தேவை எல்லாம் தேவதை..

5
(17)

தேவதை 5

 

பெஞ்சில் தலை கவிழ்த்து படுத்திருந்தவனை கண்டு மனம் வருந்தி செய்வதறியாது அமர்ந்திருந்தான் ஜெய்…

திடீரென தேவாவின் நெற்றியில் மயிலிறகை வைத்து வருடுவது போல் இருக்கவும்,, கண் திறந்து பார்க்க…, தர்ஷினி தான் தைலம் எடுத்து அவன் நெற்றியில் தன் மென் பஞ்சு விரல்களால் தடவிவிட,, அது அவனுக்கு இதமாய் இருந்தது…

சிறிது நேரம் அந்த நிலையில் அப்படியே கண் அயர… அப்போது தேவாவின் கன்னத்தை திருப்பி தன் பக்கம் வைத்துக் கொண்டாள்… அவன் தேவதை…

அவன் இமை திறந்து பார்க்கவும்,,, தர்ஷினியும் பெஞ்சில் தலை வைத்து அவன் முகத்தருகே தன் முகத்தை வைத்திருந்தாள்…. அவளின் மூச்சுக் காற்று பட்டு தேவாவின் நெற்றி முடி அசைய,, அவ்வளவு நெருக்கமாய் அமர்ந்திருந்தாள்….

தேவாவிற்கு அவளை நெருக்கமாக பார்த்து,, கன்ட்ரோல் செய்ய முடியாமல் வேறு பக்கம் திரும்பிக் கொள்ளவும்,,,மீண்டும் அவனின் கன்னம் பிடித்து திருப்பி தன் முகத்தை பார்க்க வைத்தவள்…

என்னடா பண்ணுது? தல ரொம்ப வலிக்குதா? என உண்மையான அக்கறையில் கேட்கவும்…

மெலிதாக புன்னகைத்த தேவா… இப்போ பரவாயில்லா டி வண்டு… என அவளின் தலையில் கை வைத்தான்….

தோள்கள் இரண்டும் உரச,,, நெருக்கமாக அமர்ந்து இருந்தவளின் மூச்சுக் காற்றை தேவா உள்வாங்கிக் கொண்டிருந்தான்… அவளை அப்படியே இறுக்க கட்டிக் கொண்டு தன் உயிரோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் போல் இருக்க… இருவரின் கண்களும் ஒரு சேர நேர்கோட்டில் பயணித்தது….

ஏதோ ஒன்று அவளை அவன் கண்களால் ஈர்க்கப்படவும்,, அவன் கண்களை மெய்மறந்து பார்த்த படி இருக்க…

குட் ஆப்டர்நூன் என்ற சத்தத்தில் சட்டென நிமிர்ந்தவள்,,, கிளாசிற்கு ஸ்டாப் வந்திருப்பதை பார்த்து,, எழுந்திருடா என அவனின் தொடையில் தட்டி எழுப்பிவிட்டு தானும் ஓடி தன் இடத்திற்கு சென்று அமர்ந்துக் கொண்டாள்…

தேவா தலையை உலுக்கி விட்டு திரும்பி ஜெய்யை பார்க்க…

ஓஹ் நா இங்க ஒருத்தன் இருக்குறது உனக்கு தெரியுதா டா…? என கீழே குனிந்து மெதுவாய் கேட்க… தேவா பெருமூச்சி இழுத்து விட்டான்….

ப்ரொபசர் பாடம் நடத்தி முடித்து சென்ற பிறகு,, மீண்டும் தேவாவின் அருகில் ஓடி வந்து தர்ஷினி அமர்ந்தவள்…

தேவா இப்ப ஓகே வா? தலை வலி போயிருச்சா? எனக் கேட்க…

தேவா நிலைமையை சரிசெய்யும் பொருட்டு,,, சிரித்தப் படி.. எனக்கு ஒன்னும் இல்ல டி வண்டு என்றான்….

தர்ஷினி எனக்கும் தான் டி தலை வலிக்குது,, என தலையில் கைவைத்தபடி ஜெய் கேட்க….

உனக்கு தலை வலிச்சா போய் சுவத்துல முட்டிக்க… நிறைய தின்னா இப்டி தான் வலிக்கும்,, தின்னுறத குறை,, என கிண்டல் செய்து விட்டு அதைப் பெரிதாகவே எடுத்துக்கொள்ள வில்லை….

சே போடி எரும… டேய் மச்சான் உன்கிட்ட தனியா பேசணும் வா டா,,, கொஞ்சம் வெளில போயிட்டு வரலாம் என ஜெய் அழைக்க,, தேவா சரி என எழவும்,, அவர்கள் பின்னால் தர்ஷியும் எழுந்து வந்தாள்…

வண்டு நீ எங்க வர? என ஜெய் கேட்க…

டேய் என்ன மட்டும் தனியா விட்டுட்டு எங்க டா போறீங்க?

ரெஸ்ட் ரூம் போறோம் டி அங்கேயுமா வருவ? என ஜெய் கடுப்படிக்கவும்….

ஈஈஈ சாரி சீக்கிரம் போயிட்டு வாங்க…. என அசடு வழிந்தவள், தனது இடத்திற்கு சென்று அமர்ந்து விட்டாள்….

வெளியில் மரத்தடியில் அருகில் நிறைய மாணவர்கள் கூட்டம் கூட்டமாய் அரட்டை அடித்தபடி நின்றிருக்க,,, அங்கு சென்ற இருவரும் தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தனர்….

டேய் மச்சான் அவளும் உன்ன லவ் பண்றான்னு நெனைக்கிறேன் டா… என்றதும் … தேவா முகம் வாடிப் போய் தான் இருந்தது….

டேய் நம்பலயா? சத்தியமா டா மச்சான் என ஜெய் அடித்து சொல்ல…

டேய் எனக்கு தைலம் தேச்சி விட்டதுக்குலாம் லவ் பண்றன்னு அர்த்தமா? அப்டி பாத்தா,, எனக்கு எப்ப உடம்புக்கு முடியலைன்னாலும் ஸ்கூலன்னு கூட பாக்காம அவ தான் ஊட்டி விட்ருக்கா…அம்மை போட்டப்ப பக்கத்துல வராத,, வீட்டுக்கு வராதானு,, எங்கம்மா,, அப்பா எவ்வளவு தடுத்தும் வீட்டுக்கு வந்து எனக்கு சாப்பாடு,, ஜுஸ் னு குடுத்து நல்லபடியா பாத்திருந்திருக்கா…. இதெல்லாம் என்ன சொல்லுவ? என தீர்க்கமாய் பார்த்து கேட்கவும் ஜெய்யிடம் அமைதி….

ஆனா டா மச்சான்,, அவ கிளாஸ் நடக்குறப்ப உன்ன மட்டும் தான் டா பாத்துட்டு இருந்தா என ஜெய் மீண்டும் வாதாடவும்….

தேவா அதை காதில் வாங்கவில்லை….அவ ரொம்ப நல்லவ டா மச்சான்.. நா தான் தப்பு.. அவ என்ன நல்ல பிரெண்டா மட்டும் தான் பாக்குறா.. அவ என்ன கேட்டாலும்,, அவளுக்காக ஒரு பிரெண்டா நா எப்பவும் துணையா இருப்பேன் டா என்றதும்…

ஜெய் கடுப்புடன் ஓஹ் சூப்பர் டா… பைத்தியம் புடிச்ச நாயே! நீ என்ன பெரிய தியாகி மயிரா? உன் லவ்வ விட்டு குடுக்க என்றதும் தேவா விடம் பதில் இல்லை….

தேவாவின் தோளில் கை வைத்த ஜெய்… இங்க பாரு இப்ப என்ன நடந்துச்சு இவ்ளோ பீல் பண்ற? அவ ஜஸ்ட் அந்த பையன் நல்லாருக்கானு தான சொன்னா… வேற ஒன்னும் இல்ல.. ஜஸ்ட் சைட் அடிக்கிறா! அம்புட்டு தான்… நீ அதெல்லாம் பெருசா எடுத்துக்காத…

டேய் ஈஸியா சொல்லிட்ட.. ஆனா என் வலி எனக்கு என்பது போல் ஜெய்யை  பார்க்க,,,

   சரி டா புரிது விடு,, ஆனாலும் இனியும் நீ வெயிட் பண்ண வேணாம்.. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் உன் காதல சொல்லிரு… முடிஞ்சா நாளைக்கே என்ன புரிஞ்சிதா? 

தேவாவுக்கும் அது தான் சரி எனப் பட்டது….சரி என்பது போல் அவனும் தலையாட்ட..

ஹ்ம்ம் குட் வா,, நம்மல தேடி அந்த வண்டு பறந்து வந்தாலும் வந்திரும்…. கிளாஸ் க்கு போலாம் என அழைத்து சென்றான் ஜெய்…. ஆனால் இவர்கள் பேசுவதை மற்றொரு ஆளும் கேட்டு காதில் போட்டுக்கொண்டு அழகாய் புன்னகைத்தது….

     கல்லூரி முடிந்து அனைவரும் வீட்டிற்கு செல்ல,, பைக்கில் செல்லும் போதும் தேவாவின் முகம் வாடி தான் இருந்தது….

அதை கவனித்தவள்,, டேய் இன்னும் தல வலி போகலையா? வீட்டுக்கு போயிட்டு தூங்கு… என்ன

தேவா சரி டி என்றான்… வீட்டிற்கு சென்றப் பிறகு,, முதல் வேலையாக அந்த டைரியை எடுத்து தன் கல்லூரி பையில் வைத்துக் கொண்டான்., தேவா….

நாளை எப்படியும் தன் காதலை சொல்லியே தீர வேண்டும் என்ற முடிவில் இருந்தவன்,, தன் மனக்கவலையை மறக்க, பெட்டில் படுத்து உறங்கிப் போனான்….

சிறிது நேரத்தில் தனது போன் அடிக்கவும் தான் எழுந்தவன், போனை எடுத்து பார்க்க,, திரையில் வண்டு என ஒளிர்ந்தது…உடனே அட்டென்ட் செய்து காதில் வைத்தான்…

ஹலோ தேவா தூங்குறியா டா?

ஹ்ம்ம் என்ன சொல்லு….

இல்ல சும்மா தான்,, வீட்டுக்கு வந்த பிறகு இன்னும் என்கிட்ட நீ பேசவே இல்ல அதான் அடிச்சேன் என்றதும்… தேவாவின் முகத்தில் மகிழ்ச்சி பரவ…

தூங்கிட்டேன் டி வண்டு.. அதான் பேசல என்றான்…

இப்ப தலை வலி போச்சா??

இப்ப தெளிவா தான் இருக்கேன்…சாப்டியா?

அதெல்லாம் அப்போவே சாப்டாச்சு…. டேய் நம்ம ஸ்கூல் மெமோரீஸ் ஏதும் சொல்லேன் கேட்கணும் போல இருக்கு என்றதும்…

பிரெஷ் ஆகிட்டு வரேன்… 2 மினிட்ஸ் இரு என்றவன் போனை கட் செய்து விட்டு… குளியலறைக்குள் புகுத்துக் கொண்டான்….

தினமும் இருவரும் ஸ்கூல் விட்டு வந்ததும்,, அரை மணி நேரமாவது பேசிக்கொள்வது இயல்பு… கல்லூரிக்கு சென்ற பின்னும் அதே விஷயம் தொடர்ந்தது….

பிரெஷ் ஆகிவிட்டு வந்தவன்,, மீண்டும் தர்ஷினிக்கு போன் அடிக்க,, ஒரே ரிங்கில் எடுத்திருந்தாள்…

தேவா ஒரு தடவ 12 த் படிக்கிறப்ப,, எக்ஸாம் எழுதி முடிச்ச பிறகு,, நீ ஒரு பையன அடிச்சல்ல அது ஏன் என எடுத்ததுமே கேட்க.. தேவா விடம் அமைதி…

சொல்லுடா,, என மீண்டும் கேட்டாள்…

உனக்கு தெரிஞ்ச விஷயம் தான டி அத எதுக்கு திரும்ப கேக்குற..?

நீ திரும்ப சொல்லு.. அவன எதுக்கு அடிச்ச..? நாம ரெண்டு பேரையும் பத்தி தப்பா பேசினதாலயா? எனக் கேட்கவும்…

ஆமா என்றான்…

அப்டி என்ன சொன்னான்? நம்மள பத்தி என துருவி துருவி கேட்டாள்….

நாம லவ்வர்ஸ் னு சொன்னான்… என்றதும் 2 நிமிடத்திற்கு இருவரிடமும் அமைதி நிலவியது…

ஹ்ம்ம் சரி சாப்டில படுத்து தூங்கு,, மார்னிங் காலேஜ் போகனும் என்ன போனை கட் செய்தவன்… அவள் கேட்ட விஷயங்களை மனதில் அசை போட்டான்….

ஒரு முறை 12 த் பப்ளிக் எக்ஸாமிற்கு,, வெளி ஸ்கூலில் இருந்து எல்லாம் மாணவர்கள்,, தேவா ஸ்கூலிற்கு வர அனைவருக்கும் ஒரே தேர்வறையில்  எக்ஸாம் நடந்தது…..

அப்போது தர்ஷினியிடம் அருகில் அமர்ந்திருந்த வெளி ஸ்கூல் மாணவன் ஒருவன் பேனா,, பென்சில் கேட்டு பேச்சு கொடுக்க.. தர்ஷினியும் இயல்பாய் தான்  அவனிடம் பேசினாள்..

அந்த மாணவன் தேவாவும், ஜெய்யும் தான் தினமும் அவளை வீட்டிற்கு அழைத்து செல்வதை தெரிந்துக் கொண்டவன்…. லாஸ்ட் எக்ஸாம் முடிந்த பின்,, ஹாலின் வெளியே தர்ஷினிக்காக தேவாவும்,, ஜெய்யும் காத்துக் கொண்டிருக்கவும்…

அவர்கள் அருகில் சென்ற அந்த மாணவன்,, உன் பிரெண்ட்  தர்ஷினிய நா லவ் பண்றேன்… இத அவகிட்ட சொல்லிடுறியா? என கேட்டது தான் தாமதம்….  தேவாவிற்கு கோவம் புசு புசுவென வெடித்துக் கொண்டு வந்தது….

தேவா கடுப்பில் கெட்டை வார்த்தை பேச.. அந்த மாணவனும் பதிலுக்கு பேச…. வாய் பேச்சு கை சண்டையாக மாறியது….அங்கே இருவரும் சட்டையை பிடித்து கிழித்து சண்டைப் போட்டுக் கொண்டனர்….

மற்ற  மாணவர்கள் வந்து விலக்கவும் தான்,, சண்டை ஓய்ந்தது…

அவள லவ் பண்ணினா உனக்கு ஏண்டா கோவம் வருது,, நீ என்ன அவள லவ் பண்றியா? என வாயில் வழிந்த ரத்தத்தை துடைத்த படி அந்த மாணவன் கேட்க…

ஆமா டா அவ நா லவ் பண்ற பொண்ணு… நீ லவ்வ சொல்ல வந்தா அப்டி தான் அடிப்பேன் என்றதும்..  அங்கிருந்த மற்ற மாணவர்கள் போங்கடா,, போங்கடா என்ன விலக்கி அனுப்பி வைத்தனர்….

தர்ஷினியின் காதுக்கு எப்படியோ நியூஸ் போக…  அவர்களிடம் என்ன பிரச்சனை என கேட்டதும்,,

ஜெய் உங்க ரெண்டு பேரையும் பத்தி அந்த பையன் தப்பா பேசுனான்… அதான் தேவா அடிச்சிட்டான் என போய் சொல்லி வைக்கவும்…

தர்ஷினியும் அதை தான் நம்பினாள்.. அதற்கு பிறகு அதைப் பத்தி எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை..

தொடரும்ம்ம்ம்……

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!