காளையனை இழுக்கும் காந்தமலரே : 21

4.3
(6)

காந்தம் : 21

மனசுக்குள் என்ன இருந்தாலும் வெளியே தந்தையிடம், “ரொம்ப சந்தோஷம் அப்பா. அத்தை வருவாங்கன்னு நினைச்சு கூட பார்க்கலை. ஆனா வந்துட்டாங்க எல்லாம் நம்ம கடவுளோட வேலை தான்.” என்று வெளியே பேசி வைத்தான். ராமச்சந்திரனும்,” ஆமா சபா, அது கடவுளோடு சித்தம்தான். இல்லைன்னு சொன்னா இத்தனை நாள் வராத துர்க்கா, இப்ப வந்திருப்பாளா? “என்று பேசினார். 

பின் சரி சபாபதி உன்னை பாக்கணும்னு சொன்னா இந்த முறை வார லீவுக்கு வந்துரு வீட்டுக்கு என்று சொன்னார் சபாபதியும் சரி அப்பா நான் கண்டிப்பா வந்துடறேன் என்று சொல்லி போனை வைத்தாள் போனை வைத்த சபாபதிக்கு மேலும் குழப்பம் அதிகமானது. 

அவனது குழப்பத்திற்கு தடை போதும் விதமாக, சபா என்றபடி எழுப்பினாள் மோனிஷா. எழுந்து அமர்ந்தவள், “சாரி சபா, ரொம்ப டயர்டா இருந்திச்சு. அதுதான் தூங்கிட்டேன் என்றாள். அதற்கு சபாபதி,” பரவாயில்லை மோனி, போய் முகம் கழுவிட்டு வா, நான் காப்பி போட்டுட்டு வர்றன் “என்றவன் அவனது குழப்பத்தை இடைநிறுத்தி விட்டு மோனிஷாக்கும் அவனுக்கும் காப்பி போடச் சென்றான். அவளும் முகம் கழுவி வருவதற்காக அறைக்குள் சென்றாள். காளையனிடம் அடிவாங்கியவன் அவனது முதலாளி யாரென்றும், அவன் எங்க இருக்கிறான் என்று உளறி வைக்க, அந்த காட்டிற்குள் சென்றான் காளையன், அவனுடன் கதிரும் சென்றான். 

காட்டுக்குள் இருந்த ஒரு பாழடைந்த பங்களாவின் உள்ளே, பெரிய சோபாவில் இருந்து சாராயத்தை ஒரு கிளாஸில் ஊத்தி அதை ஒரு கையில் எடுத்துக் கொண்டு, மறுகையில் நன்றாக காரசாரமாக பொரித்து வைத்திருந்த சிக்கனை ஒரு கடி கடித்து, கிளாஸில் இருந்த சாராயத்தையும் வாய்க்குள் ஊற்றினார். 

வெளியே அடியாட்கள் அந்த வீட்டைச் சுற்றி கையில் கட்டையுடன் நின்றிருந்தனர். காளையனும் கதிரும் வந்ததும் அவர்களை அடிக்க ஓடி வந்தனர். காளையனும் கதிரும் சேர்ந்து அவர்களை ஒரு வழி செய்து விட்டனர். பின்னர் உள்ளே சென்றனர். 

அங்கே சாராயத்தை குடித்துவிட்டு தள்ளாடியபடி வெளியே வந்தவரின் நெஞ்சிலே மிதித்தான் காளையன். அவன் மிதித்த மிதியில் ஐந்தடி தள்ளி விழுந்தான் கண்ணப்பன். அவனை எழும்ப விடாமல் நெஞ்சின் மேலே இருந்த காளையன் அவன் முகத்தில் குத்தினான். அவனின் இரத்தத்தை பார்த்தும் விடவில்லை. கதிர் தான் வந்து, “அண்ணே போதும். இதுக்கு மேல அடிச்சா செத்திருவான் அண்ணே. விடுங்க” என்று காளையனை பிடித்து இழுத்தான். 

அவனை தள்ளி விட்டு மீண்டும் வந்து துரையின் காலில் மிதித்தான். பின்னர் கதிரிடம், “கதிர் இவனை இழுத்துட்டு வந்து நம்ம ஊருக்கு நடுவிலே இருக்கிற மரத்தில கட்டிப் போடு. இவனைப் பார்த்து இனிமே யாரும் நம்ம ஊருக்குள்ள சாராயம் விற்க வரவே கூடாது.” என்றான்.

காளையன் சொன்னதைக் கேட்ட கண்ணப்பன், “டேய் நான் யாருனு தெரியாம கைவைச்சிட்ட, இதுக்கு நிச்சயமாக அனுபவிப்படா. பாரு நான் யாருனு உனக்கு காட்டுறன். “என்று சவால் விட்டான். அதைக் கேட்ட காளையனுக்கும் கதிருக்கும் சிரிப்பு வந்தது.” உன்னால முடிஞ்சதை பாருடா” என்றவன் கதிரிடம் கண்ணைக் காட்டினான். 

கதிரும் அவன் சொன்ன மாதிரி துரையை இழுத்துச் சென்றான். பின்னாடியே காளையனும் சென்றான். 

மலர்னிகா அறைக்கு வந்து கட்டிலில் படுத்தாள். அவளுக்கு முகேஷ் செய்தது ஞாபகம் வந்தது. உடல் எல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் போனாள். எப்போதும் எதற்குமே அஞ்சாது நிற்கும் மலர்னிகா, இப்போது அஞ்சி நடுங்கினாள். அவளுக்கு துர்க்காவிடமோ இல்லை நிஷாவிடமோ நடந்த விடயத்தை சொல்ல முடியவில்லை. அழுகையும் வரவில்லை. அவள் என்ன செய்யணும், என்ன செய்யக்கூடாது என்று எதுவும் புரியாமல் இருந்தாள். 

துர்க்காவும் பல வருடங்களுக்கு பிறகு அவளது அம்மா வீட்டிற்கு வந்ததால், அவர்களை விட்டு பிரியாமல், அண்ணிகளுடன் சேர்ந்து கொண்டு, பேசிக் கொண்டு இருந்தார். இதுவரை இருந்த இடத்தை விட்டு, புது இடத்திற்கு வந்ததால் அப்படி இருக்கிறாள், கொஞ்ச நாள் போனதும் சரியாகிடுவா என்று நினைத்துக் கொண்டார். நிஷாவும் கலகலவென்று பேசும் காமாட்சியோடு நன்றாக ஒட்டிக் கொண்டு ஊரை சுற்றி வந்தாள். 

முகேஷ் மலர்னிகாவின் கம்பனிகளை பொறுப்பேற்றான். அங்கிருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை. அவளது கம்பனி ஆடிட்டரிடம், மலர்னிகா கையெழுத்து போட்டுக் குடுத்த டாக்குமெண்ட்டை அவரிடம் குடுத்தான். அவரும் அதை வாங்கிப் பார்த்தார். எல்லாம் சரியாக இருக்க, அவராலும் எதையும் செய்ய முடியாமல் போய்விட்டது. 

அவளது கம்பனியை அவனது விருப்பத்திற்கு ஏற்றமாதிரி மாற்றி அமைத்தான். கேசவன் அங்கிருந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினார். 

வீட்டிற்கு வந்த காளையனை பார்த்த குணவதி, “என்னாச்சி காளையா? உன்னக்கு அடிபட்டிருக்கு? ஏதாவது பிரச்சினையா?” என்று அவன் அருகில் வந்து, காளையனின் முகத்தில் இருந்த இரத்தத்தை துடைத்தார். அவரது சத்தம் கேட்டு சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்த நேசமதியும், துர்க்காவும் கூடத்திற்கு வந்தனர். 

காளையன் குணவதியிடம்,” ஐயோ அம்மா, எனக்கு ஒண்ணுமே இல்லை. ஒரு சின்னப் பிரச்சனை. வேற ஒண்ணும் இல்லை அம்மா.” என்றான். 

அதற்கு நேசமதி, “என்னடா பிரச்சனை? முதல்ல அதைச் சொல்லு” என்றார். காளையனும் நடந்ததை அவர்களிடம் சொன்னான். குணவதி, “நல்ல வேலை செய்த காளையா. இல்லைனா எத்தனை பேரு சாராயத்தை குடித்துவிட்டு பிரச்சனை பண்ணியிருப்பாங்கனே தெரியாது. ” என்றார் 

“உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறன் காளையா, பிரச்சனை வந்தால் அதை பஞ்சாயத்தில கொண்டு நிறுத்து. அதை விட்டுட்டு சண்டை போட்டுட்டு வந்திருக்க. உனக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு தப்பா ஏதாவது நடந்தா நாங்க என்ன பண்றது? இந்த மொத்த குடும்பத்தோட நம்பிக்கையும் நீதானே ராசா.” என்றார் குணவதி. 

அதற்கு நேசமதி,” ஐயோ அக்கா, இவனுக்கு எதுவும் நடக்காது. நீங்க பயப்படாதீங்க அக்கா. “என்றார். அவரைப் பார்த்து விளையாட்டாக முறைத்த காளையன்,” பாருங்க அம்மா, இவங்க எப்படி பேசுறாங்கனு. எனக்கு என்னவோ நான் உங்க வயித்துலதான் பொறந்திருப்பேனோனு தோணுது” என்று குணவதியை பார்த்து சொன்னான். அவனது காதைப் பிடித்து முறுக்கினார் நேசமதி. 

துர்க்கா,” அண்ணி முதல்ல, காளையன் போய் குளிச்சிட்டு வரட்டும். அப்புறம் பேசிக்கலாம். நீ போயிட்டு வா காளையா நான் காப்பி போட்டு வைக்கிறன்.” என்றார். அவனும் சரி என்று அறைக்குச் செல்ல மாடி ஏறினான். அப்போது மலரின் அறையைக் கடக்கும் போது, எதேச்சையாக மலர் இருந்த அறையை பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தான். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!