காதலே- 20
அடுத்த நாளும் புலற நிதிஸுன் அனைப்பில் இருந்து கண் விழித்த கனி எழ அவள் அசைவில் நிதிஸும் கண் விழித்தான். அவளை மீண்டும் அணைக்க அவன் மார்பில் மீண்டும் விழுந்தவள் “ஐயோ குளிச்சிட்டு வாரேன்” என்றாள் “பேபி வாட்டர் வேஸ்ட் பண்ண கூடாது இரு வாரேன்” என்றவனைத் தள்ளிவிட்டபடி குளியலறை நுழைந்து கொண்டாள்.
தனது டீமை அழைத்த நிதிஸ் ரிகர்கலில் ஈடுபட்டான். ஹோட்டலிலேயே காலை, மதிய உணவை உண்டனர் விமான பயணம் புதிதாக இருக்க கனி அறையிலேயே ரெஸ்ட் எடுத்துக் கொண்டாள்.
ஓகே காய்ஸ் ஈவினிங் 5:00 மணிக்கு ரெடியாருங்க வாகனம் வரும் என்றவன் தனது அறையில் நுழைந்து கொண்டான். ஆகாய நீல நிற,சேர்ட், கருப்பு நிற ஜின்சும் தாடி மீசையை ரிம் பண்ணி தலை முடியை ஜெல் வைத்து வாரும் போது, கையை முதுகில் வைத்தபடி கனிவர கண்ணாடியூடு அவளைப் பார்த்தவன்” வாவ் யூ லுக் சோ பிரிட்டி பேபி” என அவளை அணைக்க வர அவனை மார்பில் கை வைத்து தள்ளியவர் ஜிப் போட முடியல” என்றாள் சினங்களாக, அவளை பின்னால் திரும்பியவன் முதுகில் கோலம் போட்டபடியே ஜிப்பை பூட்டி விட்டான் அவளும் அவனது உடைக்கு பொருத்தமாக அதே நிறத்திலேயே வெள்ளை நிறக் கற்கள் பதிக்கப்பட்ட பிராக் அணிந்து, அழகாக இருந்தாள்.
இருவரும் கதவை பூட்டிக் கொண்டு வெளியே வர அனைத்து கலைஞர்களும் வந்திருந்தனர்.
வித்யாவுக்கு கனி மேல் அப்படி ஒரு கோபமும், பொறாமையும் வந்தது. அனைவரும் வாகனத்தில் ஏறியதும் வாகனம் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு கிளம்பியது. நிதிஸும் கனியும் தங்களுக்கான காரில் அவர்களை பின்தொடர்ந்து புறப்பட்டனர். பதினைந்து நிமிட பயணத்தில் மிகப்பெரிய ஸ்டேடியமினுள் வாகனங்கள் நுழைய அப்போதே ரசிகர்கள் வானகனத்தை சுற்றிக் கொண்டனர் பவுன்சர்கள் வரவே வாகனம் சென்றது.
ஸ்டேடியம் எல் ஈ டீ மின் விளக்குகளால் ஜெகஜோதியாக ஒளி வெள்ளத்தில் தயாராகி இருந்தது வாத்திய கலைஞர்கள் தங்களுக்குரிய இசைக்கருவியை அமர்ந்து அனைத்தையும் சரியாக உள்ளதா என பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஹனியை மேடைக்கு பக்கவாட்டாக இருந்த விஐபிகளுக்கான இருக்கையில் அமர வைத்தவன் தானும் அமர்ந்து கொண்டான் கனிக்கு அடுத்ததாக பலர் அமர்ந்து கொண்டனர்.அவ்வரிசையில் வித்யாவும், கௌசல்யாவும் மற்றைய பாடகர்களும் அமர்ந்திருந்தனர். ரசிகர்கள் ஒருபுறம் ஆரவாரம் செய்ய தொடங்கினர்.
அறிவிப்பாளர் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்க ஆரம்பித்தார் “ஹாய் குட் ஈவினிங் எவ்ரி ஒன்”, என நிகழ்ச்சியை ஆரம்பித்தவர் “எக்ஸைட்டா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்” நானும் அப்படித்தான் இதோ உங்களுக்குக்கான முதலாவது பாடலை பாட வருகிறார் இசை வேந்தன் சஞ்சய்” என அறிவிக்க கரையோசத்துக்கு மத்தியில் மைக்கை பிடித்த சஞ்சய் தனது இனிய குரலில் “ரோஜா ரோஜா” பாடலை பாட அரங்கமோ கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.
அதனைத் தொடர்ந்து அடுத்ததாக எமது மனம் கவர்ந்த பின்னணி இசை பாடகி வித்யஸ்ரீ என அறிவிக்க அவளும் ஒய்யாரமாக நடந்து வந்து மேடையேறி மைக்கைப் பிடித்தவள், தனது இனிய குரலில் “உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு” என்னும் பாடலை ஸ்ருதி, லயம் மாறாது மென் குரலில் பாட அரங்கமோ அவள் இசையில் நனைந்தது. அவளும் பாடலை பாடி முடிக்க அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர் அவளும் நன்றியை தெரிவித்து விடை பெற்றாள்.
அதனைத் தொடர்ந்து ரப் இசைப் பாடகர் சிம்ஹா துள்ளழிசை பாடலை பாடி அரங்கத்தையே ஆட வைத்துக் கொண்டிருந்தார்
மேலும் அதனை தொடர்ந்து “இதோ அனைவரும் மிகவும் பிடித்த இசைவேந்தன், இசைச்சமர் நிதிஸ் சரன்” என அறிவிப்பாளர் அழைக்க நிதிஸும் கம்பீரமாக மேடை ஏறினான் அவன் மேடையேறியது தான் தாமதம் பலத்த கரகோஷம் மேடையே இருளில் மூழ்கி பின் நிதிஸ் நிற்கும் இடம் மட்டும் ஒளிவெள்ளம் பாச்சப்பட்டது.
நிதிஸுன் புகைப்படத்தை தாங்கி இருந்தோர் அதில் ஐ லவ், யூ நிதிஸ், ஐ லைக் யூ என பல வார்த்தைகள் கொண்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
“ஹாய் பட்டிஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க” என அவன் குரலை தாண்டி ஆரவார சத்தம் கேட்டது “அப்போ டிரைக்டா சாங்குகே போய்டலாம்” என்றவன்
“என்னோடு நீ இருந்தால். உயிரோடு நான் இருப்பேன், என்னோடு நீ இருந்தால். உயிரோடு நான் இருப்பேன்”. பாடலை பாட அரங்கமே நிசத்தமானது அவன் குரல் மட்டும் ஒலித்தது “கமான் ஹாய்ஸ் என அவனும் கைதட்ட ரசிகர்களும் ஆரவாரம் செய்தனர்.
ரசிகர்கள் போன் டார்ச்சை ஆன் செய்து வைப் செய்தனர் பின்னணி இசை ஒலித்துக் கொண்டிருக்க அறிவிப்பாளரிடம் வந்து நிதிஸ் அவரிடம் ஏதோ சொன்னவன் பாடலை பாடி முடித்தான்.
அதன் பின் இந்த மூவ்மெண்ட்ட இன்னும் ஸ்பெஷலாக்க ஸ்பெஷல் பெர்ஸன் ஒருத்தங்கள உங்களுக்கு அறிமுகப்படுத்த நினைக்கிறேன் என்றவன் அறிவிப்பாளரைப் பார்க்க,
அனைவரின் பார்வையும் மேடையிலேயே இருக்க அறிவிப்பாளரும் “வாங்க மேடம்” எனக் கனியை அழைத்து மேடைக்கு வந்தவள் அவளை மேடையில் விட்டகல அவளோ பயத்துடன் மேடையில் நிற்க அவள் கையைப் பிடித்து தான் நிற்கும் ஒளியில் அழைத்து வந்த நிதிஸ் அவளை தோளோடு அனைத்து மீட் மை லவ்வபிள் வைப்” என்றான். அவன் திருமணம் செய்தது தெரிந்தாலும் பலருக்கு தெரியவில்லை அனைவரும் கைதட்டி ஆர்பரித்தனர்.
“கனிமலர்” …”ஹனி வாய்ஸ்” என உல்லாசமாக சொன்னவன் இதோ உங்களுக்காக மைக்கை அவள் கையில் வைக்க அவளும் அவன் செயலில் பயத்துடன் மைக்கை மறு கையால் மூடியபடி “என்ன இது” என்றாள் படபடப்புடன் “ரிலாக்ஸ்மா நான் இருக்கேன் பாடு” என்றான் அவளோ மேலும் பயத்துடன் ஜனத்திரளையே பார்த்தவள், அவன் முகத்தை பார்க்க “இங்க நீயும் நானும் மட்டும் இருக்கம்னு நினைச்சு கண்ண மூடிட்டு பாடு” என்றான்.
நாலு சுவருக்குள் பாடியவளை இப்படி திடிரென மேடையேற்றி கையில் மைக்கைக் கொடுத்தால் என்ன செய்வாள்.
அவளுக்கோ பயம் மட்டுமே,அவன் பேச்சைக் காப்பாற்ற வேண்டிய தேவை அவன் பேச்சில் தைரியம் வரப் பெற்றவள் ஆழ்ந்த மூச்சை விட்டுக்கொண்டு கண்களை மூடி மைக்கை உயர்த்தினாள். வித்யாவோ ” வாய் பேச முடியாதவ பே பேனு பாடப் போறா” என்றாள் கௌசல்யாவிடம் சிரித்தபடி விட கௌசல்யாவோ “எனக்கு என்வோ அப்படி தோணல” என்றாள் மறு நொடியே ஹனி வாய்ஸில் “பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே… அன்பே நீ வா… இருளில் கண்ணீரும் எதற்கு… மடியில் கண்மூட வா… அழகே இந்த சோகம் எதற்கு… நான் உன் தாயும் அல்லவா… ” என அவள் குரலோ ஊனிலும் உருக்கும் அப்படி வாய்ஸ் அவள் குரலில் அனைவரும் கட்டுண்டிருக்க வித்யாவிற்கோ அதிர்ச்சியில் எழுந்தே விட்டாள்.
அப்போது தான் அவளுக்கு அனைத்தும் புரிவதாய் இருந்த”து. முழுவதுமாக பாடலை பாடிய கனி கண்களை திறக்க அந்த அரங்கமே அவள் பாடலுக்கு மயங்கி கைதட்டி ஆர்ப்பரித்தனர் அவளும் “தேங்க்ஸ்” என்றவள் புன்னகைத்துக் கொண்டாள். அங்கு வந்து அறிவிப்பாளர்களோ “மேடம் சூப்பரா இருக்கு, சார் இப்படி ஒரு சர்ப்ரைஸ் நாங்க யாருமே எதிர்பார்க்கல” என்றாள்.
ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு சாங்” என்றாள் அறிவிப்பாளர் நிதிஸோ “அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ… ஐ அஸ்த் அஸ்த் லிபே… ஆஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா… இஷ்க் இஷ்க் மீலே…லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ…ஒரு காதல் உந்தன் மேலே…” எனும் பாடலை ஆரம்பிக்க பெண் குரலுக்கோ கனி அழகாக பாடினாள் அன்றும் அடுத்த நாளும் நிதிஸும், கனியும் தான் சோசியல் மீடியாவில் வலம் வந்தனர்.
நிகழ்வு முடிந்து மிட் நைடிலேயே அறைக்கு வந்தவர்கள் களைப்பில் உடையை மாற்றி விட்டு தூங்கிப் னோயினர்.
நிதிஸுன் அனைப்பில் தூங்கிய கனியை அழைத்தது அவளது தொல்லை பேசி, அலைபேசியை எடுத்துப் பார்க்க தாய் தான் அழைதத் இருந்தார். அழைப்பை ஏற்றவள் ” ம்மா எனறாள் அவரோ சாங் பார்த்தோம் நல்லாருந்தது எப்போ வாரிங்க வெள்ளிக் கிழமை தான்மா” என்றவள் அவரோடு பேசி அழைப்பை துண்டித்தாள்.
அவளும் தாய் ,தந்தை, தம்பி , பாட்டி, ராம் , பிரதாப் மற்றும் நண்பர்களிடமிருந்து ஆயிரம் வாழ்த்துக்கள் அவளுக்கு குவிந்திருந்தது.
இசை மீதான அவள் பிரியதற்கு நிதிஸ் அங்கீகாரம் வாங்கி கொடுத்திருந்தான்
அடுத்த நாள் தங்களது டீமுடன் கனடாவை சுற்றி திரிந்தவர்கள் அவர்களை அன்று இரவு விமானம் ஏற்றிவிட்டு தாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறை நுழைந்தவர்களை வரவேற்றதென்னவோ அலங்கரித்த அறை தான்.
அவள் பாடிய நெஞ்சினிலே பாடலை ஒலிக்க விட் டான் அவளோ அதிர்ச்சியுடன் நிதிஸைப் பார்க்க கண்சிமிட்டியவன் அவளோடு மஞ்சத்தில் சரிந்தான் “குங்குமம் ஏன்சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான் கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல்பொழுதில் கசங்கத்தான் எனும் வரிகளில் அவளோ வெட்கத்தில் அவனில் புதைய” மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான் தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாம் தேடத்தான்” என மீதிப் பாடலைப் பாடியவன் அவளை கலைத்து, களைந்து அவளில் மூழ்கி முத்து எடுத்தவன் அவளை விட்டு விலகி படுக்க அவன் இதழ்களிலோ புன்னகை அவள் இதழ்களிலோ வெட்கம் அவளைத் திரும்பிப் பார்க்க அவன் பார்வையில் மேலும் சிவந்து போனவளோ போர்வையால் தன்னுடலை மூடியவளை தன் நெஞ்சில் தூக்கி வைத்தவன் கண்மூடி தூங்கினான்.
சில மணி நேரம் சென்று கண்விழித்தவன் வயிறு வேறு பசிக்க “பேபி எழுந்திரு குளிச்சிட்டு சாப்பிடலாம்” என்றான். அவளும் போர்வையுடனே குளியலறை நுழைய அவளோடு குளியலறை நுழைந்தவன் பேபி வாட்டர் வேஸ்ட் ஆயிடும்ல என்றான் குளியலறை விட்டு வெளியே வந்த அவன் இதழிலும் புன்னகை அவள் இதழிலும் புன்னகை இரவு உணவு ஹோட்டலிலேயே உண்டவர்கள் மீண்டும் தஞ்சம் அடைந்ததென்னவோ மஞ்சத்தை தான்.
கைகோர்த்து கனடாவை இருவரும் சுத்தி வந்தனர் கொஞ்சலும் சீண்டலுமாக இருவரும் தங்களது நாட்களைக் கடத்தினர்.
இதோ இன்றுடன் கனடா இருந்து வந்து ஒரு வாரம் சென்றிருக்கும் அவரவர் தங்கள் வேலையில் மூழ்கியிருக்க கனியும் நிதிஸும் காதல் வானில் சிறைகில்லாது பறந்தனர்.கனியை ஸ்டூடியோவில் பாட அழைக்க அவலோ மறுத்து விட்டாள் அவனுக்காக மட்டுமே அவள் பாடுவாள்.தனிமையில் அதைக் கேட்பதோ அவனுக்கு பரம சுகம்.
அவள் பாட மறுத்ததில் நிதிஸுககோ மனத்தாங்கல் இருந்தாலும் அவள் உணர்விக்கும் பேச்சுக்கும் மதிப்பளித்திருந்தான்.
நாட்களும் செல்ல விடிந்தால் ராமின் திருமணம் எனும் நிலையில் வீடு முழுவதும் உறவினர்கள் நிதிசஸுன் கண்கள் காதல் மனைவியை தேடியும் கிடைக்கவில்லை அவள் தனியாக சிரிக்கும் போதெல்லாம் முத்தமிட்டே ஒரு வழியாக்கி விடுகிறான்.
மறுநாள் அனைவரும் ஆயத்தமாகி திருமண மண்டபத்திற்கு சென்றனர் மண்டபமும் உறவினர்களால் நியம்பி இருந்தது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. ராமும் ஐயர் ஓதும் மந்திரங்களை உச்சரித்தவன் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க அனைவரின் ஆசிர்வாதத்துடன் ஐயரிடமிருந்து தாலியை வாங்கி தரங்கிணியின் கழுத்தில் கட்டி தன்னவளாக்கிக் கொண்டான்.
அனைவரும் அவர்களை அட்சதை தூவி வாழ்த்தினர் விருந்தினர்களும்ன் விருந்தினை உண்டு வாழ்த்தி விடைபெற்றுச் சென்றனர்.
திருமணமும் நல்லபடியாக முடிந்தது. தரங்கினியும் அக்குடும்பத்துடன் இணைந்து கொண்டாள்.
வித்தியாவும் அதன் பின் பிராமின் பக்கம் செல்லவில்லை அவளோ தான் கூறிய பொய் புரிந்ததால் என்னவோ அவளும் அதன் பின் ஸ்டூடியோவில் வேறு ஒரு காதல் கிடைக்க அதில் தன் கவனத்தை செலுத்தினாள். வாழ்க்கை அதன் போக்கில் செல்ல அன்று ராமின் அலுவலகத்திற்கு வந்த நிதிஸ் ” என்னடா திடீர்னு வந்திருக்க என்றான் ராம்.அவன் ரெண்டு டிக்கெடை வைத்தான். ராமோ ” வாவ் தேங்க்ஸ் டா” என்றான் அதுவோ சுவிட்சர்லாந்து செல்வதற்கான டிக்கெட்ஸ்.
ராமும் தரங்கிணியும் சுவிட்சர்லாந்து செல்லும் நாளும் வந்தது.தரங்கினியும் இருவாரம் விடுப்பெடுத்திருந்திருந்தாள். முதல் நாள் இரவுணவின் போது நிதிஸ் கனியை பார்த்தபடி “அப்பா கொஞ்சம் அவுட்டிங் போய் வரலாம்னு இருக்கேன்” என்றான். பிரதாபோ “ஓகே டா ராமும் நாளைக்கு போறான் தானே,அதற்கு நிதிஸோ “எங்க கூட தான் அவன் வாரன்” என்றான். சாப்பிட்ட ராமிற்கோ புறையேற தலையில் தட்டியவன் “ஹனிமூனா?” “இல்ல அவுட்டிங்” என்றார் கல்யாணி சிரித்தபடி கனிக்கோ வெட்கத்தில் நிலத்தில் புதைந்து விடலாம் போல் இருந்தது.பாட்டியோ “ஏன்டா இன்னுமாட உங்க ஹனிமூன் முடியல” என்றார்.அவர்கள் வாழ்வில் காதல் காதல் காதல் மட்டுமே ராமும் தரங்கிணியும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல.
மறுநாள் இரு ஜோடிகளையும் விமான நிலையத்தில் வழியனுப்ப முழு குடும்பமே வந்தது மேகநாதன் ,வாணி , சுதர்சன் என அனைவருமே வந்திருநத்னர். மகளின் வாழ்க்கை சந்தோசமாக அமைந்ததில் அவர்களுக்கும் மகிழ்ச்சி அனைவரும் கையசைத்து அவர்களுக்கு விடை கொடுத்தனர்.
மௌனம் தாண்டிய அவர்கள் காதல் தேனிலும் இனிதாக தித்திப்புடன் இருந்தது. “தேனிலும் இனிது காதலே”
அவங்க ஹனிமூன் செல்லட்டும் வாங்க நாம் விடை பெறுவோம்.
நன்றி