அடுத்த இரண்டு வாரங்களிலேயே மகிமாவுக்கு பிரசவ வலியும் வந்துவிட… அவளை அழைத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்றான் அபின்ஞான்…
அரசாங்க வைத்தியசாலை என்பதால் அவனால் உள்ளே செல்ல முடியவில்லை…
பதற்றமாகவே அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்…
அன்னபூரணி அம்மாளோ அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்…
சிறிது நேரத்திலே இரு தாதிகள் வந்து, “கங்கிராஜுலேஷன் சார் உங்களுக்கு ரெண்டு பசங்க பிறந்து இருக்காங்க” கூறி ரோஜா குவியல் போல் இருந்த குழந்தைகளைக் கொண்டு வந்து நீட்ட இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டவன் முதலில் எந்த குழந்தையை தூக்குவது என்று தடுமாற்றமாக இருந்தது…
அவன் தடுமாற்றத்தை போக்கும் விதமாக அன்னபூரணி அம்மாளும், பசுபதியும் குழந்தைகளை தூக்கிக் கொண்டனர்…
“என் வைஃப் எப்படி இருக்கா டாக்டர்” என்று வெளியே வந்த வைத்தியரை பார்த்து கேட்க, “ஷீ இஸ் ஃபைன், இன்னும் கொஞ்ச நேரத்துல நார்மல் போர்டுக்கு மாத்திடுவோம்… அப்ப நீங்க வந்து பாத்துக்கோங்க” என்றவர் அங்கிருந்து செல்ல தாதி மாறும் குழந்தைகளை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றனர்…
அவளை அறைக்கு மாற்றியதுமே, உடனே அவளை பார்க்க சென்று விட்டான்…
வாடிய கொடியாக படுத்திருந்தாள் மகிமா…
அவள் தலையே மென்மையாக வருடியவன், அவள் நெற்றியில் முத்தமிட்டு, “ஆர் யூ ஒகே” என்று கேட்டான்…
“ம்ம்… நம்ம பசங்கள பார்த்தீர்களா?” என்று கேட்க,
“பார்த்தேன் டி… ரொம்ப சின்னதா இருக்கானுங்க… தூக்கவே பயமாயிருக்கு” என்றான் அருகில் தொட்டிலில் வளர்த்த பட்டு இருந்த குழந்தைகளை பார்த்தபடி, அவன் பேச்சைக் கேட்டு அவளும் சிரித்துக் கொண்டாள்…
சஞ்சனாவுக்கும் பிரசவ நேரம் நெருங்கியதால் மகாதேவ் மட்டும் அவளை வந்து பார்த்துவிட்டு சென்றான்…
அடுத்த இரு நாட்களிலே அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்…
அபின்ஞான் கட்டிலில் அமர்ந்து குழந்தைகளை கொஞ்சிக் கொண்டிருக்க மகிமா கன்னத்தில் கை வைத்தபடியே அவனது தந்தை அவதாரத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்…
அன்னபூரணி அம்மாளும் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தார்…
“அம்மா நான் சின்ன வயசுல இருந்த போலவே இவனுங்களும் இருக்கானுங்க” என்றான் சிரித்தபடி…
“உன் பசங்க உன்ன மாதிரி இல்லன்னா தான் புதினம்… இவ உன்ன மட்டும் நினைச்சிட்டு இருந்தா… அதனால எப்டியுமே குழந்தை உன்ன மாதிரி தான் பிறக்கும்” என்றவர் குழந்தைகளை ஆசையாக வருடிக் கொடுத்தார்…
குழந்தைகளுக்கும் விஹான் வியான் என்று பெயரும் சூட்டினர்…
அன்று தோட்டத்திலிருந்த பெஞ்சில் அமர்ந்து ஓரிடத்தை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் மகிமா…
ஒரு பெரிய வாத்து டாப்பி டாப்பி வந்து கொண்டிருந்தது…அதன் பின்னாலே பன்னிரெண்டு சிறிய வாத்து குஞ்சுகள் தாய் பறவையை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தன…
அவற்றின் தாய் வாத்து அங்கே இருந்த குளம் போன்ற நீர் தொட்டியில் பாய, தாயைப் பார்த்த குஞ்சுகளும் ஒன்றின் பின் ஒன்றாக பயந்தபடி மெது மெதுவாக பாயத் தொடங்கின…
ஒரு குஞ்சு மட்டும் பாயாமல் நின்று இருக்க, அதை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள் மகிமா…
அக்குஞ்சின் பின்னால் வந்து நின்ற தந்தை வாத்தோ அதனிடம் ஏதோ “பேக் பேக்” என்று கூற அக்குஞ்சோ தந்தையின் சிறகின் மேல் பாய்ந்து நின்றுகொள்ள, தந்தையே நீரில் பாய்ந்தது…
அவற்றைப் பார்த்து கண்களை விரித்த மகிமா, “ஹவ் ஸ்வீட்” என்று இதழ் விரித்து சொல்லிக் கொண்டாள்…
“ரொம்ப அழகான ஒரு குடும்பமா இருக்குல்ல” என்றபடி அவள் அருகே வந்து அமர்ந்தான் அபின்ஞான்…
அவனை விசித்திரமாகப் பார்த்தவள், “என்ன இன்னைக்கு நேரத்தோடு வந்து இருக்கீங்க” என்று கேட்டாள்…
“உன்ன பார்க்கணும் போல இருந்துச்சு… அதுதான் வந்துட்டேன்” என்றான்…
“ஓஹோ” என்றாள் மகிமா…
“எங்க நம்ம பசங்க… வீடு அமைதியா இருக்கு” என்று கேட்டான் மகிமா…
“ரெண்டு பேரும் நல்லா தூங்குறாங்க” என்றவளது கண்களோ வாத்துக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய குளத்தில் குளித்துக் கொண்டிருந்த வாத்துக்களிலே ஆகாமல் நிலைத்தது…
இறகுகளை விரித்துக்கொண்டும் அதை தண்ணீரில் அடித்துக் கொண்டும் அது குளிப்பதோ தனி அழகு…
அபின்ஞானோ அவளை மட்டும் ரசித்துக் கொண்டிருந்தான்…
அவனை திரும்பிப் பார்த்தவள், “ஏன் என்னையே பார்த்துட்டு இருக்கீங்க” என்று கேட்டாள்…
“சும்மாதான்” என்றவன், “நான் லைஃப்ல எத்தனையோ ரிசர்ச் பண்ணி இருக்கேன்… எத்தனையோ விஷயங்களை தேடித் கண்டுபிடிச்சு இருக்கேன்… நான் தேடி போற சில விஷயங்களுக்கு ஒரு முடிவு இருக்கும்… சில விஷயங்களுக்கு முடிவே இருக்காது… ஆனா நீ கூட இருந்தா என் எல்லா தேடல் ட முடிவு நீ மட்டும்மா தான் இருப்ப… ஐ லவ் யூ சோ மச் மகி… என் தேடலின் முடிவு நீ மகி” என்றான் அவள் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து…
அவளுக்கோ கண்கள் கலங்கிவிட்டது…
என்ன வார்த்தைகள் இவை…
எவ்வளவு ஆழமாக தன் காதலை சொல்லி விட்டான்…
கண் கலங்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்கு பதில் சொல்வதற்கு கூட அவர் வாயில் இருந்து வார்த்தை வரவில்லை…
“நான் லாஸ்ட்டா கடல்ல மூழ்க கிட்ட
உன்ன மட்டும் தான் நினைச்சேன்… நீ மட்டும் தான் என் கண்ணுல தெரிஞ்சா… உனக்காக வாழனும்னு தோணுச்சு… நீ கூட இருந்தா என்னால எதையும் சாதிக்கலாம் மகி… அந்த கணத்ல தான் உண்மையா என்னையே உணர்ந்தேன்… இந்த டைமெண்ட்ஸ் எல்லாம் கிடைச்சு இல்லாட்டி கூட நான் கவலைப்பட்டு இருக்க மாட்டேன் மகி….
நான் என்னதான் தேடல் தேடல்ன்னு சுத்தினாலும் இதுக்கு முந்தியும் சரி இதுக்கு பிறகும் சரி… என் எல்லா தேடலின் முடிவு நீ மட்டுமா தான் இருப்ப” என்றவன் அவள் இதழ்களை கவ்விக் கொண்டான்…
அவள் வார்த்தைகளில் மயங்கியவள் இப்போது அவன் முத்தத்தில் முற்றாக அவனில் பைத்தியமே ஆகிப்போனாள்…
அவளிடம் இருந்து மெதுவாக விலகியவன், “வா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றவன் அவளை கண்ணை கட்டிக்கொண்டு அழைத்து சென்றான்…
காரில் செல்லும்போது அவள் எங்கு செல்கிறோம் என்று எத்தனையோ முறை கேட்டு விட்டாள். ஆனால் அவன் தான் வாயே திறந்த பாடில்லை…
காரை நிறுத்தியவன், அவளை இறக்கி அவள் முதுகில் கையை வைத்து தள்ளியப்படியே சென்றவன் அவரிடத்தில் அவளை நிறுத்தி அவள் கண்கட்டை அவிழ்த்து விட்டான்…
“மகி ட்ரஸ்ட்” என்ற போர்ட் போடப்பட்ட ஒரு பாரிய கட்டிடம்…
அதை ஆச்சரியமாக பார்த்தவள், “இது என்ன அபி… எதுக்காக என் பேர வச்சிருக்க” என்று கேட்டபடியே அவனுடன் உள்ளே நுழைந்தாள்…
“நான் கடலிருந்து எடுத்து டைமண்ட்ஸ என் தேவைக்கு யூஸ் பண்ண விரும்பல… நம்ம நாட்டுல ஊட்டச்சத்து, போசனை குறைந்த நிறைய குழந்தைங்க இருக்காங்க… அவங்களுக்கு தேவையான வசதிகளை செய்யணும்னு தான் இத கட்டியிருக்கேன்… இதுக்காக நான் எடுத்து டைமண்ட்சா யூஸ் பண்ண இருக்கேன்” என்று கூற அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் மகிமா…
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “அபி நீங்க என்ன இம்ப்ரஸ் பண்ணிட்டே இருக்கீங்க… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல” என்ற அவளது கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது…
“நீ எனக்கு தேங்க்ஸ் சொல்ல தேவல்ல நானே எனக்கு தேவையானதை உன் கிட்ட இருந்து வாங்கிக்கிறேன்” என்று கூறி சிரித்தான்…
“அபி லேட் ஆகுது… நம்ம பசங்க தேட போறாங்க… அத்தைய என்ன பாடு படுத்துகிறார்களோ தெரியல” என்று கூற,
“சரி போலாம்” என்றவாறு இருவரும் வீட்டுக்கு வந்து அபின்ஞான் ஒரு குழந்தையும் மகிமா இன்னொரு குழந்தையும் தூக்கியபடி அறைக்குள் நுழைந்தனர்…
எபிலோக்
மூன்று வருடங்களுக்குப் பிறகு…
விஹான் மற்றும் வியான் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்க… “டேய் விளையாடினது போதும்டா…” என்று அவர்கள் இருவரையும் தூக்கிக் கொண்டு வந்தவர், கட்டிலில் போட்டு குட்டி வாண்டுகளை தயார் படுத்த தொடங்கினார் அன்னபூரணி அம்மாள்…
விஹானும் வியானும் தன் கையில் இருந்த பவுடர் டப்பவை வைத்து கொட்டி விளையாடிக் கொண்டிருக்க, “டேய் எங்கடா உங்க அம்மா… நான்தான் உன்னை வளர்த்துட்டு இருக்கேன், அவ சொகுசா ரூம்ல உக்காந்துகிட்டு என்ன வேல வாங்கிட்டு இருக்கா… நீங்க என்னாண்டா உங்க அம்மா விட்டுட்டு என் மடில தொத்திட்டு இருக்கீங்க” என்றபடி இருவரையும் தயார் படுத்திக் கொண்டிருந்தார்…
அபின்ஞானின் அறையிலோ, “இப்ப சரியா?” என்று கேட்டான் அபின்ஞான்.
“இல்ல சரியா வரல அபி” என்றாள் மகிமா…
“என்னடி இவ்ளோ நேரமா உனக்கு புடவை கட்டி விட்றேன்… என்ன கொஞ்சம் பாவம் பார்க்கலாமே” என்று கோபமாக ஆரம்பித்து கெஞ்சலாக முடித்தான் அவன்…
“நான் நேரத்தோட எழும்புறேன்னு சொன்னேன், நீங்க என்ன விட்டீங்களா… என்ன எழுந்துக்க விடாம நீங்க உங்க வேலைய காட்டிட்டு இப்ப என்ன கேக்குறீங்களா” என்று அவனை முறைத்தாள்…
“சரி சரி… கட்டி விட்றேன்” என்றவன் எரிச்சலாக அவள் புடவையில் பிளிட்ஸ் எடுத்துக் கொண்டிருக்க,
“நான் காலையில் எழும்ப பார்க்க…” என்று அவள் ஏதோ சொல்ல பார்க்க, எட்டி அவள் வாயை மூடியவன், “கட்டி முடிச்சிட்டேன்… இப்போ ஓகே” என்று கேட்டான்…
“பேபெக்ட்” என்றவாறு மகிமா அவன் கன்னத்தில் முத்தமிட…
“கிஸ் பண்ணியே என்ன டெம்ப் பண்ண வேண்டியது… பிறகு அங்க புடிச்சான் இங்க புடிச்சான்னு வர வேண்டியது, போடி…” என்றான் அவளை முறைத்தபடி…
“அழகா சாரி கட்டி விட்டிங்கன்னு எபிரிஷியேட் பண்ணா குத்தமா…” என்று கூறிக் கொண்டிருந்தவளின் இடையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவள் இதழ்களுடன் தன் இதழ்களை உரசிய படி, “உனக்கு எப்படி எப்ரிஷியேட் பண்ணனும் இன்னும் தெரியல” என்றபடி அவள் இதழ்களை சிறை பிடித்தவன், தன் கைகளை அவள் மேனியில் இஷ்டத்துக்கு அழைய விட்டான்… அவளும் அவனில் பாகாக உருகிக் கரைந்து கொண்டிருக்க, அந் நேரம் அவர்களது ஒரு வயது மகள், ஆத்யா அழத்தொடங்க சட்டென்று இருவரும் விலகிக் கொண்டனர். மகிமாவின் புடவை முழுவதும் அவிழ்ந்து இருக்க அவனை முறைத்தாள்.
தலையை அழுத்தமாக கோதிக் கொண்டவன் குழந்தையை தூக்கிக் கொண்டு அவளை துகிலுரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருக்க, அவன் பார்வையில் கூச்சத்தில் நெளிந்தவள், “அபி வெளிய போங்க நான் புடவ கட்டணும்…” என்றாள்.
“நீ உன் பாட்டுக்கு புடவ கட்டு… நான் என் பாட்டுக்கு ஓரமா இருக்கேன்” என்றான் அசையாமல் நின்று அவளைப் பார்த்தபடி,
“உங்க பார்வயே சரி இல்ல, முதல்ல வெளிய போங்க” என்றாள்.
அவன் அசையாமல் நிற்கவும் அவனை முறைத்துப் பார்த்தபடியே புடவையை கட்டி முடித்தாள்.
இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டவன் அவள் காதருகே குனிந்து, “சும்மா சொல்ல கூடாது… உன்ன பார்த்தா மூனு குழந்தைக்கு அம்மா மாதிரியே விளங்கள” என்றான்…
அவனை அதிர்ந்து பார்த்தவள், “குழந்தய வெச்சிட்டு என்ன பேச்சு பேசுறீங்க” என்றவளது முகமோ தன்னை மீறி சிவந்து தான் போனது.
மகிமா பழுப்பு நிற புடவை கட்டியிருக்க அதற்கு, மெச்சாக பழுப்பு நிற சர்ட் மற்றும் வெண்ணிற வேட்டி அணிந்திருந்தான் அபின்ஞான்…
மகிமா மென்மையான அழகுடனும் கம்பீரமாகவும் இருவரும் ஜோடியாக நடந்து வர… அவர்களைக் கண்ட இரு குட்டி வண்டுகளும், “அம்மா…அப்பா…” என்று ஓடிச் சென்று அவர்களை காலை கட்டி கொண்டனர்….
“என் கண்ணே பட்டுடும்” என்ற அன்னபூரணி அம்மாள் குடும்பமாக நின்ற ஐந்து பேருக்கும் சுத்தி போட்டு விட்டே அனைவரும் காரில் ஏரி கிளம்பினர்… மகிமா ட்ரஸ்ட்க்கு…
மகிமா இப்பொழுது பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்… அவள் பிஎச்டி படிக்க அபிஞ்ஞானே உதவி செய்தான்… அவள் பசுபிக் சமுத்திரத்தில் வைத்து செய்த ஆய்வு உலகில் ஆய்வுகளிலும் முதலாவது இடத்தை பெற்றிருந்தது…
இன்று மகிமா ட்ரஸ்டின் இரண்டாவது ஆண்டு விழா…
அதற்காகத்தான் இன்று குடும்பமாக சென்று கொண்டிருந்தனர்…
மகாதேவ் குடும்பமும் வந்திருந்தது…
மகாதேவுகக்கு முதலாவது பெண் குழந்தை அவள் தேவகாசினி, இரண்டாவது ஆண் குழந்தை அவன் பிரனீதன்…
அனைவரும் உள்ளே நுழைந்தனர்…
இப்போது மகிமா ட்ரஸ்டின் கிளைகள் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளை பராமரிப்பதற்காக நாட்டில் மொத்தம் எட்டு இடங்களில் அமைக்கப்பட்டு இருந்தன…
எல்லாரும் பேசிக் கொண்டிருக்க மகாதேவ் அருகே வந்த அபின்ஞான், “உனக்கு இந்த தேவான்ற பெயர்ல என்னடா அவ்ளோ க்ரஷ்… மகிக்கு தேவகன்யான்னு பேர் வெச்ச, இப்ப உன் பொண்ணுக்கே தேவஹாசினின்னு பெயர் வெச்சிருக்க… உண்மைய சொல்லு ஸ்கூல்ல தேவான்னு ஒரு பொண்ணுக்கு பின்னாலே சுத்தினியே… உன் க்ரஷ்ட பெயரையா வச்சிருக்க” என்று கேட்க…
“உனக்கு எப்படி டா தெரியும்” என்று அதிர்ந்து கேட்டான்…
“சும்மா கெஸ் பண்ணினேன் ஆனா உன் வாயால சொல்லிட்டியே…” என்றவன் மகிமா அருகே சென்று நின்று கொள்ள,
‘டேய் அதை சஞ்சனா கிட்ட சொல்லிடாதே” என்று கத்தினது காற்றிலே கரைந்து போனது…
மகிமா தன் கையில் ஆத்யாவை வைத்துக் கொண்டு நின்று இருக்க…
விஹானும் வியாானும் அபின்ஞானிடம் தூக்க சொல்லி சண்டை பிடிக்க, அவன் தன் மகன்களை தூக்கி இரு தோள்பட்டையிலும் வைத்துக் கொண்டான்…
அவனை நிமிர்ந்து பார்த்த மகிமா, “உங்கள போலவே… உங்க பசங்களுக்கும் பிடிவாதம் கூட” என்று சொல்ல
“ஏன் அவங்க அம்மா கிட்ட பிடிவாதமே இல்லையா… அதிலிருந்தும் இங்க பாதி வந்துருக்கு” என்று அவள் முகம் நோக்கி குனிந்து சிரித்தபடி கூற,
இவ் அழகான குடும்பக் கட்சியை தூர இருந்து புகைப்படம் எடுத்தான் ஒருவன்… கேமராவில் பதிவான புகைப்படத்தை பார்த்து சிரித்துக் கொண்டவன், “மேட்ச் போ ஈச் அதர்” என்று சொல்லிக்கொண்டு தன் கேமராவை தூக்கித் தோளில் போட்டபடி அங்கிருந்து சென்றான் அவன்…