காளையனை இழுக்கும் காந்தமலரே : 32

5
(10)

காந்தம் : 32

மோனிகாவுக்கு சபாபதி வீடியோ கால் பண்ணினான். வீடியோ காலை அட்டென்ட் பண்ணிய மோனிஷா அவனைப் பார்த்து இரு உதடுகளையும் குவித்து, ஒரு கண்ணை மூடிக் கொண்டு கண்ணடித்தாள். இதைப் பார்த்ததும் சபாபதிக்கு சிரிப்பு வந்தது. 

“மோனி கம்பனியிலையா இருக்க?” என்றான். அதற்கு அவளும், “ஆமா சபா, கம்பனிக்கு வந்திட்டேன். ஆனால் வேலை பார்க்கவே முடியவில்லை. என்னோட கண்கள் உன்னோட இடத்தைத்தான் பார்த்திட்டு இருக்கு.” என்றாள். சபாபதிக்கு அவளது நிலை புரிந்தது. “நான் சீக்கிரம் வந்திடுறன் மோனி.” என்றான். 

இதைக் கேட்ட மோனிஷா, “என்ன சதா சொல்ற? ரெண்டு நாள்ல வந்துடுவேன்னு தானே சொல்லிட்டு போனே. ஆனால் இப்போ சீக்கிரமே வந்துடுவேன்னு சொல்ற. என்ன வீட்ல ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டாள் மோனிஷா. அவள் அப்படி கேட்டதும் தயங்கிக் கொண்டே சபாபதி,” ஆமா மோனி ஒரு சின்ன பிரச்சனை” என்று சொன்னான். 

உடனே மோனிஷா,” என்ன சபா உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா? எதுவாக இருந்தாலும் சொல்லு சபா. “என்று கேட்டாள் மோனிஷா. சபாபதியும்,” இல்லை மோனி. என்னன்னு சொன்னால், என்னோட அத்தை பொண்ணுக்கும் என்னோட தம்பிக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு. மூத்தவனா நான் கல்யாணம் பண்ணாமல் இருக்கும்போது, தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்க வீட்டில யோசிக்கிறாங்க. அதனால் எனக்கு முதலில் கல்யாணம் பண்ணி வைக்க வீட்டுல பேசுறாங்க. “என்று சொன்னான் சபாபதி. 

இதைக் கேட்ட மோனிஷாவுக்கு பயம் வந்தது. எங்கே சபாபதி தன்னை விட்டு விட்டு வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் பெண்ணை திருமணம் செய்து கொள்வானோ என்று யோசித்தாள். மெல்ல அவனிடம்,” சபா உன்னோட வீட்ல உள்ளவங்க சொன்னாங்கன்னு சொல்லி என்ன விட்டுட்டு நீ வேற பொண்ணை கல்யாணம் பண்ணுவியா?” என்று கேட்டாள். 

அதற்கு சபாபதி, “என்ன மோனி நீ இப்படி சொல்ற? நான் எப்படி உன்னை விட்டுட்டு வேறொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவன்னு நீ நினைக்கலாம். இங்க பாரு மோனி, அப்படி எதுவும் நடக்காது. உனக்காக இந்த வீட்டை விட்டுட்டு வரவும் நான் தயாராக இருக்கிறேன்.” என்று சொன்னான். 

இப்படி சொல்வான் என்று மோனிஷா எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. ஆனாலும் அந்த கூட்டு குடும்பத்தில் வாழ அல்லவா அவள் விருப்பப்பட்டாள். அதனால் சபாவிடம், “அவசரப்படாத சபா. நம்மளோட விஷயத்தை நீ முதல்ல அவங்க கிட்ட சொல்லு. அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்” என்று சொன்னாள். 

சபாபதியும், “ஆமா மோனிஷா. இன்னைக்கு எங்க ஊரு கோயில்ல பூஜை இருக்கு அது முடிந்ததும் நைட்டுக்கு வீட்டிற்கு வந்ததுக்கு அப்புறம் நான் இதைப் பற்றி கண்டிப்பாக வீட்ல உள்ளவங்க கிட்ட சொல்லி ஒரு முடிவு எடுத்துட்டு உனக்கு சொல்றேன். ” என்று சொன்னான். மோனிஷாவும், “சரி சபா அதுக்காக நீ எதுவும் டென்ஷனாக வேண்டாம். நடக்கிறதை பார்க்கலாம். ஓகேவா” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

கோயிலுக்கு சென்று பூஜை ஏற்பாடுகளை செய்துவிட்டு ராமச்சந்திரனும் தேவசந்திரனும் வீட்டிற்கு வந்தனர். பெருந்தேவனார், “என்னப்பா எல்லா வேலையும் முடிஞ்சுதா?”என்று கேட்டார். அதற்கு ராமச்சந்திரன்,” ஆமாப்பா பூஜை வேலை முடிஞ்சிருச்சு, நாம எல்லோரும் போனால் பூஜையை ஆரம்பிச்சிடலாம்.” என்று சொன்னார். உடனே பெருந்தேவனார் விசாகத்தை அழைத்தார்,. “விசாகம் பூஜைக்கு எல்லாம் தயார் பண்ணியாச்சு. நம்ம போனால் பூஜையை ஆரம்பிச்சிடலாம். நல்ல நேரம் முடியறதுக்குள்ள பூஜையை செஞ்சிடலாம்.” என்றார். 

அதற்கு விசாகம் ,”ஆமாங்க நல்ல நேரம் ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. அதுக்குள்ள நம்ம கோயிலுக்கு போயிடலாம் தானே. நான் போய் எல்லாரையும் தயாராக சொல்றேன்.” என்று சொன்னவர், துர்க்காவை அழைத்து, “துர்கா பிள்ளைங்க எல்லோரையும் கோயிலுக்கு போவதற்காக தயாராக சொல்லு. அப்படியே அண்ணிங்க ரெண்டு பேர்கிட்டையும் சொல்லிவிடு.” என்று சொன்னார். 

சரி என்று சொன்ன துர்க்கா குணவதியிடமும் நேசம்மதியிடமும் வந்து பூஜைக்கு சில தயாராக சொல்லிவிட்டு மலர்னிகாவை பார்க்க மேலே சென்றார். அங்கே கதவை திறந்த துர்க்காவின் கண்கள் விரிந்தன. ஆம் ஒரு பக்கம் மடியில் மலர்னிக்காவையும், மறுபக்க மடியில் காமாட்சியையும் நிஷாவையும் படுக்க வைத்து பின்னால் சாய்ந்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான் காளையன். 

ஒரு தந்தை எப்படி தனது பிள்ளைகளை மடியில் வைத்துக் கொண்டு இருப்பாரோ அதுபோல இருந்தது. சிறிது நேரம் அதை ரசித்து நின்றவர் நேரமாவது உணர்ந்து, காளையன் அருகில் சென்றார். முதலில் காளையனின் தோள் களைத் தொட்டு எழுப்பினார். காளையா என்ன இது? இப்படியே தூங்கிட்டியா? “என்று கேட்டார். 

எழுந்த காளையன் துர்க்காவைப் பார்த்து சிரித்து விட்டு,” ஆமா, அத்தை. மலர் கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிற மாதிரி இருந்தது. பேசிட்டு இருக்கும் போது அப்படியே மடியில தூங்கிட்டா. அதை பார்த்துட்டு காமாட்சியும் நிஷாவும் ஆசைப்பட்டாங்க. பிறகு அவங்களும் ஒரு பக்கம் வந்து தூங்கிட்டாங்க. நானும் உட்கார்ந்து இருந்தேன். அசதியிலை எனக்கும் தூக்கம் வந்துருச்சு. நீங்கள் எதுவும் தப்பாக எடுத்துக்காதீங்க அத்தை.” என்று சொன்னான். 

அதற்கு துர்க்கா, “என்னப்பா எதுக்கு இவ்ளோ பெரிய விளக்கம் கொடுக்கிற, நான் உன்கிட்ட எதுவும் கேட்கலையே. சரி கோவிலுக்கு போகணும் பூஜைக்கு எல்லாம் தயாராக இருக்கு. நம்ம போனா ஆரம்பிக்கலாம். அதனால சீக்கிரமா போய் ரெடியாகு.” என்று சொன்னார். 

“அத்தை அதுக்கு முதல் இவங்க எந்திரிக்கணும். அதுக்கு அப்புறம் தான் நான் எந்திரிக்க முடியும்.” என்று சொல்லி சிரித்தான் காளையன். “அதுவும் சரிதான் காளையா” என்றவர்,” அடியே எந்திரிங்கடி. நல்லா தூங்குறதை பாரு. ” என்று எழுப்பினார். 

மூவரும் கண்களை திறந்து பார்க்க, அவர்கள் காளையன் மடியில் படுத்திருப்பதை பார்த்தனர். பின்னர் நடந்தது ஞாபகம் வர, சிரித்துக் கொண்டு எழுந்தனர். துர்க்கா அவர்களிடம்,” போங்க கோயிலுக்கு போகணும். சீக்கிரமா ரெடியாகிட்டு கீழே வாங்க. ” என்றார். 

காமாட்சி, “சரி அத்தை நானும் நிஷாவும் போய் எங்களோட அறையில ரெடியாயிட்டு வார்றோம். அண்ணி நீங்க குளிச்சிட்டு ரெடியா இருங்க போயிட்டு வரலாம்.” என்று சொல்லி காமாட்சியும் நிஷாவும் சென்றனர். மலர்னிகா எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தாள். காளையன் அவளிடம் தலையசைத்து விட்டு, அத்தையிடம் சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்றான். 

துர்க்கா மகளிடம்,” மலர் நடக்கிறதை ஏத்துக்க பழகு. முதல் தடவை எல்லோரும் சேர்ந்து கோயிலுக்கு போறதனால புடவை கட்டிட்டு வா.” என்று சொல்லிவிட்டு, அவர் ரெடியாகச் சென்றார். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😀

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

1 thought on “காளையனை இழுக்கும் காந்தமலரே : 32”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!