தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 34

5
(20)

பேராசை – 34

 

ஆம், அங்கு நதி ஓடிக்கொண்டு இருக்க, கீழே விழுந்த வேகத்தில் நதியில் விழுந்து இருந்தாள் ஆழினி.

அவன் விழிகள் வெறித்தது வேறு எதையும் அல்ல, நதியில் ஆழினி ஒரு பக்கம் வீழ்ந்து இருக்க அவளுக்கு சற்றே தள்ளி அவன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே பிரானா  மீன்கள் தன் கூர் போன்ற பற்களால் உயிருள்ள ஒரு மிருகத்தின் உடலை  துளைத்து மின்னல் வேகத்தில் உண்ண, அணுவணுவாக உயிருடன் கதறலோடு இறந்த அந்த விலங்கின் எலும்புகள் வெளியில் தெரிவதை பார்த்தவனுக்கு ஒரு கணம் மூளையே மரத்து விட்ட உணர்வு தான்

அவனால் என்ன செய்து விட முடியும்?

தன் இதயத்தின் ஓசை பல மடங்காக வெளியில் கேட்பதை உணர்ந்தவன் எப்படி அவளிடம் நெருங்கினான் என்று கேட்டால் அவனுக்கே தெரியாது.

அவளின் உடலோ பாதி கரையிலும்   கால் பகுதி நீரிலும் அமிழ்ந்து இருந்தன.

 மயக்க நிலையில் இருந்தவளை அப்படியே அவனை நோக்கி இழுத்து எடுத்து இருந்தான்.

அந்தோ பரிதாபம் அவளின் கால்கள் நீரில் இருந்தமையால் அவளின் ஒற்றைக் காலை அந்த கூட்டத்தில் இருந்து வந்த இரு மீன்கள் தன் கூர் பற்களால் கடித்து விட, “அம்மா…” என்ற அலறலோடு கதறினாள்.

 தன் முன்னால், பார்த்துக் கொண்டு இருக்கும் போதே ஒரு விலங்கின் உயிர் பிரிய அதன் எலும்புக் கூடானது நதியில் மிதந்து செல்வதைப் பார்த்தவனுக்கோ இதயத்தில் அப்படி ஒரு வலி ஊடுருவியது.

ஒருவேளை அவன் வர தாமதமாகி இருந்தால் ஆழினிக்கும் அதே நிலமை அல்லவா!  அப்படி நினைக்கும் போதே அவனின் உடல் ஒரு கணம் இறுகி விறைக்க, அவனை அறியாமலே அவனின் கைகளோ அவளை இறுக அணைத்து இருந்தன.

அவளை அவன் வலிக்க வைக்க நினைத்தான் ஆனால் கொல்லும் அளவுக்கு கிஞ்சித்தும் நினைக்கவில்லையே!

உயிர் போகும் வழியில் கதறியவளின் கதறலில் உணர்வுக்கு வந்தவன் அவளின் உச்சு முதல் பாதம் வரை விழிகளால் ஆராய்ந்தவன் அவளின் பாதத்தில் சதை கிழிந்து இரத்தம் வழிவதைப் பார்த்துப் பதறிப் போனவன்  “ஈஸி பேபி  ஒன்னும் இல்ல சின்ன காயம் தான்” என்றவனோ  இதழ்கள் நடுங்க அழுதுக் கொண்டு இருந்தவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டுச் சென்றவன் அவளை ஒரு கல்லில் அமர வைத்து விட்டு வேகமாக தனது தோற்பையை கழட்டி உள்ளே இருந்து காயங்களுக்கு போடும் மருந்தையும்  எடுத்தவன் அவள் கண்களை மூடிக் கொண்டு வலியில் அழுவதை கண்டவன் “கண்ணைத் திறந்தா கன்பார்ம் போட விட மாட்டா” என மனதில் நினைத்தவன் வேகமாக அவளுக்கு முதலுதவியை செய்ய ஆரம்பித்தான்.

வலியில் கதறியவள் காலை தன்னை நோக்கி இழுத்துக் கொள்ள,  “ப்ச்… செப்டிக் ஆகிடும் ஆழி  கோப்ரேட் பிளீஸ்”

 “வலிக்குது பிளீஸ் வேண்டாம் போதும்” என குரல் தளுதளுக்க கூறினாள்.  

“காயம் ஆரலைனா உன்னால நடக்க முடியாது டி சொல்றதை கேளு” என்று சற்று அழுத்தமாகவே சொன்னான்.

இதழை தன் பற்களால் அழுந்த கடித்துக் கொண்டே அவன் புறம் தன் பாதத்தை காட்ட…. அவனோ மருந்தினை இட்டு கட்டிட ஆரம்பித்து இருந்தான்.

அவளுக்கோ வலியில் உயிர் போய் விட்டது.

“சரி ஆகிடும்… உன்னை யார் ஓடி வர சொன்னது?  நான் அவ்ளோ தூரம் போற வரையும் என்ன பண்ணிட்டு இருந்த?” என அவன் கேட்க….

“இப்போ இது அவசியமா?” என்ற பார்வை அவள் அவனைப் பார்த்து வைக்க….

இடையில் கையை வைத்துக் கொண்டே ஒரு நீண்ட  பெரு மூச்சுடன்  “வா போகலாம்” என்றவன் அவளை ஏந்த போகும் சமயம் “அவளோ நான் நடக்க ட்ரை பண்றேன்” என்றாளே பார்க்கலாம்.

எங்கு இருந்து தான் அவனுக்கு அவ்வளவு கோபம் வந்ததோ “ஷட் அப் ஆழி காயத்தோட எப்படி ஒரு கால்ல நடக்க போறியா? இடியட் மாதிரி பிஹேவ் பண்ணாத” என்றவன் அவளின் தோற்பையை தான் தோற்பையுடன் சேர்த்து இணைத்தவன் அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.

சாதாரணமாக ஜிம்மில் வொர்க் அவுட் செய்வதால் என்னவோ அவளையும் இலகுவாக தூக்கி இருந்தான்.

இனி முதல் நடந்து வந்த இடத்திற்கு செல்வது என்பது இயலாத காரியம் என்று உணர்ந்தவன் அவர்கள் நின்ற இடத்தில் இருந்து முன்னோக்கி கால் போன போக்கில் வேக எட்டுக்களுடன் நடக்க ஆரம்பித்து இருக்க, அவன் இருந்த பதற்றத்தில் அவள் கையில் தான் கொடுத்த மேப் எங்கே? என்று கூட கேட்க மறந்து இருந்தான்.

“ஏன் மார்னிங்ல இருந்து ரூட் ஆஹ் பிஹேவ் பண்றீங்க?” என்று தளுதளுத்த குரலில் அவள் கேட்க…

“நான் எப்பவும் போல தான் இருக்கேன் நீ தேவையில்லாமல் ஓடி வந்து தான் இப்போ போக வேண்டிய வழி மிஸ் ஆகிறிச்சு” என்றான்.

“உங்களுக்கு அப்போ அதான் கவலை எனக்கு இப்படி ஆகுனதுல கவலை இல்லை ரைட்?”

அவனுக்கு தான் தெரியுமே அவளுக்கு எதுவும் ஆகி விடுமோ என்று பதறியது அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனோ “சம்பந்தமே இல்லாமல் பேச வேணாம் ஆழி அடுத்து நாம சேஃப் ஆன பிளேஸ் அஹ் கண்டு பிடிக்கணும் சோ கொஞ்சம் பேசாமல் இரு”  என்றான் சலிப்பாக…

“இதுக்கு நான் செத்து இருக்கலாம்”என்று சொல்ல…

முகம் இறுக நடையை நிறுத்தி அவளை வெறித்தவனை பார்த்து அவளுக்கே ஏதோ போல இருக்க “சாரி இப்படி பேச மாட்டேன்” என்று விட்டு அமைதியாகி விட எதுவும் பேசாமல் இறுகிய முகத்துடன் நடையை ஆரம்பித்தான்.

வெகு தூரம் அவளைத் தூக்கிக் கொண்டு வந்ததால் அவனுக்கும் சற்று நேரம் இளைப்பாற நேரம் தேவைப் பட, அவன் வந்து சேர்ந்த இடத்தை சுற்றிலும் ஆராய்ச்சியாகப்  பார்த்தவன் “ இங்கேயே சாப்பிடலாம்” என சொன்னவன் நிலத்தில் கிடந்த சருகுகளை கால்களால் அகற்றி விட்டு அவளை மெதுவா கீழே அமர வைத்தான்.

அவள் அவனையே இமை கொட்டாமல் பார்த்து இருக்க, அவனோ தன் தோற்பையை கழற்றி  விட்டு கழுத்தில் கையை வைத்து நெட்டி முறித்தவன் இதழைக் குவித்து ஊதிக் கொண்டே கொண்டு வந்த உணவை எடுத்து பிரிக்க ஆரம்பித்தான்.

தனக்காக இவ்வளவு செய்பவனிடம் சற்று முன் தான் ஏன் அவ்வளவு கோபமாக பேசினோம் என்று அவளுக்கே தன்னை நினைத்து கோபமாக வந்தது.

விழிகளை மூடித் திறந்தவள் “காஷ்” என்று அழைத்து இருந்தாள்.

 அவள் கூற வருவதை என்னவென கேட்காமலே “நானே ஊட்டி விடுறேன்” என்றான்.

“ப்ச்… அது இல்லை கொஞ்சம் முதல் நான் கோபமா பேசினேன்ல  அதுக்கு சாரி” என்றாள்.

“இட்ஸ் ஓகே” என்றவன் அவளுக்கு உணவை ஊட்டி விட ஆரம்பித்து இருந்தான்.

அவளின் விழிகளிளோ தானாக கண்ணீர் வழிந்தது.

“ப்ச்…என்னடி இப்போ?” 

“என்னை ஏன் இவ்ளோ லவ் பண்றீங்க?” என்று அவள் கேட்க….

“லவ் இருந்தால் தான் இதெல்லாம் பண்ணனுமா என்ன?” என்று அவன் கேட்க…

“என்னவோ தெரியலை என்று தன் கட்டிடப்பட்ட பாதத்தைப் பார்த்தவள் நீங்க இப்படி கெயர் பண்ணுகிறதுல எனக்கு இந்த வலி எல்லாம் பெருசா தெரியலை காஷ்” என்றாள் அவனைக் காதலாகப் பார்த்துக் கொண்டே….

உணவை பிசைந்துக் கொண்டு இருந்தவன் கையோ ஒரு கணம் நின்று பின் பிசைய ஆரம்பித்து இருந்தது.

இருவரும் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருந்தார்கள்.

இருவரிடமும் மௌனம் மட்டுமே….

அவனுக்கோ மனம் சற்றே தடுமாற ஆரம்பித்து இருந்தது.

“லவ் பண்றோமா?” என்று வேறு தனக்குள் கேட்டுக் கொண்டவனுக்கு மற்றைய மனமோ அப்போ நீ கஷ்டபட்டு சேர்த்த ஒவ்வொரு வெற்றிக்கும் கிடைச்ச அவாட்ஸ் எல்லாம் இல்லாமல் பண்ணிட்டாளே என்ன பண்ண போற? என்று கேள்வி கேட்ட அவன் மனதோ சரி அதை விடு உன் அப்பாவோட பிசினெஸ் அஹ் அவளுக்குத் தாரை வார்த்து கொடுக்க போறியா” என்றும் கேட்க…

அவன் தான் இரு மனதிற்கு இடையிலும் குழம்ப ஆரம்பித்து இருந்தான்.

“நோ வே… என் முடிவுல  நான் தெளிவா தான் இருக்கேன் அண்ட் நான் அவளை லவ் பண்ணல ஜஸ்ட் ஹெல்ப் பண்றேன் தட்ஸ் ஆல்” என தனக்குள் சொல்லிக் கொண்டவன் ஒரு பெரு மூச்சுடன் எழுந்து கொண்டான்.

திடீரென எழுந்தவனை பார்த்து “என்னாச்சு? என்று அவள் கேட்க…

“நதிங்… ஆழி இனி இங்க இருந்து ரொம்ப தூரம் போனால் நான் திரும்பி போற வழியை மறந்துடுவேன் சோ இங்கேயே ஸ்டே பண்ணிக்கலாம் இன்னும் உள்ள போனால் டேஞ்சர் தான்” என்று சொன்னவன் நன்றாக உயர்ந்து வளர்ந்து இருந்த மரங்களை பார்க்க ஆரம்பித்தவன் ஞாபகம் வந்தவனாய் ஹேய் மேப் எங்க டி?” என்று கேட்டு விட…

அவளுக்கோ இதயம் படபடக்க ஆரம்பித்து விட்டது.

காலையில் இருந்தே மேப் கவனம்… கவனம் என்று பாடாத குறையாக சொல்லி விட்டான் அல்லவா! அவளுக்கோ முகத்தில் இருந்து வியர்த்து வழிய ஆரம்பித்தது.

அவனின் கூர்மையான பார்வையில் தலையைக் குனிந்து கொண்டவள் “அது… மேப்” என்று  திக்கித் திணறிக் கொண்டு இருக்க, “சோ தொலைசிட்ட ரைட்?” என்ற  மிகுதி வார்த்தைகள் அவனிடம் இருந்து அழுத்தமாக வந்து இருந்தன.

அவளோ அப்போதும் அமைதியாகவே இருந்தாள்.

“வாய் நல்லா தானே இருக்கு சோ பேசலாம்”

அவளோ, நலிந்த குரலில் “ஹும்… விழுந்தப்போ தவற விட்டு இருப்பேன்” என்றாள்.

“இரிடேட்டிங்  இடியட்” என்று சீறலாக வந்தது அவனது வார்த்தைகள்.

இதழ்களைப் பிதுக்கி விசும்பி அழ ஆரம்பித்து விட…. அவனோ எரிச்சலாக “ஷிட் என்று ஒற்றைக் காலை தரையில்  ஓங்கி உதைத்தவன் அழாத வெறியாகுது” என்றான் சீறலாக….

அவனின் கோபத்தில் அவளின் மேனியோ நடுக்கம் கண்டது.

மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளி விட்டுக் கொண்டே “நான் போய் மேப்பை தேடிட்டு வரேன் தயவு செஞ்சி எங்கேயும் போகாமல் இங்கேயே இரு” என்றானே பார்க்கலாம்.

“வாட்? ஐ  காண்ட்  என்னால தனியா இங்க இருக்க முடியாது” என்றாள்.

“என்னைக் கோபப் படுத்தாத ஆழி உன்னால இப்படி கால்ல காயத்தோட நடக்க முடியாது இவளோ தூரம் உன்னை தூக்கிட்டு வந்த எனக்கு மறுபடி உன்னை கூட்டிட்டு போய் வர்றது இம்போசிபல் சோ இங்கேயே இரு ஈவ்னிங் உள்ள வந்துடுவேன்” என்றான் நெற்றியை நீவிக் கொண்டே….

அவனை வெறித்து பார்த்தவள் “இங்க ஏதும் ஆபத்து வந்தால் என்னால ஓடக் கூட முடியாது காஷ்” என்றாள் குரல் தளுதளுக்க…

“ப்ச்… இதுக்கு மேப்பை தொலைக்காமல் இருக்கணும்” என்றவன் குரல் தடித்து வர….

“ஐ வில் மேனேஜ் நீங்க போயிட்டு வாங்க சீக்கிரம்” என்றவள் முட்டியில் முகம் புதைத்துக் கொண்டாள்.

“ஓகே…என்றவன் அவள் அருகில் பாதுகாப்புக்காக கொண்டு வந்த சில பொருட்களை வைத்து விட்டு  நான் வந்துடுவேன்” என்று சொன்னவன் அவள் தலையை வருட…. அவளோ அவன் கையை வேகமாக தட்டி விட்டாள்.

இதற்கு மேல் நின்றாள் அவள் போக விட மாட்டாள் என்று நினைத்தவன் வேக எட்டுக்களுடன் வந்த வழியே செல்லத் தொடங்கினான்.

அவன் செல்லும் போது கேட்ட சருகளின் சத்தத்தில் மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள் அவன் தூரமாக செல்வது தெரிந்தது.

தன் கால்களை பார்த்து விரக்தியாக புன்னகைத்தவள்  சுற்றிலும் விழிகளை சுழல விட்டாள்.

சுற்றிலும் பயங்கரமாக அடர்ந்து வளர்ந்து இருந்த மரங்களைப் பார்த்தே அவளுக்கு பயமாக இருந்தது.

அருகில் அவன் வைத்து விட்டு சென்ற தடியை எடுத்தவள் அதை நிலத்தில் அழுத்தமாக ஊன்றி ஒற்றைக் காலில் எழ முயன்றாள்.

அமர்ந்து இருக்கும் போது தெரியாத வலி எழும் போது சுளீர் என்று பாதத்தில் வலி ஊடுருவியது.

இதழைக் கடித்து வலியை கட்டுப் படுத்திக் கொண்டவள் முயன்று ஒற்றைக் காலில் தடியின் உதவியுடன் எழுந்து நின்றாள் பெண்ணவள்.

எவ்வளவு நேரம் தான் அமர்ந்தே இருப்பது என நினைத்தவள்  தான் இருக்கும் இடத்தில் இருந்து மெதுவாக ஒற்றைக் காலை நிலத்தில் அழுத்தமாக ஊன்றி தடியின் உதவியுடன் நடந்தவளுக்கு காஷ்யபனை பற்றியே எண்ணம் சுழன்றுக் கொண்டு இருந்தது.

“கடவுளே என் காஷ்க்கு ஒன்னும் ஆக கூடாது கவனமா போய் வந்திடணும்” என்று தன் இதழ்களுக்குள் சொல்லிக் கொண்டவள் அப்போது தான் தன் முன் கொடி போல மரத்தில் இருந்து  தொங்கிக் கொண்டு இருக்கும் சர்ப்பத்தைக் கண்டு விழிகளை பெரிதாக விரித்தவள் இதழ்களோ “கோல்டன் லேன்ஸ்ஹெட்” என்று உச்சரித்து இருந்தன.

அது சாதாரண பாம்பினம் அல்லவே நாகப் பாம்பை போலவே இரையைக் கண்டால் அது தப்பாமல் இருக்க விஷத்தை தன் தலையில் இருந்து மின்னல் வேகத்தில் துப்பும் வல்லமை கொண்டதே அந்த பாம்பு.

 அவளின் அதிஷ்டத்திற்கு நல்லவேளை அந்த பாம்பு அவளை காணவில்லை போலும், அப்படியே ஆணி அடித்தது போல நின்று இருந்தவளை அவளின் பின்னால் இருந்து ஒரு கரம் அவளின் வாயை  கையால் மூடி பின்னோக்கி   இழுத்துக் கொண்டது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 34”

    1. ஜீஷா ஶ்ரீ

      🙈🙈 இனி போக போக சோகமா இருக்கும் dear 🥰🙈❤️‍🩹

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!