காதை கிழிக்கும் வண்ணம் பாடல்களின் ஓசை ஒலித்துக் கொண்டிருக்க அந்த டிஜே கிளப்பில் ஒரு ஓரமாக நடப்பவை அனைத்தையும் சலிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் நமது நாயகனான கார்த்திகேயன்.
அவனது பார்வை அங்கு அனைவரின் நடுவில் கையில் மது கோப்பையுடன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் நமது நாயகி நிவேதாவின் மீதே பதிந்து இருந்தது.
ஏனோ எதிலுமே மனம் ஒட்டாமல் அனைத்தையும் பார்வையாளனாக பார்த்துக் கொண்டிருந்தவனின் மேசை அருகில் மது கோப்பையுடன் தள்ளாடியபடி வந்து நின்றாள் நிவேதாவின் சினேகிதி ரீனா.
“ஹாய் கார்த்தி நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும் நீ ரொம்ப அழகா இருக்கடா ஆனா உனக்கு வேதா பொருத்தமான பொண்ணுன்னு எனக்கு தோணல அவ உன்ன யூஸ் பண்ண பாக்குற ஆனா..” என்று கூறியபடி மதுவை ஒரு மிடர் குடித்துவிட்டு அவன் அருகில் மிக நெருக்கமாக வந்து,
“நான் உன்னை ராஜா மாதிரி பாத்துக்குவேன் நீ ஓகேன்னா..” என்று மெதுவாக அவனது தொடையின் மீது கை வைக்க அடுத்த நிமிடம் மின்னல் வெட்டியது போல கன்னம் சிவக்கும்படி அறைந்திருந்தான் கார்த்திகேயன்.
அவன் அறைந்த அறையில் அந்த இடமே அதிர்ந்து அனைத்து ஓசைகளும் அடங்கி மயான அமைதியானது.
உடனே அவ்விடத்தை நோக்கி வந்த நிவேதா தள்ளாடியபடி,
“வாட் வாட் ஹேப்பன் காய்ஸ்..?” என்று கேட்க,
ரீனா கன்னத்தில் கை வைத்த படி,
“உன்னோட பியான்சே என்ன அறஞ்சிட்டான்டி..” என்று கூறி கண்ணீர் சிந்தினாள்.
உடனே கோபம் உச்சத்துக்கு ஏற,
“ஹவ் டார் யு..” என்று கார்த்திகேயனை அறைய கரம் உயர்த்த அந்த பூக்கரத்தை தனது இரும்புக்கரத்தால் பிடித்த கார்த்திகேயன்,
“ஸ்டாப் இட் நிவேதா முதல் என்ன நடந்ததுன்னு கேட்டுட்டு அதுக்கப்புறம் நீ என்ன வேணும்னாலும் பண்ணு..” என்று பற்களைக் கடித்தவன்,
“உன்னோட ஃப்ரண்ட் என்கிட்ட ரூடா பிஹேவ் பண்றா..” என்று ரீனாவை எரிக்கும் பார்வை பார்த்தபடி கூறினான்.
“சோ வாட் அவ என்கிட்ட பெர்மிஷன் கேட்டு தான் வந்தா..” என்றதும்
“வாட் கம் எகெய்ன்..”
“ஆமா லாஸ்ட் வீக் என்னோட பல கோடி ரூபாய் பெறுமதி மிக்க கார அவதான் ஓட்டிப் பார்த்து எப்படி இருக்குன்னு சொன்னா ஜஸ்ட் லைக் தட்..” என்று தனது தோள்களை குலுக்கினாள் நிவேதா.
“உன்னோட காரும் உன்னை கட்டிக்க போறவனும் ஒன்னா..?”
“ஹேய்..” என்று ஏதோ நிவேதா கூற வர அவளது கன்னம் பழுக்கும் வண்ணம் பளார் என அறைந்திருந்தான்.
அதற்கு பின் சற்றும் எதிர்பாராத சம்பவங்கள் அங்கு நடந்தேறின.
ஹாய் மக்களே..!
உங்களது மனதை கொள்ளை கொள்ள சிந்தையில் சிதையும் தேனே..!
காதல், குரோதம், நகைச்சுவை, ரொமான்ஸ், பழிவெறி, டுவிஸ்ட் அனைத்தும் நிறைந்த கதையை வாசித்து மகிழ நீங்க தயாரா..?