என் தேடலின் முடிவு நீயா – 33

4.9
(39)

தேடல் 33

மகிமாவை பார்த்த ராகவ், “அடடா இப்பதான் மகி முகமே விடிஞ்சிருக்கு…” என்று சிரித்தபடி சொல்ல,

“பழைய கதய விடுங்க அண்ணா… இப்ப தான் எல்லாம் ஓகே ஆயிடுச்சே” என்றவள், “உங்க பிரண்ட் எழும்பி என்ன வேல செஞ்சார் தெரியுமா?” என்று கேட்க…

அவர்களோ புரியாமல் அபின்ஞானை பார்த்தார்கள்…

அபின்ஞானோ நெற்றியை வருடியபடி அவர்களை பாவமாக பார்த்து வைத்தான்…

இப்பொழுதல்லவா அவர்கள் அவனுக்கு பல அறிவுரைகளை வழங்கி விட்டு நிறுத்து இருக்கிறார்கள்….

“மெமரி லாஸ்ட் மாரி நடிச்சார் அண்ணா…” என்று அவள் அவனது திருகு தாளங்களை புட்டு புட்டு வைக்க…

“சரிடி தெரியாம பண்ணிட்டேன்… நீ போ நான் பேசிகிறேன்” என்று அவளை விரட்டப் பார்த்தான்…

“என்ன விரட்ட பாக்குறீங்களா? உங்க வீர தீர செயல சொல்லத் தானே வேணும்” என்று உதடு சுழித்துக் கூறியபடி அங்கு இருந்து சென்றாள்…

அவனை முறைத்துப் பார்த்த கரன், “உன் கூடவும் தேவ் கூடவும் சேர்ந்த நாம தான் இன்னமும் சிங்கிளா சுத்திட்டு இருக்கோம்… நீ ரெண்டு குழந்தைக்கு அப்பாவாக போற… அதுல வேற நீ கல்யாணமே ஆகாதவனா? ஆயிரத் தெட்டு கண்டிஷன் போட்டுட்டு இருந்துட்டு எங்க எல்லாருக்கும் முந்தி கல்யாணம் முடிச்சுட்டு குசும்பு பாத்தியா?” என்று ராகவிடம் கேட்க,

 ராகவும், “ஆமா… அவனுங்க பொண்ண பார்க்கவும் மாட்டாங்க பாக்க எங்களுக்கும் விட மாட்டாங்க… இப்ப ரெண்டு பேரும் அப்பாவாக போறானுங்க, கூட இருந்த நாமதான் ஒண்ணுக்கும் இல்லாம இருக்கோம்…” என்றவன், அபின்ஞானை கிண்டலாக பார்த்து, “ஏண்டா உனக்கு இந்த வேலை” என்று கேட்க….

“சும்மா… தாண்டா… ஒரு சான்ஸ் கிடைச்சா வச்சு செய்ய பாக்குறீங்களே” என்று சிரித்தபடி கூற,

“இப்படி ஒரு நல்ல சான்ஸ் மிஸ் பண்ண முடியுமா? நீயும் தேவும் சண்டை போட்டுக்கிட்டு எங்கள என்ன பாடு படுத்தின இப்ப கொஞ்சம் அனுபவிச்சுக்கோ தப்பில்ல” என்று இருவரும் சொல்ல,

“சரிதான்” என்றான் அபின்ஞான்…

“என்னடா இவ்ளோ ஃபாஸ்ட்டா உன் தப்ப ஒத்துக்கிட்ட” என்று கரன் கேட்க, “ஒத்துக்கலன்னா மட்டும் விடவா போறீங்க” என்றான் தலையாட்டி சிரித்தபடி…

நண்பர்களும் கலகலப்பாக நீண்ட நேரம் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்கள்…

அபின்ஞானின் உடல்நிலை நாளுக்கு நாள் நன்றாகவே தேரிக் கொண்டிருந்தது…

இப்போது வீட்டிலே ஜிம்மும் செய்ய ஆரம்பித்து விட்டான்…

அவன் தான் தன் உடல் நிலையிலும் அதை கவனிப்பதிலும் அலாதி அக்கறை உடையவன் ஆயிற்றே…

மகிமாவின் உடல் நிலையும் இப்போது இருந்ததற்கு சரியாகி விட்டிருந்தது…

மகிமாவுக்கு இப்போது ஏழாவது மாதம் சென்று கொண்டிருந்தது…

“மகி இன்னக்கி நாம ஒரு இடத்துக்கு போகலாம் வா…” என்று அவளை தயாராக சொல்லி அழைத்துக் கொண்டு சென்றான்…

அபின்ஞானின் கருப்பு நிற பி எம் டபிள்யு கார் நிற்கும் போதே, சாம்பல் நிற பி எம் டபிள்யு காரில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர் மகாதேவும் சஞ்சனாவும்….

இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்…

“தேவ் ஜெம் & ஜூவலர்ஸ்” என்ற பாரிய பெயர் பலகை இருந்தது…

மகாதேவின் கம்பெனிக்கு தான் வந்திருந்தனர்….

“நைஸ் இன்டீரியர் டிசைன்… இன்னைக்கு தான் நான் முத முதலா தேவ் கம்பெனிக்கே வரேன்” என்று கூறியவன், அனைத்தையும் ரசித்தப்படியே உள்ளே வந்தான்….

மகாதேவின் தனிப்பட்ட அறைக்கு வரவும் அங்கே ராகவும் கரனும் இருந்தனர்…

மகாதேவ் அவன் கம்பெனியின் லோக்கர் அறைக்குள் அவர்கள் ஐவரையும் அழைத்து சென்றான்…

அங்கிருந்த ஒரு லோக்கரை திறந்து அதிலிருந்து ஒரு பெட்டியை எடுத்து மேசை மேல் வைத்த மகாதேவ், “இது நாம எடுத்த டைமண்ட்ஸ், இதுவரைக்கும் யாருக்குமே தெரியாது… நீ இந்த டைமண்ட்ஸ எப்படி எடுத்தன்னு ஞாபகம் இருக்கா அபி” என்று சிரித்தபடி கேட்க,

“மறக்குமாடா… அவ்ளோ பாரம்ன்னு சொல்லி…. நான் கொண்டு வந்திருந்த பேக்ல எல்லா டைமண்ட்ஸ போட்டேன்… லாஸ்ட் ஒன்ன மட்டும் ராகவ் கையில கொடுத்துட்டு மயங்கிடேன்… அது மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கு” என்றான் அன்றைய நாளைய நினைவுகளை திரும்பவும் மீட்டி…

“நீ எழும்புற வர… நாங்க யாருமே இத தொடல்ல… இப்ப இந்த டேமேண்ட்ஸ ஆறா பிரிக்கலாம்” என்றான் கரன்…

அவனை பார்த்த சஞ்சனா, “எதுக்குடா ஆறா பிரிக்கணும்… நாலா பிரிக்கலாம்” என்றாள்…

ஆண்கள் திரும்பி மகிமாவை பார்க்க, “எனக்கும் ஓகே தான்…” என்றாள்.

ராகவ் மகிமாவை பார்த்து, “ஆர் யூ சுவர்…. உன் புருஷன் தான் உயிரை பணயம் வெச்சி எடுத்தான்னு அப்புறம் கேட்டு சண்டை பிடிக்க மாட்டியே…’ என்று கிண்டலாக கேட்க,

அவனைப் பார்த்து சிரித்தவள், “அப்படி இல்லண்ணா… எனக்கு வந்தாலும் ஒன்னுதான், அபிக்கு வந்தாலும் ஒன்னுதான்… அப்புறம் சும்மா எதுக்கு ஆறா பிரிக்கணும்? நான்காவே பிரிச்சிடலாம்” என்றாள் உறுதியான குரலில்…

அவளுக்கே இதில் எதிலும் எப்போதுமே ஆசை இருப்பதில்லையே…

அவளுக்கு அவள் அபி மட்டும் வாழ்நாள் முழுக்க கூட இருந்தால் போதுமே…

எப்போதுமே அவர்களுக்கு அவள் மேல் ஒரு பிரமிப்பு இருக்கும்… புதுமை பெண்ணாகவே இருக்கிறாளே…

அனைத்திலுமே கம்பீரமான தோரணையுடன் வலம் வருபவள்… தன் காதலிலும் அதே கம்பீரமாக அல்லவா இருக்கிறாள்…

எதிலுமே அவளை குறை சொல்லி விட முடியாது…

டயமண்ட்ஸும் நான்கு பேருக்கு பிரிக்கப்பட்டன…

ஆறு பேரும் சிரித்துப் பேசிய படியே உண்பதற்காக ஒரு ஹோட்டலுக்கு சென்றனர்…

“நான் என்கிட்ட இருக்கிற டைமண்ட்ஸ காட்டியே ஒரு நல்ல பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்க போறேன்…” என்றான் கரன்.

“நீ டைமண்ட்ஸ காட்டினா அந்தப் பொண்ணு உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டா… டைமண்ட்ஸ தான் கல்யாணம் பண்ணிப்பா” என்றான் அபின்ஞான்…

“டேய் இது தான் வேணாங்கறது… என் மன சந்தோஷத்துக்காக சரி நான் சொல்லிக்கறேன் டா… இனி இந்த பில்லியனரை யாரும் வேணாம்னு சொல்ல போறாங்க” என்றான் கரன்…

“கண்ணாடில போய் உன் மூஞ்ச பார்த்துட்டு இத சொல்லு” என்றாள் சஞ்சனா கிண்டலாக…

“அடிங் விட்டா பேசிட்டே போற…” என்று கரன் எகிறிக் கொண்டு வர, அவர்கள் ஆர்டர் பண்ணிய உணவை கொண்டு வந்த வெயிட்டர் உணவை வைக்கும் போது அவர்களை ஒரு பெண் தாண்டி வேகமாக செல்லும்போது வெயிட்டரின் கையில் இருந்த தட்டு அவள் மேல் பட்டு கீழே விழுந்தது.

அபின்ஞானின் மேசையில் இருந்தவர்கள் சட்டென திரும்பி அவளை பார்த்தனர்.

சுடிதார் அணிந்து இருந்தாள்.

மெல்லிய உடல்வாகு…

முகத்துக்கு மாஸ்க் அணிந்திருந்ததால் அவளை சரியாக பார்க்க முடியவில்லை ஆனால் அவள் பதற்றமாக இருப்பது தெளிவாகவே தெரிந்தது.

மேசையில் அமர்ந்திருந்த மகிமாவை பார்த்தவள், “ஐ அம் ரியலி சாரி மேடம்” என்று அவள் கவலையுடன் கூற,

“இட்ஸ் ஓகே… நோ ப்ராப்ளம்” என்று மகிமா கூற,

மீண்டும் இருமுறை மன்னிப்பை வேண்டி விட்டு அந்த ஹோட்டலில் இருந்து வேகமாக வெளியேறியவள் தன் ஐடி கார்ட் விழுந்ததை அறியவில்லை…

 மேசையில் இருந்தவர்களும் பெருமூச்சுடன் அடுத்த உணவை ஆர்டர் பண்ணிவிட்டு அமர்ந்திருக்க,

அந்த நேரம் மகிமா, “வாவ்… செம்ம ஹென்ஸமா இருக்கான்” என்றாள் மகிமா ஒரு இடத்தை பார்த்தபடி….

அவனை முறைத்து பார்த்த அபின்ஞான், “நான் பக்கத்துல இருக்க கிட்ட எதுக்குடி கண்டவனுங்கள சைட் அடிக்கிற” என்றான் பொறாமை பொங்கும் குரலில்,

“அழகா இருக்கான்… அதுதான் பார்த்தேன்… தப்பா என்ன?” என்று கண் சிமிட்டு கேட்க,

அவள் அழகில் மயங்கியவனோ, “இல்லை” என்பது போல் தலையசைத்தான்.

 அபின்ஞானை பார்த்து சிரித்த மகிமா, “அவன் இங்கதான் வரான்” என்றாள் அவர்கள் மேசையை நோக்கி வந்து கொண்டிருந்தவனை கண்களால் காட்டி…

அந்நேரம் அவனும் ஆறடி உயரத்தில் பார்க்கப் பளிச்சென்று தோற்றத்தில் அவர்களை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தான்…

பட்டர் கலர் ட்ரவுசரும் மெரூன் கலர் டி-ஷர்ட் அணிந்து கையில் டாக்டர் கோர்ட் ஒன்றை வைத்துக்கொண்டு ஆளுமையான தோற்றத்தில் சுற்றிலும் எதையோ தேடி கண்களை சுழல விட்டபடியே இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்…

அபின்ஞானுக்கும் மகாதேவிற்கும் இடையே வந்து நின்றவன், “ஹாய் மச்சி எப்படி இருக்கீங்க டா” என்று சிரித்தபடி கேட்டான்…

சிரிப்பிலே அனைவரையும் ஈர்த்துவிடுவான் போலும்…

அபின்ஞானும் மகாதேவும் சட்டென எழுந்து நின்றனர்…

அவன் அவர்கள் பாடசாலையில் வகுப்பில் ஒன்றாக படித்த அவர்களது நண்பன் இஷாந்த்…

“டேய் மச்சி எப்படி இருக்க டா” என்றபடி அபின்ஞான் இஷாந்தை அணைத்துக் கொண்டான்…

“நல்லா இருக்கேன் டா” என்றான் இஷாந்த்…

“இப்ப என்னடா செய்ற?”என்று அவனை பார்த்து அபின்ஞான் கேட்க,

“ஜெனரல் ஹாஸ்பிடல்ல ஹாட் சர்ஜனா இருக்கேன் டா” என்றான் இஷாந்த்…

அவனைப் பார்த்தது, “நல்லா வளர்ந்துடுடா நீ..” என்று மகாதேவ் சொல்ல,

“பதினஞ்சி வருஷத்துக்கு அப்புறம் பா ர்த்தா வளர்ந்து தான்டா இருப்பேன்” என்றான் இஷாந்த் சிரித்தபடி…

பழைய நண்பர்கள் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? நன்றாக பேசி சிரித்து விட்டு இஷாந்த் கிளம்பத் தயாராக மற்ற ஆண்களும் எழுந்து நின்றனர்…

“நாமெல்லாம் திரும்ப மீட் ஆகலாம் மச்சி… என்ன ஹெல்ப் வேணும்னாலும் கால் பண்ணு…” என்றான் இஷாந்த்.

“கட்டாயம் டா… என்றான் தேவ்…

“சரி உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா” என்று கேட்டான் அபின்ஞான்.

“எங்கடா இப்பதான் லைஃப்ல செட்டில் ஆயியிருக்கேன்… வீட்ல பேசிட்டு இருக்காங்க” என்றவன், “திரும்ப கட்டாயம் மீட் பண்ணலாம்” என்ற இஷாந்த் பெண்களிடமும் விடை பெற்றுக் கொண்டு மேசையிலிருந்து எழும்பியவனது காலில் ஏதோ தட்டுப்பட்டது…

குனிந்து பார்த்தான் அது ஒரு வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியரின் ஐடி கார்ட்… “மிஸ் மைனிகா…” என இதழ்களுக்குள் நக்கலாக சிரித்துக் கொண்டவன் யாரும் அறியாமல் அதை எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சென்றான் அவன்……

அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த மகாதேவ், “அபி உனக்கு தெரியுமா நம்ம சயின்ஸ் டீச்சருக்கு லெட்டர் போட்டதே இவன் தான்” என்று கூற… அங்கிருந்தவர்களோ அதிர்ந்து கண்ணை விரித்துக்கொண்டனர்…

தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த மகிமாவுக்கோ புரையேறிவிட்டது…

இருமி கொண்டவள், “இவனா உங்களுக்கு பெரிய ஆப்பா வச்சவன்… இதைக் கண்டுபிடிக்க உங்க ரெண்டு பேருக்கும் பதினாஞ்சி வருஷம் போயிருக்கு… அவன் என்னான்னா ஒண்ணுமே பண்ணாதவன் மாதிரி வந்து சிரிச்சு பேசிட்டு போறான்” என்றால் மகிமா தன் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தபடி…

அவளை சலிப்பாக பார்த்த அபின்ஞான் மகாதேவை பார்த்து, “எப்படி கண்டுபிடிச்ச?” என்று கேட்டான்…

“நான் இங்க வந்ததுமே யாருன்னு தேடி கண்டுபிடிச்சிட்டேன்… நாம ரெண்டு பேரும் மாறி மாறி பெஸ்ட் வருவோம்… எங்க ரெண்டு பேருக்கும் அப்புறமா இவன்தான் கிளாஸ்ல மூணாவதா வந்துட்டு இருப்பான்… நமக்குள்ள போட்டி மட்டும் தான் இருக்கும்… ஆனா அவன் அப்படி இல்ல… அவனுக்கு போட்டியா வர்றவன முதல்ல இல்லாமாக்கிட்டு தான் எடுத்த வேலை பார்ப்பான்…இஷாந்த் ஃபர்ஸ்ட் வர்ரதுக்காக நம்மள பிரிச்சிருக்கான்…

இப்ப பெஸ்ட் டாக்டரா இருக்கான்… எங்க பீல்டும் அவன் பீல்டும் ஃபுல்லா வேற… அவனுக்கு இனி நம்மளால எந்த பிரச்சினையும் இல்ல… அதனால தான் இப்ப பழையபடி நல்லா பேசுறான்… ஹீ இஸ் டேஞ்சர்… ஆனா நமக்கு இல்ல… அவன எதிர்க்கிறவங்களுக்கு மட்டும்தான்…

இப்ப நாம என்ன ஹெல்ப் கேட்டாலும் செய்வான்…” என்றான் சிரித்தபடி…

“உங்கள விட பெரிய கில்லாடி போல… பார்க்க ஸ்மார்டா அப்பாவியா இருக்கான்” என்றாள் மகிமா…

“அப்பாவி மாதிரி இருக்கிறவங்கள தான் நம்ப முடியாது” என்றான் மகாதேவ்…

“ம்ம் அது…. அரட்டை அடித்துவிட்டு அவர்கள் வீடு வந்து சேரும் போது இரவாகிவிட்டது…

சின்ன பெட்டி ஒன்றில் டைமண்ட்சை வைத்து அதை லாக் பண்ணிக் கொண்டிருந்த அபின்ஞானை பார்த்த மகிமா, “இத என்ன பண்ண போறீங்க” என்று கேட்டாள்…

“இத எடுக்க முந்தி… இத வச்சு எத்தனையோ வேலை செய்யணும்னு நினைச்சிருந்தேன்… நம்ம கம்பெனிய வோல்ட் வாய்ஸா முன்னேத்தனும்னு எத்தனையோ பிளேன் வெச்சி இருந்தேன்… ஆனா இப்ப அந்த ஐடியா கொஞ்சம் இல்ல… இனி என்ன செய்யணும்னு யோசிக்கணும்” என்றான் தன் தாடியை நீவியபடி…

அவளோ உங்க விருப்பம் என்ற படி தோல்களை குலுக்கி கொண்டாள்…

மகிமாவுக்கு எட்டாம் மாதம் நெருங்கிக் கொண்டிருக்க அபின்ஞான் வீட்டிலே சிறிதாக வளைகாப்பு செய்ய விரும்பினான்…

மகிமாவுக்கு அதில் பெரிதாக விருப்பம் இல்லை என்றாலும் அபின்ஞானின் விருப்பத்தை மறுக்க அவள் விருப்பப்படவில்லை…

அன்று அவளது வளைகாப்பு நாள்..

அவளோ சிவப்பு நிற பட்டுப் புடவை உடுத்தி நகைகளும் அணிந்து தேவதை போல் இருந்தாள்…

அபின்ஞான் அவளை பழையபடியே மாற்றி விட்டான்.

அவள் கண்களோ சிரிப்பில் எப்போதும் மின்னிக் கொண்டிருந்தன…

அவர்களது நெருங்கிய குடும்பத்தினரை மட்டும் அழைத்தினர்…

மீனாட்சியுடன் மகாதேவும் சஞ்சனாவும் வந்திருந்தனர்…

மீனாட்சியும் சஞ்சனாவுக்கு வளைகாப்பு செய்ய கேட்டுக் கேட்டுக் கொண்டிருக்க, மகாதேவ் அதற்கு மறுத்து கொண்டு இருந்தான்…

வளைகாப்பு செய்தால் அவள் தன் தாய் வீட்டுக்கு சென்று விடுவாளே….

அவள் செல்லாவிட்டாலும் மீனாட்சி வற்புறுத்தி அழைத்து சென்று விடுவார்…

 அதனால் அவன் மகிமாவை அழைக்கவும் இல்லை… அவன் அழைத்தாலும் அவள் வரப்போவதில்லை என்பது வேறொரு கதை…

அவள் அபின்ஞானை விட்டு பிரிந்திருந்தால் தான் அதிசயம்…

அபின்ஞான் அவள் கைக்கு டைமண்ட் பதிக்கப்பட்ட அழகான இரண்டு தங்க வளையல்களைப் போட்டவன், அவள் முகத்தில் மஞ்சளை பூசி விழாவை ஆரம்பித்தான்…

மகிமாவுக்கு பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருந்தான்.

தாகம் ஏற்பட்டால் அவள் கேட்க முன்பே அவள் கையில் ஜூசை கொடுப்பான்…

அதைப் பார்க்கும்போது தான் மீனாட்சிக்கு பற்றி கொண்டு வந்தது…

“சிங்கம் மாதிரி இருந்த பையன என்ன செஞ்சி மயக்கினாலோ தெரியல… எப்ப பார்த்தாலும் அவ பின்னாடியே சுத்திட்டு இருக்கான்” என்று புகைச்சல் ஆக நினைத்துக் கொண்டார்.

விழாமுடிந்ததும் அனைவரும் சென்று விட்டனர்…

மகிமா அபின்ஞானின் கையைப் பிடித்தபடி வாசலில் நின்று இருக்க, அன்னபூரணி அம்மாளும் ஏதோ ஆவலுன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்…

சஞ்சனாவுக்கு கால் வலி என்பதால் சோபாவில் காலை நீட்டி அமர்ந்திருந்தாள்…

அன்னபூரணி அம்மாளிடம் எதோ கொடுக்க வந்த மீனாட்சி மகிமாவை பார்த்து, “இப்பதான் உன் புருஷன் எழும்பி இருக்கான்… அதுக்குள்ள நீ அவன பழயபடி உன் பின்னாலே சுத்த வச்சுட்ட… உன்ன மாதிரி ஒரு அன்னக்காவடிய கட்டிக்கிட்டு இவன் உருப்பட்ட மாதிரி தான்” என்றார் வக்கனையாக…

இவ்வளவு நாளும் மகிமா இருந்த மனநிலையில் அவர் சொல்லும் கதைகளுக்கு எந்த ஒரு பதிலையுமே கொடுக்க முடியவில்லை…

ஆனால் இப்போது அபின்ஞான் அவளை பழையபடி மாற்றி விட்டானே…

“என் புருஷன் என் பின்னால சுத்தாம உங்க பின்னாடியா சுத்துவார்… நானும் என் புருஷனும் எப்படி வேணாலும் இருந்துட்டு போவோம்… நாங்க எப்படி இருந்தா உங்களுக்கு என்ன” என்றாள் அவரை முறைத்துக் கொண்டு,

“இந்த காலத்து பசங்க நலவ சொன்ன எங்க கேக்குறீங்க… உன் புருஷன் கிட்ட இப்பிடி ஒட்டிடே இருக்காம அவன கொஞ்சம் வேல பார்க்க விடேன்…” என்று அவரும் பொடி வைத்து பேச,

அவர் பேச்சில் அவரை பார்த்து சிரித்தவள், அருகே நின்றிருந்த அபின்ஞானை பிடித்து தன்னறுகே இழுத்தவள், அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “இது இப்படி கிஸ் கூட பண்ணுவேன்… நான் என் அபிக்கு கிஸ் பண்ணா தப்பா” என்று அவள் அப்பாவியாக கேட்கற…

அபின்ஞானுக்ககோ சங்கடமாக இருக்க சத்தம் இல்லாமல் அங்கிருந்து நழுவிக்கொண்டான்…

இந்த இடியாப்ப சிக்கலில் அவன் மாட்ட விரும்பவில்லை…

மகிமாவே சமாளித்து விடுவாள் என்பதால் பின்னால் இருந்த சோபாவில் அமர்ந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஆத்தி…” என நெஞ்சில் கையை வைத்துக் கொண்டவர், “கலிகாலம்… என்ன பொண்ணு டி நீ…” என்று அவள் செய்த செயலில் சங்கடமாகவும் கோபத்துடனும் கேட்க,

“நீங்க இப்படியே ஓவரா பேசிட்டு இருந்தீங்கன்னா… என் புருஷன கொஞ்சுரத விட்டுட்டு உங்க பொண்ணையும் மாப்பிள்ளையும் தான் பிரிச்சிடுவேன்… இப்பவே சொல்லிட்டேன்” என்றாள் மகிமா…

 மீனாட்சியை பார்த்த அன்னபூரணி அம்மாள், ” அண்ணிக்கு வேற வேலயே இல்லயா… இவ கிட்ட போய் வாய கொடுத்துட்டு இருக்காங்க… ஆனா வாங்க வேண்டியவர் தான்” என்று முனுமுனுத்தபடியே அங்கிருந்து சென்றார்…

“என்னடி மிரட்றியா?” என்று கேட்டார் மீனாட்சி…

“மிரட்டல்ல நான் உண்மைய சொன்னேன்… நான் என்ன சொன்னாலும் என் அண்ணா கேட்பான் தெரியுமா? அதனால பார்த்து நடந்துக்கோங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

மகாதேவோ அங்கிருந்த வேலைக்காரன் ஒருவனிடம், “என்கிட்ட எதுக்கு கேட்டுட்டு இருக்க போய் மகி கிட்ட கேளு… அவ ஓகேன்னா… எனக்கும் ஓகே தான்” என்று சொல்ல,

மீனாட்சியின் கண்களோ அதிர்ந்து விரிந்து கொண்டன…

“ஐயோ… நான் நினைச்சத விட இவ படு பயங்கரமா இருக்காளே” என்று நினைத்துக் கொள்ள…

பின்னாலிருந்த அபின்ஞானுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை…

சஞ்சனாவும் கஷ்டப்பட்டு சிரிப்ப அடக்கி கொண்ட அமர்ந்திருந்தாள்.

அவர் சட்டென பெட்டிப் பாம்பாக அடங்கி விட்டார்…

“ஐயோ அப்படி இல்லம்மா… சும்மா தான் சொன்னேன்” என்றவர் அங்கிருந்து எதுவும் பேசாமல் சென்றார்…

இதற்கு மேல் அவர் மகிமாவுடன் வாயைக் கொடுப்பாரா என்ன?.

மகிமாவும் நமட்டு சிரிப்புடன் சஞ்சனா அருகே செல்ல, “என்னடி என் அம்மாவை அடக்கிட்டியா?” என்று கேட்டாள்…

“ச்சே சே… அவ்ளோ பெரிய மனுசி அவங்க… நான் என்னத்துக்குடி அவங்கள அடக்கணும்… சும்மா பேசிட்டு வந்தேன்” என்று அமைதியாக கூற,

“கையை நீட்டி அவள் பேசுவதை தடுத்தவள், “மூடு… உன்ன பத்தி எனக்கு தெரியாதா? என் காதிலே பூசுத்த வந்துட்டா…” என முனுமுனுத்தபடியே அங்கிருந்து சென்றாள்…

 செல்லும் சஞ்சனாவை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த மகிமாவின் தோலை யாரோ தட்ட திரும்பி பார்த்தாள் அபின்ஞான் தான் நின்று இருந்தான்…

 அவளை முறைத்து பார்த்தவன், “எதுக்குடி என்ன கிஸ் பண்ணிட்டு போனா” என்று கேட்டான்…

“அது ஒரு ப்லோல பண்ணிட்டேன்” என்றாள் அவன் பழுப்பு நிற விழிகளை பார்த்தபடி…

இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டவன், “சரி சரி வா… வந்து உட்காரு உன் கால் ரொம்ப வீங்கிடுச்சு… இனி ரெஸ்ட் எடு” என்று கூறியவாறு அவளை அழைத்துக்கொண்டு சென்றான்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 39

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!