தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 41

4.9
(21)

பேராசை- 41

ஆம், சுவரில் இரத்தக் கரை படிந்து இருந்தது.

அதைப் பார்த்து அதிர்ந்தவனுக்கு எப்படி இந்த இரத்தக் கரை படிந்து இருக்கும் என ஊகிக்க சில நொடிகள் பிடித்தன.

 

புரிந்த கணம் அப்படியே அசைவின்றி வெறிக்கத் தொடங்கியவனின் நினைவு அன்று அவனின் விருதுகளைப் அவள் போட்டு உடைத்ததனால் அவளின் கழுத்தைப் பற்றிப் பிடித்து தூக்கியதும் பின்னர் அவளை அப்படியே விடுவிக்கும் போது நெற்றியிலும் காலிலும் அவளுக்கு காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது அவன் நினைவில் வந்துப் பாடாய்ப் படுத்தியது.

அப்படியே  சுவரோடு சாய்ந்து  தரையில் அமர்ந்துக் கொண்டவன் அந்த இரத்தத் திட்டை வருடிக் கொண்டே விழிகளை மூடியவனுக்கு ஏதேதோ வலிகள்.

அவளைக் காயப் படுத்தலாம் என்று இவ்வளவு செய்தும் அவனுக்கு அல்லவா வலிக்கிறது. அது மட்டும் அல்லது அவளை நான் எதற்காக திருமணம் செய்து கொண்டேன் என்று தெரிந்து வைத்துக் கொண்டே எப்படி என்மேல் அவ்வளவு காதலைக் காட்ட முடிந்தது அவளால் என்று அவனுக்கு வியக்காமல் இருக்க முடியவில்லை.

 

ஒரு பெரு மூச்சுடன் அமர்ந்தவன் ஜெயக்குமாருக்கு அழைப்பை எடுத்து இருந்தான். இரு அழைப்புகளின் பின் எடுத்தவர் பேசாமல் அமைதியாய் இருக்க, “அங்கிள் ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க?” என்று கேட்க….

“ஃபைன்” என்று ஒற்றைப் பதில் வர அதையெல்லாம் அவன் கண்டு கொள்ளும் நிலையில் அல்லவே “அப்பா அங்க ரீச் ஆகிட்டாரா அங்கிள் ?” என்று அடுத்த கேள்வி வர… அதற்கு அவர் பதில் சொல்லும் முன்னரே மறு முனையில் இருந்த பிரகலாதனோ “யாருக்கும் பதில் சொல்லிட்டு இருக்க வேண்டாம் ஜெயகுமார்” என்றவர்  அலைபேசியைப் பிடுங்கி துண்டித்து விட அவனுக்கோ உடல் இறுகிப் போனது.

 

வருணுக்கும் இப்போது தொடர்பு கொள்ள முடியாது என்று நினைத்தவனுக்கு ஆழி இப்போது என்ன செய்துக் கொண்டு இருப்பாள் என்ற எண்ணம் மட்டுமே!

 

அவளுக்கு ஏதும் ஆகி விடுமோ என்ற பதைபதைப்பு மனதை ஆட்கொண்டு இருக்க  “உனக்கு எதுவும் ஒன்னுனா ஐ காண்ட் நான் செத்துடுவேன்டி” என்று வாய்விட்டு சொன்னவன் அதிர்ந்து போனான்.

 

ஆம், அப்படியென்றால் நான் அவளைக் காதலிக்கின்றேனா? என்று நினைத்தவனுக்கு அவனின் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரே பதில் அளித்தது .

 

தன் காதலை உணர்ந்த அவனால் முழுதாக மகிழ முடியவில்லை இப்போது உணர்ந்து என்ன பயன் அவளை காயப் படுத்தியது அல்லாமல் எவ்வளவு ஆபத்தான காடு என்று தெரிந்தும் தன்னந்தனியாக அல்லவா விட்டு வந்துள்ளேன் என்று எண்ணியவன் முகமோ சடுதியில் வாடிப் போனது.

 

அப்படியே அமர்ந்து இருந்தவன் அவளின் டைரியை மார்போடு அணைத்துக் கொண்டே விழிகளை மூடி ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினான்.

 

அவனின் எண்ணத்தின் நாயகியோ விக்ரம் தங்கி இருந்த அக் காட்டின் மத்தியில் அமைந்துள்ள சிறிய இருப்பிடத்தில் அங்கு உள்ள பழங்குடியினருடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.

“விக்ரம் நீயும் சாப்பிடு” என்று அவள் உணவை ஊட்ட முயல….

 

அவனை ஈர்த்தவள் அல்லவா அவள்! எங்கனம் மறுப்பான்? மெல்லிய புன்னகையுடன் அவள் ஊட்டிய உணவை வாங்கிக் கொண்டவன் மனமோ,  “அவளுக்கு மேரேஜ் ஆகிறிச்சு அண்ட் உன்னை ஒரு ப்ரெண்ட் ஆஹ் நினைக்கிறா சோ நீ உன் லிமிட்லயே இருந்துக்கோ என்று கட்டளையிட  தனக்குள் மேலும் இறுகிக் கொண்டவன் போதும் ஆழினி நீ சாப்பிடு” என்றவன் அதே மாறா புன்னகையுடன் எழுந்து சென்று விட… அவளும் தோள்களை குலுக்கிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.

 

பழங்குடியினர்களின் பாஷை தெரியவில்லை என்றாலும் அங்கு உள்ளவர்களுடன் சைகையில் பேசிக் கொண்டு இருந்தவளுக்கு ஆழ் மனதில் வலி இருந்தாலும் மனம் சற்று லேசானது போலத் தான் உணர்ந்தாள்.

 

மேலும், விக்ரமை மட்டும் அவள் சந்திக்காமல் இருந்தால் எப்போதோ அவள் உயிர் பிரிந்து இருக்குமே என்று எண்ணம் தோன்ற திடீர் என்று ஒரு யோசனையும் தோன்ற விக்ரம் எங்கு இருக்கின்றான் என விழிகளை சுழற்றி தேடினாள்.

 

அவனோ, மரத்தில் சாய்ந்து விழிகளை மூடி நின்றுக் கொண்டு இருக்க.. அவனை நோக்கி விரைந்து சென்றாள்.

அரவம் கேட்டு விழிகளை திறந்தவன் தன் முன் இப்படி சட்டென வந்து நின்றவளை பார்த்து “ என்னாச்சு என்ன வேணும்? என்று கேட்க…

 

“நான் இங்க இருந்து கிளம்பும் போது என்கூட வர்றியா விக்ரம்” என்று கேட்டே விட்டாள்.

 

“வாட்? என அதிர்ந்தவன் சாரி ஆழினி என்னால வர முடியாது” என்று சொல்ல…

 

“ஏன் முடியாது? இப்படியே இங்க இருந்து என்னத்தை பண்ண போற விக்ரம்?” என்று கேட்க….

 

“சொன்னேன்ல என் அம்மா அப்பா ஞாபகமா இங்க இருக்கேன்னு….” என்று சொல்ல….

“பிடிவாதம் பிடிக்காத விக்ரம் உனக்கு லைஃப் இருக்கு … இந்தியா போய் உன்னோட பிசினெஸ் எல்லாம் செட்டில் பண்ணிட்டு ஶ்ரீ லங்கா வந்திடு உன்னைப் போல ஒரு நல்ல பிரண்ட் அஹ் எனக்கு மிஸ் பண்ண முடியாது என்றவள் தொடர்ந்து உன் ஆசையும் ஒரு நல்ல பிராப்பஸர் ஆகணும்ன்னு தானே சோ ஶ்ரீ லங்காலயே வந்து ஜாப்க்கு டிரை பண்ணேன்” என்று சொல்ல…

 

“என்ன விளையாடுறியா ஆழினி நான் ஜஸ்ட் என்னோட விருப்பு வெறுப்புகளை  உன்கிட்ட ஷெயர் பண்ணேன் அவ்ளோ தான் அதெல்லாம் நடக்காது பிளீஸ் நான் இங்கேயே இருக்கேன்” என்று சொல்ல….

 

இதழை சுழித்து விட்டு பேசாமல் சென்று தான் முதல் அமர்ந்த இடத்திலேயே அமர்ந்துக் கொண்டாள்.

 

ஒரு பெரு மூச்சுடன் அவளைக் கண்டு கொள்ளாமல் அவன் இருக்க நேரம் சென்றதே தவிர அவள் அவனோடு ஒரு வார்த்தைக் கூட பேச வில்லை ஏன் முகத்தை கூட ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

 

அங்கு சிறுவர்களுடன் புதிதாக விளையாட்டு ஒன்றை சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தவள் அருகே சென்றவன் “ஹே… ஆழினி நீ நைட்டும் சரியா தூங்கலைனு கேள்வி பட்டேன்…இப்போ இந்த செம்ம வெயில்ல வெளில சுத்திட்டு இருக்காமல் போய் ரெஸ்ட் எடு” என்று சொல்ல…

 

அவளோ அவன் கூறுவதை செவி சாய்க்காமல் விளையாட்டில் மும்முரமாக இருக்க, “ப்ச் பேசுமா” என்று சொல்ல….

 

பாவம், அவளின் அழுத்தம் அவனுக்கு தெரியவில்லை.

 

அவளோ சிறிய குளக்கட்டு போல் அமைக்கப் பட்டு இருந்த இடத்தில் எழுந்து சென்று அமர்ந்து விட…

 

அவளைத் தொடர்ந்து சென்றவன் “ ரொம்ப கஷ்டம் தான்” என்று சொல்ல….

 

அவனை புரியாமல் திரும்பிப் பார்த்தவள் அவனின் புன்னகை ததும்பும் முகத்தைப் பார்த்து விட்டு மறுபடியும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

உதட்டைக் குவித்து ஊதியவன் “என்னடி இப்போ?” என்று கேட்க….

 

“ஐயாவுக்கு மறுபடி வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமோ” என்று அவள் நக்கலாக சொல்ல…

 

அவளின் அருகில் அமர்ந்துக் கொண்டு அவளைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு “வரேன்” என்று அவன் சொன்ன அடுத்த நொடியே சந்தோஷத்தில் தான் இருக்கும் நிலையை மறந்து எழுந்து குதித்து ஆர்பரிக்க ஆரம்பித்து விட….

 

வேகமாக எழுந்து அவளின் கையைப் பற்றி நிறுத்தியவன் “மெண்டல் மாதிரி ஆடிட்டு இருக்க என்று அவளைக் கடித்துக் கொண்டவன் இப்போ நீ தனி ஆள் இல்லை ஆழினி உனக்குள்ள குழந்தையும் இருக்கு” என்று சொன்னான்.

 

“ஓ மை கோட்” என்று சொன்னவள் பதற்றமாக தன்னைக் குனிந்து பார்த்துக் கொள்ள, அவனோ “நோ வொர்ரிஸ் ஆழினி கொஞ்சம் ரெஸ்ட் எடு”

 

“அது சரி உன்னை நம்ப முடியாது விக்ரம் சோ சத்தியம் பண்ணு என்கூட வரேன்னு” என்று அவள் கையை நீட்ட…

 

“நான் யோசிச்சு தான்டி சொன்னேன் போ போய் தூங்கு”

“முடியாது சத்தியம் வேணும்” என்று அவள் அடம் பிடிக்க….

 

“சரி புரோமிஸ் ஆஹ் உன்கூட ஶ்ரீ லங்கா வரேன்” என்று அவளின் கையில் தன் வலக் கரத்தை வைத்து சத்தியம் செய்தான்.

 

“ஹும் தட்ஸ் குட் என்று சொன்னவள் சற்று தூரம் சென்று பின்னால் அவனைத் திரும்பிப் பார்த்தவள் அது ஏன் முதல்ல அப்படி சொன்ன” என்று கேட்க…

 

“நான் நிறைய சொன்னேன் நீ எதைக் கேக்குற?” என்று தலையைக் கோதிக் கொண்டே அவன் கேட்க…

 

அவனை  முறைத்தவள் “அதான் ரொம்ப கஷ்டம்னு ஏன்? என்று அவள் கேட்க…

 

“பிறகு சொல்றேன் இப்போ போயேன் டி”

“சொல்லலைனா நான் தூங்க மாட்டேன்”

 

“ உன் லவ்வபல் ஹஸ்பண்ட் உன்னை வழிக்கு கொண்டு வர ரொம்ப கஷ்டப் படணும் போல” என்று சொல்லி விட்டு அவன் சென்று விட…

 

அவளுக்கோ, அவனை நினைத்து உடல் விறைத்துப் போனது.

 

அப்படியே நேரம் செல்ல செல்ல இரவுப் பொழுதும் வந்தது.

 

காஷ்யபனோ, இரவு மீண்டும் ஈக்வடோரிற்கு  செல்ல ஏழு மணிக்கு புறப்படும் விமானத்திற்கு தயாராக ஆரம்பித்தான்.

 

அவளுக்கு தேவையான சில உடைகளையும் எடுத்துக் கொண்டவன் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு அறையை பூட்டி விட்டு வெளியில் வந்தவன் வேகமாக நுழைவாயிலை திறந்துக் கொண்டு அவசரமாக வெளியில் வந்தவனுக்கு அப்போது தான் தான் இனிமேல் இந்த வீட்டுக்கு வரக் கூடாது என்று பிரகலாதன் சொன்னது நினைவுக்கு வர வீட்டை ஒரு கணம் திரும்பிப் பார்த்தவன் வாணியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி இருந்தான்.

 

நிமிடங்கள் கடக்க விமானத்தில் அமர்ந்துக் கொண்டவனுக்கு வெளியில் தெரிந்த இருண்ட வானைப் பார்த்த கணமே அவனது இதயம் தாளம் தப்பித் துடித்தது.

 

அவன் அழைத்துச் சென்ற நதிக்கரை ஆபத்து இல்லை என்றாலும் இரவில் முதலைகளின் நடமாட்டம் அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளதல்லவா! நேற்றைய இரவை பத்தி யோசிக்காமல் இருந்தவனுக்கு இப்போது இந்த இருண்ட வானைப் பார்க்கும் போது அப்பட்டமாக பயம் அப்பிக் கொண்டு இருந்தது அவனது முகத்தில்….

 

விமானத்தில் இருந்த ஏசியையும் தாண்டி அவனுக்கு வியர்த்து வழிய ஆரம்பித்து விட, அவளுக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது என்று பலமுறை மனதில் சொல்லிக் கொண்டு வந்தவனுக்கு மேனி நடுங்கத் தொடங்கி இருந்தது.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 41”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!