தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 30

4.8
(25)

பேராசை – 30

இந்து மற்றும் லதாவிடம் சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்பினர்.

 

அவர்கள் நேராக சென்றது என்னவோ காஷ்யபனின் கெஸ்ட் ஹவுஸிற்கு தான்.

காரை விட்டு வெளியே இறங்கியவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

 

அவள் முன்பு வந்த போது இருந்த அவனின் கெஸ்ட் ஹவுஸை முற்றிலுமாக  மாற்றி அமைத்து இருந்தான்.

 

அவன் இயற்கை பிரியன் என்பதை அவள் அறிந்து இருந்தாலும் இப்போதே உணர்வது போலிருந்தது.

 

தன் பின்னே வருபவனை திரும்பிப் பார்த்தவள் “இந்த பூ எல்லாம் போன தடவை நான் வந்தப்போ இல்லையே இப்போ ஏதோ பிளான்ட்ஸ் எக்ஸிபிஷன் உள்ள வந்த போல இருக்கே” என்றாள் கேள்வியாக…..

 

“இப்போ தான் சீசன் … நீ வந்தப்போ இதெல்லாம் இருந்துச்சு பட்  ப்ளோ ஆகலை” என்றான் மென் புன்னகையுடன்….

 

 

“இப்போ புரியுது ஏன் அமேசான் ஃபாரஸ்ட் போகணும்னு சொல்றிங்கன்னு” என்று விட்டு அவள் வீட்டின் உள்ளே செல்ல….

 

அவளின் வார்த்தைகளில் அவன் நடை ஒரு கணம் தடைப்பட்டாலும் தலையைக் கோதிக் கொண்டே அவனும் உள்ளே நுழைந்தான்.

 

“என்ன சாப்பிடுற?” எனக் கேட்டுக் கொண்டே அலைபேசியை எடுக்க… “எனக்கு பசிக்கல” என்றவள் மாடியேறி செல்லப் போன அதே சமயம் அவர்களின் அழைப்பு மணி ஒலித்தது.

 

காலையில் இருந்து எதும் சாப்பிடாமல்  பசிக்கவில்லை என்று அவள் பொய் சொன்னதும் வந்த கோபத்தை இதழைக் கடித்து கட்டுப் படுத்திக் கொண்டவன் ஒரு பெரு மூச்சுடன் அவனே சென்று கதவைத் திறந்தான்.

 

வெளியில் நின்றவர்களை பார்த்து அவனுக்கு தான் விழிகள் பெரிதாக விரிய அப்படியே நின்று இருந்தான்.

 

யார் என்று அவன் பின்னாலேயே வந்து வெளியில் எட்டிப் பார்த்த ஆழினி “ஹே வருண் தேஜ் வாங்க வாங்க” என்று அவள் உள்ளே அழைக்க….

 

“உன் புருஷனை ஷாக் அஹ் குறைச்சிட்டு கொஞ்சம் வழி விட்டு நிற்க சொல்லேன் டி” என்று வருண் சொல்ல…

 

விழித்துக் கொண்டு நின்றவனின் கையை பிடித்து சற்று நகர்தியவள் “இப்போ உள்ள வா வருண்” என்றவள் தேஜாவின் கைகளை பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்து வந்தாள்.

 

“என்னடி எங்க ரெண்டு பேருக்கும் ஒரு கால் கூட பண்ற இல்லை அப்படியே முழு குடும்ப குத்து விளக்கா மாறிட்ட” என்று தேஜா சொல்ல….

 

“க்கும்… என்றவள் மாறிட்டாலும்” என சலித்துக் கொண்டவளுக்கு எப்படி அவர்களின் திருமணத்திற்கு வர முடியாது என சொல்வது என்றே தெரியவில்லை.

 

“உன் வீட்டுக்கு தான் போனோம் ஷேத்ரா கூட நீ இங்க வந்துட்டதா சொன்னாங்க” என்ற வருண் அவர்களின் திருமண பத்திரிகையை எடுக்க…

 

அப்போது சமையலறையில் இருந்து இருவருக்கும் காஃபி போட்டு எடுத்து வந்து இருந்தான் காஷ்யபன்.

 

அதிர்ந்த வருண் “என்னடி எல்லாம் நீ வேலை எல்லாம் ஒன்னும் பண்ண மாட்ட போல” என்று அவன் கேட்க…..

 

“ஏன் என்னை பத்தி உனக்கு தெரியாதா? என்றவள் உன் பொண்டாட்டி மட்டும் என்னவாம் அவளும் நானும் ஒரே கட்சியாக்கும்” என்று நொடித்துக் கொண்டாள்.

 

“மானத்தை வாங்குறாளே” என மனதுக்குள் நொந்த தேஜா “எனக்கு தெரியலனாலும் ஜஸ்ட் ஹெல்ப் பண்ணுவேன் டி” என்றாள்.

 

இவர்களின் பேச்சு சுவாரஸ்யமாக இருக்க அவனையே அறியாமல் புன்னகைத்த படி பார்த்துக் கொண்டு இருந்தான் காஷ்யபன்.

 

புதிதாக இருந்தது அவனுக்கு…

 

“ஷேத்ரா என்னடா பார்த்திட்டு இருக்க வா வந்து ஆழினி கூட நில்லு” என வருண் சொல்ல….

 

அவன் கொடுத்த காஃபி அப்படியே இருப்பதை பார்த்தவன் “ உங்க பிரண்ட் அஹ் விட நான் காஃபி நல்லா தான் போடுவேன் என்னை நம்பி குடிக்கலாம்” என்றான் தெற்றிப் பற்கள் தெரிய புன்னகைத்த படி….

 

அவனின் இந்த சகஜமான பேச்சு வருணுக்கே வியப்பு தான்.

 

அவனுடனான கோபத்தை மறந்த ஆழினி “காஷ்” என்றாள் சிணுங்களாக…

 

வருணோ, குரலை செருமிக் கொண்டே “தப்பான நேரத்துல வந்திட்டமோ” என்க….

 

“இல்லையே”…. என்ற காஷ்யபனின் விழிகள் இன்விட்டேஷன் கார்டில் பதிய…

காஃபியை குடித்து விட்டு எழுந்த வருண் இன்விடேஷனை நீட்டி “ரெண்டு பேரும் மேரேஜ்க்கு வன் வீக் முன்னாடியே வந்திடனும் ஓகேவா” என்றபடியே தேஜாவுடன் இணைந்து கார்ட்டினை நீட்ட…

 

இவ்வளவு பேசுபவனிடம் “நான் வர்ல” என்று சட்டென  கூறவும் முடியவில்லை காஷ்யபனுக்கும்….

 

முன் போல இருந்து இருந்தால் கூறி இருப்பானோ என்னவோ அவனையே அறியாமல் அவனிடம் மாற்றம் ஏற்பட்டு இருந்து.

 

“ சரி வரேன்னு சொல்றானா காஷ்மோரா எனத் திட்டிக் கொண்டவள் பாரேன்  கடவுளே இவன் மனசை மாத்தி ஹனிமூன் டிரிப் ஐ கேன்சல் பண்ணேன் என மனதுக்குள் புலம்பிக் கொண்டே காஷ்யபனுடன் சேர்ந்து நின்று திருமண பத்திரிகையை வாங்கி இருந்தனர்.

 

அதனை வாங்கி விரித்து பார்த்தவன் “நைஸ் டிசைன்” என்றவன் ஆழினியிடம் கார்டை நீட்ட அவளும் ஆவலாக வாங்கிப் பார்த்தவள் “கார்ட் செலக்சன் யார் உண்மையாவே செம்மையா இருக்கு” என்க….

 

“எனக்கும் தேஜ் செலக்சன்னு சொல்ல ஆசை தான் பட் முடியாதே” என்று வருண் இதழைப் பிதுக்க….

 

புரியாமல் விழித்த காஷ்யபன் பின் புரிந்து சிரிக்க ஆரம்பித்து விட

 

“வருண்” என்று சிணுங்கிய தேஜா வருணின் கையைக் கிள்ள “ஆஆ வலிக்குது டி” என்று வருண் தள்ளி நின்றுக் கொண்டான்.

 

“மாமா தான் எல்லாமே” என்ற தேஜாவையே காதலாகப் பார்த்து இருந்தான் வருண்.

 

“வாவ் செம்ம அங்கள் கிட்டயே நானும் என் மேரேஜ் கார்டை செலக்ட் பண்ண சொல்லி இருக்கலாம்னு இப்போ தோணுது டி”

 

“அதுக்கு என்ன இன்னொரு மேரேஜ் பண்ணிக்கோ டிசைன் பண்ணிடலாம்” என்று வருண் சொன்னது தான் தாமதம் “ஸ்டாப் த நான்சென்ஸ் வருண்” என அறை அதிர கத்தி இருந்தான் காஷ்யபன்.

 

கண்கள்  சிவக்க முகம் இறுகிப் போய் ருத்ர மூர்த்தியாக நின்று இருந்தான்.

 

மூவருமே அவனின் தடித்த குரலில் ஆடித் தான் போயினர்.

“நான் ஜஸ்ட் ஜோக் தான் பண்ணேன் பட் ரியலி ரியலி சாரி ஷேத்ரா”

அழினியின் கையை இறுக பற்றிய தேஜா இன்னுமே பயந்து போய் நின்று இருக்க….

 

அனைவரையும் பார்த்து விட்டு “இட்ஸ் ஓகே பட் இப்படி இனிமேல் பேச வேண்டாம்” என்றான் முயன்று தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு….

 

“ஹூம்…. ஓகே என்ற வருண் ரெண்டு பேரும் மேரேஜ்க்கு வந்துருங்க நாங்க கிளம்புறோம் என்றவன் தேஜாவுடன் கிளம்பப் போக…

 

சட்டென உணர்வுக்கு வந்த ஆழினி “சாப்பிட்டு போங்க” என்றாள் வந்த அழுகையை அடக்கிக் கொண்டே…

 

அவளின் குரலில் வேறுபாட்டை உணர்ந்த காஷ்யபனுக்கே ஏதோ போல் இருக்க அவளை இடையோடு பிடித்து தன்னுடன் நெருக்கிக் கொண்டவன் “சாரி டி வருண் சும்மா பேசி இருந்தாலும் ஐ கான்ட் அக்சப்ட் இட் அனிமோர் யூ ஆர் மைன் ஒன்லி” என்றவனின் ஆழ்ந்த குரலில் கட்டுண்டு அவனையே பார்த்து இருந்தாள்.

 

(அவனே அவள் இன்றி இறந்து விடலாமா? என்று அவனை சிந்திக்க வைக்க அவளின் மறு திருமணமே காரணமாக அமையப் போவதை அவன் அறியவில்லை.

 

இருவரின் மோன நிலையையும் பார்த்த வருணும் தேஜாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டே “எங்களுக்கு ஃப்ரீ ஷோ காட்டினது போதும் இதுக்கு மேல நாங்க இங்க இருந்த அவ்ளோ தான் நாங்க போறோம்” என்க…

 

அப்போது தான் இருவருமே சுற்றம் உணர்ந்து பிரிந்தனர்.

 

நெற்றியை நீவிக் கொண்டே “வருண் சாப்பிட்டு போகலாம் நான் புட் ஆர்டர் பண்ணிட்டேன்” என்றான் காஷ்யபன்.

 

“இன்னொரு நாளைக்கு சப்பிடுறோம் என புன்னகையோடு சொன்ன வருண் தொடர்ந்து இன்னும் காலேஜ் பிரன்ட்ஸ்க்கு கார்ட் கொடுக்கணும்”

“ஹூம்”… என்ற காஷ்யபனுக்கு வருணிடம் இப்போது பிரேசில் செல்லப் போவதை பற்றி சொல்லவே தோணவில்லை.

 

ஆழினியும் அதைப் பற்றி சுத்தமாக மறந்தே இருந்தாள்.

 

அவர்களும் கிளம்பி விட இன்முகமாக அனுப்பி வைத்தவள் கதவை மூடி விட்டு திரும்பி காஷ்யபனை முறைத்து விட்டு செல்ல….

 

“ஹே நில்லு டி” என்றவன் அவள் கையை பிடித்து இழுக்க…. அவன் இழுத்த வேகத்தில் அவன் மார்பில் வந்து அவள் மோத இருவரும் சமநிலை இன்றி சோஃபாவில் சரிந்தனர்.

 

அவன் மீது அவள் விழுந்து இருக்க…. அவளின் முகமோ அவனின் முகத்தின் அருகே நெருங்கி இருக்க, அவனை பார்த்த கணம் அவன் வருணைத் திட்டியது நினைவுக்கு வர இதழை சுழித்து விட்டு அவனில் இருந்து எழப் போனவளை எழ விடாமல் இறுக தன்னோடு அணைத்துக் கொண்டான்.

 

“விடுங்க” என்றவள் திமிறி எழப் போக…

 

அவளின் கோபம் எதற்கென தெரிந்தவன் “அதான் சாரி சொல்லிட்டேன் தானே விடேன் டி சும்மா முறைசிட்டு இருக்க” என்று அவன் சலித்துக் கொள்ள….

 

“ஒரு ஜோக் அஹ் கூடவா உங்களால புரிஞ்சிக்க முடியாது?” என ஆதங்கமாக அவள் கேட்க…

மீண்டும் அவன் உடல் இறுக ஆரம்பிக்க ஒரு பெரு மூச்சுடன் விழிகளை மூடித் திறந்தவன் “ஹியர் லிஸின் ஆழி … என்னோடது என்னோடதாவே தான் இருக்கணும் அதை யாருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்னு உனக்கு என்னை நல்லாவே தெரியும் என்றவன் தொடர்ந்து அது ஒரு பொருளா இருந்தாலும் கூட அதை யூஸ் பண்றதும் வீசுறதும் என் இஷ்டம் இப்படி இருக்க என்கிட்ட உன்னை அதுவும் என் ஒய்ஃப்பை எவனுக்கும் விட்டு கொடுத்துட்டு இருக்க நான் ஒன்னும்” என சொல்ல வந்தவன் மீதி வார்த்தையை சொல்லாமல் விழுங்கிக் கொண்டான்.

 

அவனை விழி விரித்துப் பார்த்தவள் “நான் தான் ஜோக்ன்னு சொல்றேன்ல”

 

“அதே தான் ஜோக் கு கூட எனக்கு இப்படி பேசுறது கொஞ்சமும் பிடிக்காது” என்றவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

 

அவளும் பதிலுக்கு ஏதோ சொல்ல வர அவளின் வார்த்தைகளை தன் இதழ்களுக்குள் விழுங்கிக் கொண்டான்.

 

இதழ் முத்தம் பதித்து விலகியவன் அவளைப் பார்க்க இன்னுமே அவளின் விழிகளோ மூடியே இருந்தன.

 

மூடிய இரு விழிகளுக்கும் முத்தம் பதித்தவன் “இப்படியே நீ என்மேல இருக்கனும்னு எனக்கும் ஆசை தான் பட் எனக்கு பசிக்குது டி புட் ஆர்டர் பண்ணேன் வர கொஞ்சம் லேட் ஆகும் அதுக்குள்ள ஏதாச்சும் மேக் பண்ணலாம் கொஞ்சம் என்மேல இருந்து எழுந்திரு” என்று அவன் அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல…..

 

அவனின் ஆளுகையில் கட்டுண்டு இருந்தவள் “ஏதே ஏதாச்சும் மேக் பண்ணவா? அதுவும் கிச்சனுக்கு நானா? என்றவள் நான் உங்களை எப்பவோ மன்னிச்சிட்டேன் ஆளை விடுங்க” என்று வேறொரு சோஃபாவில் அமர்ந்து தொலைக் காட்சியை உயிர்ப்பித்தாள்.

 

“இது சரி பட்டு வராது” என சோஃபாவில் இருந்து எழுந்தவன் அவளை நெருங்கி அப்படியே சோஃபாவில் இருந்து ஏந்திக் கொண்டு சமயலறையை நோக்கி நடந்தான்.

 

“ஐயோ! எனக்கு ஒன்னும் தெரியாது என்னை விடுங்க”

“கத்தாத டி செம்ம பசில இருக்கேன் மறுபடி உன் லிப்ஸ் அஹ் கடிச்சு வச்சிடுவேன் ஓகேவா” என அவன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க….

 

அவளின் பேச்சு தானாகவே அடங்கிப் போனது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 30”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!