நிதர்சனக் கனவோ நீ! : 10

4.8
(38)

அத்தியாயம் – 10

அவள் சம்மதம் என்று சொன்னதும் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஜெய் ஆனந்த்தோ “அப்பா நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன்” என்றவன் எதிலோ இருந்து தப்பித்து செல்வது போல நேரே மருத்துவமனைக்கு கிளம்பி இருந்தான்.

ஒரு பெரு மூச்சை விட்டுக்  கொண்ட பிரதாபனும்“நீ உள்ள போ மா” என்றதும் அவளோ விட்டால் போதுமென உள்ளே சென்று விட இப்போது ஹாலில் தனியாக எஞ்சி நின்று இருந்தது என்னவோ விபீஷன் தான்.

அவனை ஆழ்ந்து பார்த்து விட்டு திரும்ப எத்தனித்த பிரதாபனிடம் “சாரிபா” என்றான்.

“எதுக்காக?” என்று கேட்டார் அவன் புறம் திரும்பாமலேயே…

“சொல்லாமல் கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு தான்” என்றான் சர்வ சாதாரணமாக…

அப்போதும் அவன் செய்த தவறை அவன் உணர்ந்துக் கொண்டதாகவும் தெரியவில்லையே!

அவனின் பேச்சின் தொணியில் திரும்பி அவனைப் பார்த்தவர் “உனக்கு பார்த்த பொண்ணு ஆஹித்யா தான்” என்கவும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றவன் “வாட்?” என்று கேட்க… “காலைல அதை பத்தி தான் பேசிட்டு இருந்தோம் ஆனால் நீ அவசரப்பட்டுட்டடா. உன்னோட அண்ணன் கல்யாணம் பண்ணிக்க முதல் நீ இப்படி பண்ணுவனு கொஞ்சமும் எதிர்ப்பார்க்கல விபீஷன்” என்றவர் தளர்ந்த நடையுடன் செல்ல…

 

சிறிது நேரம் அப்படியே யோசித்த படி நின்று இருந்தவன் மனதிலோ “அவன் காதலிச்சது அவதான்னு தெரிஞ்சி இருந்தால் அவளை அவனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிருப்பீங்க. அப்போ அவன் ஆசைப்பட்டது அவனுக்கு கிடைச்சு இருக்கும் தானே? அதேநேரம் எனக்கும் அவளை பிடிச்சு இருந்தால் நிச்சயம் ஒத்துத்து இருந்திருக்க மாட்டீங்க தானேபா” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே போகும் பிரதாபனின் முதுகை வெறித்தான்.

 

இங்கோ நேராக மருத்துவமனைக்கு வந்த ஜெய் ஆனந்த், தனது கேபினில் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தான்.

 

அவன் எப்படி வந்து சேர்ந்தான் என்று கேட்டால் அவனுக்கே தெரியாது.

 

உடலின் அனைத்து செல்களும் இறந்து விட்டது போல கிட்டத்தட்ட ஒரு ஜடம் போல அமர்ந்திருந்தான்.

தன்னை முயன்று சமன்படுத்திக் கொண்டு அலைபேசியை எடுத்து நவீனுக்கு அழைத்தவன் “ஆப்பரேஷன் தியேட்டரை ரெடி பண்ணியாச்சா?” என்று கேட்டான்.

 

அவனின் குரலில் தெரிந்த ஏதோ ஒன்று மறுபுறம் இருந்த நவீனுக்கே ஏதோ சரியில்லையெனப் பட, “ஆனந்த், ஆர் யூ ஓகே?” என்று கேட்டு இருந்தான்.

அதற்கு பதிலளிக்காமலேயே அலைபேசியை துண்டித்தவன் ஸ்டெதெஸ்காப்பை கழுத்தில் மாட்டிக் கொண்டு சத்திர சிகிச்சை அறையை நோக்கி விரைந்து இருந்தான்.

 

அறைக்குள் நுழைந்தவன் முகக் கவசத்தை  அணிந்துக் கொண்டே சத்திர சிகிச்சையை மேற்கொள்ள ஆயத்தமாகி இருக்க, அவன் வந்தது தெரிந்தும் சத்திர சிகிச்சை அறைக்குள் வந்த நவீனோ, அவனின் நடுங்கிக் கொண்டிருக்கும் கரங்களைப் பார்த்து அதிர்ந்துப் போனான்.

 

“ஆனந்த்” என்றுக் கூப்பிட்டுக் கொண்டு அவன் அருகில் நெருங்கியவனை சட்டென ஏறிட்டுப் பார்த்தான்.

“டேய் யுவர் ஹேண்ட்ஸ் ஆர் ஷிவரிங் டா. என்னாச்சு உனக்கு?” என்று கேட்டான்.

அப்போது தான் கத்தியை பிடித்து இருக்கும் தனது கரங்களின் நடுக்கதையே அவன் உணர்ந்தான்.

என்ன ஆயிற்று எனக்கு?

அவனுக்கு விரும்பிய தொழில் ஆனால் அவனால் அதைக் கூட செய்ய முடியாத அளவுக்கு அவள் என்னை பாதிக்கின்றாளா? என்று தனக்குள் கேட்டுக் கொண்டவனுக்கே  அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

ஆம், அதற்கு விடையளிக்கும் விதமாகத் தான் அவனின் கரங்கள் மட்டும் அல்ல இதயம் உட்பட செயலிந்ததை போலத் தான் உணர்ந்தான் அந்த ஆறடி ஆண்மகன்.

தான் கேட்டதிற்கு பதில் ஒன்றும் கூறாமல் கரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவனை உலுக்கிய நவீன் “ஸ்பீக் அவுட் ஆனந்த்” என்றான்.

 

“எனக்கு இப்போ சிசேரியன் பண்ண முடியாது நவீன். கேன் யூ பிளீஸ் மேனேஜ்?”

அவன் இப்படி சொல்பவன் அல்லவே! அதிர்ந்து விட்டான் அவன்.

“வை என்னாச்சு டா?” என்று மேலும் மேலும் கேள்விக் கேட்டுக் கொண்டு இருந்தவனை எரிச்சலாக பார்த்தவன் “வீ ஹேவ் நோ டைம் சோ பிளீஸ் நவீன் கேரி ஒன்” என்க….

“ஓஹ் கோட் இதுக்கெல்லாம் எதுக்கு பிளீஸ் சொல்ற? ஐ வில் மேனேஜ் டா. நீ கிளம்பு” என்றதும் “உன்னோட ஹவுஸ் கீயை தா” என்று கேட்டவனிடம் அடுத்த கணமே சாவியை பாக்கெட்டில் இருந்து எடுத்து நீட்டியவன்”டேக் கேர்” என்றான்

 

விரக்தியாக சிரித்தவன் அவனுக்கு பதில் எதுவும் கூறாமலேயே நவீனின் வீட்டை நோக்கி கிளம்பி இருந்தான்.

 

போகும் அவனை ஒரு பெரு மூச்சுடன் பார்த்தவன் தனது மேலங்கியை போட்டுக்கொண்டு சத்திர சிகிச்சையை மேற்கொள்ள ஆரம்பித்தான்.

 

தன்னை அறைந்து விட்டானே என்ற கோபத்தில் காலேஜில் இருந்து நேராக வீட்டிற்கு வந்திருந்தாள் பவ்யா.

பூட்டி இருந்த கதவை பார்த்து விட்டு தலையில் கை வைத்தவள் “ஐயோ இப்போ அவன் வீட்டுக்கு போகணுமா?” என்று உள்ளுக்குள் கறுவிக் கொண்டே பிரதாபனின் வீட்டிற்குள் நுழைய, அங்கோ மாயான அமைதி நிலவிக் கொண்டிருந்தது.

“என்னடா இது? ஒரு ஈ காக்காவைக் கூட காணுமே” என்று சொல்லிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்த படி வந்தவள் ஓர் உருவத்தின் மீது மோதி நின்றாள்.

“ ‘ஸ்ஸ்’ என்று நெற்றியை தேய்த்துக் கொண்டே நமக்கு தெரியாமல் நடு வீட்டுல எவன்டா தூணை வச்சது” என்றபடி நிமிர்ந்து பார்த்தவள் எதிரே தன்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டே நின்றிந்தவனை பார்த்து உள்ளே திடுக்கிட்டவள் மனதில் சற்று முன் அவன் மேல் இருந்த கோபம் எல்லாம் எங்கே போனதென்றே அவளுக்குத் தெரியாது.

“பரவால்லயே மாமா பாடி செம்ம ஸ்ட்ராங் ஆஹ் இருக்கே” என்றவள் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க, அவளின் தோரணையிலும் பேச்சிலும் கோபத்தின் உச்சிக்கே சென்றவன் “உன்னோட அக்கா புருஷனை சைட் அடிக்கிறது தப்பில்லையா பவ்யா?” என்று கேட்டானே பார்க்கலாம்.

பற்கள் தெரிய சிரித்துக் கொண்டு இருந்தவள் இதழ்களோ நொடிப் பொழுதில் சுருங்க “என்… என்ன கேக்கல என்ன சொன்னிங்க?” என்று வார்த்தைகள் தந்தியடிக்க கேட்டாள்.

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளின் கலங்கிய விழிகளை பார்த்தவன் என்ன நினைத்தானோ “உள்ள போ உனக்கே தெரியும்” என்றவன் திரும்பியும் பாராமல் வெளியில் சென்று இருந்தான்.

 

இதயத்தில் மெல்லிய வலி ஊடுருவுவதை போல உணர்ந்தவள் நகர மறுத்த தன் பாதங்களை நகர்த்தி தனது அன்னையின் பேச்சு சத்தம் கேட்ட அறையினை நோக்கி சென்றாள் பேதை பெண்.

கிட்டத்தட்ட ஜெய் ஆனந்த்தின் நிலையைப் போல தானே அவளுக்கும்…

 

இங்கோ, நவீனின் வீட்டுக்கு வந்தவன் முதலில் சென்றது என்னவோ அவனின் அறைக்குத் தான்.

 

அவனுக்கு சற்று நேரம் அமைதி தேவை பட்டது.

எங்கே தவறினோம்? என்ற எண்ணம் அவனுள்.

 

விழிகளை அழுந்த மூடிக் கொண்டு சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து இருந்தான்.

 

மனமோ நிலை இல்லாமல் தவித்தது.

 

தாமதிக்காமல் அவளிடம் தன் காதலை  சொல்லி இருக்க வேண்டுமோ என்ற எண்ணம் இப்போது தோன்றியது.

 

இப்போது தோன்றி என்ன பயன்?

 

நெஞ்சம் விம்மியது.

 

அழுத்தம் தாழாமல் “ஆஆஆஹ்ஹ்ஹ்” என்று கத்தியவன் தன் கரத்தை ஓங்கி முன்னால் இருந்த கண்ணாடி மேசையில் குத்தி இருந்தான்.

 

அவனது இதயத்தை போல அதுவும் சில்லு சில்லாக நொறுங்கியது.

 

அவனது கரத்தில் இருந்து உதிரம் நில்லாமல் வழிந்தது. ஆனால் அதையெல்லாம் அவன் உணரும் நிலையிலேயே இல்லையே!

 

அவனும் உணர்வுகள் கொண்ட ஆண்மகன் தானே!

 

மென்மையானவன் தான். பொறுமையானவன் தான்.

 

ஆனால் இன்றோ அவனது சிந்தை இன்னொருவனின் அதுவும் தன் உடன் பிறந்தவனின் சரிபாதியாகி விட்டவளை தான் நினைப்பது மாபெரும் குற்றம் அல்லவா!

 

தலையை பிடித்துக் கொண்டு எழுந்தவன் விழிகள் செல்ஃபில் இருந்த மதுபான போத்தலில் படிந்தது.

 

தளர்ந்த நடையுடன் சென்றவன் அவ் உயர் ரக மதுபான போத்தலை தன் கரங்கள் நடுங்க எடுத்தான்.

 

அவனின் மூளையோ மீண்டும் மீண்டும் அவளை நினையாதே என்ற கட்டளையை பிறப்பிக்க, மாறாக அவனது மனம் லயித்தது என்னவோ அவளின் நினைவுகளில் தான்.

 

முடிவெடுத்து விட்டான். அடுத்த நொடியே எதனையும் யோசிக்காமல் மதுபானத்தை தன் வாயில் சரித்திருந்தான்.

 

அக் கணம் அவனின் கொள்கைகளை மறந்தான்.

 

குடிக்க வேண்டாம் என்று சொன்னவன் தான் இன்று தன்னை ஆட்கொள்ளும் அவளின் நினைவுகளில் இருந்து தப்பிக்க தற்காலிகமாக மதுவை நாடி இருந்தான்.

 

முழு போத்தலையும் காலி செய்தவன் தள்ளாடிய படி வந்து ஒரு கட்டத்தில் பிடிமானம் இல்லாமல் நிலை தடுமாறி நிலத்தில் விழுந்து விட்டான்.

விழுந்தவனுக்கோ வலி என்ற உணர்வு  கூட மரத்து விட்டது போலும்.

விழிகளை அழுந்த மூடிக் கொண்டான்.

 

அந்தோ பரிதாபம். மீண்டும் அவளின் மதி முகம் அவனின் சிந்தையை ஆட்கொள்ள தன் கன்னத்தை தானே ஓங்கி அறைந்தவன் “ஆனந்த் ஸ்டெடி. தியா உன்னோட தம்பி பொண்டாட்டி” என்று மீண்டும் மீண்டும் நா குழற சொல்லிக் கொண்டே தன் கன்னத்தை மாறி மாறி அறைந்த படி இருந்தவனை அறைக் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்த நவீன் பார்த்து அதிர்ந்தே விட்டான்.

அனைத்து உணர்வுகளையும் மறக்க மதுவை நாடிய ஒரு ஆண்மகனே துவண்டு போய் இருக்கும் போது பவ்யாவின் நிலையை சொல்லவும் வேண்டுமா என்ன?

விடயத்தை கேள்விப்பட்டவள் மொத்தமாக துவண்டு போனாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 38

No votes so far! Be the first to rate this post.

1 thought on “நிதர்சனக் கனவோ நீ! : 10”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!