தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 23

4.6
(23)

பேராசை – 23

 

 

அந்த மிகப் பெரிய வில்லாவின் முன் வந்து கிறீச்சிட்டு நின்றது காஷ்யபனின் கருப்பு நிற Audi கார்.

காரினுள்ளே இருந்துக் கொண்டே அந்த வில்லாவைப் பார்த்தவளுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.

 

அந்த பெரிய இடப் பரப்பில் அவனுடைய வில்லாவே மிகவும் பிரம்மாண்டமாக பெரிதாகவும் அமைக்கப் பட்டு இருந்தது.

 

முதல் முதலில் அவன் இந்த வில்லாவை அமைத்து விட்டு கிரகப் பிரவேசம் செய்த போது அவளின் குடும்பத்தினரை தவிர அவள் வரவே இல்லை.

 

இன்று தான் முதல் முறை அவனின் கெஸ்ட் ஹவுஸைப் பார்க்கிறாள் அதனாலேயே அவ்வளவு வியப்பு அவளிடம்.

 

விழிகளை அகல விரித்த படியே கண்களை இமைக்காது காரில் இருந்து அவள் இறங்க, அவள் முன் வந்து நின்ற காஷ்யபனோ “ வெல்கம் டூ அவர் ஹோம் பேபி” என்றான்.

 

அதில் சுயத்திற்கு வந்தவள் “அவர் ஹோம் ஆஹ்?” என புரியாமல் கேட்க.

 

“ஒக்கோர்ஸ் நம்ம மேரேஜ்க்கு அப்புறம் இங்க வந்துடலாம் பேபி சோ இது உன்னோட ஹோம் மாதிரி தானே பேபி”

 

மென் புன்னகையுடன் அவன் விழிகளைப் பார்த்துக் கொண்டே கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிய படி “ காஷ் நான் எப்போ உங்களை மேரேஜ் பண்ணிக்க சம்மதம் சொன்னேன்? என ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினாள்.

 

அவனுக்கோ ஏகத்துக்கும் கோபம் எகிறியது ஆனால் அவளிடம் இப்போது காட்ட முடியாதே!

 

அவனின் பார்வையோ அவள் கையில் அவன் சற்று முன்னர் போட்டு விட்ட நீல நிறக் கல் பதித்த பிளாட்டினம் மோதிரத்தில் படிந்து மீள அவன் பார்வை செல்லும் திசையைப் பார்த்தவள் “என்ன வேணுமா கழட்டித் தரவா?” என்று கேட்க….

 

 “அந்த ரிங் அஹ் மட்டும் கழட்டினால்…” என்று அவன் சொல்லும் போதே அவளே “கழட்டினால்?” என அழுத்தம் கொடுத்து சொன்னவள் அதை மற்றைய கையில் வேண்டும் என்றே கழற்றப் போவது போல செய்ய….

 

அவளை நெருங்கி தன் விழிகளோடு அவள் விழிகளை கலக்க விட்டவன் அவள் தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கும் போது அவளின் மோதிரம் அணிந்த கையை இறுகப் பிடித்துக் கொண்டவன் அவள் இதழ்களைக் கவ்வி சுவைத்து இருந்தான்.

 

இதுவரையிலும் அவளுக்கு மென்மையாக இதழ் முத்தம் பதித்தவனுக்கு இன்றைய இதழ் முத்தமானது வன்மையான இதழ் முத்தமாக மாறியது.

 

இன்று அவள் வேண்டுமென்றே மோதிரத்தை கழட்ட துணிந்தது அவனால் அதைக் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை.

 

வலியில் முகம் சுருங்கியவள் அவனிடம் இருந்து விடுபட போராட அவனா விடுவான் மேலும் மேலும் அவள் இதழ்களை பாகுபாடு இன்றி சுவைக்க, ஒரு கட்டத்தில் அவளின் கண்ணீர் அவனின் இதழில் பட்டுத் தெறித்தது.

அப்போது தான் அவன் செய்துக் கொண்டு இருக்கும் வேலையே அவனுக்குப் புரிந்தது.

 

கோபம் வந்தால் அவனாக உணரும் வரை யாராலும் அவனை தடுக்க முடியாதே!

 

அவளில் இருந்து விலகியவன் அவளின் இதழைக் கண்டு உண்மையாகவே அதிர்ந்து விட்டான்.

 

ஆம், அவனின் இதழ் அணைப்பின் வன்மையில் அவளின் இதழ்களில் இருந்து இரத்தம் வழிந்துக் கொண்டு இருந்தது.

 

“ஓஹ் ஷிட் என்றவன் தலையைக் கோதிக் கொண்டே தனது பாக்கெட்டில் இருந்து கர்சீப் ஒன்றை எடுத்து அவளுக்கு வலிக்குமோ என அஞ்சி மென்மையாக துடைத்த படியே ரியலி சாரி பேபி பிளீஸ் டோண்ட் மேக் மீ டென்ஷன் ஆழி என்றவன் ஒரு பெரு மூச்சுடன் விழிகளை மூடித் திறந்து இனிமேல் இந்த ரிங் ஐக் கழட்ட மாட்டனு நினைக்கிறேன்” என்றான்.

 

அவள் பதில் சொல்லும் நிலைமையிலேயே இல்லை.

 

இதழ்கள் எரிந்தது.

 

அவனிடம் இருந்து கர்சீப்பை பிடுங்கிக் கொண்டவள் “ஐ வில் மேனேஜ் இட்” என்று விட்டு என்ன நினைத்தாளோ அவன் எதிர்ப் பார்க்காத நேரம் அவனது பாக்கெட்டின் உள் கையை விட்டு கெஸ்ட் ஹவுஸின் திறப்பை எடுத்தவள் கதவைத் திறந்துக் கொண்டு அவனையும் கண்டுக் கொள்ளாமல் உள்ளே நுழைந்துக் கொண்டாள்.

வாசலிலேயே அவளின் செயலில் அதிர்ந்து போய் நின்று இருந்தவன்… போகும் அவளின் முதுகை வெறித்துப் பார்த்தவனுக்கு என்ன உணர்வு என்றே தெரியவில்லை.

 

“கோபப்பட்டு உன்னை நீயே காட்டிக் கொடுக்க போறியா ஷேத்ரா? என அவன் மூளை கட்டளையிட, வன்மமாகப் புன்னகைத்துக் கொண்டவன் ஐ வில் ஓவ்ன் மை கோல் சூன்” என வாய்விட்டு சொல்லிக் கொண்டான்.

சற்று ஆழ யோசித்து இருந்தாலே, அவன் அவளை நம்ப வைப்பதற்கு சாதாரணமாக அவளுக்கு போட்டு விட்ட மோதிரத்தை அவள் கழட்ட துணிந்ததற்கு ஏன் இவ்வளவு கோபம் தனக்கு வர வேண்டும்? என்று அவன் யோசித்து இருந்தாலே அவள் மீதான காதலை உணர்ந்து இருப்பானோ என்னவோ!

 

தன் ஐம்பொன் காப்பை இறக்கி விட்ட படி உள்ளே சென்று ஹாலில் அவள் எங்கே என விழிகளை சுழல விட…. அங்கோ அவளைக் காணவில்லை.

 

“ஆழி…. ஆழி” என அழைத்தவன் மாடிப் படிகளில் ஏறும் சமயம் அவளின் குரலோ சமையல் அறையில் இருந்து ஒலித்தது “காஷ் கிட்சென்ல இருக்கேன்”

 

வேகமாக சமையலறைக்குள் அவன் நுழைந்த சமயம் அங்கோ காஃபி போடத் தெரியாமல் சமையலறையையே ஒரு வழி செய்து வைத்து இருந்தாள்.

 

அவனே நேர்த்தியின் மறு உருவம்.

 

தனக்கு பிடித்தது போல இந்த கெஸ்ட் ஹவுஸை நிர்மாணித்துக் கொண்டவனுக்கு அவனின் வீட்டில் உள்ள சமையலறையே அந்த கொஞ்ச நேரத்தில் குளறுபடி செய்து வைத்து இருந்தாள்.

 

இங்கு அவனுக்கு வழமை போல அதீத கோபம் தான் வந்து இருக்க வேண்டும்.

 

ஆனால், அதிசயத்திலும் அதிசயமாக அவன் அவளைப் பார்த்து தெற்றிப் பற்கள் தெரிய வாய் விட்டு சிரித்தே விட்டான்.

 

ஆம், அவள் முகமெல்லாம் காஃபி பவுடர் சிதறி இருக்க எது எங்கு இருக்கின்றது எனத் தெரியாத அளவுக்கு அவ்வளவு கர்ண கொடூரமாக அந்த சமையலறை இருந்தது.

 

 “எனக்கு தான் தெரியாதுல கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணுங்க நான் இதெல்லாம் க்ளீன் பண்ணி தரேன்” என்றாள் சிரிக்கும் அவனை முறைத்தபடி …

 

கடினப்பட்டு தன் சிரிப்பை அடக்கிக் கொண்டே அவளை நெருங்கியவன் அப்படியே அவளை அலேக்காக தூக்கி சமையல் திட்டில் அமர வைத்து விட்டு “எல்லாம் சிறப்பா பண்ணிட்ட மா …. இனி நீ ஒன்னும் பண்றதுக்கு இல்லை” என்றவன் அவளை மேலும் நெருங்க அவளோ தன் இதழ்களை இரு கைகளாலும் மூடிக் கொள்ள, அவனுக்கோ அந்த எண்ணம் இல்லை போலும் அவளின் பின்னால் இருக்கும் ஏப்ரனை எடுத்துக் கொண்டு அவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தவாறே அதனை லாவகமாக அணிந்துக் கொண்டான்.

 

அவனை விழி விரித்து பார்த்தவள் மனமோ “இப்படி அசிங்கப் பட்டுட்டியே ஆழினி” என சொல்லிக் கொண்டது.

 

ஷர்டின் கையை முட்டி வரை மடித்துக் கொண்டவன் அவள் அமர்ந்து இருந்த கட்டில் அவளை சிறை செய்தது போல இரு புறமும் கைகளை வைத்துக் கொண்டவன் “நான் சும்மா இருந்தாலும் என்னை நீ டெம்ட் பண்ணிட்டு இருக்க பேபி” என்றவன் விழிகள் மோகமாக அவளின் இதழ்களில் படிந்து மீண்டது.

 

குரலை செருமியவள் தான் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டே “போதும் க்ளீன் பண்ணுங்க” என்றாள்.

 

அவனோ அவளிடம் இருந்து விலகி அனைத்தையும் அரை மணி நேரத்தில் சுத்தம் செய்து இருந்தான்.

 

அவனிடம் அப்படி ஒரு வேகம்.

 

 எள்ளளவும் கூட கவனச் சிதறல் இல்லை.

 

வேளையில் அப்படி ஒரு நிதானமும் நேர்த்தியும் இதனிடையில் அவன் களைத்துப் போனதற்கான எந்த அறிகுறியும் அவனிடம் தேடி தோற்று தான் போனாள்.

 

அவளுக்கே ஆச்சரியம்.

 

இப்போது அவள் காணும் காஷ்யபன் புதிது அல்லவா!

 

அவளையே அறியாமல் அவனை ரசிக்க ஆரம்பித்து இருந்தாள்.

 

அவளுக்கு காஃபியை தயாரித்து அவளிடம் நீட்ட… அவள் இந்த உலகத்தில் இருந்தால் தானே அதனை வாங்க….

 

அவனையே இமைக்காமல் பார்த்து இருந்தாள்.

 

அவளின் கையில் இருக்கும் தனது கர்சீப்பை எடுத்து தன் முகத்தில் வழியும் வியர்வையை துடைத்துக் கொண்டவன் அவள் முகத்தில் இதழ் குவித்து ஊதினான்.

 

அவனின் உஷ்ண காற்றில் சுயம் பெற்றவள் அவன் கையில் இருக்கும் காஃபியை வாங்கிக் கொண்டாள்.

 

உண்மையாகவே அவனுக்கு அவளின் இமைக்கா பார்வையில் தானாக வெட்கம் தோன்ற, ஒரு மெல்லிய .புன்னகையுடன் அவளின் அருகில் சாய்ந்து நின்றுக் கொண்டவன் எதுவுமே பேச வில்லை.

 

பெண்களின் வெட்கம் ஒரு அழகு என்றால் ஆண்களின் வெட்கம் பேரழகு அல்லவா!

 

இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் இதழ்களில் மெல்லிய புன்னகை தேங்கி இருந்தது என்னவோ உண்மை தான்.

 

அப்படியே நேரம் செல்ல அவர்களின் மௌனம் அவளின் அலைபேசி அழைப்பில் கலைந்தது.

 

அலைபேசியை ஏற்று “ஹலோ தேஜா சொல்லு” என்க…

 

 

“என்னடி நான் ஒரு 7 நாள் தான் ஃபோன் அன்ஸ்வர் பண்ணல அதுக்குள்ள எனக்கு பெரிய இடியையே மெசேஜ்ல பார்சல் பண்ணி அனுப்பி வச்சிருக்க” எனத் தீவிரமாக அவள் கேட்க….

 

காஷ்யபனோ அவளையே பார்த்து இருக்க, “ஆஹா இவன் வேற இப்படி பார்க்குறானே எப்படி பேசுறது எனத் திணறியவள் அப்புறம் ஆறு தடவைக்கும் மேல் ‘ஹலோ…ஹலோ’ எனக் கத்திக் கொண்டு இருந்த தேஜாவிடம் நான் நைட் கால் பண்றேன் டி” என அவசரமாக துண்டிக்கப் போக “ஹே… நான் இன்னும் மெடிகல் கேம்ப்ல இருக்கேன் டி நைட் என்னால பேச முடியாது” என்க….

 

“உனக்கு மறுபடியும் மெசேஜ் போடுறேன் டி அதுல பார்த்துக்கோ இப்போ வையேன் டி “ என்க…

 

“போடிங் இவளே இனி பேசாத என்கூட நான் வைக்கிறேன்” என்ற தேஜா அழைப்பை துண்டித்து விட்டாள்.

 

இழுத்து பெரு மூச்சை விட்டவள் அவளையே பார்த்துக் கொண்டு இருந்த காஷ்யபனிடம் “வீட்டுக்கு போவோமா?” எனக் கேட்க…

 

அவளைக் கேள்விகள் கேட்க விரும்பாதவனோ, “உனக்கு தான் தெரியும்ல நான் விகெண்ட்ஸ்ல இங்க தான் ஸ்டேனு”

 

“சோ வாட்?”

 

“இங்க ஸ்டே பண்ணுவோம்” என்க…

 

“வாட்? என அதிர்ந்தவள் ஐ கான்ட் நான் இப்பவே போகணும்” என்றவளுக்கு மெல்லிய பயம் அவள் மனதில் உருவாகியது.

 

அவள் மருண்ட முகத்தைப் பார்த்துக் கொண்டே “ஜஸ்ட் கிட்டிங் ஆழி உன்னை வீட்ல விட்டுட்டு நான் இங்க வந்துருவேன்” என்ற வார்த்தையில் தான் அவளுக்கு உயிரே வந்தது.

 

“ஓகே கெட் ரெடி கிளம்பலாம்” என்றாள்.

 

அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் “இப்படியேவா வர போற? வீட்ல என்னாச்சுனு கேப்பாங்க சோ ஃப்ரெஷ் ஆகிட்டு வா போகலாம்” என்றவன் அவள் சுதாரிக்கும் முன்னரே அவளைத் தன் கைகளில் ஏந்தி இருந்தான்.

 

அவனிடம் இருந்து திமிறி இறங்கப் போனவளை “நான் ஒன்னுமே உன்னை பண்ண மாட்டேன் டிரஸ்ட் மீ ஆழி என அவள் விழிகளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே கூறி விட்டு நான் பக்கத்துல இருக்க ஷாப்ல உனக்கு வேற ட்ரெஸ் வாங்கிட்டு வரேன் ” என அவளிடம் சொன்னவன் அவளை இறக்கி விட்டது என்னவோ அவனின் அறையில் இருக்கும் வாஷ்ரூமில் தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 23”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!