தணலின் சீதளம் 28

4.9
(9)


அத்தியாயம் 28

“என்னடா பேராண்டி அலங்காரம் எல்லாம் அப்படியே இருக்கு எதுவுமே நடக்கலையா” என்று அப்பத்தா ஏமாற்றமாக கேட்க.
அவனோ சற்று தனக்கு பின்னே திரும்பிப் பார்த்தவன் கட்டிலைக் கண்டு தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன் அப்பத்தாவிடம்,
“ என்ன அப்பத்தா‌ நடக்கணும் எதையோ எதிர்பார்த்து வந்து ஏமாந்த மாதிரி மூஞ்ச வச்சிருக்க” என்று அவன் நக்கலாக கேட்க.
அதற்கு அப்பத்தாவோ,
“ அட போடா போக்கத்தவனே நான் என்னென்னமோ நினைச்சா நீ என்னடா இப்படி இருக்க. நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்ட. சரி எங்க என் பேத்திய காணோம்” என்று அப்பத்தா கேட்க.
அதற்கு அவனோ,
“இப்ப எதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்னு சொல்ற” என்று அவன் கையை கட்டிக் கொண்டு கேட்க.
“ அது நான் எதிர்பார்த்த மாதிரி நடந்திருந்தா நீ அதுக்கு சரிப்பட்டு வந்திருக்க மாட்டேன்னு நான் ஏன் சொல்ல போறேன். இப்ப அதெல்லாம் சொல்ல முடியாது போடா என் கனவுல மண்ண அள்ளி போட்டுட்டான்” என்று அப்பத்தா சொல்ல,
அவனோ கலகலவென்று சிரித்தவன்,
“ ஐயோ அப்பத்தா உன் கனவெல்லாம் நினைவாகும் அவசரப்படாத அப்பத்தா உன் பேத்தி குளிச்சிட்டு இருக்கா இப்ப வந்துருவா நான் கிளம்புறேன்” என்று அவன் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க அப்பத்தாவோ,
“ டேய் படவா எங்கடா போற புருஷனும் பொண்டாட்டியும் ரெடியாகி கீழ வாங்க நம்ம குலதெய்வ கோவிலுக்கு போய் பொங்கல் வச்சிட்டு வரணும் நான் கீழ போறேன் நீ இருந்து உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வா” என்று அப்பத்தா சொல்ல,
“ அப்பத்தா நான் ரெடி ஆயிட்டேன் நான் கீழ போறேன் நீ வேணா இருந்து உன் பேத்திய கூட்டிட்டு வா” என்றவன் அங்கிருந்து கீழே சென்றான். அப்பத்தாவோ,
“ சரியான அவசர குடுக்க இப்படி அவ ஒரு பக்கம் இவன் ஒரு பக்கம் போனா எங்குட்டு கூடி நான் கொள்ளுப்பேரன் பார்க்கிறது” என்று தனக்குள் புலம்பிக் கொண்டே அறைக்குள் சென்றவரோ அவர்களின் கட்டிலை தாண்டி போக கீழே கிடந்த இருவரின் கலைந்த ஆடைகளை கண்டு அப்பத்தாவோ அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.
“அடக்கொடுமையே நான் கூட இவனை ஒன்னும் தெரியாதவன்னு நெனச்சேன் ஆனா இவன் அவங்க தாத்தா மாதிரி ஜெக ஜால கில்லாடி தான். ஐயோ இத பாக்க பாக்க எனக்கு வெட்கமா வருதே” என்றவர் சிரித்தவாறே குளியல் அறை பக்கம் வந்தவர்,
“ அம்மாடி மேகா குளிச்சிட்டியா தாயி” என்று அப்பத்தா கேட்க.
அவளோ உள்ளே இருந்தபடியே,
“ ஹான் அப்பத்தா இதோ வந்துட்டேன்” என்று சொன்னவளோ தன் உடலை டவலால் சுற்றியவாறு வெளியே வர அப்பத்தாவுக்கோ அவளைப் பார்த்ததும் மேலும் அவருக்கு வெட்கம் வந்தது.
அவளிடம் அதை மறைந்தவாறு,
“ ஆத்தா குலதெய்வ கோவிலுக்கு போகணும் தாயி ஒரு நல்ல பட்டு புடவையை கட்டிக்கிட்டு கீழ வாத்தா நான் கீழ போறேன்” என்று சொன்னவரோ ஒரு அடி எடுத்து வைத்தவர் பின் மீண்டும் அவள் புறம் திரும்பி அவளை இரண்டு கரங்களாலும் நெட்டி முறித்தவர்,
“ என் ராசாத்தி சீக்கிரம் நான் ஆசைப்பட்ட மாதிரி கொள்ளு பேரனை பெத்து கொடுத்திடு” என்று சொன்னவர் சென்றுவிட்டார்.
இவளோ,
“ ஐயோ இந்த அப்பத்தா வேற சும்மா சும்மா கொள்ளு பேரனை பெத்துக் கொடு கொள்ளுப்பேத்தியே பெத்துக்கொடுன்னு கேட்டுகிட்டு இருக்கு நானே நேத்து ராத்திரி எப்படி அந்த ஏலியன் கூட ஒண்ணா இருந்தேன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன் இதுல இந்த அப்பத்தா வேற”
என்று தலையில் அடித்துக் கொண்டவள் அப்பத்தா சொன்னது போல ஒரு பச்சை வண்ண பட்டு புடவையை அழகாக உடுத்தியவள் தன்னுடைய நீளக் கூந்தலை விரித்துவிட்டு இரண்டு பக்கம் மட்டும் முடி எடுத்து பின்னியவள் கீழே வந்தாள்.
அவள் கீழே வந்ததும் மொத்த குடும்பமும் அவர்களுடைய குலதெய்வ கோவிலுக்குச் சென்றார்கள்.
மேகாவோ அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தாலும் சிரித்துக் கொண்டிருந்தாலும் அவளுடைய யோசனை முழுவதுமே வேந்தன் சொல்லிய அந்த சொல்லிலேயே நிலைத்து கொண்டிருந்தது. ‘அப்படின்னா நான் அவனை காதலிக்கிறேனா? ச்சை இல்ல நான் அந்த ஏலியன காதலிக்கவே இல்ல. ஆனா அவன் என்ன தொடும் போது ஒரு அந்நிய தன்மை எனக்கு வரவே இல்லையே.
ஐயோ இப்ப நான் என்னென்னு எடுத்துக்கிறது. அப்ப நான் உன்னை காதலிக்கிறேனா இல்ல காதலிக்கலையா’
என்று அவள் சிந்தனை குதிரையை ஓட விட்டுக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவளுடைய தோளைத் தட்டிய அறிவழகியோ,
“ அண்ணி இங்க ஒரு மாமரம் இருக்கு அதுல இருக்கிற மாங்காய் எல்லாம் நல்லா இனிப்பா இருக்கும்.
வரீங்களா நம்ம ரெண்டு பேரும் போய் அந்த மாங்காயா பறிச்சு உப்பு, மிளகாய் பொடி போட்டு சாப்பிடலாம்”
“அது சரி உப்புக்கும் மிளகாய் பொடிக்கும் இப்ப எங்க போறது”
“என்ன அண்ணி இங்க வாரோம்ன்னு தெரிஞ்சும் நான் அதெல்லாம் கொண்டு வராம இருப்பேனா இங்க பாருங்க நான் வீட்ல இருந்து வரும்போது இதை கொண்டு வந்துட்டேன்” என்று தன்னுடைய கையில் வைத்திருந்த சிறிய பொட்டலத்தை பிரித்துக் காட்டினாள் அறிவழகி.
அவளோ தற்பொழுது அவளுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணத்தை ஓரம் கட்டி விட்டு அவளைப் பார்த்து சிரித்தவள் அறிவழகையுடன் அங்கு சென்றால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவள்,
“ சரி அறிவு வா போகலாம்” என்றவள்
அறிவுடன் அந்த மாமரத்தை தேடி சென்றாள்.
அறிவழகி சொன்னது போலவே அந்த மாமரம் பெரிதாக இருந்தது.
கைகெட்டும் தூரத்தில் மாங்காய் பெரிதாக தொங்கிக் கொண்டிருக்க அதை பார்த்த மேகாவுக்கும் எச்சில் ஊற ஆரம்பித்தது.
“ அறிவு நீ சொன்னப்ப கூட நான் நம்பல ஆனா இப்ப பார்க்கவும் தான் நான் நம்புறேன் மாங்காய் எல்லாம் எவ்வளவு பெருசு பெருசா அதுவும் போக இவ்ளோ கிட்ட எல்லாம் தொங்குது. அதை சீக்கிரம் பரிச்சி சாப்பிடணும்னு ஆசை வருது” என்று சொன்னதோடு இல்லாமல் எக்கி மாங்காவை பறிக்க முயன்றாள்.
ஆனால் அவளுடைய உயரத்திற்கு அந்த மாங்காவை பறிக்க முடியவில்லை.
அது சற்று உயரமாகவே இருந்தது.
இவளோ குதித்து குதித்து சோர்ந்து போனவள் மூச்சு வாங்க தன்னுடைய காலை பிடித்துக் கொண்டாள்.
“ ஐயோ என்ன அறிவு தூரத்தில் இருந்து பார்க்கும்போது மாங்கா அவ்ளோ கிட்ட இருந்தது இப்ப என்னடான்னா பறிக்கவே முடியல” என்று அவள் மூச்சு வாங்க சொல்ல,
“ ஐயோ ஆமா அண்ணி நான் கூட நின்னுக்கிட்டே பரிச்சிடலாம்னு நினைச்சேன் ஆனா இது நம்ம உயரத்துக்கு கொஞ்சம் உயரமா தான் இருக்கு.
இப்ப என்ன பண்றது நான் வேணும்னா உங்கள தூங்கட்டுமா அப்போ சரியா இருக்கும்” என்று அறிவழகி சொல்ல.
அதற்கு மேகாவோ,
“ அய்யய்யோ வேண்டாம் அறிவு உன்னால எப்படி என்னை தூக்க முடியும் நான் ரொம்ப வெயிட்” என்று அவள் சொல்ல அதற்கு அறிவழகியோ,
“ அய்யோ என்ன அண்ணி நீங்க உங்களை பார்த்தா அவ்வளவு வெயிட்டா இருக்குற மாதிரி எல்லாம் தெரியல இருங்க நான் தூக்குறேன் நீங்க மாங்காவை பறிங்க”
“ ஐயோ வேண்டாம் அறிவு சொன்னா கேளு” என்று அவள் மறுக்க, அறிவழகியோ,
“ அதெல்லாம் பரவால்ல அண்ணி நான் உங்களை கீழே எல்லாம் விட மாட்டேன் தைரியமா மேல பாருங்க நான் தூக்குறேன்” என்று அவளை தூக்க சற்று நேரத்தில் சிறிது உயரத்திற்கு வந்த மேகாவோ மாங்காவை இரு கையால் பிடித்தவள்,
“ பரவாயில்லையே அறிவு சொன்ன மாதிரியே என்னை தூக்கிட்ட” என்று சொல்லியவளோ மாங்காவை பறித்து விட்டு கீழே குனிந்து பார்க்க,
அங்கோ அவளை தன் கையில் தூக்கியவாறு அவளைப் பார்த்தவாறு தன்னுடைய வலது புருவத்தை மேலே உயர்த்தி ஒற்றை கண்ணடித்தான் வேந்தன்.
ஆம் அவளைத் தூக்கியது வேந்தன் தான்.
அறிவழகி அவளைத் தூக்க போக அவளை நகர்த்திவிட்டு தன் கைகளால் தன்னுடைய மனைவியை தூக்கினான் வேந்தன்.
பாவையவளோ இவ்வளவு நேரமும் அறிவழகிதான் தன்னை தூக்கினாள் என்று நினைத்து மாங்காவை பறித்தவள் சந்தோஷத்துடன் கீழே குனிந்து பார்க்க அங்கோ அவளுடைய மன்னவனோ முகம் கொள்ளா புன்னைகையுடன் அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
‘அட ப்ராடு ஏலியன் நீயா என்ன தூக்கினது’ என்று என்று தனக்கு கூறிக் கொண்டவள் அவனை முறைத்தவாறே,
“ உன்னை யார் தூக்க சொன்னது என்னை இறக்கி விடு முதல்ல” என்று அவள் சொல்ல,
“ சும்மா சொல்லக்கூடாது ஆள் குள்ளமா இருந்தாலும் வெயிட், செம்மையா இருக்கடி என்னா கணம் கலக்குற” என்று அவளை வாற,
அவளோ தன்னை அவன் குல்லம் என்று சொன்னதும் வெயிட் என்று சொன்னதும் அவளை கோபத்துக்கு உள்ளாக்க முடிந்த மட்டும் அவனை முறைத்து வைத்தாள் மேகா.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தணலின் சீதளம் 28”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!