கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 8

4.8
(5)

 

                அத்தியாயம் 8 

 

ராஜனும் கீதாவும் இருவருக்கும் கல்யாணம் நடந்ததில் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். மாலை ஆனதும் கீதா தான் கிளம்புவதாகக் கூறினார். ஆனால் ராஜன் இங்கேயே இருக்க சொல்லினார். அதற்கு அவர் இல்லை நான் டிரீட்மண்ட்காக மும்பை போகனும்னு சொல்றாங்க. உடனே அவரும் இங்கேயே இருந்துப் பார்க்க முடியாதா என்று கேட்கிறார்.

இங்கேயே இருந்தால் கவி உங்கள் கூட எல்லாம் சரியாக பேசிக் கொள்ள மாட்டாள். அதனால் நான் போறேன் என்று சொன்னார். சரிம்மா உன் விருப்பம் கவிக்கிட்ட போய் பேசு என்று அனுப்பி வைக்கிறார். கீதாவும் கவி இருக்கும் அறைக்குச் சென்று பார்க்கிறார். அங்கே கவி ஏதோ யோசனையிலே அமர்ந்து இருந்தாள்.

கீதாவும் அவளிடம் சென்று கவி நான் போறேன் இனிமே நீதான் இங்கே இவர்களைப் பார்த்துக்கணும். என்ன பிரச்சினை வந்தாலும் இந்த வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது சரியா‌ என்று கூறினார். அவள் ஏன் அம்மா அதற்குள் போறீங்க இங்கே எனக்கு யாரையுமே தெரியாது நீங்களும் போறேன்‌ சொல்றிங்க அப்படின்னு சொல்றா.

கவி நீ எவ்வளவு தைரியமான பொண்ணு இங்கே இருக்கவங்க எல்லாரும் உன் சொந்தம் தான் அதனால் நீதான் அவங்களோட பேசிப் பழகணும் அப்புறம் நான் டிரீட்மண்ட் போணும் ல அதனால நான் போறேன் அப்படின்னு கீதா‌ சொல்லிட்டு இரண்டு பேரும் வெளியே வராங்க. அப்புறம் சேரனிடமும் அவ டக்குன்னு பழக மாட்டாப்பா கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று சொல்றார்.

சேரனும் சரி என்று சொன்னான். சோழன் எங்கே நான் சொல்லிட்டு கிளம்பறேன் என்று கேட்டார். உடனே ராஜனும் சேரனை அனுப்பி அவசர வர சொன்னார்‌. சேரனும் சென்று தன் அண்ணனை அழைத்து வந்தான். சோழன் தான் இப்போ எதுக்கு என்ன கூப்பிடுறாங்க அதான் அவங்க நினைச்ச மாதிரி எல்லாமே நடந்துருச்சே அப்படின்னு கோவத்தில் வந்தான்.

சோழன் வந்ததும் கீதா அவனிடம் சென்று கவி ரொம்ப நல்ல பொண்ணு தம்பி. அவளுக்கு என்ன வேண்டும் என்று சொல்லக் கூட மாட்டாள். சிட்டில வளர்ந்த பொண்ணு இப்படிலாம் வில்லேஜ் பக்கம் வந்தது இல்லை இது எல்லாம் அவளுக்கு புதுசு. அங்கேயும் அவளுக்கு ஃபிரண்ட்ஸ்னு யாரும் இல்லை‌. யாருடையும் டக்குன்னு பழக மாட்டாள் தம்பி நீங்க அவளை நல்லா பார்த்துப்பிங்க என்று தான் அவளை விட்டுட்டு போறேன் பார்த்துக்கோங்க என்று சொல்லி விட்டு கிளம்புறார்.

அவர் பேசியதற்கு சோழன் எந்த பதிலும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினான். ராஜன் தான் நாங்க கவியை நல்ல படியாக பார்த்துப்போம் நீங்க கவலைப் படாமல் போய்ட்டு வாங்க என்று சொன்னார். அப்புறம் அனைவரும் சென்று கீதாவையும் ராமையும் அனுப்பி வைக்க வீட்டிற்கு வெளியே சென்றனர். கவி தான் கண்ணீர் கண்ணத்தைத் தாண்டிப்‌ போவதைக் கூட கண்டுக் கொள்ளாமல் கீதாவை கட்டி அணைத்து அழுதாள்.

கீதாவும் நீ எப்போதும் சந்தோஷமாக இருக்கணும் கவி அப்படின்னு சொல்லிட்டு அவளோட‌ கையை சோழனின் கையில் சேர்த்து வைத்து விட்டு சென்றார். பின்னர் இருவரும் காரில் ஏறிக் கொண்டு கிளம்பினர். கீதா இருவரின் கைகளையும் பார்த்து விட்டு மகிழ்ச்சியாகச் சென்றார். கார் சாலையை விட்டு மறையும் வரை அங்கேயே நின்று பார்த்துக் கொண்டு இருந்தாள் கவி.

ராஜன் தான் உள்ளே போலாம் மா என்று அழைத்தார். பின்னர் தான் இருவரும் கையைப் பிரித்தனர். சோழன் முதலில் உள்ளே சென்று விட்டான். கவியும் மற்றவர்களும் பின்னர் சென்றனர். கவியிடம் ராஜன் இது உன் வீடும்மா நீ இங்கே உன் விருப்பப்படி இருக்கலாம். அம்மாவ பாக்கணும்னா எபபோனாலும் சொல்லு நான் அவனை கூட்டிட்டுப் போக சொல்றேன் சொல்றார். அவளும் சரி என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

இரவு 8 ஆனதும் சாப்பிட எல்லாரும் வந்தனர். அமைதியாக அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். சோழன் மட்டும் சீக்கிரமாக சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு சென்று விட்டான். கவிக்கு சாப்பாடு தொண்டையைத் தாண்டி இறங்கவில்லை. அவளும் ஏதோ சாப்பிட்டேன் என்று எழுந்து முன் இருந்த அறைக்கு சென்று விட்டாள்.

கொஞ்சம் நேரம் ஆனதும் உறவுக்கார பெண் ஒருவர் வந்து கவியைக் குளித்து விட்டு ஒரு புடவையை கட்டிக்கொண்டு வர சொன்னார். அவளும் குளித்து ரெடியாகி வெளியே வந்தாள். வெளியே அனைவரும் உறங்க சென்று விட்டனர். அவளிடம் ஒரு சொம்பு நிறைய பால் கொடுத்து மேலே இருக்கும் முதல் அறைக்கு சென்று விட்டுட்டு சென்று விட்டார்.

அங்கே கதவின் அருகே நின்று கதவைத் தட்டினாள் கவி. சோழன் வந்து கதவைத் திறந்து விட்டான். இவளும் உள்ளே சென்றாள். அங்கு முதலிரவிற்கான எந்த ஒரு அலங்காரமும் இல்லாமல் அறையே சுத்தமாக இருந்தது. ஏனெனில் அனைத்துமே இவன் தான் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டிருந்தான். அவன் இவளைப் பார்த்து விட்டு ஒரு போர்வையும் தலையணையும் கொண்டு வந்து சோஃபாவில் வைத்து விட்டு சென்று முதுகைக் காட்டிக் கொண்டு படுத்து விட்டான்.

கவியும் அவனையும் சோஃபாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சொம்பைக் கொண்டு போய் டேபிளில் வைத்து விட்டு வந்து அமர்ந்தாள். பின்னர் கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் திரும்பியும் பார்க்கவில்லை. அவளும் விளக்கை எல்லாம் அணைத்து விட்டு வந்து படுத்து விட்டாள். டிராவல் செய்து வந்த அசதியில் படுத்ததும் தூங்கி விட்டாள்.

ஆனால் சோழனுக்கு தான் தன் அறையில் ஒரு பெண் இருக்கிறாள் என்றதும் தூக்கமே வரவில்லை. அப்புறம் அவனும் சிறிது நேரத்தில் அப்படியே தூங்கி விட்டான்‌.

 

அதிகாலையிலேயே ஒரு ஃபோன் கால் வந்தது. அதில் கூறிய செய்தியில் அதிர்ந்து நின்றார் ராஜன்.

அப்படி என்ன செய்தியாக இருக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!