Thivya Sathurshi

காளையனை இழுக்கும் காந்தமலரே : 38

காந்தம் : 38 காளையன் மலர்னிக்காவிற்கு கசாயத்தையும் உணவையும் எடுத்துக் கொண்டு சென்றதும், அனைவரும் சேர்ந்து உணவு உண்டனர். காமாட்சியும் நிஷாவும் வீட்டிற்கு வெளியே இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு இருந்தனர். அப்போது கதிர் அந்த தெருவால் சென்றான். அப்போது அவனை பார்த்த இருவரும் அழைத்தனர்  அவர்களுடன் வந்து பேசிக் கொண்டு இருந்தான் கதிர்.  உள்ளே கூடத்தில் எல்லோரும் சபாபதி பற்றியும் காளையன் மலர்னிகாவின் திருமணம் பற்றியும் பேசிக் கொண்டு இருந்தனர். சபாபதி கம்பனி ஆரம்பிக்க ஒத்துழைக்க […]

காளையனை இழுக்கும் காந்தமலரே : 38 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 37

காந்தம் : 37 காளையன் கசாயத்தையும் சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு மலர்னிகாவின் அறைக்குள் சென்றான். அவள் அருகில் இருந்த மேசையில் சாப்பாட்டுத் தட்டையும், கசாயத்தையும் வைத்தான். பின்னர் அவளின் அருகில் சென்று அமர்ந்தான். மலர்னிகா குளிரினால் நடுநடுங்கிக் கொண்டு இருந்தாள். அவளின் நெற்றியில் மெல்ல கை வைத்துப் பார்க்க, அது மிகவும் சூடாக இருந்தது. அதிலே அவனுக்குத் தெரிந்தது மலர்னிகாவிற்கு அதிகமான காய்ச்சல் இருப்பது.  “அம்மணி… அம்மணி” என்று அழைத்தான். அவனது சத்தத்தில் மெல்ல கண்களை திறக்க

காளையனை இழுக்கும் காந்தமலரே : 37 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 23

வாழ்வு : 23 புடவை எடுக்க வந்திருக்கும் துணிக் கடையின் முன்னால் வந்து நின்ற தீஷிதனின் காரைப் பார்த்த துணிக்கடையின் முதலாளி வேகமாக பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். தீஷிதன் முன்னால் கிட்டத்தட்ட மண்டியிட்டவாறு குனிந்து வணக்கம் போட்டார்.  “சார் நீங்களா எங்க கடைக்கு வந்திருக்கிறீங்க.. என்னால நம்பவே முடியவில்லை சார்… உள்ள வாங்க சார்….” என்று கும்பிடு போட்டு உள்ளே அழைத்துச் சென்றார். அவருக்கு சிறு தலையசைப்பை மாத்திரம் கொடுத்துவிட்டு நடந்த தீஷிதனை

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 23 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 36

காந்தம் : 36 சபாபதி போன் கட் பண்ணியது மோனிஷாவிற்கு கோபமாக இருந்தது. அதே கோபத்துடன் வீட்டிற்கு வந்தவள் தனது கைப்பையை தூக்கி சோபாவில் எறிந்தாள். அழகாக நிறப்பூச்சி பூசியிருந்த கைவிரல்களைக் கடித்து அவளது கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். சபாபதி போனை ஆஃப் பண்ணின பிறகு, அவனிடம் பேசமாட்டேன் என சபதம் எடுத்தவள், மீண்டும் ஒரு பத்து நிமிடத்தில் அவனுக்கு அழைத்தான். இம்முறை ஆனில் இருந்தது போன். ஆனால் அதை எடுக்காமல் கட் பண்ணி விட்டான். அதுதான்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 36 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 35

காந்தம் : 35 விசாகம்,” மலர்னிகா நான் சொல்றதை கேளுமா, காளையா நீ மலரோட கழுத்தில தாலி கட்டியிருக்க. அதனால நீங்க ரெண்டு பேரும் ஒரே அறையில்தான் இருக்கணும். தேவா யோசியருக்கு போன் போட்டு குடு, சடங்கு வைக்கணும், அவர்கிட்ட நல்ல நேரம் கேட்கணும்” என்றார்.  காளையன், “பாட்டி, இப்போதைக்கு எதுவும் தேவையில்லை. சொன்னால் புரிஞ்சிக்கோங்க. நாங்க ஒரே அறையில இருக்கிறம், ஆனால் இப்போ சடங்கு எதுவும் வேண்டாம் பாட்டி. “என்றான். காளையனிடம் பேச வந்த விசாகத்தை

காளையனை இழுக்கும் காந்தமலரே : 35 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 22

வாழ்வு : 22 பிரகாஷ் ஹோட்டல் அறையில் உள்ள பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்துக் கொண்டு இருந்தான். அப்போது அவனது அறைக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ‘இருக்கிற கடுப்பில கதவை வேற தட்டிட்டு இருக்கிறது யாருன்னு தெரியலையே..’என்றவாறு வந்து கதவைத் திறக்க அங்கே அவனின் மனைவி சீமா நின்றிருந்தாள். அவளை இங்கே சற்றும் பிரகாஷ் எதிர்பார்க்கவில்லை. “சீமா என்னாச்சு என்ன திடீர்னு வந்து இருக்க?” என்று கேட்டான்.  அதற்கு அவளும், “பிரகாஷ் என்னால

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 22 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 34

காந்தம் : 34 காளையன் நன்றாக யோசித்து ஒரு முடிவுடன் பூஜை நடக்கும் இடத்திற்குச் சென்றான். அங்கே அம்பாளுக்கு தீபாராதனை நடந்து கொண்டு இருந்தது. அவன் வரும்போது வாசலில் இருந்த அம்பாளின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறை எடுத்து வந்திருந்தான். மெல்ல கண்களை மூடிக் கொண்டு நின்ற மலர்னிகாவின் அருகில் வந்து, அவளது கழுத்தில் தாலியைக் கட்டினான். முதலில் கண் விழித்துப் பார்த்த பெருந்தேவனார் காளையனின் செயலைப் பார்த்தார்.  “காளையா, நீ என்ன பண்ற?” என்ற பெருந்தேவனாரின்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 34 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 33

காந்தம் : 33 மலர்னிகா மாம்பழ மஞ்சள் நிறத்தில் ஒரு சேலையை எடுத்து ஒன் பிளீட்டில் விட்டு அணிந்து கொண்டாள். பின்னர் கொஞ்சம் முடிகளை எடுத்து ஒரு கிளிப் போட்டுக் கொண்டு, ஸ்டிக்கர் பொட்டு ஒன்றை ஒட்டிக் கொண்டாள். அவ்வளவு தான் ரெடியாகி விட்டாள்.  காமாட்சியும் நிஷாவும் பாவாடை தாவணி அணிந்து, காதுக்கு ஜிமிக்கி, கைகளில் கண்ணாடி வளையல்கள் அணிந்து, தலையில் குண்டுமல்லி சரம் வைத்துக் கொண்டு மலர்னிகா அறைக்குள் வந்தனர். “அண்ணி ரொம்ப அழகா இருக்கிறீங்க,

காளையனை இழுக்கும் காந்தமலரே : 33 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 32

காந்தம் : 32 மோனிகாவுக்கு சபாபதி வீடியோ கால் பண்ணினான். வீடியோ காலை அட்டென்ட் பண்ணிய மோனிஷா அவனைப் பார்த்து இரு உதடுகளையும் குவித்து, ஒரு கண்ணை மூடிக் கொண்டு கண்ணடித்தாள். இதைப் பார்த்ததும் சபாபதிக்கு சிரிப்பு வந்தது.  “மோனி கம்பனியிலையா இருக்க?” என்றான். அதற்கு அவளும், “ஆமா சபா, கம்பனிக்கு வந்திட்டேன். ஆனால் வேலை பார்க்கவே முடியவில்லை. என்னோட கண்கள் உன்னோட இடத்தைத்தான் பார்த்திட்டு இருக்கு.” என்றாள். சபாபதிக்கு அவளது நிலை புரிந்தது. “நான் சீக்கிரம்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 32 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 31

காந்தம் : 31 மலர்னிகாவிற்கு அவளது தந்தையின் நினைவு மிகவும் வாட்டியது. அதனால் அவரை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தாள். அவ் அறையைத் தாண்டிச் சென்ற காளையன், அவளின் புலம்பல் கேட்டு உள்ளே வந்தான். மலர்னிகா பேசுவதை கேட்டக் கேட்க அவனுக்கு இனம்புரியாத வலி வந்தது.  அவள் அருகில் சென்று, குனிந்து படுத்திருந்தவளின் தலையை வருடிக் கொடுத்தான். யாரோ தன்னை தொடுவதை உணர்ந்து பதறி எழுந்தாள் மலர்னிகா. அவளுக்கு மும்பையில் நடந்தது ஞாபகம் வர, முகம் மாறியது. அதனால்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 31 Read More »

error: Content is protected !!