கல்லூரிக்கு சென்று க்ளாசில் அமரும் போது,, ஜெய்,தேவா அமர்ந்த , பெஞ்சின் அருகில் உள்ள பெஞ்சில் தான் தர்ஷிணியும் அமர்ந்துக் கொண்டாள்…
அன்று முதல் நாள் என்பதால்,, ஃப்ரெஷர்ஸ் டே தான் நடந்து கொண்டிருக்க …. சீனியர் ரேக்கிங்க் சீரியஸாக இல்லாமல் ஃபன்னாக தான் சென்றது….
அங்கிருக்கும் சீனியரில் ஒருத்தி எழுந்து… தர்ஷினியின் அருகில் வந்தவள்… தர்ஷிணி மற்றும் அவள் அருகில் இருக்கும் மற்ற 3 மாணவிகளிடம் கேட் வால்க் நடக்க சொல்லவும்,,, தர்ஷிணி சிறிது பயத்துடன் எழுந்து தேவாவைப் பார்க்க தேவாவும் அவளைத் தான் பார்த்தான்….
அவள் முகத்தில் பயத்தை உணர்ந்த அந்த சீனியர்,,, எம்மா பயப்புடாம வா மா கேட் வால்க் பண்ணு,, இதெல்லாம் ஜஸ்ட் ஒரு ஃபன்க்காக தான் …நாளைக்கு உங்க காலேஜ் மெமொரீஸ்ல இதெல்லாம் கண்டிப்பா இருக்கும்… இந்த நிமிஷத்தலாம், என்ஜாய் பன்ணுங்க… நாளைக்கு நீங்களும் இதெல்லாம் உங்க ஜீனியற்கு பண்ணலாம்….வாங்க என தர்ஷிணியுடன் சேர்த்து அந்த 3மாணவிகளையும் எழுப்ப.. நான்கு பேரும் சிறிது தயக்கத்துடன் சென்று அங்கிருக்கும் பாடம் நடத்தும் ஸ்டேஜில் ஏறி கேட் வால்க் செய்துக் காட்டினர்,,
தேவா அங்கு வெட்கமும்,,பயமும் கலந்து நடந்து வரும் தன்னவளின் முகம் கண்டு சிரித்தப் படி ரசித்துக் கொண்டு இருந்தான்…. இது வரை அவளின் பயந்த முகத்தை அவன் பார்த்தது இல்லை…. ஹோம் ஒர்க் எழுதவில்லை என்றால் கூட தைரியமாக அடி வாங்கி வந்து அமர்ந்து விடுவாள். இவனுக்கு தான் வலிக்கும்…. வெட்கம் என்றால் என்னவென்று கேட்கும் குணம் உடையவள்,..
ஆனால் இன்று அவள் முகம் பார்த்து அவனுக்கே சிரிப்பு வந்து விட வாய் விட்டே அழகாக சிரித்துவிட்டான்.,… கேட் வாலக் செய்வதை பார்த்து அனைவரும் கர கோசம் எழுப்பி மகிழ்ச்சியில் சத்தம் போடவும் ,,,
தர்ஷிணி கேட் வால்க் செய்து முடித்தப் பின் நடுக்கத்துடன் வேகமாக வந்து தேவாவின் அருகில் அமர்ந்து அவன் கைகளை இறுக பற்றிக் கொண்டாள்… தேவாவும் அவள் கை மீது தன் கை வைத்து அழுத்தி சமாதானம் செய்து அவளின் நடுக்கத்தை குறைத்தான்…
தேவா அவளிடம் வெட்கப்படுறப்ப கூட அழகா தாண்டி இருக்க என்ற உண்மையை வாய் விட்டே கூற, அதையும் அவள் கேலியாக எண்ணிக் கொண்டு அவனை மூக்கு சிவந்து விடைக்க முறைத்தாள்….
அவள் இயல்பாக பழகுவதால்,,, தேவா தன்னை ரசித்து சொல்லும் சில விஷயங்களை கூட கிண்டலாக எடுத்துக் கொள்வது இயல்பு… அதில் இருக்கும் உண்மை நிலை அவள் அறியவில்லை…. அறிந்து இருந்தால்..! பிற் காலத்தில் அவனுக்கு வலி வேதனை கொடுக்கப் போவதை முன் கூட்டியே தடுத்து இருக்கலாம்….
ஏண்டி வண்டு! எங்க ரெண்டு பேரையும் என்னமா பேசி பேசி சாகடிக்குற… அங்கப் போய் உன் பேரு,, ஊரு சொல்ல சொல்லி மைக்க குடுத்தா,, நடுங்குற…சரியான தொட நடுங்கி வண்டு நீ என ஜெய் அவளை சீண்டிப் பார்க்க….
தர்ஷினி சற்று இன்னும் தேவாவை நெருங்கி அமர்ந்தவள்,, அவனுக்கு பக்கத்தில் இருக்கும் ஜெய்யை முறைத்துப் பார்க்க,, அவளின் வாசம் தான் தேவாவை மேலும் கிரங்கடித்தது…..
தர்ஷி ஜெய்யின் மண்டையில் தட்டியவள்,,, உன்ன இப்ப கூப்டுவாங்க அப்ப தெரியும் உனக்கு,, போடா தின்னி பண்டாரம் என கிண்டல் அடிக்கவும்,, மாத்தி மாத்தி இருவரும் வம்பிழுத்துக் கொண்டனர்., அந்த நிமிடம் வரை தர்ஷிணியின் ஒரு கை மட்டும் தேவாவின் இரு கைக்குள் இருந்தது,,.
அங்கிருக்கும் பசங்களை அழைத்து பாட்டு போட்டு ஆட்டம் போட சொல்லவும்,,, தேவ ,ஜெய் என அனைவரும் எழுந்து சென்று குத்தாட்டம் போட அன்று நாளே சந்தோசமாக தான் சென்றது,,,
கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும் போதும் தேவாவுடன் ஏறி பைக்கில் அமர்ந்தவள்,, எப்போதும் போல நான்ஸ்டாப்பாக பேசி அவன் காதில் ரத்தம் வர வைக்க,,, காதை குடைந்துக் கொண்டு தான் வண்டி ஓட்டி சென்றான் தேவா…
அவள் வீடு வந்ததும் இறங்கியவள்.. பை டா பாத்துப் போ,,, நாளைக்கு வந்திரு, என வீட்டிற்குள் சென்றதும் தான், அவன் வண்டியை எடுத்திருந்தான்….
வீட்டிற்கு சென்றவன்., தன் தாய் கலாவதியிடம் இன்று நடந்த அனைத்தையும் ஒப்பித்த பிறகு தான் தன் அறைக்குள் சென்றான்… குளித்துவிட்டு உடை மாற்றியவன்.. ஒரு கப் போர்டை திறக்க, அதில் அடுக்கி வைக்கப் பட்டு இருந்த க்ரீட்டிங்க் கார்ட்சும்,, பல கிஃப்ட்சும் அவனைப் பார்த்து பல் இளிக்க,,
,அதற்கு பக்கத்தில் இருக்கும் டைரியை எடுத்தவன் இன்று தன்னவளுடன் நகர்ந்த நாட்களையும்… அவள் தன் கைப் பிடித்து அமர்ந்து இருந்தது,, அவளுக்கே உரிதான வாசனை ஸ்கூல் காலத்தில் இருந்து இன்று வரை மாறாமல் இருப்பது வரைக்கும் ஒன்று விடாமல் எழுதியவன்,, முன் பக்கம் புரட்டிப் பார்க்க,, அதில் அவளின் அழகான புகைப்படம்…
சிறு வயதில் இருந்து தனக்குள் இருக்கும் காதலை அவளிடம் மறைக்க போராடியவனால் ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை…
அவளிடம் தன் எண்ணத்தை சொன்னால்,.,, எங்கே தன்னை விட்டு போய் விடுவாளோ! என்ற பயமும் ஆட்கொள்ள, தனது காதலையும், அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கியவற்றையும் அந்த கப் போர்டில் அடுக்கி வைத்து தன் காதலை வெளிப்படுத்திக் கொண்டான்,..
ஒரு முறை 12த் படிக்கும் போது பள்ளி விடுமுறை நாளில் தர்ஷிணியும்,, ஜெய்யும் சேர்ந்து தேவாவின் வீட்டிற்கு ப்ராக்டிக்கல் நோட்டு வாங்க சென்று நிற்கவும்,,
தேவாவின் அப்பா அவன் தனது ரூமில் அமர்ந்து ரெக்கார்டு எழுதுவதாக சொல்லவும்…சரி என தலையாட்டியவர்கள் தாழ்போடாத அந்த அறைக்கு இருவரும் கதவை திறந்துக் கொண்டு சென்று பார்த்த போது,,,,தேவா தன் அறையில் தான் இருந்தான்…
ஏதோ மும்முரமாக எழுதியப் படி இருந்தவன் அவர்களின் வருகையில் திடுக்கென்று தூக்கிப் போட,,, தன் கையில் இருக்கும் டைரியை மூடி வேகமாக ஓடி தன் கப் போர்டில் வைத்து பூட்டி சாவியை கையில் மறைத்து வைக்கவும்.,..
தர்ஷினியும், ஜெய்யும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் … தேவா நிலமையை சரி செய்யும் பொருட்டு….
நீங்க எங்க டா இங்க? ரெக்கார்டு எழுதலயா? என பேச்சை மாற்ற….
தர்ஷிணி விடுவதாய் தெரியவில்லை… அது இருக்கட்டும்… நீ இப்ப எங்கள பாத்ததும் ஏதோ ஒரு டைரிய கொண்டு போய் மறைச்சியே அது என்னானு மரியாதையா சொல்லிரு,.. இல்லனா நடக்குறதே வேற,,,என மூக்கு விடைக்க மிரட்ட,….
தேவா லூசு அது சும்மா ட்ரா பண்ணிட்டு இருந்தேன் நீங்க வந்த தும் அத பார்த்தா சிரிப்பீங்க,,அதான் ஓடி போய் மறைச்சி வச்சேன் என அசடு வழிந்து நின்றான்….
அதை இருவரும் நம்பவில்லை என்பது அவர்கள் பார்வையிலயே புரிந்தது …
ஜெய்யிற்கு மட்டும் ஏதோ ஒன்று புரிய இவன் திருந்த மாட்டான் போல என அமைதியாக விட்டு விட்டான்,,,
தர்ஷினி அந்த கப் போர்டை இழுத்துப் பிடித்தப் படி,,, ஒழுங்கா சாவிய குடு,,, இதுல என்ன இருக்குனு நா பார்த்தே ஆகணும் என விடாப்பிடியாய் நின்றாள்…
எங்கே அவள் பார்த்து விடுவாளோ என்ற பயத்தில்,,,அவனுக்கு மனது பதற ஆரம்பித்து,,, அடி வயிற்றில் பய பந்து உருள…அ அ அதுல ஒன்னும் இல்ல டி வண்டு,, போய் நாளைக்கு எழுத வேண்டிய ரெக்காரட எழுதுற வழிய பாரு,,, என விரட்டுவதில் குறியாய் இருந்தான்…
குடு சாவிய குடு என அவன் கையில் இருந்த சாவியை பிடுங்க அவன் அருகில் வர,, ஏய் முடியாது போடி என நகர்ந்து சென்றான்….
அவன் அந்த அறையை சுற்றி சுற்றி வர,,, அவளும் அவன் பின்னால் துரத்தி செல்ல…
இன்னைக்கு சிக்குனான் சிவனாண்டி என்ற ரீதியில் ஜெய் கட்டிலில் அமர்ந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்,,,,
ஒரு கட்டத்தில் அவன் பின்னால் இருந்த சாவியை எப்படியோ புடுங்கி விடவும்,, எங்கே கதவை திறந்து விடுவாளோ!! என்ற பயத்தில் தர்ஷியைப் பிடித்து வேகமாக தள்ளி விடவும்….அவள் சென்று கட்டிலின் பக்கத்தில் விழுந்து வாரினாள்….
அவள் விழுந்ததும் தேவாவிற்கு பதட்டத்தில் என்ன செய்வதென்று புரியவில்லை…
கீழே விழுந்த தர்ஷிணியின் கை முட்டி அடிப்பட்டு விட வலியில் முகம் சுணங்கி கண்களில் கண்ணீருடன் அவனைப் பார்த்தாள்,
தேவாவிற்கு தான் அவள் கண்ணீரை கண்டதும் மனது ரணமாய் வலித்தது…
அவள் அருகில் சென்று,,, ஹே சாரி டி வண்டு என தூக்கப் போக… அவள் கை நீட்டி தடுத்தவள்,, கோவத்துடன் எழுந்து அங்கிருந்து சென்று விட,,, பாவமாய் ஜெய்யை பார்த்தான்…
என்ன எழவ டா அதுல வச்சிருக்க,,,? சாவிய குடு என ஜெய் புடுங்கப் பார்க்க…அவனிடமும் தேவா சாவியை தரவில்லை… தலையை தொங்கப் போட்டு நின்றுக் கொண்டான்….
டேய் என்னடா? வண்டு சம்மந்தப்பட்ட விஷயம் எதும் வச்சிருக்கியா? எனக் கேட்க தேவா பாவமாய் முகத்தை வைத்தப் படி ஆமாம் என்று தலையாட்டினான்..
ஏண்டா அன்னைக்கு என்கிட்டே அவள லவ் பண்ணலனு சொன்ன,,, இப்ப என்ன இதுலாம் !? எனக் கேட்க தேவா பதில் சொல்லாமல் இருக்கவும்,,,
கடுப்பான ஜெய் அவன் கையில் இருந்து சாவியைப் வெடுக்கென பிடுங்கி,,, அந்த கப் போர்டை திறந்துப் பார்க்க,, அதில் அவளுக்காக வாங்கிய பொருட்களைப் பார்த்தும்,, அந்த டைரியை எடுத்துப் பார்த்தும் தேவாவின் முகத்தை தான் உற்று நோக்கினான்….
ஏன்டா முன்னாடி பெரிய இவனாட்டம் அவளை லவ் பண்ணல… சும்மா அப்பக்ஷன்னு சொன்ன… எது உண்மை? இப்ப சொல்லு…. என ஜெய் அவனை நெஞ்சில் கை வைத்து தள்ளவும்…
தேவா கண்களில் இருந்து கண்ணீர் வந்தது…. ஜெய் அவள முன்னாடி இருந்தே லவ் பண்றேன் டா… எங்க நீ அவசரப்பட்டு அவகிட்ட சொல்லிருவியோன்னு பயந்து தான்… உன்கிட்ட பொய் சொன்னேன்…
நீ சொன்னாலோ,, நான் சொன்னாலோ கண்டிப்பா என் பிரெண்ட்ஷிப்ப கட் பண்ணிருவா… இப்படியே பேசிக்கிட்டே கூட இருந்துடுறேன்… ஆனா என்ன விட்டு அவ போய்ட்டானா,, நான் தாங்க மாட்டேன் என அழவும் தான்… ஜெய்யிற்கு அவன் காதலின் தீவிரம் தெரிந்தது….
இது வரை சின்ன வயதில் தோன்றும் பப்பி லவ் என்று தான் நினைத்து இருந்தான்… ஆனால் இப்போது அவன் கண்ணீரில் தான் அவனின் காதலின் ஆழம் புரிய,,, அமைதியாக நின்றான்… அவனின் வலி ஜெய்யிற்கு புரிந்து போனது…..
தேவா அவனிடம் ப்ளீஸ் டா,, நீயா எதுவும் சொல்லிராத… இது என் மேல சத்தியம் என அவன் கையை பிடித்து தான் தலை மீது வைக்க.. சரி என்றான் ஜெய்….
இங்க பாரு டா,, நாம காலேஜ் ஒட்டுக்க தான படிப்போம் அப்பவாச்சும் அவகிட்ட உண்மைய சொல்லிரு.. இப்டியே மறைச்சி வச்சி பைத்தியம் ஆகிறாத… என்ன புரிஞ்சிதா? என்றதும் தேவா சரி என தலையாட்டினான்….
இப்ப வா அவளை போய் சமாதானப் படுத்துவோம்… தேவாவை அழைத்து கொண்டு தர்ஷியை பார்க்க சென்றனர்….
தொடரும்………