தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 24

4.7
(34)

பேராசை – 24

வாஷ்ரூமிற்குள் அவன் விட்டது தான் தாமதம் அடுத்த கணமே கதவினை அடைத்து லாக் செய்து இருந்தாள்.

அவளின் திடீர் செயலில் அதிர்ந்தவன் அவள் கதவை இழுத்து மூடியதில் ஒரு அடி பின்னே நகர்ந்து இருந்தான்.

மூடிய கதவையே வெறித்தவன் இதழ்கள் என்னவோ ஏளனமாக புன்னகைத்துக் கொண்டன.

 

அந்தப் புன்னகையின் பின் பல அர்த்தங்கள் பொதிந்து இருந்தன.

வாஷ்ரூம் கதவில் சாய்ந்து நின்றவளுக்கு இதயமோ அதி வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.

 

வலக் கையால் இடது மார்பை வருடிக் கொண்டவளுக்கு அவன் காரில் புறப்படும் ஓசைக் கேட்க…. ஒரு பெரு மூச்சுடன் மெதுவாகக் கதவை திறந்து வெளியில் வந்தாள்.

அவனின் அறை மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது.

அறையின் மத்தியில் பெரிய கிங்-சைஸ் கட்டிலும் அறையுடன் ஒட்டிய ஜிம் அறையும் இருந்தது.

“ஆத்தாடி… அந்த வீட்டுல கூட அவன் ரூம் இவளோ பெருசா இருக்காதே! ஒரு ஊரே வந்து தங்கலாம் போல இருக்கே என வியந்து போய் சுத்திப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவனின் பீரோவை பார்த்து “இது வேறயா?” என்றவள் அதன் அருகில் திறப்பதற்காக பிடியில் கையை வைத்த சமயம் “ஆழி இன்னுமே நீ ஃப்ரெஷ் ஆகலையா?” என்றுக் கேட்டுக் கொண்டே கையில் உடைப் பார்சலோடு அவளை நெருங்கி இருந்தான்.

அவன் குரலில் திடுக்கிட்டு விழித்த ஆழினி “அவ்ளோ குயிக் ஆஹ் வந்துட்டீங்களே!” என்று கேட்டுக் கொண்டே அவன் கையில் இருந்த உடைப் பார்சலை வாங்கிக் கொண்டாள்.

அவள் தன் அனுமதி இல்லாமல் பீரோவை திறக்கப் போனதில் வந்த ஆத்திரத்தை கடினப் பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தவன் முகத்தில் எந்த வித உணர்வையும் காட்டாமல் “என்னை கடையிலேயே ஸ்டே பண்ணிருவேன்னு நினைச்சியா பேபி” என்றான்.

“இல்லையே என வலுக்கட்டாயமாக சிரித்தவள் வெளில வெயிட் பண்ணுங்க ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்” என்றவள் அவன் பதிலையும் எதிர் பார்க்காது வாஷ்ரூமிற்குள் புகுந்துக் கொண்டாள்.

அவள் சென்றதும் அவன் முகமோ ரத்தமென கோபத்தில் சிவந்தது.

இதுவரையிலும் பொறுத்துக் கொண்டவன் இதனை அவனால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எவ்வளவு நேரம் அப்படியே கட்டிலில் அமர்ந்து இருந்தனோ, அவள் வரும் அரவம் தெரிய பின்னால் திரும்பி பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்தே விட்டான்.

ஆம், அவன் அறையில் இருந்து வெளியில் சென்று இருப்பான் என்று எண்ணியவள் வெண் நிற டவலை இடையில் கட்டிக் கொண்டு வந்து இருந்தாள்.

அவளுக்கும் அதிர்ச்சி.

முதலில் சுயத்திற்கு வந்தவனோ, அப்போது தான் கட்டிலில் அவன் அவளுக்கு வாங்கி வந்த உடை தென்பட அவன் மனதோ “அஹான்…மேடம் ரூம்ல வந்து டிரஸ் சேஞ்ச் பண்ண தான் என்னை வெளில வெயிட் பண்ண சொன்னாங்களோ? என நினைத்தவன் மென் புன்னகையுடன் அவளின் மருண்ட விழிகளைப் பார்த்து சாரி ஆழி… நான் வெளில வெயிட் பண்றேன் என்றவன் கதவு வரைச் சென்று ஏதோ தோன்ற அவள் புறம் திரும்பி யூ ஆர் மை எவ்ரிதிங் சோ உன்னை நான் இப்படி பார்க்குறதுல தப்பே இல்ல பேபி” என ஒற்றைக் கண்ணை அடித்தவன் அறைக் கதவைத் திறந்துக் கொண்டு வெளியில் சென்று விட்டான்.

அவளுக்கு தான் அவன் கூறிய “யூ ஆர் மை எவ்ரிதிங்” என்ற  வார்த்தைகளில் கன்னங்கள் தானாக சிவந்து விட்டன.

அவன் அவளை முத்தம் இடும் போது வராத உணர்வு ஆணவனின் வார்த்தைகள் அவளைப் பித்தம் கொள்ளச் செய்தது.

ஒரு வித நாணத்தோடே அவன் தனக்காக முதன் முதலாக வாங்கித் தந்த அந்த உடையைப் பிரித்து பார்த்தாள்.

அவளுக்கு பிடித்த கறுப்பு நிறத்தில் லாங் பிராக் வாங்கி வந்து இருந்தான்.

அவளுக்குப் ரொம்பவே பிடித்தும் இருந்தது.

ஒரு மென் புன்னகையுடன் பிராக் ஐ அணிந்துக் கொண்டவளுக்கு பாந்தமாகப் பொருந்தியும் இருந்தது.

இடை வரை நீண்டு இருந்த கூந்தலை கிளட்ச் கிளிப்பில் அடக்கியவள் எந்த வித அலங்காரங்களும் இன்றி அழகியகவே இருந்தாள்.

கண்ணாடியைப் பார்த்து திருப்தியாக புன்னகைத்துக் கொண்டவளுக்கு அவன் தன்னை பார்த்து என்ன சொல்வான் என்ற ஆர்வம் ஒரு புறம் இருக்க மறு மனமோ இதழ் முத்தம் கொடுப்பானா என்றும் ஏங்கியது.

தன் மனம் போகும் போக்கில் திடுக்கிட்டவள் “போதும் அடங்கு” எனக் கட்டுப் படுத்திக் கொண்டவள் ஹாலுக்கு விரைந்தாள்.

அவனுக்கோ இப்போதே அவளைத் தன் வசப் படுத்தினால் என்ன? என்றே தோன்ற தன் உணர்வுகளை கட்டுப் படுத்த வெகுவாக போராடிக் கொண்டு ஹாலில் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டு இருந்தான்.

அவன் அருகில் வந்து நின்றவள் “காஷ் போகலாமா?” எனக் கேட்க…

அவளை நிமிர்ந்துப் பார்த்தவன் முற்றிலுமாக தன்னையே மறந்து இருந்தான்.

அவளுக்கு பதில் கூறும் நிலையே கடந்து இருந்தான்.

அவளை இறுக அணைத்துக் கொண்டவன் “யூ ஆர் சோ பிரிட்டி மை பேபி” எனத் தாபம் நிறைந்த குரலில் சொல்ல…

அவன் விழிகளை ஏறிட்டுப் பார்க்கத் தயங்கியவள் விழிகளைத் தாழ்த்திய படி “தேங்க்ஸ்” என்றாள்.

அவளுக்கு அவனின் அணைப்பில் இருந்து வெளிவர தோன்றவே இல்லை.

அவன் கழுத்தில் மாலையாக கைகளைப் போட்டுக் கொண்டாள்.

அவளின் நுதலில் மென் முத்தம் பதித்தவன் அடுத்ததாக இமைகள் தாழ்ந்து இருந்த அவளின் இரு நீள விழிகளுக்கும் தொடர் முத்தங்கள் பதிக்க, அவளுக்கோ உடல் சிலிர்த்தடங்கியது.

இருவரும் தங்களை மறந்து இருந்தனர்.

அவனுக்கோ அவளின் மீது மோகம் கரைப் புரண்டு ஓடியது.

அவனின் முத்தங்கள் அவள் முகத்தில் ஒரு இடம் விடாமல் தொடர்ந்துக் கொண்டே போனது.

இறுதியாக அவனின் இதழ்கள் அவளின் இதழ்களில் வந்து நிலைக்க ஒரு கணம் கூட தாமதிக்காமல் அவளின் இதழை மிக ஆழமாகக் கவ்வி இருந்தான்.

பாவையவளோ விழிகளை மூடிக் கொள்ள அவளின் கைகளோ அவனின் சிகைக்குள் அலைந்தது.

முத்தமிட்டுக் கொண்டே அவளை பக்கவாட்டு சுவற்றில் சரித்தவன்  கைகளோ அவளின் இடையில் இருந்து தானாக மேலெழுந்து அவளின் பிராக்கின் ஹூக்கை கழட்டி விட அது கீழே விழப் போகும் அதே சமயம் அவளின் பெண்மை விழித்துக் கொண்டது.

பட்டென விழிகளைத் திறந்தவள் தன் இதழ்களை அவன் இதழ்களில் இருந்து பிரித்து எடுத்தவள் அவன் சிகைக்குள் இருந்த கையை வேகமாக எடுத்து தன் ஆடையைக் கீழே நழுவ விடாமல் பிடித்து இருந்தாள்.

அவனுக்கோ இன்னுமே அவள் மீதான மோகம் குறையவில்லை.

அவள் விழிகளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே “ஐ நீட் யூ ரைட் நவ் ஆழி” என்றானே பார்க்கலாம்.

உள்ளுக்குள் அதிர்ந்தாலும் அவளுக்கு இப்போது கோபப் பட முடியவில்லை அவளும் அல்லவா அவனோடு இசைந்து இருந்தாள்.

தன்னை நிதானித்துக் கொண்டவள் “காஷ் பிளீஸ் என் கண்ணைப் பார்த்துட்டே என் ட்ரெஸ்ல இருக்க ஹூக்கை நீங்களே பூட்டி விடுங்க” என்றாள்.

இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டே அவள் விழிகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டே அவளின் கைகளில் சிறைப் பட்டு இருந்த பிராக்கை சரி செய்து ஹூக்கை பூட்டி விட்டான்.

இருவரும் விலகிக் கொள்ள வில்லை.

 அதே நிலையில் இருந்த படியே “சாரி” என்றாள்.

“நீ ஏன் பேபி சாரி சொல்ற?நான் தான் கொஞ்சம் கன்ட்ரோல் மிஸ் ஆகி ஓவர் ஆஹ் போய்ட்டேன்

“இட்ஸ் ஓகே என்றவள் அவனிடம் இருந்து விலகி நான் கார்ல வெயிட் பண்றேன்” என்று விட்டு அவள் சென்று விட….

அவளிடம் அவன் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் பேசி இருந்தாலும் அவனின் ஒவ்வொரு அணுவும் அவள் வேண்டும் என்று தான் துடித்துக் கொண்டு இருந்தது.

“ஓ மை கோட் கன்ட்ரோல் காஷ்” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டவன் வெகு நேரத்தின் பின்னரே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு கெஸ்ட் ஹவுஸை லாக் செய்து விட்டு கரை நோக்கிச் சென்றான்.

காரை கிளப்பி இருந்தவன் மிதமான வேகத்திலேயே ஒட்டிக் கொண்டு இருந்தான்.

இருவரிடமும் மௌனம்.

ஒரு கட்டத்தில் அவனாகவே முன்னரே அவன் கேட்க நினைத்து இருந்த கேள்வியைக் கேட்டு இருந்தான்.

“மேரேஜ் கால் ஆப் பண்ணியாச்சா ஆழி?” என சாலையில் கவனம் பதித்து இருந்தவளை பக்கவாட்டாக திரும்பிக் கேட்க….

“ஹும் மாமாகிட்ட சொல்லிட்டேன் அவர் வீட்ல பேசுறேன்னு சொல்லி இருக்கார்”

“அப்போ வருண்?” என அவன் கேட்கும் போதே அவனுக்கே அபத்தமாக தான் பட்டது இருந்தும் அவன் மனம் கேட்காமல் கேட்டு விட…

“என்ன கேக்க வர்றீங்க?” என இப்போது அவனைப் பார்த்து கூர்மையாக கேட்க…

“ஹே…நான் ஒன்னும் தப்பா கேட்க வர்லமா… வருண் வீட்டுல பேசிட்டானா என்ன சொன்னான்? அதைத் தான் கேட்க வந்தேன்”

“அங்கிளும் வருணும் என் அப்பா அண்ட் மாமாவை நேர்ல மீட் பண்ணி பேசிட்டாங்க சோ நோ இஷுஸ்” என்றாள்.

அவனுக்கு இப்போது தான் மனம் லேசானது போல உணர்வு.

“தென் ஓகே” என அவன் புன்னகைத்துக் கொள்ள, “என்ன ஓகே” என அவள் கேட்க…

அவளை ஆழ்ந்த்துப் பார்த்தவன் “ ஏன்னு உனக்கு தெரியாதா?”

அவனின் பார்வையில் சற்றே தடுமாறியவள் மறு புறம் திரும்பி  புன்னகைத்துக் கொண்டாள்.

இருவரும் வீடு வந்து சேர 2 மணியைக் கடந்து இருக்க… அனைவரும் ஹாலில் தான் இவர்களுக்காக காத்துக் கொண்டு இருந்தனர்.

அனைவரின் பார்வையும் அவளின் கறுப்பு நிற உடையில் தான் ஆராய்ச்சியாகப் படிந்தது.

இருவரும் ஒன்றாக மாடியில் ஏறப் போகும் சமயம் காஷ்யபனை பிராகலாதன் அழைத்து இருக்க, அவனின் நடையோ தடைப் பட்டது.

அவனோ சாவகாசமாகத் திருப்பி “என்ன அப்பா சொல்லுங்க என்றிருக்க?” வெகு நாட்களுக்கு பிறகு தன்னை அவன் அப்பா என அழைத்து பேசுவதில் முகம் விகர்சிக்க “நாங்க உனக்கு மேரேஜ் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்” என்க…

அவனுக்கு அதில் உடல் இறுகினாலும் “அப்பா நான்..” என அவன் பதில் சொல்லும் முன்னரே ஆழினியின் உணர்ச்சியற்ற முகத்தைப் பார்த்த பிரகலாதனோ  “ஆழினி உனக்கு என் மகனை கட்டிக்க இஷ்டமா?” எனக் கேட்டு விட…..

அவனுக்கோ மனதில் இனம் புரியாத உணர்வு.

அவளின் பதிலில் அல்லவா இந்த திருமணம் நடக்குமா? இல்லையா? என முடிவு செய்யலாம்.

அவள் முகத்தையே பார்த்து இருந்தான்.

பிரகலாதன் இப்படி தன்னிடம் கேட்பார் எனக் கொஞ்சமும் எதிர் பாராதவள் திகைத்து விழித்த படி நிற்க…

“சொல்லு மா எதுவா இருந்தாலும் உன் முடிவு என்னவோ அது படியே செய்யலாம்”

இவ்வளவு நேரமும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் பிரகலாதனின் பதிலில் வெறி ஏற, “இப்போ கூட அவளுக்கு தான் பிரியோரிட்டில என மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் அவளை இப்போது உறுத்து நோக்கிய படி என்னை வேணாம்னு சொல்லி தான் பாரேன் அப்புறம் உனக்கும் இந்த குடும்பதுக்கும் நான் யார்ன்னு காட்டுறேன்” என வன்மமாக நினைத்துக் கொண்டவன் அவனது பாசத்திற்கு உரிய அன்பான அத்தையைக் கூட மறந்து இருந்தான்.

இந்துவுக்கோ பொறுமை போக, “வாயில பிட்டா இருக்கு? சொல்லேன் டி” என்க…

கண்களை மூடித் திறந்தவள் ஒரு பெரு மூச்சுடன் “எனக்கு சம்மதம் மாமா” எனப் பிரகலாதனைப் பார்த்து சொல்ல….

அவளின் சம்மதத்தால்  மகிழ்ச்சி தாள முடியாமல் லதாவும் இந்துவும் ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டனர்.

சற்று முன்னர் அவளின் பதிலை ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு பெருத்த ஏமாற்றமே! தன்னிடம் சம்மதமா? இல்லையா? என ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லையே…நான் என்ன சொல்ல வந்தேன் என்று கூட யாரும் பொருட் படுத்த வில்லை என்ற ஆதங்கம் அவனுக்கு வலுப்பெற ஆழினி மீதான கோபமே பன்மடங்காகப் பெருகியது.

அவன் அதே இடத்தில் நின்றுக் கொண்டு ஆழினியை வெறித்துக் கொண்டு நின்று இருக்க, இந்துவின் குரலில் தான் அவன் நடப்பு உலகிற்கு வந்தான்.

“அத்தை என்ன கேட்டீங்க” எனக் கேட்க….

மென் புன்னகையுடன் அவன் தலையை வருடியவாறு “என் பொண்ணை உனக்கு பிடிச்சு இருக்காபா? என்றவர் நிறுத்தி அவளை நல்லா பார்த்துபல?” என ஒரு சராசரி தாயின் பதை பதைப்புடன் வினவ….

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டவனுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை.

அவனின் செல்ல அத்தை அல்லவா! அவளை இவன் பழிவாங்க திருமணம் செய்ய நினைப்பது தெரிந்தால் தாங்கிக் கொள்வாறா? என தடுமாறி நின்றவன் பதிலுக்காக அவர் காத்திருக்க, அங்கு வந்த ”ஆழினியோ “என்னமா கேள்வி இது? உங்க செல்ல மருமகன் ஆச்சே என்னை நல்லா பார்த்துக்காமல் எங்க போகப் போறாரு?” என அவள் கேட்க….

அவள் சொன்ன தோரணையில் இந்துவுக்கு புன்னகை தோன்ற “ரெண்டு பேரும் சண்டை போடாமல் சந்தோஷமா இருக்கணும்” என்றவர் இருவரின் கன்னம் தொட்டு திருஷ்டி கழிக்க….

அவனும் ஒரு பெரு மூச்சுடன் “கண்டிப்பா நல்லாவே பார்துப்பேன் அத்தை” என்றான் ஒரு வித அழுத்தத்துடன்….

இப்படி சொன்னவன் கூட அறியவில்லை அவளிடம் மட்டுமல்ல முற்றிலுமாக இந்தக் குடும்பத்தின் அவனின் மீதான நம்பிக்கையை விரைவில் இழக்கப் போகின்றான் என….

அங்கு வந்த லதாவும் “காலைல வேற டிரஸ்ல போன! என ஆராய்ச்சியாக பார்த்தவர் என்ன டிரஸ் மா இது அதுவும் வெஸ்டர்ன் பிராக் மாத்தி இருக்க?” எனக் கேட்க….

அக் கேள்வியில் அவள் விழி விரித்து நின்று விட…

தெற்றிப் பற்கள் தெரிய சிரித்தவன் “ ஐஸ் கிரீம் சாப்பிட தெரியாமல் சாப்பிட்டு டிரஸ் ஐ வேஸ்ட் பண்ணிட்டா மாம் அதான் வேற ட்ரெஸ் வாங்கி கொடுத்தேன்” என்க…

அவனின் இந்த பொய்யில் அதிர்ந்து அவன் புறம் பார்த்தவளோ அவனை முறைக்க…. அவனோ, யாருமறியமல் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி கண் அடித்தான்.

இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்த இந்துவுக்கு இருவரின் விழி அசைவுகளை பார்த்து ஏதோ புரிய, “ரெண்டு பேரும் லஞ்ச் சாப்பிட வாங்க” என்று புன்னகையுடன் சொன்னவர் லதாவை இழுத்துக் கொண்டு விலகி சென்று விட்டார்.

இந்த அத்தியாயம் எப்படி இருந்துச்சுனு மறக்காமல் உங்க கருத்துகளையும் கமெண்ட் பண்ணிடுங்க டியர்ஸ் 🥰❤️

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 34

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 24”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!