சத்துக்காக தான் அது நம்மள நோக்கி வந்திருக்கு…” என்ற மகிமா, “இப்ப அண்ணாவும் அபியும் எப்படி வருவாங்க” எனக் கேட்டாள் பதற்றமாக…

அந்த சூழலில் இவ்வளவு நேரமும் இருந்த அமைதிக்கு மாறாக பயங்கரமான ஒலிகள் மட்டுமே…

முப்பது நிமிடங்களாக அப்படியே இருந்தனர்…

வெளியே இருந்த அந்த பயங்கரமான சத்தம் படிப் படியாக குறைந்து போனது…

அது போய்விட்டது போலும்…

அபின்ஞான் தன் டோச் லைட்டை ஆன் பண்ணி விட்டு மகாதேவ் பார்த்து, அவனது டோச்சை ஆன் பண்ண வேண்டாம் என்று சைகையால் கூற…

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தலையசைத்த படி சப்மெரினை நோக்கி வேகமாக நீந்தத் தொடங்கினர்…

இருவரும் நீந்தி கொண்டிருக்கும் போதே மீண்டும் அந்த சுறா போன்ற உயிரினம் எங்கிருந்து தான் இவர்களை நோக்கி வர தொடங்கியதோ தெரியவில்லை…

அபின்ஞானும் மகாதேவும் இரு திசைகளில் பிரிந்து சப்மெரினை நோக்கி நீந்த தொடங்கினர்…

அபின்ஞானின் டார்ச் ஒளிர்ந்து கொண்டிருந்ததால் அது இப்போது அவனையே விரட்டி வந்து கொண்டிருந்தது…

அபின்ஞானும் தன்னால் முடிந்த மட்டும் வேகமாக நீந்தத் தொடங்க… அந்த சுறாவின் பின்னாலே வந்த மகாதேவ் மயக்க மருந்து ஏற்றப் பட்டிருந்த துப்பாக்கியால் அந்த உயிரினத்தில் பல இடங்களில் சுட… ஒன்று இரண்டு ஊசிகள் தவறினாலும் பல ஊசிகள் அந்த உயிரினத்தின் மேல் சென்று பொருந்திக் கொண்டது…

அபின்ஞானோ தன் வேகத்தை குறைத்து அதை திரும்பிப் பார்க்க… அதோ இருந்ததை விட அசுர வேகத்தில் அவனை நோக்கி வர… ஒரு கணம் அதிர்ந்து நின்றவன் தன்னை மீறிய வேகத்தில் நீந்தத் தொடங்கினான்.

தன்னை அது மிக மிக நெருங்கி விட்ட சமயம் அவன் அருகே ஒரு பாறை ஒன்று இருக்க எதையும் யோசிக்காமல் அதனுள் புகுந்து கொண்டான்…

அதனால் அதற்குள் தன் வாயை நுழைக்க முடியவில்லை…

அதன் உறுமல் சத்தம் தான் கேட்டுக் கொண்டிருந்தது…

விசித்திரமான சத்தம் அது…

அபின்ஞான் தன் டோச்சை அணைத்துவிட்டு மூச்சு வாங்க அந்த பாறையினுல் இறுகிப்போய் நின்றிருந்தான்.

மயிர் இலையில் தப்பிவிட்டான்…

அவனுக்கோ புதுமையாக இருந்தது அத்தனை மயக்க மருந்து ஊசிகள் அதன் உடலில் செலுத்தப்பட்டன…

ஆனாலும் எந்த ஒரு பலனும் இல்லையே…

இனி என்ன செய்வது… எப்படி சப்மெரின் செல்வது என்று அவனுக்கு யோசனை தான்…

அந்த சுறா அவனை விரட்டிக் கொண்டு வரும்போது எக்ஸ் த்ரீ பொக்ஸையும் தவற விட்டிருந்தான்…

இனி அதை திரும்ப தேடி எடுக்க வேண்டுமே…

மகாதேவ் இந்நேரம் சப்மெரினுள் நுழைந்து இருப்பான் என்று நினைத்துக் கொண்டவன் அப் பாறையினுள்ளே இருந்தான்.

மகாதேவ் சப்மெரினுள் நுழையவும் அவனைப் பார்த்த மகிமா, “அபி வரலயா அண்ணா” என்று கேட்டாள்.

“இப்ப நமக்கு பேச டைம் இல்ல மகி… ராகவ் பாஸ்ட்டா நாம மேல போகலாம்” என்று கூற கூற,

ராகவும் அவன் பேச்சை கேட்டு சப்மெரினை இயக்கத் தொடங்கினான்.

“அண்ணா என்ன வேல பண்ற… அபி இன்னும் வரலடா” என்றாள் மகிமா.

மகாதேவோ எந்தப் பதிலும் இன்றி அமைதியாக இருந்தான்…

“ஏதாவது பேசு அண்ணா… அமைதியா இருந்தா… நான் என்னத்த புரிஞ்சுக்கிறது” என்று தன் பதற்றத்தை கட்டுப் படுத்திய படி கேட்டாள்…

தான் கொண்டு சென்ற இரு துப்பாக்கிகளையும் போட்டவன், “மயக்க மருந்து ஊசி பத்து அதுக்கு அடிச்சிருக்கேன்… பட் நோ யூஸ்… இந்த கன் ல இருந்த எல்ல புலட்டும் அது உடம்புள்ளுக்கு இருக்கு… என்னால அத எதுவுமே பண்ண முடியல… நம்ம யோசிக்காம இங்க கால வெச்சிட்டோம்னு தோணுது” என்று தலையில் கையை வைத்த படி மகாதேவ் அமர…

“இப்ப என்ன பண்றது அண்ணா… அபி வெளிய இருக்கானே” என்று கண்களில் கண்ணீர் ததும்ப கேட்டாள் மகிமா…

“ராகவ் பாஸ்டா மேல போவோம்” என்றான் மகாதேவ்…

சப்மெரினும் மேலே செல்ல தொடங்கியது…

 மகிமா எதுவும் யோசிக்க முடியாமல் பதற்றமாக இருந்தாள்…

“இப்ப லைட்ஸ ஆன் பண்ணு மகி” என்றான் மகாதேவ்…

மகிமா நாளைந்து மூச்சுக்களை எடுத்து தன்னை அமைதிப்படுத்திக் கொண்டவள், லைட்டை ஆன் பண்ணினாள்…

அபின்ஞான் பலமுறை அவளிடம் சொல்லி இருக்கிறானே எந்த ஒரு கட்டத்திலும் பதற்றமடையும் போது தானாகவே தோல்வி எனும் சிலந்தி வலையில் சிக்கிக் கொள்வோம் என்று…

இப்போது அந்த சுறா போன்ற உயிரினம் இவர்களது நீர்மூழ்கி கப்பலை நோக்கி மறுபடியும் வந்து கொண்டிருந்தது…

அது அவர்களது கப்பலை நெருங்கியதும் மகாதேவ் சப்மெரினின் அனைத்து மின்விளக்குகளையும் அணைத்து விட்டான்….

நீரின் ஆழத்தில் ஏதோ ஒரு வெளிச்சம்…

இப்பொழுது அந்த வெளிச்சத்தை நோக்கி செல்ல தொடங்கியது அந்த உயிரினம்…

சப்மெரின் இன்னும் கொஞ்ச தூரம் மேலே சென்றதும் மகாதேவ் அனைத்து மின் குமிழ்களையும் திரும்பவும் ஒளிர விட்டான் …

அதேநேரம் அபின்ஞான் தன்னுடைய டோச்சை அணைத்து விட்டு அந்த சுறா சென்ற திசைக்கு எதிர் திசையில் நீந்தத் தொடங்கினான்.

இதற்கு மேல் அவனால் நீந்த முடியவில்லை…

கலைத்து விட்டான்…

நீரின் அழுத்தம் அதிகமாக இருந்ததால் அதற்கு ஈடு கொடுத்து கடலின் ஆழ் பகுதியில் வேகமாக நீந்துவது அவனுக்கு கடினமாகவே இருந்தது…

அவ் உயிரினம் நீர் மூழ்கி கப்பலை நெருங்கியதும், நீர் மூழ்கிக் கப்பலின் அணைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டு விட இருளில் அந்த உயிரினத்தால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை…

வெளிச்சம் வருவதை அது தான் தன் இறை என்று எண்ணிக் கொண்டிருக்கிறது அந்த உயிரினம்…

இருளில் கண் தெரியாத அந்த உயிரினம் வெளிச்சத்துடன் மினுங்குவதை வேட்டையாடுகின்றது…

ஆனால் அதற்கு மனித வாசனை அடித்து விட்டது போலும்…

அபின்ஞான் சென்ற திசையை நோக்கித்தான் சென்று கொண்டிருந்தது…

அது தன்னை நோக்கி வருவதை கண்டு கொண்ட அபின்ஞான் தனக்கு சற்று தள்ளி இருந்த பாறையை நோக்கிச் செல்ல பார்க்க… அந்த சுறா வந்து அவனை கவ்விய வேகத்தில் அவன் தலையில் அணிந்திருந்த ஆக்சிஜன் மாஸ்கோ அதன் பல்லுடன் இழுபட்டு செல்ல…

அப்பாறையை நெருங்கி நகர்ந்தவனது தலையோ அந்தப் பாறையில் பலமாக மோதிக் கொண்டது….

ஆனால் தன்னையும் மீறியும் உயிரை காத்துக் கொள்ள உத்வேகம் வர அசுர வேகத்தில் நீந்திக் கொண்டிருந்தான்…

அது தன்னை நெருங்குவது நன்றாகவே அவனுக்கு புரிந்தது…

மூச்சு எடுக்க அவனுக்கு கஷ்டமாக இருந்தது…

அதனிடம் சிக்கி இறந்து விடுவோம் என்கிற மனநிலை அவனுக்கு வந்து விட்டது…

கண்களிலோ மகிமா சிரித்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு மாய தோற்றம்…

 

அவளை கண்டவனது இதழ்களும் தானாகவே புன்னகைத்துக் கொண்டன…

யாரோ தன்னை நெருங்குவது போலிருக்க கையில் பிடித்திருந்த மாணிக்கத்தை அவனை பிடிக்க வந்த ராகவின் கையில் கொடுத்தவன் பின்னோக்கி செல்ல தொடங்கினான்…

அவனது கண்களுக்கோ எல்லாமே மங்கலாக தெரிந்தன…

அவன் பின்னாலிருந்து அவனை மகாதேவ் தாங்கிப் பிடித்துக் கொண்டான்…

இருவரும் அவனை இழுத்தபடி வேகமாக நீருக்கு வெளியே நீந்தத் தொடங்கினார்…

சுறா இவர்களை நெருங்கிய சமயம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்த வெளிச்சத்தால் அதை நோக்கி வேகமாக சென்று சப்மெரினை கவ்விய வேகத்தில் அந்த நிர்மூழ்கிக் கப்பலோ அங்கேயே வெடித்து சிதறிப் போனது…

***

பதினைந்து நிமிடங்களுக்குப் பின்…

 கப்பலில் அவசர சிகிச்சை பிரிவில்…

“பேஷண்ட்க்கு கார்டியாக் எரெஸ்ட் வந்துடுச்சு… பாஸ்ட்டா சிபிஆர் பண்ணுங்க” என்றார் அங்கிருந்த தலைமை வைத்தியர்…

நூறு நூற்றுக்கும் மேற்பட்ட முறை அவன் மார்பில் அழுத்தத்தை வழங்கிய அந்த வைத்தியர் வியர்வை வழிய, “இல்லை” என்பது போல் தலையாட்ட…

அங்கிருந்த இன்னொரு வைத்தியர், தன் கையில் இருந்த எஇடி (AED) கருவியையை பயன்படுத்தி அவன் மார்புக்கு மின்சார அதிர்ச்சி வழங்கினார்…

ஆனாலும் அவன் இதயத்தின் தாளம் தான் திரும்பவே இல்லை…

அவன் மூச்சை மீளப் பெற, கடவுளுடனே முப்பது நிமிடங்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கின்றனர் இந்த வைத்தியர்கள்…

அவனது இதயம் துடிப்பை நிறுத்தி முப்பது நிமிடங்கள் தாண்டியிருக்க இதற்கு மேல் அவனுக்கு உயிர்த் திரும்பாது என்று வைத்தியர்கள் அவன் மார்பில் அழுத்துவதை நிறுத்தும் போது அவர்களுக்கே மூச்சு வாங்கியது…

அவர் எடுத்த விடா முயற்சியால்… வியர்வையில் குளித்திருந்தனர் அந்த வைத்தியர்கள்.

அத்தனை முயற்சி செய்து விட்டனர்…

முப்பது நிமிடங்களாக விடாமல் முயற்சி சி பி ஆர் செய்வது ஒன்றும் சாதாரண விடயம் அல்லவே…

இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த அந்த இசிஜி மெசினோ வைத்தியர்கள் அவனை கை விட்ட உடனே டிக் டிக் என்ற சத்தத்துடன் ஒலிக்க தொடங்கியது…

அவனை கைவிட்ட வைத்தியர்கள் சட்டென்று அவனைப் பார்க்க அவனது இதயமோ மீண்டும் தன் துடிப்பை ஆரம்பித்து விட்டது…

பெருமூச்சு விட்டவர்கள் அடுத்த கட்ட சிகிச்சைகளை வேகமாக செய்யத் தொடங்கி விட்டனர்…

அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே மீதி ஐவரும் நின்றிருந்தனர்…

அனைவருமே தப்பிவிட்டிருந்தனர்… அவர்களது சப்மெரினை தவிர…

ஆனால் அவர்களைக் காப்பாற்றிய அபின்ஞானோ உயிருக்காக போராடிக் கொண்டிருகின்றான்…

அங்கே தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த மகாதேவுக்கோ அவனைக் காப்பாற்றியது தான் நினைவு வந்தது…

சப்மெரின் வேகமாக மேல் நோக்கி சென்று கொண்டிருக்க உள்ளே இருந்தவர்களை பார்த்த மகாதேவ், “எல்லாரும் நீந்த ரெடியா இருங்க… இனியும் அபியால நீந்த முடியும்னு சொல்ல முடியாது… ரொம்ப நேரமா அவனே தனியா எல்லாத்தையும் ஹெண்டில் பண்ணிட்டு இருக்கான்… லைட்ட வச்சு அது நம்ம பின்தொடர்ந்துட்டே இருக்கு… அத டெக்னிக்கை யூஸ் பண்ணித்தான் அதை நாம அடிக்கணும்… நானும் ராகவும் அபி கிட்ட போறோம்… மேல இந்நேரம் கரன் நமக்காக போர்ட்ட அனுப்பி இருப்பான்… நீங்க இந்த சப்மெரின்ல லைட் ஆன் பண்ணிட்டு இதிலிருந்து வெளிய போயிடுங்க… மேல போய்ட்டா சேப் தான்…” என்றவன் ராகவுடன் அபின்ஞானை நோக்கி சென்றான்…

 

அவர்கள் அபின்ஞான் நோக்கி செல்லும் போதே அது அவனை தாக்கி விட்டிருந்தது…

நல்ல வேலை அவன் ஆக்சிஜன் மாஸ் மட்டும்தான் மட்டும் கழண்டு போக அந்த சுறாவால் அபின்ஞானுக்கு எந்த ஆபத்து ஏற்படாவிட்டாலும் இவர்கள் எதிர்பார்க்காமலே அவன் தலை பாறையில் சென்று மோதி விட்டது.

இவர்கள் அபின்ஞானை மேலே இழுத்து வரும் போதே அதிகமான நீரை அருந்தி விட்டான்…

உடனடியாக அவன் வயிற்றில் இருந்த நீரை அகற்றி அவசர முதலுதவியை வழங்கி பத்து நிமிடத்திலே அவனை வைத்தியர்களின் கையில் ஒப்படைத்து விட்டனர்…

உள்ளே வைத்தியர்களோ பதற்றமாக இருப்பதை கண்டு வெளியுள்ளவர்களும் பதற்றமாக தொடங்கினார்…

மேலும் இரண்டு மணித்தியாலங்கள் கடந்து வெளியே வந்தனர் வைத்தியர்கள்…

எல்லாரும் எழுந்து நிற்க மகாதேவ் அருகே வந்த வைத்தியர், “பேஷன்ட தலையில பலமா அடிபட்டு இருக்கு… நாம எங்களால முடிஞ்ச ட்ரீட்மென்ட குடுத்து அவரோட உயிரை மட்டும்தான் நம்மளால காப்பாத்த முடிஞ்சது…  நீண்ட நேரமா மூச்ச டம் பண்ணி இருந்ததால கார்டியாக் எரெஸ்டும் வந்துடுச்சு… ஆனா எப்படியோ காப்பாத்திட்டோம்… தலைல பலமா அடிபட்டதால அவர் பிரைன் டெத் ஸ்டேஜ்ல இருக்கார்… அதனால மூச்சு விட மட்டும் தான் அவரால் முடியும்… அவர் பொடில உள்ள பாட்ஸும் வேல செய்தில்ல… அவர்ட் நிலைமய சரியா சொல்லனும்னா அவர் இப்போ உயிருள்ள பிணத்துக்கு சமம்.

இனி அவர் உயிர் பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்…. டுவண்டி போர் ஹவர்ஸ் தான் அவர் உயிரோடு இருப்பார்… அதுக்கு மேல இருப்பாரோ இல்லைன்னு சொல்ல முடியாது… இனி கடவுள் கையிலதான் எல்லாமே இருக்கு… வேண்டிக்கோங்க” என்று அவர்களது தலையில் இடியை இறக்கிவிட்டு சென்றனர்..

 அவன் மிக மிக ஆபத்தான, பாரதூரமான ஒரு மருத்துவ நிலையில் இருக்கிறான் என்பது தெரிந்ததும் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பக்கம் இடிந்து போய் நின்றனர்…

இனி அவர்களாலும் என்ன செய்து விட முடியும்… கடவுளிடம் பிராத்திப்பதை தவிர வேறு வழி இல்லை…

 

மகிமாவுக்கோ பேச வார்த்தைகளே வரவில்லை…

கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே கொட்டிக் கொண்டிருந்தது…

அப்படியே மடங்கி நிலத்திலே அமர்ந்து விட்டாள்…

அவளவன் அவனை விட்டு சென்று விடுவானா…

ஒரே இரண்டு மாதங்கள் அவனுடன் கூடவே வாழ்ந்திருக்கிறாள்… அவள் மனதிலோ நீங்காத இடத்தை பிடித்து விட்டான்…

அவள் நினைத்துப் பார்க்க முடியாத அளவு சந்தோசங்களை வழங்கியவன்… அதை அவனுடனே பறித்து சென்று விடுவானோ…

அணையப் போகின்ற விளக்கின் ஒளியாக இருந்திருப்பானா அவன்…

மகிமாவால் அதை நினைத்து பார்க்கவே முடியவில்லை…

“ப்ளீஸ் அபி… திரும்ப என் கிட்டயே வந்துடுங்க” என்று அவள் மனம் அதையே திரும்ப திரும்ப உருப் போட்டு கொண்டிருந்தது…

நெஞ்சை கசக்கி பிழிவது போன்று தாங்க முடியாத ஒரு வலி…

மூச்சு எடுக்கவே சிரமமாக இருந்தது…

அழுவதற்கோ கத்துவதற்கோ அவள் வாயில் இருந்து சத்தம் வரவில்லை…

அதற்கு மாறாக கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் தாராளமாக கொட்டிக் கொண்டிருந்தது…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 44

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!