பா(ர்)வை அம்புகள் நெஞ்சைத் தாக்குதே..!!
டீசர்
பெண் பார்க்க வந்த வீட்டிற்கு அறிமுகம் இல்லாத ஒருத்தி அதிரடியாக நுழைந்ததே அதிர்ச்சியாக இருக்க, அவள் சொன்ன விடயம் பேரதிர்ச்சியாக இருந்தது, அனைவருக்கும்.
சலசலப்புகள் நொடி நேரத்தில் அடங்கிப் போக, அங்கிருந்த யாவரும் அதிர்ச்சி விலகாத பார்வையை மாப்பிள்ளை மீது பதித்திருக்க, உரியவனிடம் எந்தவித சலனமும் இல்லை.
“சசி! இதுக்கு நீ என்ன சொல்லுற?” எனும் சித்தியின் கேள்வியில் அவர் புறம் விழிகளை உருட்டி, “உளறல்களுக்கு நான் பொறுப்பாக முடியாது” என்றான்.
அவனது ஊசிப் பார்வை, தன்னை விழுங்குவது போல் பார்த்திருக்கும் அந்தப் பெண்ணின் மீது சீற்றத்துடன் படிந்து மீண்டது.
“ஹலோ எஸ்.கே! உங்களுக்கு சிவகார்த்திகேயன்னு நெனப்பா? அவர் மாதிரி லுக்கு விட நெனக்காதீங்க. நிக்நேம் மட்டும் தான் ஒன்னு போல இருக்கு. மத்தபடி நீங்களும் அவரும் ஒன்னாக முடியாது” இங்கு வந்து குழப்பம் விதைத்து விட்டு சம்பந்தமே இன்றிப் பேசியவளின் பேச்சில் வெறியாகிப் போனது, அவனுக்கு.
“மை டியர் டாடி! என் அண்ணனுக்கு ஏத்த ஜோடி இவ தானோ?” ஆகாஷ் தந்தையின் காதில் கூற, “அதுக்கு உன் அண்ணன் ஒத்துக்க வேண்டாமா? அவன் அழுத்தக்காரன்” என்றார், முரளி.
“இப்போ உனக்கு என்ன தான் வேணும்?” பெருமூச்சுக்கு மத்தியில் அவன் வினவ, “நீங்க தான் டாக்டரே” சட்டென்று வந்தது, பதில்.
“நான் முடியாதுன்னு சொன்னா?” ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க, “முடியாதுங்கிற பேச்சுக்கே இடமில்ல. நீங்க என்ன கல்யாணம் பண்ணி தான் ஆகனும். நான் உங்களை லவ் பண்ணுறேன்” என்றாள்.
“ஆனா நான் பண்ணலயே”
“பண்ணிடுங்க. சீக்கிரமே லவ் பண்ணுங்க. அப்பறம் கல்யாணமும் பண்ணிடுங்க” என்று அவள் சொல்ல,
“ஏம்மா நீ யாரு? திறந்த வீட்டுக்குள்ள இப்படி தான் நுழைவியா?” என்று சசிக்கு பார்க்க வந்த பெண்ணின் தாய் கேட்க, “திறந்த வீட்டுக்குள்ள தானே நுழையலாம். மூடி வெச்சிருந்தா வந்திருக்க மாட்டேன் ஆன்ட்டி. ஆனா அப்பவும் வர ட்ரை பண்ணி இருப்பேன். ஏன்னா என் டார்லிங் இருக்கிற இடம் தான் எனக்கு கோவில்” வெகு அடக்கமாக உரைத்தவளைக் கண்டு,
“ஜஸ்ட் கெட் அவுட்” என சீறினான், சசிகுமார்.
“ஓகே ஓகே. நான் வெளியே வெயிட் பண்ணுறேன். சீக்கிரம் வந்துடுங்க. லவ் யூ குமாரு” ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி விட்டு வீறு நடை போட்டாள், கீர்த்தனா.
டீசர் எப்படி?
உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க.
இந்த நாவல் ஒருதலைக் காதல் + திருமணத்தின் பின்னரான காதல் என இரண்டு வகையையும் சார்ந்திருக்கும். ஒருதலைக் காதல் என்றதால கொஞ்சம் அழுத்தமா தான் இருக்கும். ஆனா ஜாலியா கொண்டு போவேன். விரும்பியவங்க படிக்கலாம். ஜூன் முதலாம் திகதி முதலாவது அத்தியாயம் வரும்.
E2K 20