Thivya Sathurshi

காளையனை இழுக்கும் காந்தமலரே : 21

காந்தம் : 21 மனசுக்குள் என்ன இருந்தாலும் வெளியே தந்தையிடம், “ரொம்ப சந்தோஷம் அப்பா. அத்தை வருவாங்கன்னு நினைச்சு கூட பார்க்கலை. ஆனா வந்துட்டாங்க எல்லாம் நம்ம கடவுளோட வேலை தான்.” என்று வெளியே பேசி வைத்தான். ராமச்சந்திரனும்,” ஆமா சபா, அது கடவுளோடு சித்தம்தான். இல்லைன்னு சொன்னா இத்தனை நாள் வராத துர்க்கா, இப்ப வந்திருப்பாளா? “என்று பேசினார்.  பின் சரி சபாபதி உன்னை பாக்கணும்னு சொன்னா இந்த முறை வார லீவுக்கு வந்துரு வீட்டுக்கு […]

காளையனை இழுக்கும் காந்தமலரே : 21 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 20

காந்தம் : 20 மாணிக்கம் சொன்ன பகுதிக்கு வந்தவர்கள், அங்கே சாராயக்கடையில் பலரும் குடித்துக் கொண்டிருப்பதை பார்த்த காளையனுக்கு கோபம் எல்லை கடந்தது. சாராயத்தை அவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருப்பவனை பிடித்து இரண்டு அறை விட்டான். காளையின் அறையை தாங்க முடியாமல் சாராயம் கொடுத்துக் கொண்டிருந்தவன் கீழே விழுந்தான்.  அவனை பிடித்து இழுத்தவன், “இது யாரோட கடை? இங்க சாராயக்கடை வைக்க அனுமதி குடுத்தது?” என கேட்டான். அதற்கு அக் கடையில் இருந்தவன், “எதுவா இருந்தாலும் நீங்க எங்க

காளையனை இழுக்கும் காந்தமலரே : 20 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 19

காந்தம் : 19 உடனே காமாட்சி, மலரின் அறைக்குச் சென்று கூட்டிட்டு வந்தாள். வெஸ்டர்ன் உடையில் மட்டுமே பார்த்த, தனது மகள் இன்று சுடிதார் இருப்பதை பார்த்து விழித்தார் துர்க்கா. பொதுவாக மலருக்கு புடவை, தாவணி, சுடிதார் போடுவதில் பெரிதாக விருப்பம் இருந்ததில்லை. வெஸ்டர்ன் உடைகளையே அவள் விரும்பி அணிவாள். அவரும் அங்கிருந்தபடியால் அந்த நாகரீகத்துக்கு ஏற்றது போல் மகள் இருக்கிறாள் என்று எதுவும் சொன்னதில்லை.  வெஸ்டர்ன் டைப் உடைய அணிந்தாலும், அதை பிறர் கண்ணை உருத்தாத

காளையனை இழுக்கும் காந்தமலரே : 19 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 18

காந்தம் : 18 மலர்னிகா குளியலறைக்குச் சென்றதும் அவளுக்கு தேவையானவற்றை எடுத்து வைப்பதற்காக அவளுடைய பெட்டியை திறந்தாள். அப்போது அதற்கு உள்ளே இருந்த உடைகளை பார்த்து முழித்தாள். ஆம், மலர்னிகா மும்பையில் இருந்ததனால் அதிகமாக வெஸ்டர்ன் டைப் ஆடைகளையே அணிவாள். அதைப் பார்த்துதான் முழித்தாள் காமாட்சி. “என்னடா இது, இது மாதிரியான டிரஸ் நம்மளோட ஊர்ல போட மாட்டாங்களே. இதை மலர் போட்டுட்டு கீழே வந்தால்,தாத்தா, பாட்டி எல்லாரும் என்ன சொல்லுவாங்கனு தெரியலையே. இவங்ககிட்ட எப்பிடி சொல்றது?

காளையனை இழுக்கும் காந்தமலரே : 18 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 17

காந்தம் : 17 மலர்னிகாவின் நாடி பிடித்துப் பார்த்த விசாகம், துர்க்காவை திரும்பி பார்த்தார். பின்னர் மலர்னிகாவின் கைகளை விட்டு விட்டு எழுந்தார் விசாகம். “என்ன விசாகம் பேத்திக்கு என்னாச்சி?” என்றார் பெருந்தேவனார். ராமச்சந்திரனும், “அம்மா என்ன எதுவும் சொல்லாமல் இருக்கிறீங்க?” என கேட்டார்.  விசாகம் துர்க்காவை பார்த்தவர், “உன்னோட பொண்ணுக்கு என்ன பிரச்சனை?” என கேட்டார். அதற்கு துர்க்கா, “ரெண்டு நாளுக்கு முன்னாடிதான் விபத்து நடந்திச்சி. இப்போ நைட்ல இருந்து எதுவும் பேசவே இல்லை. அமைதியாக

காளையனை இழுக்கும் காந்தமலரே : 17 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 16

காந்தம் : 16 காலையில் காளையன் வயலுக்குச் சென்ற பிறகு, வீட்டு வேலைகளை செய்து விட்டு வாசலில் தண்ணீர் தெளித்து விட்டு, கோலம் போட அரிசிமாவை எடுத்து வந்தார் குணவதி. அங்கே நின்றிருந்தவர்களைப் பார்த்து கையில் இருந்த அரிசிமா தட்டை தவறவிட்டவர்,ஓடிச் சென்று அங்கே நின்றிருந்த துர்க்காவை அணைத்துக் கொண்டு அழுதார். துர்க்காவும், “அண்ணி… அண்ணி” என்று அழுதார். வாசலில் காலை நேரத்தில் அழும் சத்தம் கேட்டு வெளியே வந்தனர் குடும்பத்தினர்.  வெளியே நின்றிருந்த துர்க்காவைப் பார்த்து

காளையனை இழுக்கும் காந்தமலரே : 16 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 15

காந்தம் : 15 பெருந்தேவனார் காதல் கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று யோசித்த சபாபதிக்கு ஒரு யோசனை வந்தது. உடனே அதை கேசவனுக்கு போன் போட்டு சொன்னான்.  “சார் நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். நீங்கதான் எப்பிடியாவது அதற்கு மோனிஷாவை சம்மதிக்க வைக்கணும்.” என்றான்.  அதற்கு கேசவனும், “என்ன முடிவு சபாபதி?” என கேட்டார். தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன், “எங்க வீட்டில காதல் கல்யாணத்திற்கு என்ன முடிவு எடுப்பாங்கனு எனக்கு தெரியாது. அதனால நான் முதல்ல

காளையனை இழுக்கும் காந்தமலரே : 15 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 14

காந்தம் : 14 வயலில் காளையனோடு சேர்ந்து உரம் போட்டுக் கொண்டு இருந்தான் கதிர். காளையன் வேலை செய்தாலும் அவனது சிந்தனை இங்கு இல்லை என்பதை உணர்ந்த கதிர், ” அண்ணே என்ன யோசனை? உங்களுக்கு வந்த போனை பற்றியா யோசிச்சிட்டு இருக்கிறீங்க?” என்று கேட்டான். அவனைப் பார்த்தவன், “வேலையை முடிச்சிட்டு சொல்றன் கதிர்.” என்றான். அவனும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. இருவரும் வேலையை முடித்துவிட்டு, வாய்க்காலில் கைகால் முகம் கழுவி விட்டு ஆலமரத்தின் கீழே வந்து

காளையனை இழுக்கும் காந்தமலரே : 14 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 13

காந்தம் : 13 மலர்னிகா சொன்னதற்கு பிறகு நிஷா வேறு எதுவும் பேசவில்லை. மலர்னிகா கம்பனி பற்றி கேட்க, நிஷாவும் அது பற்றி சொல்லிக் கொண்டு இருந்தாள். பின் ஞாபகம் வந்தவளாக நிஷாவிடம் தனது போனை கேட்க, “மேடம் ஆக்ஸிடெண்ல உங்களோட போன் உடைஞ்சு போச்சு. ஆனால் உங்களோட பழைய போன் மாதிரி ஒரு புது போன் வாங்கி பழைய போன்ல இருந்த எல்லாவற்றையும் இந்த புது போன்ல அப்டேட் பண்ணிட்டேன்.” என்று சொல்லி மலர்னிகாவிடம் புது

காளையனை இழுக்கும் காந்தமலரே : 13 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 12

காந்தம் : 12 பெருந்தேவனார் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை சொல்லுங்க என்று யோசியரிடம் சொல்ல, அவரும் தான் கணித்ததை சொல்ல ஆரம்பித்தார். “நான் சொல்லப்போறது, நீங்க எங்கிட்ட குடுத்த ஜாதகத்தை பார்த்து நான் கணிச்சதைத்தான். அதனால நான் சொல்லப்போறதை எல்லோரும் கவனமாக கேளுங்க.” என்றார். யோசியர் எல்லோரையும் பார்த்து, “முதல்ல ஐயாவோட ஜாதகத்திலும் அம்மாவோட ஜாதகத்திலும் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. இவங்க தினமும் நினைச்சு வேதனைப்படுற விஷயம் இவங்ககிட்டையே கூடிய சீக்கிரம் வரப்போகுது.” என்றார். அதைக்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 12 Read More »

error: Content is protected !!