தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 31

5
(15)

பேராசை – 31

 

அவளை  சமையல் கட்டில் அமர்த்தியவன் அவளை இறங்க விடாது அவளின் இரு பக்கமும்  கைகளை ஊன்றி அவளின் இதழ்களை மோகமாகப் பார்த்துக் கொண்டே அவளின் விழிகளைப் பார்த்தவன் “உனக்கு மில்க் ஷேக் செய்ய தெரியும்னு எனக்கு நல்லாவே தெரியும் சோ பிளீஸ்” என்றவன் விழிகளோ சமையல் கட்டின் மேலே சுவரில் இருந்த செல்ஃபில் பதிய…..

 

அதிர்ந்து விழி விரித்தவள் அவன் பார்வை சென்ற திசையைப் பார்த்து விட்டு அவனைப் பார்த்தவள் “ அது எப்படி உங்களுக்கு தெரியும் என்றவள் தொடர்ந்து இதெல்லாம் எப்போ வாங்கி வச்சீங்க?” என்று அவள் கேட்க….

 

“இங்க உன்கூட ஸ்டே பண்ணணும்ன்னு எப்போ முடிவு பண்ணேனோ அப்போ தான் என்றவன் தொடர்ந்து ஒற்றைக் கையால் நெற்றியை நீவிக் கொண்டே, “யூநிவர்சிடி ஹாஸ்டல்ல நீ மில்க் ஷேக் பண்ண வீடியோ கிளிப்பை உன் போன்ல பார்த்தேன்” என்று தோள்களை குலுக்கிக் கொண்டான்.

 

“அப்போ என் போனை நோண்டி இருக்கீங்க ரைட்?” என்றாள் கோபமாக…

 

“உன் போன் வொர்க் ஆகலைன்னு என்கிட்ட கொடுத்தது நினைவு இல்ல போல எனப் புன்னகைத்துக் கொண்டவன் சீக்கிரம் பசிக்குது டி மில்க் ஷேக் பண்ணி தாடி” என்க…

 

நாக்கை லேசாக கடித்து விடுவித்தவள் “உங்களுக்கு தான் நிறைய டிஷ் பண்ண தெரியுமே நீங்களே ஏதாச்சும் ட்ரை பண்ணலாமே”

 

“இது வேலைக்கு ஆகாது” என்றவன் அவளை நெருங்க…

 

நெருங்கியவனின் மார்பில் கை வைத்துத் தடுத்தவள் “நானே உங்களுக்கு ரெடி பண்ணி தரேன் பட் நீங்க இங்க இருக்க கூடாது டோர் லாக் பண்ணிட்டு ஹால்ல வெயிட் பண்ணுங்க… செஞ்சி எடுத்திட்டு வரேன்” என்றாள்.

 

தன் மார்பில் இருக்கும் அவளின் கையை விலக்கி விட்டவன் “நான் இல்லாமல் எப்படி என் முன்னாடியே பண்ணு “

 

“ஐயோ என்னால முடியாது யாரும் பார்த்தால் என்னால போகஸ் பண்ணி செய்ய முடியாது”

 

“நான் இங்க தான் இருப்பேன் உன்னை நம்ப முடியாது என்மேல இருக்க பழைய கோபத்துல ஏதாச்சும் கலந்துட்டனா என்ன பண்றது? சோ ஐ வில் ஸ்டே ஹியர்” என்றான்.

 

அவனை இப்போது நன்றாக முறைத்தவள் “நான் அவ்ளோ க்ருவல் எல்லாம் இல்லை சோ நீங்க இங்கேயே நிற்கலாம்” என்றவள் மில்க் ஷேக் செய்ய தேவையான பொருட்களை எடுத்து வரிசைப்படுத்தினாள்.

 

அவளையே பார்த்துக் கொண்டு சமையல் கட்டில் சாய்ந்து நின்று இருந்தவனை பார்த்து “இப்படியே பார்த்திட்டு இருந்தால் எப்படி? எனக்கு ஐஸ் கிரீம் வேணும் போய் எடுத்திட்டு வாங்க” என்றாள்.

 

“ஓவரா பண்ணாத டி கொஞ்சமாச்சும் சிரிச்சிட்டு பண்ணு அப்போ தான் ரிசல்ட் நல்லா வரும் ” என்றவன் சென்று ஐஸ் கிரீமை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.

 

ஐஸ் கிரீமை கண்டவளுக்கு அவன் மேல் இருந்த கோபம் எங்கே போனது என்றே தெரியவில்லை.

“எனக்கு பிடிச்ச பிலேவர் எனக் கண்கள் மின்னச் சொன்னவள் சும்மா ஏன் மில்க் ஷேக் எல்லாம் ரெண்டு பேரும் ஐஸ் கிரீமை சாப்பிடுவோமே” என்றாள்.

 

“அதெல்லாம் முடியாது எனக்கு மில்க் ஷேக் வேணும்” என்க…

 

இதழை சுழித்து விட்டு திரும்பியவள்   பிலண்டரில் மில்க் ஷேக் செய்யத் தேவையானவை அனைத்தையும் அதில் இட்டு ஸ்விட்ச் ஐ ஒன் செய்தது மட்டும் தான் அடுத்த கணமே அவ்வளவும் அவள் மேனி முழுவதும் தான் இருந்தது.

 

அவளையே பார்த்து இருந்தவன் அதிர்ந்து பின்னர் சிரிக்க ஆரம்பித்து விட…. “காஷ்” என சிணுங்கினாள்.

 

“உன்னால இதையும் ஒழுங்கா பண்ண முடியாதா டி” என சிரித்துக் கொண்டே கேட்க….

 

“வாட்டர் கூடிறிச்சு என்றவள் அதான் நான் எதுவும் பண்றப்போ யாரும் இருக்க கூடாதுன்னு சொன்னேன்” என்றாள் முகத்தில் இருந்து வழிந்த ஐஸ் கிரீமை இதழ்களால் சுவைத்த படியே….

 

“நான் இல்லனாலும்  நீ சொதப்பி வச்சி தான் இருப்ப” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்….

 

அதற்கு அவள் பதில் சொல்ல… அப்படியே இருவருக்கும் வாக்குவாதம் நீண்டு கொண்டே போக, ஒரு கட்டத்தில் அவனை நெருங்கி அவனை அணைத்து அவன் முகத்தில் அவள் முகத்தில் இருக்கும் ஐஸ் கிரீமை பிரட்டி விட…. அவனுக்கு தான் மூச்சு முட்டிப் போனது.

 

சும்மாவே அவள் மீது மோகம் தாறுமாறாக இருக்கும்.

 

இப்போது சொல்லவும் வேண்டுமா?

 

அவளின் முகத்தை தாங்கி “நான் செம்ம  பசில இருக்கேன் சோ…”  என்றவன் விழிகள் அவளின் ஐஸ் கிரீம் படிந்த இதழ்களில் படிய, அதிர்ந்து விழி விரித்து அவன் விழிகளை பார்த்தவளின் இதழ்களில் இருந்த ஐஸ் கிரீமை சுவைக்கத் தொடங்கினான்.

 

அவளோ, அவனின் ஆழ்ந்த இதழணைப்பில் கிறங்கி விழிகளை மூடிக் கொண்டவள்  அவனிற்கு பதில் முத்தம் கொடுக்க… அங்கு ஐஸ் கிரீமை முத்தம் என்ற பெயரில் இருவர் முகத்தில் இருக்கும் ஐஸ் கிரீமை மாறி மாறி சுவைக்க… ஒரு கட்டத்தில் “ஐயோ பிளீஸ் போதும்” என்றாள் வெட்கத்தோடு….

 

“ எனக்கு பசிக்குது” என்றவன் அவள் கழுத்தில் இருந்த ஐஸ் கிரீமை சுவைக்க…. இப்போது அவளுக்கே ஐயோடா என்று போய் விட்டது.

 

“பிளீஸ் காஷ்” என்றவள் அவனை விலக்க, அவனின் பார்வையோ  அவளின் டி ஷர்ட்டில் படிந்தது.

 

எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் “நான் வேற மில்க் ஷேக் ட்ரை பண்ணி தரேன்” என்றவள் விலக முட்பட…. “நாட் பேட் இதுவே ஹை கிளாஸ் ஆஹ் தான் இருக்கு” என்றவன் அவன் நினைத்ததை செய்து முடித்தே அவளை விடுவித்தான்.

 

அவனை ஏறிட்டுப் பார்க்க கூட அவளால் முடியவில்லை.

 

அவளும் அல்லவா அவனுக்கு ஈடாக முத்தமிட்டது.

 

அவனை பார்க்காமல்  சமையலறையை விட்டு ஹாலுக்குள் ஓடி விட… “ஆழி” எனக் கூப்பிட்டுக் கொண்டு அவன் வர, அப்போது எனப் பார்த்து அழைப்பு மணி ஒலித்தது.

 

 அதிர்ந்து தன்னைக் குனிந்துப் பார்த்தவள் இப்போது பின்னால் வந்தவனைப் பார்க்க “ஃப்ரெஷ் ஆகு புட் தான் வந்து இருக்கும் நான் பார்க்குறேன்” என்றவன் கதவினை திறக்கச் சென்றான்.

 

போகும் அவனைப் பார்த்து வந்த சிரிப்பை இதழ்களுக்குள் மறைத்தவள் விட்டால் போதுமென அறைக்கு ஓடியே விட்டாள்.

கதவைத் திறந்தவன் பார்சலை வாங்கிக் கொள்ளும் போது புட் டெலிவரி செய்ய வந்தவன் அவனை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு செல்ல, இங்கு காஷ்யபனுக்கோ சுர்ரென்று கோபம் ஏறியது “என்னடா பார்வை” என்று சீற…  வந்தவனோ “சரியான பைத்தியமா இருப்பானோ”என மனதில் நினைத்துக் கொண்டவன் விறு விறுவென சென்று விட்டான்.

 

உள்ளே வந்தவன் பார்சலை டேபிளில் வைத்து விட்டு  அலைபேசியை எடுத்து கேமராவை ஒன் செய்து அதில் தன் முகத்தைப் பார்த்தவன் “ஐஸ் கிரீம் என் முகத்துல இல்லையே” என்றவனின் விழிகள் அதிர்ந்து விரிந்தன.

 

“ஷிட் என சொல்லிக் கொண்டவன் ஓ மை கோட் அவன் என்ன நினைச்சு இருப்பான்? என்றவன் தலையைக் கோதிக் கொண்டே ராட்சசி அவ அதுக்கு தான் என்னை அப்படிப் பார்த்தாளா?”  என்றவன் இதழ்கள் தானாக புன்னகைத்துக் கொண்டன.

 

அவர்களின் நாட்கள் உடலும் கூடலுமாக நகர ஆரம்பித்தன.

 

இதற்கிடையில் வீட்டினரின் சம்மதமும் கிடைத்து விட அவர்கள் பிரேசில் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது.

 

விமான நிலையத்தில் அவர்களை அனுப்ப முழுக் குடும்பமே சென்று வந்து இருந்தது.

 

இருவரின் சந்தோஷம் அல்லவா அவர்களுக்குத் தேவை.

 

“ஆழினி  அங்க போய் சேட்டை பண்ணாம இரு” என இந்து ஆரம்பித்து விட..

“விடேன் டி அவ சின்ன பிள்ளை இல்லை அவளுக்கு எங்க எப்படி நடந்துக்கணும்னு தெரியும்” என்று ஜீவன் சொல்ல….

 

பிரகலாதனோ நிறைவாகப் புன்னகைத்துக் கொண்டார்.

 

“காஷ்யபன், அவளை கவனமா பார்த்துக்கோ அவள் கூடவே இரு என்றவர் தொடர்ந்து ஆழினி இல்லாமல் எங்களுக்கு ரொம்ப நாள் இருக்க முடியாது சீக்கிரமா  அவளை கூட்டிட்டு வந்துடு” என்று லதா சொல்ல….

 

அவனின் மனதிலோ “இப்போ கூட அவள் தான் வேணுமா? அப்போ நான் வேணாமா? என்று நினைத்துக் கொண்டவன் வெளியில் ஓகே மாம்” என்றான்.

 

தன் அருகில் சோகமே உருவாக நின்றுக் கொண்டு இருந்தவளின் காதின் அருகே குனிந்து “என்ன டி கொஞ்சமாச்சும் சிரி நல்லா தானே இருந்த” என அவன் கேட்க….

 

“வருண் தேஜ் கிட்ட நான் சொல்லலையே ஒரு மாதிரி இருக்கு” என்க…..

 

“அப்போ நீ வந்த பிறகு கல்யாணம் பண்ணிகலாம்ன்னு நிறுத்தவும் தயங்க மாட்டான் டி அவன்… அவங்க சந்தோஷமா இருக்கட்டும் நாம ரிடர்ன் இங்க வந்த பிறகு அவங்களை பார்த்துக்கலாம்”

 

“அதுவும் சரி தான்” என்றவள் எல்லோரையும் பார்த்து வருணை சமாளிச்சிடுங்க என்று சொல்லி விட்டு பை எல்லாருக்கும் நான் உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்று சொல்லிக் கொண்டே பறக்கும் முத்தம் ஒன்றைக் கொடுத்து விட்டு கையசைத்து  காஷ்யபனுடன் புறப்பட்டாள்.

 

“ஆழினி லேண்ட் ஆகினதும் மறக்காமல் கால் பண்ணுடி” என்று இந்து கத்த…

 

“ஓகே மா” என்றவள் காஷ்யபனின் கையை இறுகப் பற்றிக் கொண்டு செல்லும் காட்சியை நிறைவாகப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

 

 இது தான் ஆழினியை தாம் பார்க்கப் போகும் கடைசி தருணம் என பாவம், யாரும் அறியவில்லை.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!